ஹாய்.... ஹலோ.. மக்களே..!!
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! எபி 9 கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு கமண்ட்ஸ், ஒரு லைக் பண்ணுங்க.... இதுவரை படித்து கருத்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.... இந்த எபியை படிங்க... திங்கள் அடுத்த எபி கொண்டு வாரேன்... உங்கள் ஆதரவை கண்டு தான் சக்தி ஓடி வாரான்.. இன்னைக்கும் படிச்சு சொல்லுங்க அப்போ தான் திங்கள் செம எபி வரும் சொல்லிட்டேன்...
வேர் – 9
“ ஏய் இதழி “ என தன் அறையில் இருந்து கூவிக் கொண்டு இருந்தான் சக்திவேல்..
“ என்ன ஒரு நாளும் இல்லாமல், குட்டிமாமா இன்னைக்கு கூப்டுறாங்க “ என எண்ணிக் கொண்டே “ டேய் வெற்றி உன் அண்ணன் கூப்டுறான். என்னனு கேட்டு வாரேன் “ என கூறிக் கொண்டு செஸ் கட்டத்தை வெற்றி கையில் திணித்து விட்டு மாடி ஏறினாள் இதழி...
“ என்ன குட்டிமாமா “ என அவன் முன் நின்றவளை நோக்கி...
“ யாரு.. குட்டி மாமா “ என முறைத்துக் கொண்டு நின்றவனை நோக்கி
“ குட்டிமாமாவுக்கு என்ன ஆச்சு... ஒரு வேளை எல்லாம் மறந்துட்டோ “ என யோசித்துக் கொண்டு இருந்தவளை..,
“ ஏய்.. இங்க பாரு தினமும் என் ரூம் நீ தான் கிளீன் பண்ணனும் “ என..
“ ஏன்.. நான் பண்ணனும் அது தான் வீட்டை கூட்ட ஆள் இருக்கங்களே... நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைகாரி இல்லை “ என பட்டென்று கூறியவளை உற்று நோக்கிய அவன்..,
“ அம்மா சொன்னது சரியா தான் இருக்கு.. திமிர் பிடித்தவளா இருப்பா போலவே “ என மனதில் எண்ணி .., “ இங்க பாரு நீ தான் என் ரூம் கிளீன் பண்ணனும்.... எனக்கு எல்லாம் நீ தான் செய்யணும்“ என கூறி அவளை முறைத்து விட்டு சென்றான்....
அவனை பார்த்து, அவன் முறைப்பை கண்டு பயந்து தினமும் அவன் அறையை கிளீன் பண்ண ஆரம்பித்தாள்...அதிலும் அவன் அழைக்கும் நேரம் எல்லாம் இதழி ஓடுவது கண்ணழகி மனதில் பெரும் சந்தோசம் உண்டாகியது... முறை வரும் உறவு தான்... இப்பொழுதே பழகினால் பின்னாளில் ஒரு நல்லது நடந்தால் சந்தோசம் தான் என எண்ணி அவள் செய்வதை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டார்..
லட்சுமிக்கு ஒரு வித சந்தோசம் “ தன் மகன் அவளுக்கான நிலையை, அவள் தரத்தை உணர்த்துகிறான் “ என எண்ணிக் கொண்டார்...
அன்றும் இப்படி தான் ஸ்கூல் கிளம்பாமல் அவன் புக் எடுத்து அடுக்கி கொண்டு இருந்தவளை கண்டு அருகில் வந்த நாராயணன் “ என்னம்மா நீ இன்னும் ஸ்கூல் கிளம்பாம.. இவன் புக் எடுத்துக் கிட்டு இருக்க.. போ ஸ்கூல் கிளம்பு “ என அவளை கிளப்ப..
“ மாமா.. அது..” என தயக்கத்துடன் ஆரம்பிக்க..
“ ஏய்... இன்னும் இங்க என்ன பண்ணுற... எல்லாம் கிளீன் பண்ணிட்டியா “ என கேட்டுக் கொண்டே அவன் அறைக்குள் வர.., உள் நின்ற தன் தந்தையை கண்டு ஒருநிமிடம் தயங்கி நின்ற சக்தி...
“ இதழி சீக்கிரம் எடுத்து வச்சுட்டு ஸ்கூல் கிளம்பு.. உனக்கும் நேராகுதுல“ என கூறி கொண்டு அவன் காலேஜ் பேக் எடுத்துக் கொண்டு, பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு ஒன்றும் தெரியாததுப் போல் வெளியில் சென்றான் அவன்...
அவனை யோசனையாக பார்த்த நாராயணன் அவளின் தலையை பாசமாக வருடி ‘ நீ கிளம்பும்மா “ என கூறி மனதில் “ சக்தியை கண்டிக்க வேண்டும் “ எனஎண்ணி அவளைப் பார்க்க..
அவளின் தயக்கத்தை கண்டு “ என்னம்மா போ“ என கூற..
“ இல்ல மாமா.... புக்“ என தடுமாற..
“ நீ போமா.. அவனை நான் பார்த்துகிறேன் “ என கூற, தயக்கத்துடன் வெளியில் சென்றாள் அவள்....
மாலையில் வீட்டுக்கு வந்த சக்தி, அவளும், வெற்றியும் விளையாடிக் கொண்டு இருப்பதை கண்டவன். அமைதியாக தன் அறைக்கு வந்தான்... அங்கு புக் எல்லாம் அப்படியே இருப்பதை கண்ட அவன் “ இதழி“ என அழைக்க..
“ என்ன குட்டிமாமா “ என அவன் முன் வந்து நிற்க...
“ குட்டிமாமாவா..? உனக்குஇப்படி யார் சொல்லி தந்தா “ என ஒரு முறைப்புடனே கேட்க..
“ அது... கண்ணு பாட்டி “ என தயக்கமாக கூற...
“ அப்படியா “ என.., மெதுவாக தலையை கோதிய அவன் முகத்தில் புன்னகை பரவியது.. அதை அவளுக்கு காட்டாமல் “ இங்க வா “ என அழைக்க....
அவனை விட்டு வெகுவாக பின்னாடி தள்ளி நின்றுக் கொண்டு “ மாட்டேன்“ என தலையசைக்க..
“ அட.. வாமா“ என அவள் கையை பிடித்து இழுக்க...
“ கையை விடுங்க“ என அவன் கையை தட்டி விட்டுக் கொண்டு அவனை முறைக்க..
“ அட என்னம்மா...!! பாசமா குட்டிமாமா சொல்லுற...? கைய பிடிச்சா முறைக்குற இது என்ன நியாயம்..! “ என குறும்பு குரலில் அந்த வளர்ந்த அறிவு கொழுந்து, சிறு குழந்தையை சீண்ட...
அவனைபார்த்து “ ங்கே ” என முழித்தாள் அவள்..
அவளை முழியை கண்டு தலையை கோதி சிரித்துக் கொண்டே “ மாமான்னா..!! கட்டிக்க போறவங்களை தான் அப்படி அழைக்கணும்.. அப்போ நீ என்னை கட்டிக்க போறியா..? “ என கேட்டுக் கொண்டே தாடையை தடவிய அவன் சிறு யோசனைக்கு பின் அவளை பார்த்து “ நீ இனி என்ன பண்ணுறன்னா.... இந்த மாமாவை தான் கட்டிக்கணும்... சரியா....“ என சிரிப்புடன் கூற..
அவனின் சிரிப்பை அதிசயமாக பார்த்த அவள் தலை தானாக “ சரி குட்டி மாமா “ என கூற...
மீண்டும் மலர்ந்து சிரித்த அவன் “ சரி.. டெய்லி காலையில் என்னை பார்க்கும் நேரம் எல்லாம் உங்களை தான் கட்டிப்பேன்... என்று என் கிட்ட நீ சொல்லணும் சரியா “ என வினவ...
“ ம்ம்... சரி “ என கூறிய அவள் அவன் அறையை விட்டு வெளியில் ஓட..
“ ஏய்.. சொன்னது நினைவிருக்கட்டும் “ என இங்கிருந்து கத்தினான் அவன்....
அவள் செல்லவும் மலர்ந்து சிரித்த அவன் தன் ப்ரொஜெக்ட் செய்ய கணிணி முன் அமர்ந்தான்.... சிறு பெண்ணின் மனதை கலைக்கிறோமே என அறியாமலேதன் விளையாட்டை ஆரம்பித்தான் சக்திவேல்...
மணியம்மாளுக்கு, லட்சுமி அத்தை கொடுக்கும் பரிவு, மரியாதை எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை... எப்பொழுதும் வேலைகாரர்கள் அவர்கள் நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்... அதனால் தான் கோபம் எல்லாம் இந்த சிறுமி மேல் பாய்ந்தது... அதை அறியாத அவளோ எப்பொழுதும் போல் வந்துப் போனாள்...
அது கூட லட்சுமி மனதுக்கு உறுத்தியதோ என்னவோ..? அன்று கண்ணழகி, மணியம்மாளை அழைத்துக் கொண்டு, லட்சுமியிடம் வந்து நின்று “ பத்து நாள் கழித்து தான் வருவோம்.. குழந்தைகளை பாத்துக்கோ “ என்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றார்... இருவரையும் நாராயணன் - லட்சுமி பொறுப்பில் விட்டு சென்றார்...
ஆனால் நாராயணனுக்கோ எதிர் பாராத பாரின் ஆர்டர் வர, அவசரமாக அவர் பாரின் கிளம்பி சென்றார்... அதிலும் லக்ஷ்மியிடம் “ இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள் “ என கூறி சென்றார்...
“ பெத்த பிள்ளைகளை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லாமல் வேலைகாரிகளை பாத்துக்க சொல்கிறார் “ எனமீண்டும் கோபம் இருவர் மேல் திரும்பியது...
அன்று இருவரும் பள்ளி கிளம்பி சென்றவர்களை, வீட்டு வாசலில் நின்ற லட்சுமி “ இதழி, இனியா ரெண்டு பெரும் கொஞ்சம் இங்க வாங்க “ என அழைக்க..
“ அக்கா... நீ ஸ்கூல் போ... அத்தை கூப்டுறாங்க.. நான் என்னன்னு கேட்டு வாறேன் “ என்றுகூறிக் கொண்டு தன் அத்தையை நோக்கி நடந்தாள் இதழி..
இவள் மட்டும் தனியாக வருவதை கண்ட அவர் “ ஏய்.. என்ன நீ மட்டும் வார..?? அவளையும் கூப்டு..? “ என முறைப்புடனே கேட்க
“ அக்கா ஸ்கூல் போகட்டும், என்ன செய்யணும் என்கிட்ட சொல்லுங்க“ என அவரை பார்த்து முறைத்துக் கொண்டே கூற......
லக்ஷ்மிக்கு வேலையே இது தான் இவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரம் அழைத்து ஏதாவது செய்ய கூறுவார்.. “ வேலைக்கார இவளுகளுக்கு என்ன படிப்பு வேண்டி இருக்கு... இந்த14 வயசுலையே என்னை மதிக்காம இருக்கா. இதுல நிறைய படித்தா... சுத்தம் “ என்று எண்ணி தான் இப்படி எல்லாம் செய்வது..
கண்ணழகி தடுத்தால் “ எனக்கு அவசரமா தேவை அத்தை “ என்று அவரிடம் பவ்யமாக கூறுவாள்.. அதற்கு மேல் அவரும் ஓன்று கூறமாட்டார் ஒரே ஒரு மருமகள் அவளிடம் ஏன் முகத்தை திருப்புவானேன் என்று அமைதியாக சென்று விடுவார்....
இதழியிடம் “ வீட்டுக்கு இன்னைக்கு என் பிரண்ட்ஸ் வாராங்க... நீங்க ஸ்கூல் போகவேண்டாம்.. வீட்டுல உன் பாட்டியும் இல்ல... சோ நீங்க இங்க இருங்க “ என முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கூற..
ரொம்ப நேரம் ஆகியும் பதில் இல்லாமல் போக அவள் பக்கம் திரும்பிய லட்சுமி, அவள் இல்லாமல் போக கண்களை எங்கும் சுழல விட்டார்.. அவளோ தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு இருந்தாள்...
அவளிடம் ஓடிய அவர்“ ஏஏய்.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன். நீ என்ன செய்ற “ என கேட்டு அவளை அடிக்க வர..,
அவர் அடியில் இருந்த வாகாக திரும்பிய அவள் " நீங்க சுவத்துக்கிட்ட தான சொன்னீங்க..? அதுவே உங்களுக்கு செய்யும் நான் ஏன் செய்யணும் " என அவரை பார்த்து பதில் கேள்விக் கேட்டவளை..
" இந்த வயசுல வாயை பாரு... ஒண்ணும் இல்லாமல் இருக்கும் போதே இப்படி பேசுறா.. கொஞ்சம் வசதியா இருந்தாளோ? எல்லாரையும் ஏறி மிதிப்பா இவா.." என மனதில் எண்ணி " சரி... சரி... வா... இன்னைக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" என தாழ்மையாக அழைக்க...
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! எபி 9 கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு கமண்ட்ஸ், ஒரு லைக் பண்ணுங்க.... இதுவரை படித்து கருத்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.... இந்த எபியை படிங்க... திங்கள் அடுத்த எபி கொண்டு வாரேன்... உங்கள் ஆதரவை கண்டு தான் சக்தி ஓடி வாரான்.. இன்னைக்கும் படிச்சு சொல்லுங்க அப்போ தான் திங்கள் செம எபி வரும் சொல்லிட்டேன்...
வேர் – 9
“ ஏய் இதழி “ என தன் அறையில் இருந்து கூவிக் கொண்டு இருந்தான் சக்திவேல்..
“ என்ன ஒரு நாளும் இல்லாமல், குட்டிமாமா இன்னைக்கு கூப்டுறாங்க “ என எண்ணிக் கொண்டே “ டேய் வெற்றி உன் அண்ணன் கூப்டுறான். என்னனு கேட்டு வாரேன் “ என கூறிக் கொண்டு செஸ் கட்டத்தை வெற்றி கையில் திணித்து விட்டு மாடி ஏறினாள் இதழி...
“ என்ன குட்டிமாமா “ என அவன் முன் நின்றவளை நோக்கி...
“ யாரு.. குட்டி மாமா “ என முறைத்துக் கொண்டு நின்றவனை நோக்கி
“ குட்டிமாமாவுக்கு என்ன ஆச்சு... ஒரு வேளை எல்லாம் மறந்துட்டோ “ என யோசித்துக் கொண்டு இருந்தவளை..,
“ ஏய்.. இங்க பாரு தினமும் என் ரூம் நீ தான் கிளீன் பண்ணனும் “ என..
“ ஏன்.. நான் பண்ணனும் அது தான் வீட்டை கூட்ட ஆள் இருக்கங்களே... நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைகாரி இல்லை “ என பட்டென்று கூறியவளை உற்று நோக்கிய அவன்..,
“ அம்மா சொன்னது சரியா தான் இருக்கு.. திமிர் பிடித்தவளா இருப்பா போலவே “ என மனதில் எண்ணி .., “ இங்க பாரு நீ தான் என் ரூம் கிளீன் பண்ணனும்.... எனக்கு எல்லாம் நீ தான் செய்யணும்“ என கூறி அவளை முறைத்து விட்டு சென்றான்....
அவனை பார்த்து, அவன் முறைப்பை கண்டு பயந்து தினமும் அவன் அறையை கிளீன் பண்ண ஆரம்பித்தாள்...அதிலும் அவன் அழைக்கும் நேரம் எல்லாம் இதழி ஓடுவது கண்ணழகி மனதில் பெரும் சந்தோசம் உண்டாகியது... முறை வரும் உறவு தான்... இப்பொழுதே பழகினால் பின்னாளில் ஒரு நல்லது நடந்தால் சந்தோசம் தான் என எண்ணி அவள் செய்வதை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டார்..
லட்சுமிக்கு ஒரு வித சந்தோசம் “ தன் மகன் அவளுக்கான நிலையை, அவள் தரத்தை உணர்த்துகிறான் “ என எண்ணிக் கொண்டார்...
அன்றும் இப்படி தான் ஸ்கூல் கிளம்பாமல் அவன் புக் எடுத்து அடுக்கி கொண்டு இருந்தவளை கண்டு அருகில் வந்த நாராயணன் “ என்னம்மா நீ இன்னும் ஸ்கூல் கிளம்பாம.. இவன் புக் எடுத்துக் கிட்டு இருக்க.. போ ஸ்கூல் கிளம்பு “ என அவளை கிளப்ப..
“ மாமா.. அது..” என தயக்கத்துடன் ஆரம்பிக்க..
“ ஏய்... இன்னும் இங்க என்ன பண்ணுற... எல்லாம் கிளீன் பண்ணிட்டியா “ என கேட்டுக் கொண்டே அவன் அறைக்குள் வர.., உள் நின்ற தன் தந்தையை கண்டு ஒருநிமிடம் தயங்கி நின்ற சக்தி...
“ இதழி சீக்கிரம் எடுத்து வச்சுட்டு ஸ்கூல் கிளம்பு.. உனக்கும் நேராகுதுல“ என கூறி கொண்டு அவன் காலேஜ் பேக் எடுத்துக் கொண்டு, பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு ஒன்றும் தெரியாததுப் போல் வெளியில் சென்றான் அவன்...
அவனை யோசனையாக பார்த்த நாராயணன் அவளின் தலையை பாசமாக வருடி ‘ நீ கிளம்பும்மா “ என கூறி மனதில் “ சக்தியை கண்டிக்க வேண்டும் “ எனஎண்ணி அவளைப் பார்க்க..
அவளின் தயக்கத்தை கண்டு “ என்னம்மா போ“ என கூற..
“ இல்ல மாமா.... புக்“ என தடுமாற..
“ நீ போமா.. அவனை நான் பார்த்துகிறேன் “ என கூற, தயக்கத்துடன் வெளியில் சென்றாள் அவள்....
மாலையில் வீட்டுக்கு வந்த சக்தி, அவளும், வெற்றியும் விளையாடிக் கொண்டு இருப்பதை கண்டவன். அமைதியாக தன் அறைக்கு வந்தான்... அங்கு புக் எல்லாம் அப்படியே இருப்பதை கண்ட அவன் “ இதழி“ என அழைக்க..
“ என்ன குட்டிமாமா “ என அவன் முன் வந்து நிற்க...
“ குட்டிமாமாவா..? உனக்குஇப்படி யார் சொல்லி தந்தா “ என ஒரு முறைப்புடனே கேட்க..
“ அது... கண்ணு பாட்டி “ என தயக்கமாக கூற...
“ அப்படியா “ என.., மெதுவாக தலையை கோதிய அவன் முகத்தில் புன்னகை பரவியது.. அதை அவளுக்கு காட்டாமல் “ இங்க வா “ என அழைக்க....
அவனை விட்டு வெகுவாக பின்னாடி தள்ளி நின்றுக் கொண்டு “ மாட்டேன்“ என தலையசைக்க..
“ அட.. வாமா“ என அவள் கையை பிடித்து இழுக்க...
“ கையை விடுங்க“ என அவன் கையை தட்டி விட்டுக் கொண்டு அவனை முறைக்க..
“ அட என்னம்மா...!! பாசமா குட்டிமாமா சொல்லுற...? கைய பிடிச்சா முறைக்குற இது என்ன நியாயம்..! “ என குறும்பு குரலில் அந்த வளர்ந்த அறிவு கொழுந்து, சிறு குழந்தையை சீண்ட...
அவனைபார்த்து “ ங்கே ” என முழித்தாள் அவள்..
அவளை முழியை கண்டு தலையை கோதி சிரித்துக் கொண்டே “ மாமான்னா..!! கட்டிக்க போறவங்களை தான் அப்படி அழைக்கணும்.. அப்போ நீ என்னை கட்டிக்க போறியா..? “ என கேட்டுக் கொண்டே தாடையை தடவிய அவன் சிறு யோசனைக்கு பின் அவளை பார்த்து “ நீ இனி என்ன பண்ணுறன்னா.... இந்த மாமாவை தான் கட்டிக்கணும்... சரியா....“ என சிரிப்புடன் கூற..
அவனின் சிரிப்பை அதிசயமாக பார்த்த அவள் தலை தானாக “ சரி குட்டி மாமா “ என கூற...
மீண்டும் மலர்ந்து சிரித்த அவன் “ சரி.. டெய்லி காலையில் என்னை பார்க்கும் நேரம் எல்லாம் உங்களை தான் கட்டிப்பேன்... என்று என் கிட்ட நீ சொல்லணும் சரியா “ என வினவ...
“ ம்ம்... சரி “ என கூறிய அவள் அவன் அறையை விட்டு வெளியில் ஓட..
“ ஏய்.. சொன்னது நினைவிருக்கட்டும் “ என இங்கிருந்து கத்தினான் அவன்....
அவள் செல்லவும் மலர்ந்து சிரித்த அவன் தன் ப்ரொஜெக்ட் செய்ய கணிணி முன் அமர்ந்தான்.... சிறு பெண்ணின் மனதை கலைக்கிறோமே என அறியாமலேதன் விளையாட்டை ஆரம்பித்தான் சக்திவேல்...
மணியம்மாளுக்கு, லட்சுமி அத்தை கொடுக்கும் பரிவு, மரியாதை எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை... எப்பொழுதும் வேலைகாரர்கள் அவர்கள் நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்... அதனால் தான் கோபம் எல்லாம் இந்த சிறுமி மேல் பாய்ந்தது... அதை அறியாத அவளோ எப்பொழுதும் போல் வந்துப் போனாள்...
அது கூட லட்சுமி மனதுக்கு உறுத்தியதோ என்னவோ..? அன்று கண்ணழகி, மணியம்மாளை அழைத்துக் கொண்டு, லட்சுமியிடம் வந்து நின்று “ பத்து நாள் கழித்து தான் வருவோம்.. குழந்தைகளை பாத்துக்கோ “ என்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றார்... இருவரையும் நாராயணன் - லட்சுமி பொறுப்பில் விட்டு சென்றார்...
ஆனால் நாராயணனுக்கோ எதிர் பாராத பாரின் ஆர்டர் வர, அவசரமாக அவர் பாரின் கிளம்பி சென்றார்... அதிலும் லக்ஷ்மியிடம் “ இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள் “ என கூறி சென்றார்...
“ பெத்த பிள்ளைகளை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லாமல் வேலைகாரிகளை பாத்துக்க சொல்கிறார் “ எனமீண்டும் கோபம் இருவர் மேல் திரும்பியது...
அன்று இருவரும் பள்ளி கிளம்பி சென்றவர்களை, வீட்டு வாசலில் நின்ற லட்சுமி “ இதழி, இனியா ரெண்டு பெரும் கொஞ்சம் இங்க வாங்க “ என அழைக்க..
“ அக்கா... நீ ஸ்கூல் போ... அத்தை கூப்டுறாங்க.. நான் என்னன்னு கேட்டு வாறேன் “ என்றுகூறிக் கொண்டு தன் அத்தையை நோக்கி நடந்தாள் இதழி..
இவள் மட்டும் தனியாக வருவதை கண்ட அவர் “ ஏய்.. என்ன நீ மட்டும் வார..?? அவளையும் கூப்டு..? “ என முறைப்புடனே கேட்க
“ அக்கா ஸ்கூல் போகட்டும், என்ன செய்யணும் என்கிட்ட சொல்லுங்க“ என அவரை பார்த்து முறைத்துக் கொண்டே கூற......
லக்ஷ்மிக்கு வேலையே இது தான் இவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரம் அழைத்து ஏதாவது செய்ய கூறுவார்.. “ வேலைக்கார இவளுகளுக்கு என்ன படிப்பு வேண்டி இருக்கு... இந்த14 வயசுலையே என்னை மதிக்காம இருக்கா. இதுல நிறைய படித்தா... சுத்தம் “ என்று எண்ணி தான் இப்படி எல்லாம் செய்வது..
கண்ணழகி தடுத்தால் “ எனக்கு அவசரமா தேவை அத்தை “ என்று அவரிடம் பவ்யமாக கூறுவாள்.. அதற்கு மேல் அவரும் ஓன்று கூறமாட்டார் ஒரே ஒரு மருமகள் அவளிடம் ஏன் முகத்தை திருப்புவானேன் என்று அமைதியாக சென்று விடுவார்....
இதழியிடம் “ வீட்டுக்கு இன்னைக்கு என் பிரண்ட்ஸ் வாராங்க... நீங்க ஸ்கூல் போகவேண்டாம்.. வீட்டுல உன் பாட்டியும் இல்ல... சோ நீங்க இங்க இருங்க “ என முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கூற..
ரொம்ப நேரம் ஆகியும் பதில் இல்லாமல் போக அவள் பக்கம் திரும்பிய லட்சுமி, அவள் இல்லாமல் போக கண்களை எங்கும் சுழல விட்டார்.. அவளோ தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு இருந்தாள்...
அவளிடம் ஓடிய அவர்“ ஏஏய்.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன். நீ என்ன செய்ற “ என கேட்டு அவளை அடிக்க வர..,
அவர் அடியில் இருந்த வாகாக திரும்பிய அவள் " நீங்க சுவத்துக்கிட்ட தான சொன்னீங்க..? அதுவே உங்களுக்கு செய்யும் நான் ஏன் செய்யணும் " என அவரை பார்த்து பதில் கேள்விக் கேட்டவளை..
" இந்த வயசுல வாயை பாரு... ஒண்ணும் இல்லாமல் இருக்கும் போதே இப்படி பேசுறா.. கொஞ்சம் வசதியா இருந்தாளோ? எல்லாரையும் ஏறி மிதிப்பா இவா.." என மனதில் எண்ணி " சரி... சரி... வா... இன்னைக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" என தாழ்மையாக அழைக்க...