~14
சத்யாவின் தந்தை தங்கவேலு இவளின் காதல் கதை கேட்டு அதிர தான் செய்தார்.. அவள் மீது இருந்த நம்பிக்கை சுக்கு நூறாக போவதை நினைத்து பார்த்தார்...
சிறு வயது முதல் செல்லமாய் வளர்த்த ஒரே மகள் ..பெண் தேர்ந்தெடுத்தவன் நல்லவனா இருந்தாலும் எத்துக்கமட்டாங்க அது ஏன்னு இன்னும் நிறைய பேருக்கு புரியல..எனக்கும் தான்..
அவள் தந்தை காதல் பற்றி கேட்டதில் இருந்து நெருப்பு கோழியாக இருந்தார்..வீட்டிற்கு வந்ததும் அலறியவரை சௌந்தர்யவால் கூட கட்டு படுத்த முடியவில்லை..
“சத்யா,....கீழ வா...”
தன்னை அழைக்கும் சத்தத்திலிருந்தே அவர் கண்டு பிடித்துவிட்டார் என்பதை புரிந்துக்கொண்டாள் சத்யா... பதறி வந்தாலும் எதையும் சமாளிக்கலாம் என்ற அலட்சியம் அதிகம் சத்யாவிற்கு............
“என்ன பா.. சொல்லுங்க..”ஏதும் இல்லை என்றமாதிரி கேட்ட தன் மகளை பார்த்தார்..”ரொம்ப அலுத்தகாரி தான் நீ.. இருந்தாலும் என் கண்ணுல இருந்து எதையும் மறைக்க முடியும்னு நீ நினச்சது தப்பு சத்யா...”
“ஆமா பா..உங்க பொண்ணா இருந்துகிட்டு இவ்ளோ அழுத்தம் மனசுல இருந்து தான ஆகணும்..”
“ஏய் ...அப்பா கிட்ட என்ன பேசணும் எப்டி பேசணும்னு தெரியாதா...அடிச்சேன.. வாய மூடி டி வாயாடி...”சௌந்தர்யாவை அடக்கிய தங்கவேலு...
“சத்யா ..இது வரைக்கும் ஏன் கை உன்மேல பட்டுருகா சொல்லு...உன்ன நா கஷ்ட படுத்தினேனா.. மத்தவங்க கிட்ட இருக்கிற மாதிரி நா உன்கிட்ட இல்ல ல மா.. நா சொல்லியும் நீ ஒருத்தன லவ் பண்ணிருக்க.. அவன் நம்ம ஸ்டேடஸ் கூட இல்ல.. சரி ஸ்டேடஸ் விடு ..அந்த குடும்பம் பத்தி தெரியுமா மா உனக்கு...அவன் அப்பாவும் அவ அம்மாவ விட்டு போயிருக்கான்..இப்டி ஒரு குடும்பம் நமக்கு தேவையா சொல்லு டி..”
“அவன் அப்பா போன இவன் என்ன பண்ணுவான்..அவ்ளோ விசாரிச்சிட்டு அவன் எப்டின்னு சொல்லுங்க ப்பா ..அவன மாதிரி என்ன நல்லா பாத்துககுற பையன் எங்க தேடுவிங்க..உங்களுக்கு முக்கியம் ஸ்டேடஸ் காசு பணம்.. நீங்க இவ்ளோ தூரம் போவிங்கனு எனக்கு தெரியும் பா.. இது ஏன் வாழ்கை..எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு ..முடிஞ்சா சப்போர்ட் பண்ணுங்க இல்லன விட்ருங்க நானே பாத்துப்பேன்..”
அதுவரை பொறுமை காத்த தங்கவேலு ஓங்கி ஓர் அறை விட்டார்.. கன்னத்தை பிடித்து நின்றவளுக்கு கண்ணீர் பொங்கியது..அதை விட சீறிட்டு வந்தது அவளின் பிடிவாதாமும் கோவமும்....
“அப்பா...”கண்ணீர் பொங்கியது அனைவருக்கும்..அதை மீறி சீறிட்டு வந்தது அவளின் கோபம் ..”சாரி பாப்பா.. கோவத்துல அடிச்சிட்டேன்... ப்ளீஸ் மா.. அப்பா வேணும்னு அடிகல..”
அனைவருக்கும் அப்பா என்றாலே சிறந்தவர் தான்.. அதுவும் பெண்பிள்ளைகளுக்கு அப்பா என்றால் கொள்ளை பிரியம் தான்... அவர் கேட்ட மன்னிப்பில் அவள் மனம் இளகியது தான்.. ஆனாலும் அவளுக்கு இப்பொது கார்த்திக் அதவிட முக்கியம் என்ற நிலை வந்துவிட்டது..
“நீங்க என்ன கொன்னுடாலும் பரவில்லை அப்பா.. நா கல்யாணம்னு ஒன்னு பண்ணிகிட்ட அது கார்த்திக் மட்டும் தான்.. எனக்கு என்ன தேவையோ அது கொடுக்கணும்னு நினைங்க பா.. வற்புறுத்தி கொடுத்து நான் சந்தோஷமா இருப்பேனு நினைகிறிங்களா பா...”
“படிச்சா திமிரு சத்யா உனக்கு.. இவ்ளோ சொல்லியும் நீ கேக்கமாட்ட ல.. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு... சௌந்தர்யா ..இனிமே எனக்கு தெரியாம இவ வீட்டு வாசல தாண்ட கூடாது.. அப்டி போன அவள ஏதும் செய்ய மாட்டேன் ..உன்ன கொன்னு பொதச்சிடுவேன் பாத்துக்கோ..”ஆவேசமாய் கூறியவர் வெளியே சென்றார்..
“இப்போ சந்தோஷமா உனக்கு .. உனக்கு பதிலா நானும் அப்பாவும் செத்துடுறோம் நீ அவன் கூட சந்தோஷமா இரு.. இவ்ளோ சுயநலம் ஒரு பொண்ணுக்கு இருக்க கூடாது..”அவளை அடிக்க...
கோவத்தின் உச்சத்தில் இருந்த சத்யா..”என்ன மா.. உனக்கு என்ன பிரச்சன .நா சாகுறேன் நீயும் அப்பாவும் நல்ல நிம்மதியா இருங்க... நா எங்கேயும் போமாட்டேன்...அமைதியா இரு இல்லனா இருக்க கோவத்துல என்ன பண்ணுவேன்னு தெரில..”
“இவ்ளோ திமிரு ஆகாது டி..உங்க அப்பாவ சொல்லணும்.. இவ்ளோ செல்லம் கொடுத்துட்டு இப்போ என்ன குத்தம் சொல்றாரு...உங்களுக்கு நடுல இருந்து நா தான் சாகனும்....ஒழுங்கா இருந்துக்கோ சத்யா..” தாய் என்று ஆகிவிட்டால் இருக்கும் பயம் சௌந்தர்யாவிர்க்கு இருந்தது..மனதின் பாரத்தோடு கிட்செனுகுள் சென்றார்..
ரூமுக்குள் சென்ற சத்யா.. கட்டு படுத்திய கண்ணீர் சீறிட்டு வெளிவந்தது...
“கார்த்திக்..உன்ன விட்டு கொடுக்க எனக்கு மனசு இல்ல டா.. வாழ்கைனுன்னு ஒன்னு இருந்தா அதுஉன்கூட தான் டா.. உனக்காக இது கூட தாங்கிக்க மாட்டேனா..எனக்கு தெரியும் இன்னும் எவ்வளோ சந்திக்கணும்னு தெரிஞ்சிருச்சு ..உன்ன தவிர வேற யாரையும் என்னால நினச்சிக்கூட பாக்க முடில டா..உன்னாலையும் முடியுமா சொல்லு “செல்போனில் அவன் போட்டோ பார்த்து ஆறுதல் படுத்திகொண்டாள்...
ஆனால் மனம் படபடுத்தது அடுத்து என்ன நடக்க போகுது என்பதை நினைத்தவளுக்கு..கார்த்திக் இதை பற்றி கல்லூரியிலே சொல்லிருகான்..
............................................................
“சத்யா நம்ம லவ்வ உங்க அப்பா ஒத்துபாரா டி .”கிளாசை கட் அடித்து அவர்கள் காலேஜில் உள்ள கேலேரியில் இருந்தனர்.. அதுவும் சத்த்யாவே அவனை வலுகட்டாயமாக இழுந்து வந்தாள்.
“சண்ட போடுவாங்க ...அடிச்சாலும் அடிப்பாங்க.. பேசாம கூட போகலாம் ..”அவள் ரொம்ப அசால்டாய் சொன்னாள்..
“என்ன டி ரொம்ப அசால்டா சொல்ற..”
“எப்போ உன்மேல லவ் வந்து ..எப்ப நீ ஒத்துகிட்டியோ அப்போவே எனக்கு தெரியும் எவ்ளோ பிரச்சன வரும்னு தெரியும் டா.. பாத்துக்கலாம்..”நம்பிக்கையாய் அவள் கூற ..அவனுக்கு தயக்கமாய் இருந்தது.
“இப்படிலாம் ஆகும்னு தான நான் லவ் வேணாம்னு சொன்னேன் மா..”அவனின் அவளுக்கு கோபத்தை தூண்ட
“டேய் என்ன..என்னால சமாளிக்க முடியும்னு நினைச்சதால மட்டும் தான் நான் என் லவ்வ சொன்னேன் டா.. என்ன கோபப்படுத்தாத..” கோபத்தில் முகத்தை திருப்பிகொண்டாள் .
“சரி செல்லம் கூல்... ஆனா பிரச்சன வந்தா என்ன பண்ண சொல்லு டி..”
“நான் பாத்துப்பேன் டா.. நானே கூட சமாளிச்சிப்பேன் டா..”
“என்ன டி ..நான் பயப்புடுறேன்னு நினைக்ரியா.. உன்ன கஷ்ட படுத்த வேணாம்னு நினைக்றேன் டி..”
“நீ வேணும் டா.. உனக்காக யாரா வேணும்னாலும் நான் எதிர்த்து நிப்பேன் டா..”
“அப்பாவா நானா அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவ..”
“டேய் முன்னாடிலாம் எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு சந்தேகம் வரும்..பொண்டாட்டி பக்கமா இல்ல அம்மா பக்கமான்னு.. ஆனா இப்ப பசங்க அத கேக்க ஆரம்பிச்சிடாங்க..”
“அப்பான்னு வந்துட்டா எல்லா பொண்ணுகளும் பசங்கள மறந்துறாங்கல மா அதான்..நீ பதில் சொல்லு ..”
“கார்த்திக்.. எல்லா பொண்ணுங்களும் அதிகமா நேசிக்கிற ஆண் அப்பா மட்டும் தான் ..அப்டியே அவளுக்கு அண்ணா தம்பி இருந்தா அவங்களையும் நேசிப்பாங்க..ஆனா ஒரு அந்நியன் மேல பாசம் வைக்கிறாங்க.. ரெண்டு பேருல யாராச்சும் ஒருதங்கனா எப்டி சொல்லுவாங்க .. உனக்கு அம்மாவ நானான்னு கேட்டா பதில் சொல்ல முடியதுலா .. அதே மாதிரி தான் இதும் ..தன்ன பெத்தவங்களுக்கு தன்னாலா அசிங்கம் ஆகா கூடாதுன்னு எவ்வளவோ ட்ரை பன்னுவாங்க ..தன்னோட காதல எடுத்து சொல்லுவாங்க ..சிலர் அடம்பிடிச்சாலும் ஒரு பாய்ன்ட்ல எத்துபாங்க ..ஆனா சிலர் செத்துருவேன்னு சொன்னாலும் ஒத்துக்கமாட்டாங்க..இப்டி காரணம் சொல்லிட்டே போலாம்..”
“மூச்சு விடு டி..”
“இல்ல டா.. நான் உன் அம்மாவை விட்டுட்டு வர சொன்னா வரமாட்டலா.. சரி அத விடு.. உங்க அம்மா என்ன புடிக்கலன்னு சொல்லிடாங்க ..அப்போ நீ என்ன பண்ணுவ..”
“சொல்லி புரியவைப்பேன்..”
“யாரானாலும் கல்யாணம் பண்ணு ஆனா சத்யா வேணாம்னு சொன்னா என்ன பண்ணுவ டா..”
“தாயே தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிரு டி..”காதில் கை வைத்துக்கொண்டு அவன் சொல்ல..
“இருந்தாலும் நீ சொல்லு ..
“தெரில டி.. அப்போ என்ன தோணுதோ அதான் பண்ணுவேன்..”
“அதே தான்.. யாரும் வேணும்னு யோசிச்சு பண்ணுறது லவ் இல்ல. எல்லாரும் அந்த பாயிண்ட்க்கு போயிடறாங்க.அவனா நானான்னு கேட்ட யாரா சொல்லும் அந்த பொண்ணு. ..அந்த சிச்சுவேஷன்ல ரெண்டு வர்ஷம் காதலா இருபது ஆண்டு பாசமான்னு யோசிச்சு சொல்லுவாங்க ..சிலர் பெத்தவங்கள யோசிச்சு சொல்லுவாங்க ..அந்த பொண்ணு மட்டும் அதுக்கு காரணம் இல்ல அவனும் தான் ..அவனும் கூட இருந்து சமாளிச்சா ..எவ்ளோ கல் மனசா இருந்தாலும் கரைக்கலாம்..”
“சரி டி புரிது...நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல..”
“ஆனா நான் உன்ன தான் வேணும்னு சொல்லுவேன் ..”
“ ஏன் உன் அப்பா உனக்கு புடிக்கும் தான...??”அவளின் பதில் அவன் குழம்பினான் ..
“புடிக்கும் டா..கண்டிப்பா அப்பா உன்ன வேணாம்னு சொல்லுவாரு ..அப்பறோம் நான் சண்ட போடுவேன் .. ஆனா அவரு உன்ன எதுக்க வரைக்கும் நீ தான் வேணும்னு சொல்லுவேன் ..ஒரு பாய்ன்ட்ல போய் தொலன்னு விட்டுருவாரு ..அது வரைக்கும் பொறுமையா இருந்தா போதும்..”
“நல்ல பாலிசி மா.. வாழ்க வளமுடன்..”அவன் சிரித்துக்கொண்டே கூற அவள் முன் பற்களை காட்டி “ஈ ஈ “என்றால்..
அனைத்தையும் நினைத்து பார்த்தவள் “தங்கிப்பேன் உனக்காக தான டா..”
கண்ணீர் சிந்தினாலும் சிரித்தாள் அவள்.. வலியிலும் உணர்ந்தாள் அவன் சொற்களை..”நான் மட்டும் தான் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்.. அதே மாதிரி கஷ்டத்தையும் நான் மட்டும் தான் கொடுக்கணும்.. “
ஆரம்பத்தில் கார்த்திக்கும் சத்யாவும் எலியும் பூனையுமாக இருந்தார்கள் .. ஆனால் அவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்பது அவர்களுக்கே தெரியாது... சொல்லப்படாத காதலாய் இருந்தது ..
அவன் செய்கையாலும் சண்டையாலும் அவள் அழும் போதெல்லாம் அவன் இதை தான் சொல்லுவான்..”நான் உன்ன கஷ்ட படுத்த மாட்டேன்னு சொல்லிட்டு கஷ்ட படுத்துனா அது நான் கொடுத்த நம்பிக்கைக்கு தப்பா போய்டும்..கஷ்டம் கொடுத்தாலும் நான் இருப்பேன் உனக்காக ..உன்கூட..”
எத்தனை ஆருதாலான வார்த்தைகள்..”உன்ன விட்டா யாரால என்ன சமாளிக்க முடியும் டா.. சாகுற அளவுக்கு போனாலும் நீ தான் வேணும்னு அடம் புடிப்பேன்..”மனதிற்குள் சொல்லிகொண்டாள் ..
ஆனால் அடுத்த நாள் நடக்க இருக்கும் நிகழ்விற்கு அவள் என்ன சொல்வதென்று புரியாமல் குழம்பினாள்
கனவுகள் தொடரும்...........................