• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 11 12 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala sundar

நாட்டாமை
Joined
Feb 12, 2019
Messages
26
Reaction score
73
Location
Sivakasi
“சார் ஏழு நாளாக நானும் வர்றேன். என்னையே துருவித்துருவி கேள்வி கேட்குறீங்க.. நான் என்ன அக்கூயூஸ்டா? காலையில வர்றேன். மூன்று மணிநேரம் ஒரே சேரில் உட்கார வக்கிறீங்க.. என்ன சார் நினைக்கிறீங்க? இப்படி டார்ச்சர் செய்றீங்க.. பவித்ராவுக்காத்தான் ஹெல்ப் பண்றேன்னு நீங்க சொல்றதை என்னால் நம்ப முடியலை சார். ”

ராஜன் ஸ்ரீயின் கேள்விகளை மதிக்காமல் தனது கைபேசியில் ஒருவருடன் பேசிக்கொண்டே ஒரு ஃபைலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“சார் நான் போகட்டுமா? ”

“…”

“சார்.. ”

“…”

பதில் தராமல் ராஜன் இருக்கவும் கொஞ்சம் குரலை உயர்த்தி ஸ்ரீ “சார் ” என்றாள்.

இப்போது ராஜன் அவள் அருகில் வந்தான்.. அவள் கண்களை குறிவைத்தது அவன் கண்கள்..

“ஸ்ரீ பவித்ரா உனக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி என்கிட்ட கேட்டபிறகுதான் உயிரை விட்டா. அதனால்தான் உன்னை என் கண்காணிப்பில் வைத்து விசாரிச்சிட்டிருக்கேன். அந்த பொண்ணு அப்படி சித்திரவதைபட்டு இறந்திருக்கக் கூடாது. ரொம்ப பாவம். நான் கண்டிப்பா அவளை ரேப் பண்ணவங்களை விடமாட்டேன். பவித்ரா என்னிடம் அவுங்க அடையாளம் சொல்லியிருக்கா. இப்பவே அவனுங்களை தேட ஆரம்பிச்சிட்டேன். அதிலே ஒருத்தன் பாம்பு டேட்டூ போட்டவன்.
கௌன்சிலரின் வீட்டு மாடு தான். அவன் இன்னும் இரண்டு நாளில் பிடிபட்டிடுவான். மற்றவங்களை அடுத்தடுத்து பிடிச்சிடலாம். கேஸை மற்றவன்கிட்ட கொடுக்காமல் உனக்காக ஃபைட் பண்ணிட்டிருக்கேன். நீ உண்மையை சொன்னால் தான் என்னால் ஏதாவது பண்ண முடியும். கடைசியாக உன்கிட்ட கேட்கிறேன்.. கௌன்சிலர் பணம் எங்க? ”

“ஏழு நாளாக விசாரிக்கிறீங்க.. நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. என்கிட்ட பணம் இல்லை இல்லை இல்லை.. ”

பேசிக்கொண்டிருந்தவள் கன்னங்களில் ராஜனின் வலிய கரங்கள் அழுத்தமாக விழுந்தது.

“அம்மா ” என்று அலறியவள் நாற்காலியில் இருந்து கீழே விழப்போனாள். ராஜன் நாற்காலியை பிடித்துக்கொண்டு அவள் விழுந்து விடாமல் உட்கார வைத்தான். மீண்டும் கேட்டான்.

“ஸ்ரீ பணம் எங்கே? பவித்ரா சொன்னதால் உனக்கு இவ்வளவு சலுகை அளித்திருக்கேன். கௌன்சிலர் ஆளுங்ககிட்ட இருந்து நீ தப்பனும்னா பணம் எங்கேன்னு சொல்லு! ”

“என்கிட்ட இல்லை.. ”

மறுபடியும் ஒரு அறை.. “பணம் எங்கே? ”

“ஹேம்நாத்தைப் பிடிக்க துப்பில்லை.. அவனை கேளுங்க.. என்கிட்ட பணம் இல்லை.. ”

ஏட்டையா ஏட்டையா.. இங்க வாங்க.. ”
ஏட்டையா உள்ளே வரவும்..

“ஏட்டையா இவள் பத்து நிமிஷத்தில் பணத்தைப் பற்றி சொல்லவில்லைன்னா.. பத்து நாள் லாக் அப்பில் போடுவேன்.. இன்னும் F.I.R போடலை.. போட வைக்க வேண்டாம்.. உண்மை சொல்லச் சொல்லுங்க.. ”

“ஏம்மா அடி வாங்குற? சொன்னால் கேளு.. பார்த்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்க. ஆனால் வீம்பு பண்றியே? உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத. ராஜன் சார் ஆக இருக்கப்போய் இவ்வளவு பொறுமையாக இருக்கார். மற்றவங்க எல்லாம் கட் ஆன்ட் ரைட்டாக இருப்பாங்க தெரியுமா? சொல்லுமா பணம் எங்கே?”

“என்கிட்ட பணம் இல்லை.. ஹேம்நாத்தைப் பிடிக்க துப்பில்லை. ”
அவள் கூறிய உண்மை சுட.. ராஜன் அமைதியாக ஸ்ரீ அருகே வந்தான். அவள் கைகளைப் பிடித்து “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு? உன்னை நம்ப நான் மடையனா? ”

ஏட்டையா முன்பாக தலையைக் குனிந்த ஸ்ரீ அவர் முகத்தைப் பார்க்காமல் ராஜன் முகத்தை நேராகப் பார்த்துச் சொன்னாள்.. “கௌன்சிலர் உங்களுக்கு கொடுப்பதைவிட கம்மிதான்.. ”

ராஜனின் பொறுமை காற்றில் பறந்தது..

“ஏட்டையா F.I.R போடுங்க.. இன்று இவள் கான்ஸ்டபிள் பத்மாவின் கஸ்டடி. நாளை மறுநாள் கோர்டில் ஆஜர் பண்றேன்.. நாலு நாள் லாக் அப்பில் இருந்தா சரியாகிடும்.. உண்மை தானாக வந்திட்டுப் போகுது.. ஜட்ஜ் நாலு நாள் காவலில் வைத்து விசாரிக்கச் சொல்வாங்க.. ஜட்ஜ் ரிமான்ட் செய்யட்டும் அப்புறம் நான் பார்த்துக்கிறேன். ”

ஸ்ரீக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.. விரக்தியின் எல்லைக்கே போனாள். பாறையின் இறுக்கம் அவள் உடல் முழுதும் பரவியது. மேஜை மேல் ஒரு சிறு கத்திரியும் பால்பாயின்ட் பேனாவும் இருந்தது.. ஸ்ரீ கத்திரியை எடுத்தாள். ராஜனோ ஏட்டையாவோ சுதாரிக்கும் முன்.. கத்திரியை தனது தொண்டைக்குள் குத்தினாள்…

கழுத்திலிருந்து இரத்தம் வழிந்து ஓட அதிர்ச்சியிலிருந்து மீண்ட ராஜன் கத்திரியை தொண்டைக்குள் இருந்து வெளியே எடுத்தான்..

சிரித்துக்கொண்டே ஸ்ரீ சரிய.. ராஜன் உறைந்தான்.


மருத்துவமனையில்

மருத்துவமனை வெயிட்டிங் ரூமில் ராஜனும் ஏட்டையாவும் இருந்தனர். ஸ்ரீயைக் காண மசூத் வந்தான். வில் ஸ்ரீ யைப் பார்த்துவிட்டு ஒரு செவிலியரிடம் விபரம் கேட்டான்..

“அந்த கேஸா? ஜஸ்ட் மிஸ் தம்பி. கத்திரி தொண்டையில் உணவுக்குழாய்க்கு பக்கத்திலே மூன்று இன்ச் வரை உள்ளே போயிருக்கு. பேச நாள் ஆகும். பி.பி வேற ஒரே ஃப்ளக்சுவேஷன்ல்ல இருக்கு. லேடீஸ் யாரும் வரவில்லையா? இது ஜி.ஹச். துணைக்கு ஒரு ஆளை வைங்க.” என்று சிடு சிடுத்துவிட்டுப் போனவரிடம் பதில் சொல்ல முடியாமல் இருந்தான் மசூத்.
மசூத் குழம்பினான்.. தனுவும் மோகனாவும் இப்ப எங்கே என்பதே ஸ்ரீக்குதான் தெரியும். பிறகு யாரை துணைக்கு வரச்சொல்ல முடியும்? என்று குழம்பினான்.

மசூத் யோசிக்கவும் ராஜன் ஏட்டையாவைப் பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் புரிந்து ஏட்டையா சொன்னார் “நான் பார்த்துக்கிறேன் தம்பி. ஆர்டர்லி லேடி போலிஸ் வரச் சொல்றேன். நீ போய் உட்காருப்பா. ”

மசூத் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டான்.. “சார் ஏழு மாசத்திலே எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் சார். இப்படிப் பண்ணிட்டீங்களே சார்? ”

மசூத் பேசி முடிக்கும்முன் ராஜன் விறு விறுவென்று வெளியே சென்றுவிட்டான். தனது கோபம் அனைத்தையும் பைக்கில் காட்டினான். வண்டியை தாறுமாறாக உதைத்துக் கிளப்பியவன் இரண்டு நிமிடத்தில் நிதானத்திற்கு வந்தான். அவன் தன்னை அமைதிப்படுத்தி கவனத்தை சாலையில் வைத்து ஒருவழியாக நிதானத்தில் போனபோது அவனை தாண்டிச் சென்ற ஒரு பைக்கின் ஹார்ன் நாய் குரைப்பதுபோல இருந்தது. ராஜன் பைக்காரனை நிறுத்தினான்.

“என்ன ஹார்ன் இது? உன் பக்கத்தில் போறவன் அப்பதான் பயந்து கீழே விழுவான் இல்ல? ”

“சார்.. சும்மா நாய் குரைப்பது போல.. ”
ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான். ஸ்ரீயை அறைந்தது ஞாபகம் வரவே அடுத்த அடியில் இருந்து பைக்காரன் தப்பித்தான்.
“முதலில் போய் ஹார்ன் மாத்து.. ”

“கண்டிப்பா சார். ”

ஒரு மணி நேரம் கழித்து ஹாஸ்பிட்டல் சென்றான். வாசலில் ஒரு பத்து ஜனம் இருந்தது.. ஆனால் இருபது கேமிரா இருந்தது.
ராஜனைப் பார்த்ததும் பிரஸ் சூழ்ந்து கொண்டது.

இடைவெளியின்றி கேள்விகள் கேட்கப்பட்டது. ராஜன் யாருக்கும் பதில் சொல்லாமல் உள்ளே சென்றான்.
“ஏட்டையா ஏட்டையா.. பிரஸ் எப்படி வந்திச்சு? ”

“யாரோ தகவல் தந்திருக்காங்க.. சார். இப்ப கிளியர் பண்றேன்.” என்று மசூதைப் பார்த்துக்கொண்டே கூறியவர் வெளியே நகர்ந்தார். ஸ்ரீ படுத்திருந்த கட்டிலைத் தாண்டிச் செல்லப்போனவரை ராஜன் நிறுத்தினான். “அந்தப் பொண்ணு எப்படி இருக்கு? ”

“இரத்த அழுத்தம் ரொம்ப குறைஞ்சிருக்கு.. ஏதாவது ஆகுறதுக்குள்ள வாக்குமூலம் வாங்க மாஜிஸ்ரேட் வர்றாங்க. நமக்கு சஸ்பென்ஷன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். டைமே சரியில்லை ராஜன் சார். சஸ்பென்ஷன் ஒரு மாதம் இருக்குமா? இரண்டு மாதம் இருக்குமா? ”

ஏட்டையா வேலையைப் பற்றிக்கூறியது ஒன்றுமே ராஜனுக்கு காதில் எட்டவில்லை. அவனுக்கு தேவையானது ஒரே ஒரு கேள்விக்கு பதில்தான். அதனால் அவசரமாக ஏட்டையாவை பேசவிடாமல் கேட்டான் “பொண்ணு பிழைப்பதற்கு… ” அந்த வார்த்தையை சொல்லப் பிடிக்கவில்லை ராஜனுக்கு. எனவே மீண்டும் சொன்னான் “பொண்ணு.. ”
ஏட்டையா அவனைப் புரிந்து கொண்டு சொன்னார் “ஆமாம் சார் கொஞ்சம் ரிஸ்க் தான்.. பொண்ணு பிழைப்பது தெரிய இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகும். பொழச்சாலும் நம்ம மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா இரண்டு பேரும் ஒரு மாதம் சஸ்பன்ட் ஆகலாம். நம்ம வேலைகூட போனாலும் போகலாம். ஏன் ராஜன் சார் அவ்வளவு ஹார்ஷா நடந்துகிட்டீங்க? ” என்று ஏட்டையா தமது பிரச்சனை பற்றியே
மீண்டும் பேச்சை திருப்ப ராஜன் அவரது கேள்விக்கு பட்டாசுபோல பதிலை பட பட வென்று தந்தான். அவனுக்கு யாரிடமாவது கொட்டவேண்டும் என்று இருந்தது.

“இல்லை ஏட்டையா அந்தப் பணம் இவகிட்டதான் இருக்கு. அவள் பொய் சொல்றா.. கௌன்சிலருக்கு கூட தெரியாது நான் அவளை விசாரிக்கிறது. கல்லால அடிச்சிருக்கா கௌன்சிலரை. அவனுங்க கையில கொடுத்தா பிச்சி எறிஞ்சிடுவானுங்க. அவரிடம் ஸ்ரீயைக் கண்டுபிடிக்க முடியல்ல என்றுதான் சொல்லிகிட்டுருக்கேன். நானே கண்டுபிடிச்சிடுவேன் நீங்க தலையிடக்கூடாதுன்னு சொன்னதால் அவனுங்க இவளை தேடவில்லை. இவள் கிடைத்தால் சாகடிக்க மாட்டாங்க. உயிரோட வச்சிருந்து அதை விடுங்க என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும். நீங்களே சொல்லுங்க.. நான் எவ்வளவு பொறுமையாக விசாரிச்சேன்? நானும் ஏழு நாள் எவ்வளவு பொறுமையா விசாரிச்சேன்? திரும்பத் திரும்ப பொய்.. மனப்பாடம் செய்த மாதிரி ஒரே பதில். எதைக் கேட்டாலும் பொய்.. எனக்குத் தெரியுது அவள் பொய் சொல்றது.. அப்புறம் என்னை மட்டம் தட்டிப்பேசினது எல்லாம் ரொம்ப கோபப்படுத்திடுச்சு. அதான் F.I.R ன்னு பயமுறுத்திப் பார்த்தேன். ஆனா ரொம்ப பயந்துடுச்சு..”

“அவ்வளவு பணம் கையில் வச்சிருக்கும் பொண்ணு ஏன் சாக நினைக்கணும்? ”


“அதான் ஏட்டையா எனக்கே புரியல. நானும் அதைத்தான் யோசிச்சிக்கிட்டே இருக்கேன். ஒண்ணும் புரியமாட்டிங்குது. ஒண்ணும் ஆகாதுல? காப்பாத்திடலாம் தான?” என்று கட்டிலில் கிடந்த ஸ்ரீ யைப் பார்த்து கேட்டான் ராஜன்.

“நம்ம நேரம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்.. இந்த மாத சம்பளத்தில்தான் மினரல் வாட்டர்காரனுக்கு செட்டில் பண்ணணும் சார். இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சா.. பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கணும் ராஜன் சார். ”

இப்போது தான் ஏட்டையாவின் கவலை ராஜனுக்கு விளங்கியது. ‘ஒரு மாதம் சஸ்பன்ட் ஆனா என்ன செய்யணும் என்று யோசிக்கவேயில்லையே. என்ன செய்யலாம்?’ என்று மனதிடம் யோசனை கேட்டான்.

‘பேசாமல் கிராமத்துக்கு போயிடணும். அங்கதான் பிரஸ்காரன்கள் தொந்தரவு இருக்காது. ‘மதுரை ஏ.எஸ்.ஐ சஸ்பன்ட்’ என்று கொட்டை எழுத்தில் பேப்பரில் போடுவான். பத்து நாளுக்கு நியுஸ்பேப்பர் வாங்கக்கூடாது. அப்பதான் நம்ம பி.பி கன்ட்ரோல்ல இருக்கும். ’ என்று ஒரு வழியாக மனதில் ஒரு டைரியின் பக்கத்தை நிரப்பியவன் தனது முஷ்டிகளை மடக்கி விரித்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.

கட்டிலில் படுத்துக்கிடந்த ஸ்ரீக்கு அவர்கள் பேசியது ஒரு கனம் காதுக்குள்ளே வண்டுகள் சப்தமிடுவதுபோலக் கேட்டது. மறுகனம் மண்டைக்குள் ஆணி அறைவது போலக் கேட்டது. ஆனால் எப்படியோ அவள் காதுகளில் கேட்டது. மினரல் வாட்டர்காரன் என்று சொன்னதும் இதயத்தில் ஓடும் இரத்தம் யாவும் உரைந்துபோனது போலத்தான் இருந்தது.

ஏட்டையா பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு தட்டப்பட்டது. நர்ஸ் உள்ளே வந்து பி.பி பார்த்தாள். பி.பி பார்க்க பார்க்க நர்ஸ் முகம் தெளிவானது. நர்ஸ்சுக்கு முன்பாக ராஜன் பி.பி ரீடிங்கை எட்டிப் பார்த்து நிம்மதி அடைந்தான். நர்ஸ் மேலும் ஒரு முறை பி.பி பார்க்க ஸ்ரீ கைகளைப் பிடித்தபோது கண்களைத் திறந்து எதிரே பார்த்தவளுக்கு ராஜன் முகம்தான் தெரிந்தது. ராஜனும் அவளைப் பார்க்க அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

ஸ்ரீயின் தற்கொலை முயற்சியை விசாரிக்க மனித உரிமை ஆணையம் நியமித்த மாஜிஸ்ரேட் வந்தார்.
ராஜன் அறையின் கண்ணாடிக்கதவில் கண் பதித்து அறைக்குள்ளே வரப்போகும் மாஜிஸ்ரேட்டைப் பார்த்துக் கொண்டே ஏட்டையாவிடம் சொன்னான் “மாஜிஸ்ரேட் வர்றார். இவர்கிட்டயிருந்தும் தப்பிச்சா இரண்டு தேங்காயாக வாங்கி பிள்ளையாருக்கு உடைத்திடுங்க ஏட்டையா.”

மாஜிஸ்ரேட் உள்ளே நுழைந்ததும் ராஜனைப் பார்த்து கைகளைக் குலுக்கியவாரே சொன்னார்
“ஹலோ ராஜன். அக்கூயூஸ்ட் ரொம்ப சீரியஸா இருப்பதா சொன்னாங்க.. ஏன் தேவையில்லாம பிரச்சனையில மாட்டிக்கிறீங்க? யாரோ மசூதாம் ஒவ்வொரு பிரஸ்சாக போய் ஆளுங்களை பிடிச்சி
இழுத்திட்டு வர்றான். எனக்கு ஆர்டர் வந்ததே அதனால்தான். நான் அக்கூயூஸ்ட்கிட்ட நாலு கேள்வி கேட்கிறேன். அக்கூஸ்ட் ஃபிட் டு ஆன்சர் என்று டாக்டர்ஸ் சொன்னாங்க. நல்ல வேளை இது மரண வாக்குமூலம் இல்லை என்று சந்தோஷப்படுங்க. ” என்று கூறியவர் ஸ்ரீ யை திரும்பிப் பார்த்தார். நர்ஸ் ஸ்ரீயின் கன்னங்களைத் தட்டி எழுப்பினார். ஸ்ரீ கண்களைத் திறந்ததும்.. மாஜிஸ்ரேட் கேட்டார்

“ஸ்ரீ.. ஆர் யு ஸ்ரீ மேடம்? ”

மெல்லிய இமைகள் திறந்து ஸ்ரீ ஆம் என்று தலையசைத்தாள்.

“அம்மா நான் உன்கிட்ட நாலே நாலு கேள்விதான் கேட்கப்போறேன். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதும். கேள்வி கேட்கவா? ”

“ம். ” என்று கம்மிய குரலில் வந்தது ஸ்ரீ யின் பதில். “உன்னை யாராவது பலவந்தமாக கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணாங்களா? ”

ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள்.
“திரும்ப கேள்வியக் கேட்கிறேன்.. உன்னை யாராவது பலவந்தமாக கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணாங்களா? ”

ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள்.
“உன்னை யாராவது தற்கொலைக்கு தூண்டினாங்களா? ”

ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அதே பதிலை ஸ்ரீ தந்தாள்.
“போலிஸ் உன்னை ஏதாவது வகையில் பிளாக்மெயில் பண்ணாங்களா?” ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள்.

மாஜிஸ்ரேட் திரும்பி ராஜனைப் பார்த்து சொன்னார்
“என்ன பேரம் பேசினீங்க? ம்? சும்மா சொல்லக்கூடாது நல்லா வொர்க்கவுட் அகிடுச்சு. நான் என் சைடை கமிஷ்னர்கிட்ட கிளியர் பண்ணிக்கிறேன். அப்புறம் பார்க்கலாம் ராஜன். ” என்றவர் நான்காவது கேள்விக்கு அவசியம் இல்லை என்று தோன்றவே கிளம்பிச் சென்றார்.

ஏட்டையாவின் மினரல் வாட்டர்காரன் புலம்பல் செய்த வேலை. மயக்கத்தில் ஸ்ரீ அவரது புலம்பலை கேட்டபிறகு அவரது வேலைக்கு உலை வைக்க விரும்பவில்லை. ஏனோ ராஜனை கஷ்டப்படுத்தவும் தோன்றவில்லை. அவன் அவனது வேலையைத் தானே செய்தான் என்றதால் அவனையும் காட்டிக்கொடுக்க மனமில்லை.

மாஜிஸ்ரேட் கிளம்பிச் சென்ற பிறகும் ராஜனால் ஸ்ரீயின் பதிலை நம்ப முடியவில்லை. ஏட்டையா துள்ளிக்குதித்துவிட்டார். ராஜனிடம் சொன்னார்

“சார் இந்தப் பொண்ணுதான் பணத்தை எடுத்திருந்தாலும் நான் இந்த பொண்ணு மேல கேஸை நிக்க விடமாட்டேன். என் தலையைக் காப்பாத்திடுச்சு சார். ”

ராஜன் முறைத்ததும் ஏட்டையா ஸ்ரீயின் கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

அப்போதுதான் ராஜனுக்கும் ஒன்று புரிந்து திடுக்கிட்டான். வெகுநேரமாய் மனதில் சஸ்பன்ஷன் குறித்து அழுத்திய தவிப்பிற்கு பிறகு அவனுக்கும் ஸ்ரீயின் கைகளைப் பிடித்து முத்தம் தர ஆசைதான் என்பதே அவனுக்கே அதிர்ச்சிதரும் உண்மையாக இருந்தது.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு

பதினைந்து நாட்களுக்குப் பிறகே ஸ்ரீயைப் பார்க்க மசூத் அனுமதிக்கப்பட்டான். ஸ்ரீ கண்களை மூடி உறங்கிக் கொண்டிருக்க மசூத் ஸ்ரீயின் கைகளைத் தொட நினைத்து தொடாமல் அவன் கைகள்கொண்டு அவன் முகத்தையே மூடிக் கொண்டான். அவன் மெல்ல தனது கைகளை அகற்றி கண் திறந்து பார்த்த சிறிது நேரத்தில் ஸ்ரீ விழித்தாள். மசூத் ஸ்ரீயிடம் சொன்னான் “மோகனாவின் பையனுக்கு கர்சீப்ஃ வேணுமாம். தனுவுக்கு காஸ் சிலின்டர் கனெக்ஷன் வேணுமாம். நீ இன்னும் எனக்கு யஸ் சொல்லலை ஆனாலும் ஒண்ணு கேட்கிறேன் இன்றிலிருந்து ஏழு மாதத்தில் நாலு முகூர்த்தம் இருக்கு எதை முடிவுசெய்யணும்? அடுத்து சாவதற்கு முயற்சி செய்வதுக்கு முன்பு இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு முயற்சி செய். சரியா? ”

தன் கோழைத்தனத்தை நியாயப் படுத்த விரும்பவில்லை ஸ்ரீ. பேச முயற்சி செய்தால் பேச முடியும் என்றாலும் அவள் முயற்சி செய்யவில்லை. ஆனால் அவனது ஒரு கேள்விக்கு நிச்சயம் பதில் தரணுமே என்று எண்ணியவள் சொன்னாள்
“இப்ப கல்யாணம் வேண்டாம். நான் கல்யாணம் செய்யப் போறதில்ல.. ”

அதன்பிறகு தலையைக் குனிந்தவள் நிமிரவேயில்லை. பாத்ரூம் போகணும் என்று பாத்ரூமிற்குள் புகுந்துகொண்டாள். மசூத் சன்னல் ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் வெளியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அறைக்கதவு தட்டாமல் திறக்கப்பட்டது. நான்கு பேர் உள்ளே நுழைந்தனர். நேராக மசூதிடம் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மசூத் சுதாரித்துக்கொண்டான்.

“ஸ்ரீ எங்கே? ”

“அவளை டெஸ்டுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.. ”

வந்தவர்கள் கண்கள் அறை முழுவதையும் நோட்டம் விட்டது. பாத்ரூமிற்குள் சத்தம் கேட்கவும் பாத்ரூம் கதவை தட்டினார்கள்.

வெளியே மசூத் பேசியதைப் கேட்ட ஸ்ரீ நிலவரத்தைப் புரிந்து கொண்டாள். குரல்களும் அவளிடம் கௌன்சிலர் ஆளுங்கதான் என்று சொன்னது.

பாத்ரூமிற்குள் இருந்த பினாயில் பாட்டிலை கையில் எடுத்தாள். பத்து நிமிடங்கள் அவர்களை கதவைத் தட்ட விட்டவள் அதன்பிறகு அவள் ஷால்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டே வெளியே வந்தாள். அவள் எதிரே நின்றுகொண்டிருந்த நான்கு எருமைகள் மீதும் பினாயிலை ஊற்றியவள் மசூத்தை இழுத்துக்கொண்டு ஏட்டையாவைத் தேடி அவரது இடத்திற்கு போனாள்.

ஸ்ரீயின் துணையாக இந்த பதினைந்து நாட்களும் இருந்த ஏட்டையாவின் தனி அறையில் ராஜனும் இரண்டு நர்ஸ்களும் இருந்தனர். ராஜன் ஸ்ரீயின் டிஸ்சார்ஜ் ஃப்ர்மை தயார் செய்துகொண்டிருந்தான்.

திடீரென்று ஸ்ரீயைப் பார்த்ததும் அவனால் “என்ன இங்கே? ” என்ற கேள்விமட்டுமே கோர்வையாக கேட்கமுடிந்தது.

“யாரோ துரத்துறாங்க” என்று கூறிய மசூத் ராஜன் இருந்த அறையின் உள்ளே செல்லப்போனவளைத் தடுத்தான். “ஸ்ரீ இங்கயிருக்க வேண்டாம். ஸ்ரீயை எங்க கூட்டிட்டு போக? என் கிராமத்துக்கு கூட்டிட்டு போயிடுறேன்.” என்றான் அவசரமாக .

மசூத்தை கோபமாக முறைத்துவிட்டு “அப்படினா என் கேஸை யார் வைத்து முடிக்க? ஸ்ரீ என் கஸ்டடியில் இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன். ஸ்ரீ ஷாலால் முகத்தை மூடு. உன் கண் மட்டும் தான் தெரியணும். ஏட்டையா அவளை பின் வாசல் வழியாக அந்த ஃப்யர் எக்சிட் வழியாக கூட்டிட்டு போங்க.. நான் இங்க முடிச்சிட்டு வர்றேன். ஏட்டையா கவனம். ” என்று ஒவ்வொருவரிடமும் ஒரு வரி பேசிவிட்டு ராஜன் அவர்கள் முகத்தைப் பார்த்தவாறே நின்றான்.

அவன் தான் கூறியதை நிறைவேற்றச் சொல்கிறான் அவன் சொல்லுக்கு அப்பீலே கிடையாது என்று புரிந்துகொண்ட ஏட்டையா சொன்னார்
“நான் பார்த்துக்கிறேன் ராஜன் சார்.” என்றவர் அடுத்த நொடியில் ராஜன் சம்மதத்தோடு அவனது கள்ளத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மறுகையால் ஸ்ரீயை பிடித்துக்கொண்டு ராஜன் சொன்ன பாதையில் நகர்ந்தார்.

“அக்கா இந்த பிஸ்கட் சாப்பிடுங்க. இதிலே சாக்லேட் ஜெல்லிமாதிரி இருக்கும். நேரம் ஆக ஆக அப்படியே மெல்ட்ஆகி ஓடும். நான் அப்பாகிட்ட இதைதான் தினம் ஸ்நாக்ஸ{க்கு வாங்கச்சொல்வேன். ஆனா அம்மா இதையெல்லாம் வாங்க விட மாட்டாங்க. நீங்க வந்திருப்பதால் தான் இப்ப அப்பா இதை கண்ணுல காட்டியிருக்காங்க.” என்று இறுக்கமாக வாயை மூடிக்கொண்டிருந்த ஸ்ரீயிடம் ஏட்டையாவின் பதிமூன்று வயது மகள் ஸ்நேகா வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்தாள்.

ஸ்ரீயை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றியதும் அவளை ஏட்டையாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ராஜன்.

ஏட்டையாவும் ராஜனும் ஒரே அடுக்குமாடி காவலர்கள் குடியிருப்பில் இருந்தனர்.

அந்த மூன்று மாடி காவலர்கள் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள் இருந்தன. கீழ்தளத்தில் ஏட்டையா தனது குடும்பத்துடன் இருந்தார். இரண்டாம் தளத்தில் ராஜன் குடியிருந்தான்.

“ஸ்நேகா உனக்கு நாளை பயாலஜி டெஸ்ட் இருக்கு. ” என்று அடுக்களைக்குளிருந்து ஏட்டையாவின் மனைவி புஷ்பா சத்தம் கொடுத்தார்.


ஸ்நேகா ஏட்டையாவின் கடைக்குட்டி. மூத்தவள் பத்மா உதவி சப் இன்ஸ்பக்டர். மதுரையின் மேற்கு பிரான்ச். பத்மாவுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்திருந்தது. டிபார்ட்மென்டில் நல்ல பெயர் பத்மாவுக்கு. ஏட்டையாவிற்கு ராஜனை மருமகன் ஆக்கிட ஆசைதான். ராஜன் தான் இன்ஸ்பக்டர் ஆகாமல் திருமணம் பற்றிய பேச்சே கிடையாது என்று பெற்றோரிடமும் உறவுகளிடமும் கூறிவந்தான். இப்பவே வயது முப்பதை தொடங்கப்போகுது என்று அவனது சின்ன தாயார் தான் மிகுந்த வருத்தம் கொள்வார். ராஜன் முடிவு எடுத்து விட்டால் அதில் மாற்றமோ திருத்தமோ இருக்காது. இதனை அறிந்த பெரியவர்கள் அவனை இம்சிப்பதில்லை.

தாயின் குரலைக் கேட்ட ஸ்நேகா உடனே ஸ்ரீயிடம் “அக்கா நான் பிறகு வர்றேன். இப்ப போகலைன்னா தோசை கரண்டியோடுதான் அம்மா வருவாங்க. நல்லா படிச்சி ஒப்பிச்சி காண்பிச்சிட்டா அப்புறம் அம்மாவே அரட்டை அடிக்க டைம் கொடுப்பாங்க. வர்றேன் பை.” என்று கூறிவிட்டு அவசரமாகச் சென்றவள் தனது கைபேசியை ஸ்ரீ அருகிலேயே வைத்துவிட்டுச் சென்று விட்டாள்.

ஸ்நேகா மீது எண்ணில் அடங்கா பொறாமை எண்ணங்கள் உண்டானது ஸ்ரீக்கு. தன் தலையெழுத்தை நொந்தவள் சட்டென்று ஏதோ ஒன்று ஞாபகம் வர ஏட்டையாவிடம் “சார் பாத்ரூம் பேகணும்.” என்றாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாலா சுந்தர் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top