• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
காரை எடுத்த விநாயக் தன் அலுவலகம் நோக்கி காரைச் செலுத்தினான்.அனைவரின் வாழ்த்தையும் சிறு தலையசைப்புடன் பெற்றுக்கொண்டவன் தன் அறைக்குச் சென்றான்.இன்டர்காமில் தன் செயலாளர் பிரியாவை அழைத்து கையெழுத்திட வேண்டிய கோப்பைகளை கொண்டு வரச் சொன்னான்.

அவன் அறைக்குச் சென்ற பிரியா அவன் கையெழுத்திட்ட கோப்பைகளைப் பெற்றுக் கொண்ட பின்,"சார்! கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்க் ?" என்று கேட்க விநாயக், " லிஸன் பிரியா! நீ என்னோட பிரண்ட். மத்தவங்க முன்னாடி நீ என்ன சார்னு கூப்டா போதும்.என்கிட்ட பேசறக்கு நீ பெர்மிசன் கேட்க வேண்டியதில்ல.....சொல்லு" என்று கூற "நீ எனக்கு பிரண்ட் மட்டு இல்ல விநாயக் ....என்னோட அம்மா,அப்பா, வெல்விஷர் எல்லாமே நீ தான்!நீ பண்ண உதவிய நா என்னைக்கும் மறக்கமாட்ட...நான் இப்ப உயிரோட இருக்கனா அதுக்கு காரணமே நீ தான்" என்று கூறி அழுதாள்.

விநாயக், "பிரியா என்ன இது சின்ன பொண்ணு மாறி ...முதல்ல கண்ண தோட.....உனக்கு என்ன ப்ராப்ளம் வந்தாலும் நான் பாத்துக்குற...என்ன விஷயம் சொல்லு...." என்று கேட்க பிரியா மீண்டும் விசும்பினாள்.

"..ச்சு...என்ன பிரியா இது சின்ன குழந்தை மாறி...அழாத..."என்று கூற அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அவளை சமாதானம் செய்ய இருக்கையிலிருந்து எழுந்த விநாயக் அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்.தண்ணீர் குடித்த அவன் கைகளைப் பிடித்தவள் மீண்டும் குழுங்கி குழுங்கி அழ ஆரம்பித்தாள்.

அப்பொழுது தீடீரென்று கதவைத் திறந்துகொண்டு யாழினி உள்ளே வர இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.
விநாயக் பிரியாவைவிட்டு எப்படி விலகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததாள் யாழினி வந்ததைக் கவனிக்கவில்லை.ஆனால் பிரியா பார்த்துவிட்டாள்.
யாழினியைப் பார்த்த பிரியா வேண்டுமென்றே விநாயக்குடன் ஓட்டி மீண்டும் அழத் தொடங்கினாள்.

அவளை சமாதானப்படுத்த நினைத்த விநாயக், "அழாத ப்ரி! என்ன ப்ராப்ளமா இருந்தாலும் பரவாயில்லை சொல்லு....நான் பாத்துக்குற...." என்றான்.

அவன் அவளை ப்ரி என்று அழைத்ததால் கோபம் கொண்ட யாழினி கைதட்டி, "சபாஷ்! உங்க ரொமான்ஸ ஆபிஸ்லயே ஆரம்பிச்சுட்டிங்க போல...பட் டூ ரிமைன்ட் யூ இது ஆபிஸ்...நீங்க ரொமான்ஸ் பண்ண பார்க் பீச்னு நிறைய இடம் இருக்கு...ஓ சாரி கோயம்புத்தூர்ல பீச் இல்லைல..." என்று கூறி அவர்கள் இருவரையும் எரிக்கும் பார்வை பார்த்தாள்.

இவள் பேசியதில் கோபம் கொண்ட விநாயக், "ஏய் வாய மூடிடீ! அவ என்ட்ட அவளோட கஷ்டத்த சொல்லி அழுதுட்டு இருந்தா...அத கூட புரிஞ்சுக்கத் தெரியாமா...நீயெல்லாம் சேடிஸ்ட்டீ" என்றான்.
அவன் பேசியதை நம்ப முடியாமல்," நான் சேடிஸ்ட்டா? நான் சேடிஸ்ட்டா?" என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க அவள் கையைத் தள்ளிவிட்டவன் " ஆமாடி நீ சேடிஸ்ட் தான்!முதல்ல பெர்மிசன் கேட்டுட்டு உள்ள வரனுங்குற மேனர்ஸ் தெரிஞ்சுக்கோ...கேட் லாஸ்ட்...." என்று கூற அவன் அறையில் இருந்து தலைகவிழ்ந்த முகத்துடன் வெளியேறினாள் யாழினி.

இவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் பிரியா.

திரும்பிய விநாயக் அங்கே நின்று கொண்டிருந்த பிரியாவைப் பார்த்து,"நீ அவ பேசினத ஒன்னும் பெரிசா எடுத்துக்காதா...சின்ன பொண்ணு கோபத்துல பேசிட்டா...நீ என்ன சொல்ல வந்த சொல்லு..." என்று கேட்டான்.

விநாயக்ற்கும் யாழினிக்கும் சண்டை என்பது பிரியாவிற்குத் தெரியும் ஆனால் காரணம் தெரியாது.எப்படியாவது அவர்கள் சண்டையைப் பெரியதாக்கி விநாயக்குடன் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் இப்பொழுதும் யாழினிக்காக பரிந்து பேசும் விநாயக்யைப் பார்க்க எரிச்சலாக வந்தது அவளுக்கு.அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்," அவ நம்ம யாழினி வினு...சாரி விநாயக் ...அவ பேசறத போய் நான் தப்பா எடுத்துப்பனா?தீடீர்னு அம்மா அப்பா நியாபகம் வந்துருச்சு..அதனால தான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்ட...இப்ப ஐ ஆம் ஓகே" என்று கூறி வெளியே சென்றாள்.

தன் அறைக்குச் சென்ற யாழினிக்கு விநாயக் கூறியதை நம்ப முடியவில்லை.கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தாள்.பின்பு கண்களைத் துடைத்துக்கொண்டவள் ஒரு முடிவுடன் வீட்டிற்குச் சென்றாள்.

விநாயக் எவ்வளவு இரக்கமனப்பான்மை கொண்ட தன் யாழினி இப்பொழுது இப்படி மாறி விட்டாளே என்று பழைய கால நினைவுகளில் உழன்று கொண்டிருந்தான்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
yazhini avan officela than irukala........... intha priyaku en intha villathanam ........ nice epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top