sakthipriya
SM Exclusive
மருதமலை கோயிலின் மேல்வரை பைக்கில் சென்றபின் கயல்விழியும், மதியழகனும் படிக்கட்டு வழியாக மருதமலை முருகனை தரிசனம் செய்தபின் பிராகாரத்தில் இருந்த மற்ற கடவுள்களை வழிபட்டபின் பாம்பாட்டி சித்தரை வழிபட்டு விட்டு வந்து கோயிலில் அமர்ந்தார்கள்.
மதியழகன் அவளுக்கு பிரசாத ஐட்டங்களை வாங்கிதர இருவரும் சாப்பிட்டனர்.
"கயல்... நேரமாச்சு. வீட்டுக்கு கிளம்பலாமா? என்று அவளிடம் மதியழகன் கேட்க "சரி மாமா" என்றாள் கயல்விழி.
மருதமலையிலிருந்து கீழே இறங்கும்போது நடுவழியில் "மாமா பைக்கை ஸ்டாப் பன்னுங்க" என்றாள் கயல்விழி.
கயல்விழி சொல்லியதும் ஏதோ அவசரம் என்று நினைத்தவனாய் வண்டியை நிறுத்தியபின்,
"கயல்... ஏன் வண்டியை நிறுத்த சொன்னாய்?" என்றான்.
கயல்விழி பைக்கைவிட்டு இறங்கி நின்று கொண்டு,
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மாமா" என்றாள்.
கயல்விழி பைக்கை நிறுத்திய இடத்தில் பசுமையான மரங்கள் இருந்ததால் பைக்கை அங்கே நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.
"மாமா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நான் நேரடியாக சொல்லிடறேன். "ஐ லவ் யூ மாமா" என்றாள் கயல்விழி.
மதியழகனோ அவள் ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
"இதை சொல்லதான் பைக்கை நிறுத்த சொன்னியா நீ?" என்று அலட்சியமாக கேட்டபடி சிரித்தான் மதியழகன்.
"மாமா! சிரிக்காதீங்க நீங்க. நான் உங்ககிட்ட சீரியஸாகதான் சொல்றேன். ஐ... லவ்... யூ... நான் உங்களை காதலிக்கிறேன். அது உங்களுக்கு புரிஞ்சா சரி" என்று அழுத்தமாக கயல்விழி சொல்ல மதியழகன் கோபத்தில் அறைந்துவிட்டான்.
கயல்விழியை இதுவரை யாரும் அடித்ததில்லை. அவனுக்கோ அவள் மீது கொள்ளை பிரியம் என்பதால் கயல்விழி என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவனுக்கு கோபமே வராது.
அத்தை அன்னலட்சுமி அவளை அதட்டினாலே "திட்டாதீங்க அத்தை. கயல் நல்ல பொண்ணு சொன்னா புரிஞ்சுக்குவா" என்று பரிந்து பேசுவான் அவன்.
கயல்விழி அடிவாங்கியதும் வலிதாங்க முடியாமல் தன் கன்னங்களில் கைவைத்து விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
கயல்விழி அழுவதை பார்த்த மதியழகன் அவளிடம் வந்து "சாரிடா! மாமா உன்னை கோபத்தில் அடிச்சிட்டேன். சாரிடா! சாரி! ரொம்ப வலிக்குதா?" என்று கேட்க ஆரம்பித்துவிட்டான்.
"சொல்லுங்க மாமா... என் காதலை நீங்க ஏத்துகிறிங்களா? இல்லையா?" என்றாள் கயல்விழி.
Message…
மதியழகன் அவளுக்கு பிரசாத ஐட்டங்களை வாங்கிதர இருவரும் சாப்பிட்டனர்.
"கயல்... நேரமாச்சு. வீட்டுக்கு கிளம்பலாமா? என்று அவளிடம் மதியழகன் கேட்க "சரி மாமா" என்றாள் கயல்விழி.
மருதமலையிலிருந்து கீழே இறங்கும்போது நடுவழியில் "மாமா பைக்கை ஸ்டாப் பன்னுங்க" என்றாள் கயல்விழி.
கயல்விழி சொல்லியதும் ஏதோ அவசரம் என்று நினைத்தவனாய் வண்டியை நிறுத்தியபின்,
"கயல்... ஏன் வண்டியை நிறுத்த சொன்னாய்?" என்றான்.
கயல்விழி பைக்கைவிட்டு இறங்கி நின்று கொண்டு,
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மாமா" என்றாள்.
கயல்விழி பைக்கை நிறுத்திய இடத்தில் பசுமையான மரங்கள் இருந்ததால் பைக்கை அங்கே நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.
"மாமா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நான் நேரடியாக சொல்லிடறேன். "ஐ லவ் யூ மாமா" என்றாள் கயல்விழி.
மதியழகனோ அவள் ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
"இதை சொல்லதான் பைக்கை நிறுத்த சொன்னியா நீ?" என்று அலட்சியமாக கேட்டபடி சிரித்தான் மதியழகன்.
"மாமா! சிரிக்காதீங்க நீங்க. நான் உங்ககிட்ட சீரியஸாகதான் சொல்றேன். ஐ... லவ்... யூ... நான் உங்களை காதலிக்கிறேன். அது உங்களுக்கு புரிஞ்சா சரி" என்று அழுத்தமாக கயல்விழி சொல்ல மதியழகன் கோபத்தில் அறைந்துவிட்டான்.
கயல்விழியை இதுவரை யாரும் அடித்ததில்லை. அவனுக்கோ அவள் மீது கொள்ளை பிரியம் என்பதால் கயல்விழி என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவனுக்கு கோபமே வராது.
அத்தை அன்னலட்சுமி அவளை அதட்டினாலே "திட்டாதீங்க அத்தை. கயல் நல்ல பொண்ணு சொன்னா புரிஞ்சுக்குவா" என்று பரிந்து பேசுவான் அவன்.
கயல்விழி அடிவாங்கியதும் வலிதாங்க முடியாமல் தன் கன்னங்களில் கைவைத்து விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
கயல்விழி அழுவதை பார்த்த மதியழகன் அவளிடம் வந்து "சாரிடா! மாமா உன்னை கோபத்தில் அடிச்சிட்டேன். சாரிடா! சாரி! ரொம்ப வலிக்குதா?" என்று கேட்க ஆரம்பித்துவிட்டான்.
"சொல்லுங்க மாமா... என் காதலை நீங்க ஏத்துகிறிங்களா? இல்லையா?" என்றாள் கயல்விழி.
Message…
Last edited: