• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 10(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~1௦

தன் முடிவை சொல்ல தனக்கு கொடுக்க பட்ட கெடு முடிந்து விட்டது..தாய் கிருத்திகாவும் காலையில் அதை நினைவு படுத்தி அவனின் போன் நம்பரை அவள் அறையின் டீபாயில் வைத்திருந்தால்....

“பாப்பா...மாப்பிள்ளை வீட்ல என்ன பதில்னு கேக்றாங்க.. மாப்பிள்ளை தம்பியோட நம்பர் இங்க வச்சிட்டு போறேன் டா...”வெளியே செல்ல திரும்பியவர்...”பாப்பா உனக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய் டா...”...

என்ன சொல்லவேண்டும் எப்பிடி சொல்லவேண்டும் ஏதும் புரியவில்லை..

நேரமாகியும் சாப்பிட கீழே வராததால் கிருத்திகா சாஷினியின் அறைக்கு டிபனை எடுத்துக்கொண்டு சென்றாள்..

ரெண்டு மணி நேரம் முன் எப்டி அமர்ந்திருந்தாலோ அப்டியே இருந்ததை பார்த்து அவள் மனம் பதரத்தான் செய்தது..எழுந்ததும் குளித்துவிடும் பழக்கம் உண்டு..ஆனால் இன்று வைத்திருந்த காபி அப்டியே இருக்க முகம் கூட கழுவாமல் ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாஷினி...

“பாப்பா..”கதவருகே நின்று அழைக்கும் தாயின் குரலும் ஏறவில்லை போலும் அவள் காதில்..

அவள் அருகில் சென்றதும் சிந்தனையில் இருந்து விடை பெற்றாள்..”ம்மா..”என்றவள் எழுந்தாள்..

“பாப்பா...உன்ன கஷ்ட படுத்துறோம்னு நினைக்காத மா.. உன்னோட விருப்பம்..வேணாம்னா வேணாம் மா...”

“அதெல்லாம் ஒன்னும் இல்லமா..என்ன சொல்றது எப்டி சொல்றதுன்னு தெரில..”

“கால் பண்ணி உனக்கு ஓகேன்னு தோனுச்சுன ஓகேன்னு சொல்லிடு.. வேணாம்ன்னு நினச்சா..எதாச்சும் ரீசன் சொல்லு..”

குழப்பம் நீங்கியதாய் தெரியவில்லை.. “பாப்பா பஸ்ட் குளிச்சிட்டு வா.. இனிக்கி விசாகம் முருகர பாத்துட்டு வா.. தெளிவாயிடுவ..”

அவளும் வந்ததிலிருந்து இஷ்ட தெய்வத்தை பார்க்காதது ஒரு குறையாகவே இருந்தது..அவளுக்கு சரியென தோன..”சரி மா.. டிரஸ் எதாச்சும் எடுத்து வச்சிட்டு போ..”என்றவள் பிரெஷப் ஆகா சென்றாள்..

கிருதிகாவிர்க்கு சாஷினியை சேலையில் பார்க்கவே புடிக்கும்.. அதனால் அவளுக்கு ஏத்தார் போல் மிதமான எடை கொண்ட பானாரஸ் புடவை எடுத்து வைத்திருந்தார்..

“அம்மாவ டிரஸ் எடுத்து வைக்க சொன்னது பெரிய தப்பு.. நீ சோம்பேறி பற்றுக்க கூடாது சாஷினி..”கண்ணாடியை பார்த்துக்கொண்டு பேசினாள் ..அதை கிருத்திகா பார்க்க..

“இன்னும் இப்டி தான் பைத்தியம் மாதிரி பேசுறிய டி..உன்னலாம் திருத்தவே முடியாது..சீக்கிரம கிளம்பு..”

“ம்மா..நா ரெடி ஆகுறதுல உன்ன விட பாஸ்ட் தெரியும் தான...”

“சரி டி..அலட்டிக்காம ரெடி ஆகு அழகு செல்லமே..”கன்னத்தை செல்லமாய் கிள்ளியவள் வெளியேறினால்..

பெண்கள் என்றால் அழகு..அதற்க்கு ஏத்தார் போல் பெண்மயிலாக அத்தனை அழகு கொண்டவளாய் விளங்கினாள் சாஷினி..ஸ்கூட்டியில் செல்ல இருந்ததால்.. ப்ளீட்ஸ் எடுத்து பின் செய்திருந்தாள்..

“நீ எப்டி இருந்தாலும் அழகு தான் சாஷினி.. சிரிச்சாலும்...அழுதாலும்..கோபப்பட்டாலும் ..அன்புக்காடினாலும்..”இம்முறை அவள் வளர்ந்ததிலிருந்து அவளின் வெண்முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போற்றியது....

பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டவள் கீழே வரவேற்பறை நோக்கி நடந்து வந்தாள்.. அவளின் தாய் யாரிடமோ சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்..

அவளை பார்த்தவர்..”நில்” என்பது போல் சைகை செய்ததால் நின்றாள் அங்கேயே..தாயாரும் வர போகிறார்கள் என்று நினைத்தவள் அமர்ந்தாள் ..

“யார்க்கிட்ட இப்டி பேசுது இந்த அம்மா..டைம் வேற ஆகுது..வரவும் மாட்டுக்காங்க ..”பொறுமை இழந்தவள்..

“ம்மா ..வரியா நான் போகவா..”சட்டென எழுந்தாள்.. “ஹே இரு டி...”என்றவள்..”சரி நா வைக்றேன்..”என்றவள் அலைபேசியை துண்டித்தால்..

“கொஞ்சம் கூட பொறுமை இல்லை டி..உனக்கு..”

“ம்மா..எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.. அபிஷேகம்லாம் முடிஞ்சிரும்... எவ்ளோ நாள் ஆச்சு நான் அதெல்லாம் பாத்து..வா மா....”கையை பிடித்து இழுந்தால்..

“அடியே இரு.. நான் வரல..”

“அப்றோம்...????”

“அது வந்து..அவரு..தம்பி.. போறேன்னு சொன்னாரு..”

“யாரு உன் தம்பியா??..”

“ஏய் ...மாப்பிளைக்கு கொஞ்சம் மரியாதை கொடு டி..அவரு போறேன்னு மட்டும் தான் சொன்னாரு.. நான் தான் ஏதோ ஆர்வத்துல பாப்பாவும் போற.. தனியா தான் ...நீங்க வேணா கூட்டிட்டு போங்க னு.....”பாதியிலே விட்டாள் அவளின் தாய்..

ருத்ர காளியாய் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்துக்கொண்டிருந்தால் சாஷினி..

“சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்த மாதிரிலாமா பண்ணிட்ட..உனக்கே தெரியும் ..புது ஆள் கிட்ட நான் எப்டி பேசுவேன்னு..ஏன் மா இப்டி பண்ண..”

“என்ன டி..அம்மாவ இப்டி திட்டுற...”பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டாள்..

மலையிரங்கிய வேதாளம் போல் தாயின் முகத்தை கண்டவளுக்கு சிரிப்பு வந்தது..அவளை அணைத்துகொண்டாள்..”நல்ல அம்மா தான் நீ.. சில நேரம் தேவை இல்லாதா வேலை பண்ற குந்தாணி..”

“போயிட்டு வா பாப்பா.. நல்ல பையன் தான்..”

“சரி மா.. போறேன்..ஆனா ஊரே பாக்குமே,..கேட்டா என்ன சொல்ல...ஹான்..?”புருவத்தை உயர்த்தினாள்..

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க.. நம் ஹீரோ வந்து சேர்ந்தான் சாஷினி வீட்டிற்க்கு.. இருவரும் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து பார்த்தவன் மெதுவாய் நடந்து உள்ளே வந்தான்..

“நீ கட்டிக்க போறவர்ன்னு சொல்லு டி..”

“எல்லாம் ரெடியா வச்சிட்டு தான் பண்றமா நீ.. உன்ன வந்து வச்சிகிறேன்..உனக்கு இப்டிலாம் ஐடியா வராதே.. யாரு அப்பா கொடுத்த ஐடியாவா..”

“ஏன் உன் அம்மாக்கு இப்டிலாம் தோணாதா.. நானே யோசிச்சது..”இல்லாத காலரை தூக்கி விட்டார் கிருத்திகா..

“ம்மா..காமெடி பண்ணாத..சரி நா வெளிய நிக்றேன்..உன் தம்பி வந்து லேட் ஆச்சுன்னு தையதக்கன்னு குதிக்க போறாரு..”

ஒரு நிமிடம் அவளுக்கு விளங்கவில்லை என்றாலும்..”பாப்பா.. அப்போ உனக்கு ஓகே வா..”முகம் முழுவதும் சந்தோசம் இருந்தது கிருதிகாவிர்க்கு...

“உனக்கு ஓகே தான மா..நீ சொல்லி கேக்காம பண்ணுன எந்த விஷயத்துல நான் சந்தோஷாம இருந்திருக்கேன் சொல்லு... எப்பயும் நீ இப்டி சிரிச்சிட்டே இரு..”

அப்போதுதான் கிருத்திகா தன் மாப்பிள்ளை வெளியே நிற்பதை கவனித்தால்..

“வாங்க தம்பி..”முகம்மலர அழைத்தாள்..

“லேட் ஆச்சு ஆண்டி .. நீங்க வேற உங்க பாப்பாவ கொஞ்சிட்டு இருந்திங்க..அதான் டிஸ்டர்ப் பண்ணல..”விஷமமாய் அவன் கூற..

இருவரும் சிரித்தனர்..சாஷினி தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்..

“நல்ல மாப்பிள்ளை ... நல்ல மாமியார்...நம்மல வாரி விட எங்க இருந்து தான் வரங்களோ பா..”இருவரின் பரஸ்பரத்தை பிரிக்க நினைத்தவள்..

“ம்மா..டைம் ஆச்சு..”இது அம்மாவிற்க்கா..அவனுக்கா என்ற கேள்வி அவளுக்குள்ளும் இருக்கவே செய்தது...

“பிரஷர் கூக்கர் வெடிச்சிரும் போல ஆண்டி..பாய்..”கிருத்திகா காதோரம் கிசுகிசுத்தவன்..”போலாம்”என்றவன்.. கிளம்பினான் காரை நோக்கி..

“ம்மா..உன்ன வந்து வச்சிகிறேன்..”முகத்தில் பொய் கோபம் காட்டிவிட்டு சென்றாள் அவன் பின்னே..

“எல்லாம் நல்லா நடந்தா சந்தோஷம்..”மனதில் வேண்டிக்கொண்டாள்..

கார் கிளம்பியது..கோவில் செல்ல அரை மணி நேரம் ஆகும்.. அதில் கேட்கவேண்டியது கேட்கலாம் என்று நினைத்தவன் ஆரம்பித்தான்..

“சொல்லுங்க சாஷினி..ஹான் இல்ல..சொல்லு சாஷினி..என்ன முடிவு பண்ணிருக்கிங்க.??”

“அது வந்து...”இவள் தயங்கி கொண்டிருக்க..அவன் முகத்தில் புன்னகை பூத்தது..

“என்ன பாப்பா..என்ன புடிக்கலையா..அத சொல்ல இவ்ளோ தயக்கமா..”கிண்டலாய் அவன் கேட்க..

அவளோ என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியாமல் உளற ஆரம்பித்தாள்..”இல்ல இல்ல..எல்லாருக்கும் புடிச்சுற்கு அண்ட்....”நிதானித்தவள் “ எனக்கும் ஓகே..”வார்த்தைகள் அங்கேயே விடப்பட்டது..

“இது உங்களோட டிசிஷன் தான சாஷினி..”கொஞ்சம் காரராய் கேட்டான்..

என்ன இவன் நொடிக்கு நொடி மாறுகிறான். என்று நினைத்தவள்..”ஆமாம்..” ஒற்றை பதிலே விடையாய் வந்தது...அது மனதில் இருந்து வந்ததா இல்லை சொல்லுக்க சொல்லப்பட்டதா என்று அவள் அறியவில்லை..

நல்லதோ கேட்டதோ அனைவரும் நாடுவது தெய்வத்தின் துணையே..

கடவுளின் சந்நிதானத்திற்கும் வந்து சேர்ந்தனர்..

சாஷினி நினைத்ததுபோல அன்று அவள் அபிஷேகங்களை பார்த்தாள்.. முன்னறையில் அமர்ந்திருந்தனர் இருவரும்..இவளோ முருகரை விட்டு கண்களை எடுப்பதாய் இல்லை. அவனும் அதே போல் அவளின் மேல் இருந்து கண்களை எடுப்பாதாக இல்லை..

இரண்டு வருடங்கள் இல்லாத ஒரு மாற்றத்தை அன்று அவளிடம் கண்டான்.. காரணமும் அவன் அறியவில்லை.. முகத்தில் சொல்லமுடியாத ஒரு பொலிவு..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top