• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu saithavale(ne)..!! epi - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Akka..ippo paravaala.. but mosaamaa part innime thaan varuma.. konjam seekiram thaanga ka ud yaa
ஹா..ஹா. காவ்யா அந்த அளவு மோசமா எல்லாம் வராதுடா... ஜஸ்ட் லட்சுமி அவங்க ஆதங்கத்தை சொல்லுவாங்க... சீக்கிரமா???:unsure:
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ?????????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
sup
“ என்னம்மா நீ.. உன் சொல்லை கேட்காமல் வேற யார் சொல்லை கேட்க போறேன் “ என கூற...

“ சரி அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடு... நான் சொல்லுற பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் “ என கூறி கையை நீட்ட..

“ ம்மீ.. உனக்குஇருந்தாலும் இந்த பயம் ஆகாதும்மா “ என செல்லமாக சலித்துக் கொண்டு “ சத்தியமா நீ சொல்லுற பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணுவேன்... போதுமா “ என லட்சுமி கையில் சத்தியம் செய்ய...

புன்னகையுடன்அவன் தலையை மெதுவாக கலைத்து விட்டு அவர் வெளியில் செல்ல... “ பாவம் அம்மா.... இனி அம்மாவுக்கு பிடிக்காத எதையும் செய்ய கூடாது.. இதழிகிட்ட பேசுறதை நிறுத்தணும் “ என மனதில் எண்ணிக் கொண்டான் சக்தி...

அதில் இருந்து அப்படியே மாறினான் சக்தி... தன் பாட்டியை ரொம்ப பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவர்களிடம் தன் முகத்தை காட்டாமல் இருக்கிறான்..

இப்பொழுது எல்லாம் சக்தி எப்பொழுதும் இறுக்கமாக இருப்பதுப் போலவே கண்ணழகிக்கு தெரிந்தது... அதிலும் மணியம்மாள், இதழி, இனியாள் இந்த மூன்று பேரில் யாராவது ஒருவர் வீட்டில் இருந்தால் அவனின் பார்வையும், பேச்சும் அப்படியே மாறிப் போகும்...

இது எல்லாம் தன் மருமகளின் கைகாரியம் என்றும் நன்கு தெரியும் அவருக்கு... அவளுக்கு வேலைகாரர்களிடம் பழகுவது அறவே பிடிக்காது. அப்படி தான் இவனையும் மாற்றிவிட்டாள், இவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்... இப்படி ஒவ்வொருவரும் தனி தனி எண்ணத்தில் இருந்தனர்..

அன்று “ பாட்டி“ என துள்ளி குதித்து ஓடி வந்தாள் இதழி...

அந்த நேரம் தான் ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்த சக்தி வேக நடையுடன் வீட்டின் உள் வர... “ ஒய் குட்டிமாமா “ என அவனை ஓங்கி குரல் கொடுத்து அழைத்தாள்...

“ அட குட்டி பாப்பா... வாண்டடா.. வண்டியில் ஏறுதே “ என அவளை பார்த்து நின்றான் வெற்றி...

அவள் குரலில் ஒரு நொடி நின்ற சக்தி மீண்டும் வேகமாக படி ஏறி அவன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்... தன் அம்மாவுக்காக அவர்களை ஒதுக்கி வைத்தான் சக்தி...

“ என்னம்மா சில்வண்டு... அண்ணனை பெரிய ஆள் மாதிரி ஒய்ன்னு கூப்டுற... அண்ணா இன்னைக்கு ஏதோ நல்ல மூடுல இருக்கார்... அதனால பேசாம போறார். இல்லன்னா அவர் முறைக்கும் ஒரு முறைப்பிலையே நீ காலி ஆகிருப்படி ” எனஅவளை கிண்டலடிக்க...

“ போடா.... டேய்“ என கூறிக் கொண்டு தன் பின்னே மறைத்து வைத்திருந்த கையை அவன் முன் நீட்டி“ டொட்டோடொயிங் “ என காட்ட...

“ ஏஏய் இதழி அழகா இருக்குடா... யார் பண்ணினா இது “ என ஆச்சரியமாக வாயை பிளந்து வெற்றி கேட்க..

சிறிது நேரம் அவனிடம் அவள் கெத்து காட்ட..

“ ரொம்ப பண்ணாத இதழி.. யார் செஞ்சா அது “ என அவள் கையில் வைத்திருந்த அழகான பேப்பர் வீட்டைக் காட்டி கேட்க..

“ நான் தான் செஞ்சேன் வெற்றி மாமா... அன்னைக்கு தோட்டத்துல நானும், தோட்டகார தாத்தாவும் விளையாடிட்டு இருந்தோமா.? அப்போ பந்து குட்டி மாமா ரூம் குள்ள போயிட்டு.... அத எடுக்க போனேனா..? அப்போ குட்டிமாமா இப்படி ஒரு வீட்டை அவங்க சிஸ்டம்ல சும்மா ட்ரா பண்ணி வச்சுருந்தாங்க. அது தான் ஈசியா செய்யலாமே..? மாமா ஏன் அதை இப்படி கஷ்டப்பட்டு சிஸ்டம்ல வரையணும்னு தான் நானே செஞ்சு அவருக்கு குடுக்கலாம்னு பார்த்தா.. பார்க்காம போறார்.. இத நீயே வச்சுகோடா... குட்டிமாமாவுக்கு குடுக்காத “ என இதழை சுழித்துக் கொண்டு பல நாள் கஷ்ட பட்டு அவளின் குட்டிமாமாவுக்காக செய்ததை வெற்றியிடம் கொடுத்துவிட்டாள் இதழி...

அதற்குள் மணியம்மாள் பஜ்ஜி செய்துக் கொண்டு வர.. அதை வாங்கி சோபாவில் அமர்ந்து வெட்டிக் கொண்டு இருந்தாள் அவள்.. அவளின் அருகில் அமைதியாக அமர்ந்து தன் கையில் பாட்டி தந்த பஜ்ஜியை சாப்ட்டுக் கொண்டு இருந்தாள் இனியாள்... அவளை அமைதியாக பார்த்துக் கொண்டு வந்த வெற்றி, இதழியிடம் சென்று அவள் கையில் இருந்த தட்டை பறித்துக் கொண்டு அவன் மாடிக்கு ஓட..

“ டேய் தாடா “ என அவனை விரட்டிக் கொண்டு ஓடினாள் இதழி...

வெற்றி ஓட,,, இவள் விரட்ட என்று சக்தி அறையை தாண்டி வெற்றி ஓடினான்... அவனை முறைத்துக் கொண்டே இதழி ஓட.., அப்பொழுது தான் தன் அறையை திறந்துக் கொண்டு வெளியில் வந்த சக்தி மேல் மேதிய அவள்.. “ ஆஆ.. அம்மா“ என்ற அலறலுடன் தன் வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்....

அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிய.. முதல் முறையாக அவளை ஊன்றிப் பார்த்தான் சக்தி... அவளை எப்பொழுதும் சிரித்த முகமாகவே பார்த்து விட்டு இன்று அவள் முகம் வேதனையை காட்டவும் ஊன்றிகவனித்தாலும்... கவனித்திருக்கலாம்.... ஏதோ ஓன்று அவளை ஊன்றி கவனிக்க வைத்தது...



வேர் மெல்ல சாயும்...:love:
super sha....indha sakthi parungale epdi pandran nu......lips age attend panitala ah????:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top