ஹாய்.. ஹலோ.. மக்களே.... !!
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு லைக். அப்படியே ஒரு கமெண்ட். போட்டுட்டு போனால் நான் மகிழ்வேன்... இதுவரை படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... இனி அடுத்த எபி திங்கள் அன்று வரும்...
வேர் – 5
அன்று முழுவதும் அவள் கோபம் தொடருவதாய்.. சக்தி தான் அவளுக்கு என்ன கோபம் என அறியாமல் திண்டாடிப் போனான்... இன்னும் நாான்கு நாளிில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா வைக்க வேண்டும் என்று ஜோசியர் நாள் குறித்துப் போனார்... ஆனால் அதை அறிந்தும், அறியாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறாள் இதழினி....
அவள் அறையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க.., குழந்தையை தூக்கிக் கொண்டு அவளுக்கு முன்னே உள்ள சோபாவில் அமர்ந்தான் சக்திவேல்...
தீடிரென்று அவன் ஆழ்ந்த குரல் அவளை கலைப்பதாய்...
“ குட்டி செல்லம்..!!! நீங்க யார் மாதிரி..? அம்மா மாதிரியா..? அப்பா மாதிரியா..?.. நீங்க அப்பா மாதிரி இருங்க.. அம்மா மாதிரி வேண்டாம்டா செல்லம்..!!! அப்பா மாதிரி இரு..!! அப்போ தான் நம்ம பொண்டாட்டி என்று பாசமா இருப்ப செல்லம் ..”
“ அம்மா மாதிரி இருந்த, எப்போவும் எரிந்து விழுந்துக் கொண்டும், சண்டை போடுறதும், எதுகெடுத்தாலும்தப்பு கண்டுப் பிடிக்குற உன் அம்மாவை பாலோ பண்ணாத என்ன...”
என உறங்கும் குழந்தையிடம் பேசுவதுப் போல் அவளை சீண்டிக் கொண்டு இருந்தான் சக்திவேல்...
அவனின் சீண்டலில் உறங்கிக் கொண்டு இருந்த குழந்தை அரைகுறை உறக்கத்தில் “ ங்கா.. ங்கா “ என சிறு சத்தம் எழுப்பியது..
உடனே சுள்ளென்று கோபம் பொங்க சீறிவிட்டாள் இதழினி.. “ குழந்தை கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? அவனுக்கு என்ன புரியும்னு அவன்கிட்ட பேசுறீங்க... “ என சீற..
“ குழந்தைக்கு புரியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!! ஆனா புரியவங்களுக்கு புரியவேண்டுமே...!! அம்மாக்கு கேட்கட்டுமேன்னு தான்அப்பா சத்தமா சொன்னேன் என்னடா..” என குழந்தையை கொஞ்சுவதுப் போல் கேட்க..
“ ஹூம்.. எல்லாம் நடிப்பு.. ரொம்ப ஆசை கணவன் மாதிரி எல்லார் முன்னாடியும் நடிக்குறது, ஆரம்பத்தில இருந்து எல்லாமே நடிப்பாவே இருக்கு “ என அவளின் கோபத்தை இப்படி ஏளனமாக முடிக்க..
அவளின் ஏளனமான குரலில் கண்கள் சிவக்க சட்டென்று பொங்கி விட்டான் சக்திவேல்.. “ ஏய்..!! அடிச்சேன்னா பல்லு கழண்டுரும்.., என்ன நினைச்சுட்டு இருக்க நீ..?ஆரம்பத்தில இருந்து இது நடிப்பு..... நடிப்புன்னு மனசுல நினைச்சுட்டே இருக்க.. அந்த நினைப்பை முதலில் விடு.. அதை விட்டுட்டு சும்மா. அதையே பேசி மனுஷனை டென்ஷன் பண்ணிக்கிட்டு.. இப்போ சொல்லு உண்மையான ஒரு மனைவியா ஒரு நொடி நீ நினைச்சிருந்தா... என்னை விட்டு, குடும்பத்தை விட்டு, என் குழந்தை பிறப்பை மறைசிருப்பியா..?சும்மா.. என்னை குத்தம் சொல்லாதே..? “ என அடிக்குரலில் பெரும் கோபத்தை காட்டுவது எப்படி என்று காட்டி விட்டு அழும் குழந்தையை தொட்டிலில் விட்டு வெளியில் சென்றான் அவன்...
வெளியேறிய அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது..” எப்படி பேசுனாலும், அதை அவள் விடவே மாட்டாளா?? இனி என்ன செய்து தான் அவளை மாற்றுவது “ அவனுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது....
உள்ளே இருந்தவளோ அழும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு மடியில் வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள், மனமோ “ ஏன் குழந்தையை என் கையில் கொடுத்தா என்னவாம்..” என சிணுங்கிக் கொண்டு இருந்தது...
அவள் மனது என்ன எதிர் பார்க்கிறது என்று அவளுக்கு தெரியவே இல்ல... மனதில் ஏதோ வெற்றிடம் பெருகுவதாய்... நெருங்கி வந்தால் விலகுவதாகவும், விலகி போனால் நெருங்க ஆசை கொள்கிறது மனது.... மனம் ஒரு விசித்திரமானது....
அவனிடம் இருக்க ஆசையும் கொள்கிறது. அதே மனது அவன் அருகில் நெருங்கினால் வெறுக்கவும் சொல்கிறது... அவள் நிலையையே அவளால் கணிக்க முடியவில்லை.. அப்படி இருக்கையில் சக்தியால் என்ன செய்துவிட முடியும்...?
அன்று இரவு சக்தி வீட்டுக்கு வரவே இல்லை... அடுத்த நாளும் வரவில்லை.... வீட்டுக்கு போகவே அவனுக்கு மனதில்லை... அவளிடம் நின்று பேசவும் முடியவில்லை... கோபத்தில் ஏதாவது செய்து விடுவோம் என எண்ணியே செங்கல் சூளையில் தன் நேரத்தை கழித்து கொள்வான். குழந்தையை பார்க்க கூட வரவில்லை அவன்... அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு... " அவள் மனதிலே.. என்ன இருக்குன்னு தெரியல " என்று இங்கு புலம்பிக் கொண்டு இருந்தான்.... அவளோ தன் மனம் என்ன நினைக்கிறது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்..
மாலையில் வீட்டுக்கு வந்த இனியாள் ஆசையாக அவளின் மாமாவுக்காக காத்திருக்க.. அவனோ அன்று வெகு நேரம் கழித்தே வந்தான்... அவன் வந்த நேரம் இனியாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க..
அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவள் கன்னத்தில், பட்டும் படாமலும் மெலிதாக முத்தம் வைத்து அவள் அருகில் சரிந்துக் கொண்டான்....
அன்று சண்டே எல்லாருக்கும் விடுமுறை ஆதலால் எப்பொழுதும் போல் வீட்டின் பின் உள்ள நீச்சல் குளத்துக்கு செல்லலாம் என வெற்றி ஐடியா கொடுக்க.., சக்தியும் தன் மனைவியின் கோபத்தை கொஞ்சம் குறைக்கலாம் என சந்தோசத்துடன் சம்மதம் கூறினான்...
அவனுக்கு நன்கு தெரியும் “ சிறு வயதில் இருந்தே இதழிக்கு நீச்சல் ரொம்ப பிடிக்கும் “ என
அறைக்கு வந்து ” இதழி.. எல்லாரும் நீச்சல் குளம் போவமா.. நீயும் அங்க வந்து ரொம்ப நாள் ஆகுதே... வாரியா “ என அழைக்க..
அந்த நேரம் அவளுக்கும் சிறு மாற்றம் தேவையாய் இருக்க.., அவன் அழைக்கவுமே “ சரி “ என கூறியவள் “ தம்பி “ என இழுக்க..
“ அவனை அம்மா கிட்ட கொடுத்துட்டு போவோம்.. ஒரு ஒன் ஹவர் தான்.. நான் உன்னை டச் கூட பண்ணமாட்டேன் “ என கெஞ்சலாக கூற..
அவன் முகத்தில் இருந்த ஆசையை பார்த்து.., குழந்தையை கொண்டு நாராயணன் கையில் கொடுத்து விட்டு வந்தாள்...
வெற்றி குளத்தில் “ பட்டர்பிளை ஸ்ட்ரோக் “ செய்து கொண்டிருக்க... அவனை நோக்கி நீச்சல் உடையில் வந்தாள் அவனின் தேவதை...
அவளை பார்த்த அவன், தன்னை மறந்து ஒரு நிமிடம் ஸ்ட்ரோக்கை நிறுத்த.., அப்படியே நீரில் ஆழ.., “ ஏய்.. மாமா “ என அழைத்துக் கொண்டே குளத்தில் குதிக்க....
அவள் குதிக்கவும், தன் நிலை உணர.., “ ஹனி “ என அழைத்து அவளை அணைக்க...
“ டேய் வெற்றி.. என்னடா பயங்கர மழை பெய்யுதுப் போல “ என இங்கிருந்தே சக்தி கத்திக் கேட்க...
கடுப்புடன் அவளை விடுவித்துக் கொண்டே “ ஆமாடா...அண்ணா. பயங்கர மழை தான் “ என கடுப்புடன் கூற..
“ ம்ம். ஜமாய்டா “ என சக்தி கலாய்த்து விட்டு செல்ல....
“ ம்ம்,,,ம்ம்ம் “ என சந்தானம் போல் தலையை அங்கும், இங்கும் ஆட்ட.. அவன் நிலை இனியாளுக்கு புன்னகை வருவதாய்...
அவளை முறைத்துக் கொண்டே “ மனுசனை ஒரு எட்டு எடுத்து வைக்க விடமாட்டானுங்களே.... அவன் மட்டும் ஒரு எட்டு இல்ல பல எட்டு எடுத்து மேல போய்ட்டான், நான் இன்னும் ஒரு எட்டு கூட எடுத்து வைக்கல... டேய்.. வெற்றி இதுக்கு எல்லாம் ஒரு மச்சம் வேணும்டா மச்சம் “ என தன் நிலையை நொந்துக் கொள்ள..
அதற்குள் சக்தி வந்துவிட.. “ இனி எங்க “ என மெதுவாக சலித்துக் கொண்டான் வெற்றி...
சக்தி வந்த கொஞ்ச நேரத்தில் இதழி வந்தாள்.. அவளைக் கண்டு மூச்சை நிறுத்தி விட்டான் சக்தி...
உடலை கவ்வி பிடித்திருந்த அந்த ஆடை, அவள் வளைவுகளை மேலும் அழகாக்கிக் காட்ட.., ஒரு கணம் நிலைகுலைந்துப் போனான் சக்தி...
அவன் விழுங்கும் பார்வையை கண்டு, கூச்சத்துடன் மெதுவாக குளத்தில் இறங்க, அவனால் தன்னை கட்டுபடுத்தவே முடியாமல் போனது...
பழைய நினைவுகள் அலையாய் பரவி, அவளுடைய கூந்தல் மணமும், மலரை போன்ற மென்மையான அந்த மேனியின் தீண்டலும், அவனுள் பெரும் போராட்டத்தை விதைக்க.. “ அடேய் சக்தி.. உனக்கு வந்த சோதனையா... பக்கத்துல போனாலே கடிப்பாளே..? “ என மனதில் அலற...
அவளோ எதையும் கவனிக்காமல் தன் அக்காளுடன் ஆட்டம் போட.... வெற்றியை அப்பொழுது தான் கண்டான் சக்தி... கண்டவன் “ பக்கென “ சிரித்து விட..
அவன் சிரிப்பில் அவனை நோக்கி திரும்பிய வெற்றி “ அண்ணே வா... இன்னைக்கு நம்ம வேலை ரெண்டு பேரையும் தூரத்தில் இருந்து சைட் அடிக்குறது தான் “ என கன்னத்தில் கை வைத்து சோகமாக கூற... சக்தியும் அவன் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டான்...
சிறிது நேரத்தில் அவர்கள் கரைக்கு வந்து, தூரத்தில் இருந்த தனி தனியான உடைமாற்றும் அறைக்கு செல்ல.. குளத்தின் கரையில் இருந்த இருவர் முகத்திலும் பளிச் என பல்ப் எரிய...
இருவரும் ஒரே நேரத்தில் குளத்தில் குதித்து.., விட்ட குளியலை தொடங்க... இருவரும் ஒரே போல் காக்காவை போல் தலையை மட்டும் நனைத்து விட்டு தங்களின் துணை சென்ற அறை நோக்கி செல்ல..,
திடீரென அவள் பின்புறம் கழுத்துக்கும், முதுகுக்கும் இடையே இருந்த மேனியில் சில்லென்ற நீர்த்துளிகள் பரவ..,
சட்டென தேகம் கூசி சிலிர்க்க பதறிப் போய் திரும்பிய போது, தலையில் நீர் சொட்ட குறுகுறு பார்வையுடன் இதழி அருகில் நின்றிருந்தான் சக்திவேல்...
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு லைக். அப்படியே ஒரு கமெண்ட். போட்டுட்டு போனால் நான் மகிழ்வேன்... இதுவரை படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... இனி அடுத்த எபி திங்கள் அன்று வரும்...
வேர் – 5
அன்று முழுவதும் அவள் கோபம் தொடருவதாய்.. சக்தி தான் அவளுக்கு என்ன கோபம் என அறியாமல் திண்டாடிப் போனான்... இன்னும் நாான்கு நாளிில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா வைக்க வேண்டும் என்று ஜோசியர் நாள் குறித்துப் போனார்... ஆனால் அதை அறிந்தும், அறியாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறாள் இதழினி....
அவள் அறையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க.., குழந்தையை தூக்கிக் கொண்டு அவளுக்கு முன்னே உள்ள சோபாவில் அமர்ந்தான் சக்திவேல்...
தீடிரென்று அவன் ஆழ்ந்த குரல் அவளை கலைப்பதாய்...
“ குட்டி செல்லம்..!!! நீங்க யார் மாதிரி..? அம்மா மாதிரியா..? அப்பா மாதிரியா..?.. நீங்க அப்பா மாதிரி இருங்க.. அம்மா மாதிரி வேண்டாம்டா செல்லம்..!!! அப்பா மாதிரி இரு..!! அப்போ தான் நம்ம பொண்டாட்டி என்று பாசமா இருப்ப செல்லம் ..”
“ அம்மா மாதிரி இருந்த, எப்போவும் எரிந்து விழுந்துக் கொண்டும், சண்டை போடுறதும், எதுகெடுத்தாலும்தப்பு கண்டுப் பிடிக்குற உன் அம்மாவை பாலோ பண்ணாத என்ன...”
என உறங்கும் குழந்தையிடம் பேசுவதுப் போல் அவளை சீண்டிக் கொண்டு இருந்தான் சக்திவேல்...
அவனின் சீண்டலில் உறங்கிக் கொண்டு இருந்த குழந்தை அரைகுறை உறக்கத்தில் “ ங்கா.. ங்கா “ என சிறு சத்தம் எழுப்பியது..
உடனே சுள்ளென்று கோபம் பொங்க சீறிவிட்டாள் இதழினி.. “ குழந்தை கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? அவனுக்கு என்ன புரியும்னு அவன்கிட்ட பேசுறீங்க... “ என சீற..
“ குழந்தைக்கு புரியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!! ஆனா புரியவங்களுக்கு புரியவேண்டுமே...!! அம்மாக்கு கேட்கட்டுமேன்னு தான்அப்பா சத்தமா சொன்னேன் என்னடா..” என குழந்தையை கொஞ்சுவதுப் போல் கேட்க..
“ ஹூம்.. எல்லாம் நடிப்பு.. ரொம்ப ஆசை கணவன் மாதிரி எல்லார் முன்னாடியும் நடிக்குறது, ஆரம்பத்தில இருந்து எல்லாமே நடிப்பாவே இருக்கு “ என அவளின் கோபத்தை இப்படி ஏளனமாக முடிக்க..
அவளின் ஏளனமான குரலில் கண்கள் சிவக்க சட்டென்று பொங்கி விட்டான் சக்திவேல்.. “ ஏய்..!! அடிச்சேன்னா பல்லு கழண்டுரும்.., என்ன நினைச்சுட்டு இருக்க நீ..?ஆரம்பத்தில இருந்து இது நடிப்பு..... நடிப்புன்னு மனசுல நினைச்சுட்டே இருக்க.. அந்த நினைப்பை முதலில் விடு.. அதை விட்டுட்டு சும்மா. அதையே பேசி மனுஷனை டென்ஷன் பண்ணிக்கிட்டு.. இப்போ சொல்லு உண்மையான ஒரு மனைவியா ஒரு நொடி நீ நினைச்சிருந்தா... என்னை விட்டு, குடும்பத்தை விட்டு, என் குழந்தை பிறப்பை மறைசிருப்பியா..?சும்மா.. என்னை குத்தம் சொல்லாதே..? “ என அடிக்குரலில் பெரும் கோபத்தை காட்டுவது எப்படி என்று காட்டி விட்டு அழும் குழந்தையை தொட்டிலில் விட்டு வெளியில் சென்றான் அவன்...
வெளியேறிய அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது..” எப்படி பேசுனாலும், அதை அவள் விடவே மாட்டாளா?? இனி என்ன செய்து தான் அவளை மாற்றுவது “ அவனுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது....
உள்ளே இருந்தவளோ அழும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு மடியில் வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள், மனமோ “ ஏன் குழந்தையை என் கையில் கொடுத்தா என்னவாம்..” என சிணுங்கிக் கொண்டு இருந்தது...
அவள் மனது என்ன எதிர் பார்க்கிறது என்று அவளுக்கு தெரியவே இல்ல... மனதில் ஏதோ வெற்றிடம் பெருகுவதாய்... நெருங்கி வந்தால் விலகுவதாகவும், விலகி போனால் நெருங்க ஆசை கொள்கிறது மனது.... மனம் ஒரு விசித்திரமானது....
அவனிடம் இருக்க ஆசையும் கொள்கிறது. அதே மனது அவன் அருகில் நெருங்கினால் வெறுக்கவும் சொல்கிறது... அவள் நிலையையே அவளால் கணிக்க முடியவில்லை.. அப்படி இருக்கையில் சக்தியால் என்ன செய்துவிட முடியும்...?
அன்று இரவு சக்தி வீட்டுக்கு வரவே இல்லை... அடுத்த நாளும் வரவில்லை.... வீட்டுக்கு போகவே அவனுக்கு மனதில்லை... அவளிடம் நின்று பேசவும் முடியவில்லை... கோபத்தில் ஏதாவது செய்து விடுவோம் என எண்ணியே செங்கல் சூளையில் தன் நேரத்தை கழித்து கொள்வான். குழந்தையை பார்க்க கூட வரவில்லை அவன்... அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு... " அவள் மனதிலே.. என்ன இருக்குன்னு தெரியல " என்று இங்கு புலம்பிக் கொண்டு இருந்தான்.... அவளோ தன் மனம் என்ன நினைக்கிறது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்..
மாலையில் வீட்டுக்கு வந்த இனியாள் ஆசையாக அவளின் மாமாவுக்காக காத்திருக்க.. அவனோ அன்று வெகு நேரம் கழித்தே வந்தான்... அவன் வந்த நேரம் இனியாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க..
அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவள் கன்னத்தில், பட்டும் படாமலும் மெலிதாக முத்தம் வைத்து அவள் அருகில் சரிந்துக் கொண்டான்....
அன்று சண்டே எல்லாருக்கும் விடுமுறை ஆதலால் எப்பொழுதும் போல் வீட்டின் பின் உள்ள நீச்சல் குளத்துக்கு செல்லலாம் என வெற்றி ஐடியா கொடுக்க.., சக்தியும் தன் மனைவியின் கோபத்தை கொஞ்சம் குறைக்கலாம் என சந்தோசத்துடன் சம்மதம் கூறினான்...
அவனுக்கு நன்கு தெரியும் “ சிறு வயதில் இருந்தே இதழிக்கு நீச்சல் ரொம்ப பிடிக்கும் “ என
அறைக்கு வந்து ” இதழி.. எல்லாரும் நீச்சல் குளம் போவமா.. நீயும் அங்க வந்து ரொம்ப நாள் ஆகுதே... வாரியா “ என அழைக்க..
அந்த நேரம் அவளுக்கும் சிறு மாற்றம் தேவையாய் இருக்க.., அவன் அழைக்கவுமே “ சரி “ என கூறியவள் “ தம்பி “ என இழுக்க..
“ அவனை அம்மா கிட்ட கொடுத்துட்டு போவோம்.. ஒரு ஒன் ஹவர் தான்.. நான் உன்னை டச் கூட பண்ணமாட்டேன் “ என கெஞ்சலாக கூற..
அவன் முகத்தில் இருந்த ஆசையை பார்த்து.., குழந்தையை கொண்டு நாராயணன் கையில் கொடுத்து விட்டு வந்தாள்...
வெற்றி குளத்தில் “ பட்டர்பிளை ஸ்ட்ரோக் “ செய்து கொண்டிருக்க... அவனை நோக்கி நீச்சல் உடையில் வந்தாள் அவனின் தேவதை...
அவளை பார்த்த அவன், தன்னை மறந்து ஒரு நிமிடம் ஸ்ட்ரோக்கை நிறுத்த.., அப்படியே நீரில் ஆழ.., “ ஏய்.. மாமா “ என அழைத்துக் கொண்டே குளத்தில் குதிக்க....
அவள் குதிக்கவும், தன் நிலை உணர.., “ ஹனி “ என அழைத்து அவளை அணைக்க...
“ டேய் வெற்றி.. என்னடா பயங்கர மழை பெய்யுதுப் போல “ என இங்கிருந்தே சக்தி கத்திக் கேட்க...
கடுப்புடன் அவளை விடுவித்துக் கொண்டே “ ஆமாடா...அண்ணா. பயங்கர மழை தான் “ என கடுப்புடன் கூற..
“ ம்ம். ஜமாய்டா “ என சக்தி கலாய்த்து விட்டு செல்ல....
“ ம்ம்,,,ம்ம்ம் “ என சந்தானம் போல் தலையை அங்கும், இங்கும் ஆட்ட.. அவன் நிலை இனியாளுக்கு புன்னகை வருவதாய்...
அவளை முறைத்துக் கொண்டே “ மனுசனை ஒரு எட்டு எடுத்து வைக்க விடமாட்டானுங்களே.... அவன் மட்டும் ஒரு எட்டு இல்ல பல எட்டு எடுத்து மேல போய்ட்டான், நான் இன்னும் ஒரு எட்டு கூட எடுத்து வைக்கல... டேய்.. வெற்றி இதுக்கு எல்லாம் ஒரு மச்சம் வேணும்டா மச்சம் “ என தன் நிலையை நொந்துக் கொள்ள..
அதற்குள் சக்தி வந்துவிட.. “ இனி எங்க “ என மெதுவாக சலித்துக் கொண்டான் வெற்றி...
சக்தி வந்த கொஞ்ச நேரத்தில் இதழி வந்தாள்.. அவளைக் கண்டு மூச்சை நிறுத்தி விட்டான் சக்தி...
உடலை கவ்வி பிடித்திருந்த அந்த ஆடை, அவள் வளைவுகளை மேலும் அழகாக்கிக் காட்ட.., ஒரு கணம் நிலைகுலைந்துப் போனான் சக்தி...
அவன் விழுங்கும் பார்வையை கண்டு, கூச்சத்துடன் மெதுவாக குளத்தில் இறங்க, அவனால் தன்னை கட்டுபடுத்தவே முடியாமல் போனது...
பழைய நினைவுகள் அலையாய் பரவி, அவளுடைய கூந்தல் மணமும், மலரை போன்ற மென்மையான அந்த மேனியின் தீண்டலும், அவனுள் பெரும் போராட்டத்தை விதைக்க.. “ அடேய் சக்தி.. உனக்கு வந்த சோதனையா... பக்கத்துல போனாலே கடிப்பாளே..? “ என மனதில் அலற...
அவளோ எதையும் கவனிக்காமல் தன் அக்காளுடன் ஆட்டம் போட.... வெற்றியை அப்பொழுது தான் கண்டான் சக்தி... கண்டவன் “ பக்கென “ சிரித்து விட..
அவன் சிரிப்பில் அவனை நோக்கி திரும்பிய வெற்றி “ அண்ணே வா... இன்னைக்கு நம்ம வேலை ரெண்டு பேரையும் தூரத்தில் இருந்து சைட் அடிக்குறது தான் “ என கன்னத்தில் கை வைத்து சோகமாக கூற... சக்தியும் அவன் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டான்...
சிறிது நேரத்தில் அவர்கள் கரைக்கு வந்து, தூரத்தில் இருந்த தனி தனியான உடைமாற்றும் அறைக்கு செல்ல.. குளத்தின் கரையில் இருந்த இருவர் முகத்திலும் பளிச் என பல்ப் எரிய...
இருவரும் ஒரே நேரத்தில் குளத்தில் குதித்து.., விட்ட குளியலை தொடங்க... இருவரும் ஒரே போல் காக்காவை போல் தலையை மட்டும் நனைத்து விட்டு தங்களின் துணை சென்ற அறை நோக்கி செல்ல..,
திடீரென அவள் பின்புறம் கழுத்துக்கும், முதுகுக்கும் இடையே இருந்த மேனியில் சில்லென்ற நீர்த்துளிகள் பரவ..,
சட்டென தேகம் கூசி சிலிர்க்க பதறிப் போய் திரும்பிய போது, தலையில் நீர் சொட்ட குறுகுறு பார்வையுடன் இதழி அருகில் நின்றிருந்தான் சக்திவேல்...
Last edited: