10
இரண்டு மணிநேர பயணத்துக்குப் பிறகு அவர்கள் வந்தது செங்கல்பட்டு அருகே ஆத்தூர் என்னும் ஊரில் ஒரு விவசாய நிலத்தின் முன். இவர்கள் கூடவே அங்கு ஒரு பெரிய படையே வந்திறங்கியது. எல்லாரும் மாடர்ன் மக்கள், ஆனால் இங்குக் களப்பணி செய்வது போல் வந்திருந்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த மண்வெட்டி இத்தியாதிகளை வைத்து அவளே நினைத்துக் கொண்டாள். அங்குப் போனதும் அந்த மகளிர் குழுவிடம்,
“என் ஃபிரண்டு சித்ரா. இங்கே புதுசா வந்திருக்கா. சோ கொஞ்சம் ஈசியான வேலையா கொடுங்க”
மொழிந்துவிட்டு போனவன் தான், அவள் புறம் திரும்பவே இல்லை. எதற்கு அவளிடம் இந்த அதிரடி என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அன்று ஏதேதோ பணிகள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அமுதனுக்கும் கெளரி சங்கருக்கும் ஏற்கனவே பழக்கமிருந்தது போலும், வேலையில் ஐக்கியம் ஆகிவிட்டனர்.
சித்ராவுக்கு, வெயிலில் நோகாமல் வீட்டில் பூந்தொட்டியில் செடி வைத்துத் தான் பழக்கம். வந்து இந்தப் பத்து நிமிடத்தில் போட்டிருந்த உடையெல்லாம் வேர்வையில் நனைந்து விட்டிருந்தது.
சித்ராவின் மனசாட்சி அவளைக் குடைந்தெடுத்தது.
“ஏன் டீ உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படியா வந்து மாட்டிட்டு முழிப்பே! ஹிட்லர் கிட்ட எங்க போறோம்னு தெளிவா கேட்டியா? கேட்கத் தான் இல்லை, இங்கையாவது எனக்கு இது எல்லாம் தெரியாதுன்னு சொல்லலாமில்ல? பேசாம ஓரமா போய் உட்காரு, பூச்சி எதுவும் கடிக்க போகுது! சும்மா அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகாதே, நோக போறே!”
அவளுக்கு அப்படி தான் தோன்றியது,
‘இவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்?’
ஆனாலும் முடியாது என்று சொல்வதை அமுதனுக்கு பயந்து ஒத்திவைத்தாள்.
இவளுக்கு இன்னும் சில பெண்களுடன் சேர்ந்து, காய் பறிக்கும் பணி, செம்மண் நிரப்பக் கொஞ்சம் மண் எடுக்க உதவுவது போன்ற சின்ன வேலைகள் தான். ஆனால் இந்த வெயிலில் அது கூடச் சிரமமாய்.
கூட உள்ள பெண் இவள் உடையை பார்த்துத் தாங்கமாட்டாமல்,
“இன்னிக்கி நீங்கச் சிம்பிளா டிரஸ் பண்ணிருக்கலாமே? பாருங்க இப்பவே உங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு”
அந்த அக்கறை கூடச் சித்ராவை கடுப்பாக்க தான் செய்தது...
‘பேசாம போறியா இல்லை வாய்ல கத்திய விட்டுச் சுத்தவா’ என்று எண்ணிக் கொண்டாலும், முறுவலித்தபடி அவளிடம்
“இங்க வரப் போறேன்னு தெரியாது, அதான் இப்படி”
அதன் பின் அமைதியாய் தன் பணியைத் தொடர்ந்தாள்.
இடையிடையே இளநீர், மோர் என்று ஏதோ உள்ளே சென்றதால் தாக்கு பிடிக்க முடிந்தது. இல்லையேல் மயக்கம் போட்டிருக்கும் வாய்ப்பு அதிகமே!
இதோ இப்போது முடிந்து விடும், இன்னும் கொஞ்ச நேரம் தான், என்று அவள் எண்ணியது எதுவும் நடவாமல், அந்தி சாயும் வரை வேலை இருந்தது.
வேகாத வெயிலில் வெந்து போய்விட்டாள். அவன் முதல் தடவை வெளியில் அழைத்துப் போகிறான் என்று ஆசையாய் புது சுடிதார் போட்டு வந்தது எவ்வளவு தப்பு, மண்ணில் அது நாசமாய் போனது! ஈஷ்வரி இதை பார்த்துச் சிரிக்க போகிறாள்!
வேலையை முடித்ததும் கிளம்ப ஆயுத்தமான அந்த கூட்டத்தை பார்க்கச் சித்ராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. சொந்த காசில் சூனியம் வைக்கும் ஆட்களா இவர்கள்? இதில் அமுதனும் ஒரு பங்காளியா? அவள் மனம் அழ அதைத் தேற்ற வழி இல்லை.
ஆனால் விவசாயம் எவ்வளவு உன்னதமான பணி! நம் நாட்டின் முதுகெழும்பு என்பதையெல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் தற்போது இல்லை. அவள் மட்டுமல்ல நம்மில் எண்பது சதவிததினர் அவளை போலத் தான்.
வேண்டாத வேலை என்று தப்பாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம் தாத்தனும் முப்பாட்டணும் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த காலம் போய் நாம் இப்போது அதைக் கேவலமாக நினைக்கும் காலம் வந்துவிட்டது!
கிளம்பும் முன் அமுதனை தனியே தள்ளிக் கொண்டு போன கெளரி சங்கர்,
“ஆனாலும் உனக்கு ரொம்ப தான் தைரியம் அமுதன், முன்னே மாதிரி அவளை அதிகாரம் பண்ணலாம்னு நினைச்சியா? சித்ரா முகமே சரி இல்லை. உனக்கு இன்னிக்கி மண்டகப்படி தான் தம்பி” வாழ்த்தி அனுப்பியவனின், வாய் முகூர்த்தம் இந்த முறையும் அப்படியே பலித்தது.
சென்னை திரும்பும்போது அமுதனுடன் காரில் ஒரு வார்த்தை பேசவில்லை அவள். அவனுக்கு அவள் ஆதங்கம் புரிந்தது தான் என்றாலும், இப்போதைக்கு சமாதானப் படுத்த முனையவில்லை. கெளரி சங்கர் இவர்களுக்குத் தனிமை தர எண்ணி மற்றவர்களுடன் திரும்பிகொள்வதாகச் சொல்லிவிட்டான்.
போகிற வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தியவன், சாப்பிட போகலாம் என்று அவளை அழைக்க, அவனை முறைக்கும் படி பார்த்தாள். ஒன்றும் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால் என்னவென்று தோன்றியதை ஒதுக்கி,
“என் டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு! நான் உள்ளே வரலை, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்!”
உறுதியாய் சொன்னவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகினான்.
‘ஆமா இவரு பார்த்தா நாங்க அப்படியே நடுங்கிடுவோம். ‘
இந்த முறைக்கிறதெல்லாம் இனி என் கிட்ட நடக்காது, அவனை மனதில் திட்டிக் கொள்ள...
‘என்னவெல்லாம் எண்ணிக் கொண்டு கிளம்பினேன்! எல்லாம் வீண்! தடியன், அவுட்டிங் கூப்பிட்டு வர லட்சணத்தை பாரு!’
அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் டிபன் வகையராக்களை ஆர்டர் செய்தவன், அதற்காகக் காத்திருக்கையில் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டான்.
‘அவளுக்குக் கோபம் போல, கோபத்துலயும் சும்மா மயக்குற டீ!’ ஒரு பக்க மனம் துள்ளிக் கொள்ள,
‘ஆமா பின்ன நீ செஞ்ச விஷயத்துக்கு உன்னைக் கொஞ்சுவாங்களா?’ அவனையே கேள்வி கேட்டது.
‘சரி இப்ப என்ன கொஞ்சிட்டா போச்சு!’
முடிவெடுத்த பின் அதை அடக்கியவன். பார்சலுடன் காருக்குத் திரும்ப அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை...
மறுபடியும் பயணம் தொடர, தீவிரமாய் வேலை பார்த்த அசதியில் சித்ரா தூங்கிவிட்டாள். தூங்கும் தன் காதலியை ரசிக்கவென்று அவன் இரண்டு முறை வண்டியை நிறுத்தியதை அவள் அறியாள்.
வண்டியின் மூச்சை நிறுத்திய அமுதன் அவளைத் தட்டி எழுப்பவும், விழித்தவள், தான் எங்கிருக்கிறோம் என்பது புலப்படாமல் பேந்த முழித்தாள்.
புது இடமாய் தெரிந்தது.
அவர்கள் இப்போது இருந்தது சென்னையில் அமுதன் பிளாட்டின் கார் பார்கிங்,
“எங்கே இருக்கோம் அமுதன்” இவனிடம் இனி செல்லும் இடம் கேட்காமல் ஏறக் கூடாது என்று மறுபடியும் தனக்கே நினைவு படுத்திக் கொண்டுவிட்டு
“என்னை வீட்டில் விட்டிருங்களேன், ரொம்ப லேட் ஆயிடிச்சு” கெஞ்சுவதை போல் அவள் கேட்க.
“நம்ம வீட்டை வந்து பார்த்திட்டு போயேன், ஒரு மணிநேரம் கழிச்சு நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன், சரியா?”
சில்மிஷமாக ஒரு மணிநேரத்தை அவன் அழுத்திச் சொல்ல, சித்ராவுக்கு குளிர் எடுத்தது.
“இல்லை வேண்டாம், இப்பவே கிளம்பிடுறேன், ப்ளீஸ் “அவள் அடம் பண்ண ஆரம்பித்தாள். நீண்ட நேரம் அமைதியாய் சொல்லிப் பார்த்தவன், அவள் காது கொடுத்துக் கேளாததால்,
“டூ வாட் ஐ சே” என்றுவிட்டு அவள் கைபற்றிக் காரிலிருந்து வெளியில் இழுத்தவனிடமிருந்து தப்பிக்க இயலவில்லை.
அவன் குடியிருந்த அந்த அபார்ட்மெண்ட், சற்று பெரிய இடமாகவே இருந்தது. சொந்த வீடு என்பது தெரியும் ஆனால் இவ்வளவு பிரமாதமாய் இருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வெளி தோற்றத்திலேயே அசந்து போனாள்.
நிறைய பிளாக்குகள் இருக்க, ஒவ்வொன்றிலும் நான்கு தளங்கள், அதற்கு ஒரு மின்தூக்கி வேறு. அவர்கள் வந்து சேர்ந்த எட்டு மணிகெல்லாம் நிறைய பேர் வெளியில் இல்லை. அங்கிங்கு ஒரு சிலர் நடை பயின்று கொண்டிருந்தனர்!
அவன் தன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்துப் போக, அவன் வீட்டில் வாசலில் மட்டும் அவ்வளவு பூந்தொட்டிகள். பசுமை விரும்பி என்பது அவன் வாசலைப் பார்த்தாலே தெரிந்து விடும். வாசலலிருந்து, நுழைவாயில் கதவுவரை செடிகளை நிரப்பி வைத்திருந்தான். ஒவ்வொரு வீட்டிற்கும் தனிதனியே மினி கேட் கூட இருந்தது.
தன்னவனின் வீடு, தான் வாழப் போகும் இடம் என்பதாலோ என்னவோ பார்த்தவுடன் அதில் இருந்த எல்லா அம்சமும் பிடித்திருந்தது சித்ராவுக்கு.
வீட்டிற்குள் நுழையும் சமயம்,
“ஆரத்தி எல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம், வலது காலை எடுத்து வச்சி வா” அவன் சொல்லும் முன்பே இவள் அதைத் தான் செய்திருந்தாள்!
அவள் செய்கையைப் பார்த்து முறுவலித்தவன்,
“வேலையில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இதை எல்லாம் நல்லா பண்றே சித்ரா” என்றுவிட்டு முதுகில் ஒரு செல்ல அடியை வாங்கிகொண்டான்.
வீடு முழுவதும் விளைக்கை போட்டுத் தன் வசந்த மாளிகையை அவளுக்குப் பெருமையாய் காட்ட, சித்ரா ரசித்தபடியிருந்தாள், அவனை இல்லை வீட்டைத் தான்.
படு சுத்தமாக இருந்ததை பார்த்து அவளுக்கே ஆச்சரியம். சாமான் எல்லாம் அதிகமில்லை, தேவையானது மட்டுமே. அவளைச் சோபாவில் அமரச் சொன்னவன், அவளை உபசரிப்பதை போல் தண்ணிரும், இனிப்பும் கொண்டு வந்து தந்தான். முறுவலித்தபடி
வாங்கி கொண்டு அவனை நோட்டமிட,
“கோபம் போயிடிச்சா?” அவன் வினவனும் தான்,
தூக்கத்தில் அது காணாமல் போன விஷயமே அவளுக்கு உரைத்தது.
“ம்ம்” என்றவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவன்.
“ஃபிரெஷ் அப் பண்ணிகோயேன் சித்ரா” எனவும்
“இல்லை பரவாயில்லை” என்றவளை, அமைதியாய் யோசித்தபடி பார்த்திருந்தவன்
“நாளைக்கு சன்டே தானே, இங்க தங்கிட்டு காலையில் வீட்டுக்குப் போயேன் “ குரலைத் தணித்து அவள் மறுக்காதவண்ணம் அவன் கூற சித்ராவுக்கு படபடப்பாகி போனது.
இரண்டு மணிநேர பயணத்துக்குப் பிறகு அவர்கள் வந்தது செங்கல்பட்டு அருகே ஆத்தூர் என்னும் ஊரில் ஒரு விவசாய நிலத்தின் முன். இவர்கள் கூடவே அங்கு ஒரு பெரிய படையே வந்திறங்கியது. எல்லாரும் மாடர்ன் மக்கள், ஆனால் இங்குக் களப்பணி செய்வது போல் வந்திருந்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த மண்வெட்டி இத்தியாதிகளை வைத்து அவளே நினைத்துக் கொண்டாள். அங்குப் போனதும் அந்த மகளிர் குழுவிடம்,
“என் ஃபிரண்டு சித்ரா. இங்கே புதுசா வந்திருக்கா. சோ கொஞ்சம் ஈசியான வேலையா கொடுங்க”
மொழிந்துவிட்டு போனவன் தான், அவள் புறம் திரும்பவே இல்லை. எதற்கு அவளிடம் இந்த அதிரடி என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அன்று ஏதேதோ பணிகள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அமுதனுக்கும் கெளரி சங்கருக்கும் ஏற்கனவே பழக்கமிருந்தது போலும், வேலையில் ஐக்கியம் ஆகிவிட்டனர்.
சித்ராவுக்கு, வெயிலில் நோகாமல் வீட்டில் பூந்தொட்டியில் செடி வைத்துத் தான் பழக்கம். வந்து இந்தப் பத்து நிமிடத்தில் போட்டிருந்த உடையெல்லாம் வேர்வையில் நனைந்து விட்டிருந்தது.
சித்ராவின் மனசாட்சி அவளைக் குடைந்தெடுத்தது.
“ஏன் டீ உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படியா வந்து மாட்டிட்டு முழிப்பே! ஹிட்லர் கிட்ட எங்க போறோம்னு தெளிவா கேட்டியா? கேட்கத் தான் இல்லை, இங்கையாவது எனக்கு இது எல்லாம் தெரியாதுன்னு சொல்லலாமில்ல? பேசாம ஓரமா போய் உட்காரு, பூச்சி எதுவும் கடிக்க போகுது! சும்மா அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகாதே, நோக போறே!”
அவளுக்கு அப்படி தான் தோன்றியது,
‘இவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்?’
ஆனாலும் முடியாது என்று சொல்வதை அமுதனுக்கு பயந்து ஒத்திவைத்தாள்.
இவளுக்கு இன்னும் சில பெண்களுடன் சேர்ந்து, காய் பறிக்கும் பணி, செம்மண் நிரப்பக் கொஞ்சம் மண் எடுக்க உதவுவது போன்ற சின்ன வேலைகள் தான். ஆனால் இந்த வெயிலில் அது கூடச் சிரமமாய்.
கூட உள்ள பெண் இவள் உடையை பார்த்துத் தாங்கமாட்டாமல்,
“இன்னிக்கி நீங்கச் சிம்பிளா டிரஸ் பண்ணிருக்கலாமே? பாருங்க இப்பவே உங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு”
அந்த அக்கறை கூடச் சித்ராவை கடுப்பாக்க தான் செய்தது...
‘பேசாம போறியா இல்லை வாய்ல கத்திய விட்டுச் சுத்தவா’ என்று எண்ணிக் கொண்டாலும், முறுவலித்தபடி அவளிடம்
“இங்க வரப் போறேன்னு தெரியாது, அதான் இப்படி”
அதன் பின் அமைதியாய் தன் பணியைத் தொடர்ந்தாள்.
இடையிடையே இளநீர், மோர் என்று ஏதோ உள்ளே சென்றதால் தாக்கு பிடிக்க முடிந்தது. இல்லையேல் மயக்கம் போட்டிருக்கும் வாய்ப்பு அதிகமே!
இதோ இப்போது முடிந்து விடும், இன்னும் கொஞ்ச நேரம் தான், என்று அவள் எண்ணியது எதுவும் நடவாமல், அந்தி சாயும் வரை வேலை இருந்தது.
வேகாத வெயிலில் வெந்து போய்விட்டாள். அவன் முதல் தடவை வெளியில் அழைத்துப் போகிறான் என்று ஆசையாய் புது சுடிதார் போட்டு வந்தது எவ்வளவு தப்பு, மண்ணில் அது நாசமாய் போனது! ஈஷ்வரி இதை பார்த்துச் சிரிக்க போகிறாள்!
வேலையை முடித்ததும் கிளம்ப ஆயுத்தமான அந்த கூட்டத்தை பார்க்கச் சித்ராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. சொந்த காசில் சூனியம் வைக்கும் ஆட்களா இவர்கள்? இதில் அமுதனும் ஒரு பங்காளியா? அவள் மனம் அழ அதைத் தேற்ற வழி இல்லை.
ஆனால் விவசாயம் எவ்வளவு உன்னதமான பணி! நம் நாட்டின் முதுகெழும்பு என்பதையெல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் தற்போது இல்லை. அவள் மட்டுமல்ல நம்மில் எண்பது சதவிததினர் அவளை போலத் தான்.
வேண்டாத வேலை என்று தப்பாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம் தாத்தனும் முப்பாட்டணும் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த காலம் போய் நாம் இப்போது அதைக் கேவலமாக நினைக்கும் காலம் வந்துவிட்டது!
கிளம்பும் முன் அமுதனை தனியே தள்ளிக் கொண்டு போன கெளரி சங்கர்,
“ஆனாலும் உனக்கு ரொம்ப தான் தைரியம் அமுதன், முன்னே மாதிரி அவளை அதிகாரம் பண்ணலாம்னு நினைச்சியா? சித்ரா முகமே சரி இல்லை. உனக்கு இன்னிக்கி மண்டகப்படி தான் தம்பி” வாழ்த்தி அனுப்பியவனின், வாய் முகூர்த்தம் இந்த முறையும் அப்படியே பலித்தது.
சென்னை திரும்பும்போது அமுதனுடன் காரில் ஒரு வார்த்தை பேசவில்லை அவள். அவனுக்கு அவள் ஆதங்கம் புரிந்தது தான் என்றாலும், இப்போதைக்கு சமாதானப் படுத்த முனையவில்லை. கெளரி சங்கர் இவர்களுக்குத் தனிமை தர எண்ணி மற்றவர்களுடன் திரும்பிகொள்வதாகச் சொல்லிவிட்டான்.
போகிற வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தியவன், சாப்பிட போகலாம் என்று அவளை அழைக்க, அவனை முறைக்கும் படி பார்த்தாள். ஒன்றும் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால் என்னவென்று தோன்றியதை ஒதுக்கி,
“என் டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு! நான் உள்ளே வரலை, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்!”
உறுதியாய் சொன்னவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகினான்.
‘ஆமா இவரு பார்த்தா நாங்க அப்படியே நடுங்கிடுவோம். ‘
இந்த முறைக்கிறதெல்லாம் இனி என் கிட்ட நடக்காது, அவனை மனதில் திட்டிக் கொள்ள...
‘என்னவெல்லாம் எண்ணிக் கொண்டு கிளம்பினேன்! எல்லாம் வீண்! தடியன், அவுட்டிங் கூப்பிட்டு வர லட்சணத்தை பாரு!’
அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் டிபன் வகையராக்களை ஆர்டர் செய்தவன், அதற்காகக் காத்திருக்கையில் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டான்.
‘அவளுக்குக் கோபம் போல, கோபத்துலயும் சும்மா மயக்குற டீ!’ ஒரு பக்க மனம் துள்ளிக் கொள்ள,
‘ஆமா பின்ன நீ செஞ்ச விஷயத்துக்கு உன்னைக் கொஞ்சுவாங்களா?’ அவனையே கேள்வி கேட்டது.
‘சரி இப்ப என்ன கொஞ்சிட்டா போச்சு!’
முடிவெடுத்த பின் அதை அடக்கியவன். பார்சலுடன் காருக்குத் திரும்ப அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை...
மறுபடியும் பயணம் தொடர, தீவிரமாய் வேலை பார்த்த அசதியில் சித்ரா தூங்கிவிட்டாள். தூங்கும் தன் காதலியை ரசிக்கவென்று அவன் இரண்டு முறை வண்டியை நிறுத்தியதை அவள் அறியாள்.
வண்டியின் மூச்சை நிறுத்திய அமுதன் அவளைத் தட்டி எழுப்பவும், விழித்தவள், தான் எங்கிருக்கிறோம் என்பது புலப்படாமல் பேந்த முழித்தாள்.
புது இடமாய் தெரிந்தது.
அவர்கள் இப்போது இருந்தது சென்னையில் அமுதன் பிளாட்டின் கார் பார்கிங்,
“எங்கே இருக்கோம் அமுதன்” இவனிடம் இனி செல்லும் இடம் கேட்காமல் ஏறக் கூடாது என்று மறுபடியும் தனக்கே நினைவு படுத்திக் கொண்டுவிட்டு
“என்னை வீட்டில் விட்டிருங்களேன், ரொம்ப லேட் ஆயிடிச்சு” கெஞ்சுவதை போல் அவள் கேட்க.
“நம்ம வீட்டை வந்து பார்த்திட்டு போயேன், ஒரு மணிநேரம் கழிச்சு நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன், சரியா?”
சில்மிஷமாக ஒரு மணிநேரத்தை அவன் அழுத்திச் சொல்ல, சித்ராவுக்கு குளிர் எடுத்தது.
“இல்லை வேண்டாம், இப்பவே கிளம்பிடுறேன், ப்ளீஸ் “அவள் அடம் பண்ண ஆரம்பித்தாள். நீண்ட நேரம் அமைதியாய் சொல்லிப் பார்த்தவன், அவள் காது கொடுத்துக் கேளாததால்,
“டூ வாட் ஐ சே” என்றுவிட்டு அவள் கைபற்றிக் காரிலிருந்து வெளியில் இழுத்தவனிடமிருந்து தப்பிக்க இயலவில்லை.
அவன் குடியிருந்த அந்த அபார்ட்மெண்ட், சற்று பெரிய இடமாகவே இருந்தது. சொந்த வீடு என்பது தெரியும் ஆனால் இவ்வளவு பிரமாதமாய் இருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வெளி தோற்றத்திலேயே அசந்து போனாள்.
நிறைய பிளாக்குகள் இருக்க, ஒவ்வொன்றிலும் நான்கு தளங்கள், அதற்கு ஒரு மின்தூக்கி வேறு. அவர்கள் வந்து சேர்ந்த எட்டு மணிகெல்லாம் நிறைய பேர் வெளியில் இல்லை. அங்கிங்கு ஒரு சிலர் நடை பயின்று கொண்டிருந்தனர்!
அவன் தன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்துப் போக, அவன் வீட்டில் வாசலில் மட்டும் அவ்வளவு பூந்தொட்டிகள். பசுமை விரும்பி என்பது அவன் வாசலைப் பார்த்தாலே தெரிந்து விடும். வாசலலிருந்து, நுழைவாயில் கதவுவரை செடிகளை நிரப்பி வைத்திருந்தான். ஒவ்வொரு வீட்டிற்கும் தனிதனியே மினி கேட் கூட இருந்தது.
தன்னவனின் வீடு, தான் வாழப் போகும் இடம் என்பதாலோ என்னவோ பார்த்தவுடன் அதில் இருந்த எல்லா அம்சமும் பிடித்திருந்தது சித்ராவுக்கு.
வீட்டிற்குள் நுழையும் சமயம்,
“ஆரத்தி எல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம், வலது காலை எடுத்து வச்சி வா” அவன் சொல்லும் முன்பே இவள் அதைத் தான் செய்திருந்தாள்!
அவள் செய்கையைப் பார்த்து முறுவலித்தவன்,
“வேலையில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இதை எல்லாம் நல்லா பண்றே சித்ரா” என்றுவிட்டு முதுகில் ஒரு செல்ல அடியை வாங்கிகொண்டான்.
வீடு முழுவதும் விளைக்கை போட்டுத் தன் வசந்த மாளிகையை அவளுக்குப் பெருமையாய் காட்ட, சித்ரா ரசித்தபடியிருந்தாள், அவனை இல்லை வீட்டைத் தான்.
படு சுத்தமாக இருந்ததை பார்த்து அவளுக்கே ஆச்சரியம். சாமான் எல்லாம் அதிகமில்லை, தேவையானது மட்டுமே. அவளைச் சோபாவில் அமரச் சொன்னவன், அவளை உபசரிப்பதை போல் தண்ணிரும், இனிப்பும் கொண்டு வந்து தந்தான். முறுவலித்தபடி
வாங்கி கொண்டு அவனை நோட்டமிட,
“கோபம் போயிடிச்சா?” அவன் வினவனும் தான்,
தூக்கத்தில் அது காணாமல் போன விஷயமே அவளுக்கு உரைத்தது.
“ம்ம்” என்றவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவன்.
“ஃபிரெஷ் அப் பண்ணிகோயேன் சித்ரா” எனவும்
“இல்லை பரவாயில்லை” என்றவளை, அமைதியாய் யோசித்தபடி பார்த்திருந்தவன்
“நாளைக்கு சன்டே தானே, இங்க தங்கிட்டு காலையில் வீட்டுக்குப் போயேன் “ குரலைத் தணித்து அவள் மறுக்காதவண்ணம் அவன் கூற சித்ராவுக்கு படபடப்பாகி போனது.