• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 7(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
இதே நாள் அவளுக்கும் நினைவிருந்தது..அவனின் மனப்போக்கும் அவனின் சஞ்சலமும் அவள் அறிந்தது தான்..அவன் வயதுக்கு அவன் மனம் இல்லை என்பதை அவள் அறிவாள்.. அவனை சமாளிக்க எத்தனை பேர் இருந்தாலும் அவன் மனம் மாறது என்பதை அவள் எண்ணிக்கொண்டு தான் இருந்தாள்..

அவள் நினைவுகள் தடைபட்டது சாஷினியின் தந்தையின் அழைப்பில்...

“சாஷினி பாப்பா..”நினைவுகளை துலைத்த குழந்தை போல் உலகத்தை மறந்தவளாய் நிமிர்த்து பார்த்தாள்.. தந்தை வந்தது கூட அறியாமல் தவிக்க வைத்த நினைவுகளை வெறுத்தாள்...

“சாரி பா.. ஏதோ நியாபகத்துல இருந்துட்டேன்...”

“அதுலாம் ஒன்னும் இல்ல கண்ணு.. அம்மா வர இன்னும் ஒன் ஹார் இருக்கு நாம வாக்கிங் போலாமா பாப்பா ..அப்டியே நம்ம தோப்பு பக்கம் போயிட்டு வரலாம்..”சாஷினிக்கி தோப்பிற்கு போய் வேலை செய்ய அவ்ளோ புடிக்கும்..

“சரி பா .. போலாம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்.. “என்றவள் சென்று உடை மாத்திகொண்டு வந்தாள்...

சென்னையில் சாஷினி நைட் டிரஸ் போட்டுகொண்டே வெளியே செல்வாள்..ஆனால் குற்றாலம் ஒரு கிராமம் ..கிராமம் என்றால் பல கட்டு பாடுகள் ஆடை முதல் பேச்சு வரை.. ..மதிப்பு என்பது அதிகமாக மதிக்க படும் இடம் கிராமம்...

நைட் ட்ரஸில் இருந்தவள் குர்த்திக்கு மாறினால்.. வெயில் மறைந்து குளிர் நிறைந்து குற்றால தென்றல் வீச ரோடோரமாக இருவரும் நடந்தனர்...

“பாப்பா உனக்கு நியாபகம் இருக்கா.. நீ சின்ன வயசுல இருக்க அப்போ ..அதாவது நீ செவன்த் படிக்கிறதுக்கு முன்னாடி நீ எவ்ளோ சேட்டை பண்ணுவனு..” என்றவர் அவள் பதிலுகாக காத்திருந்தார்..

சற்று சிரித்தவள்..”ஆமா பா..டெய்லி மார்னிங் என்ன எழுப்பி நெத்தில ஒரு முத்தம் தருவிங்க நா பாதி தூக்கத்துல உங்க கன்னத்துல முத்தம் கொடுப்பேன்..அப்டியே நீங்க என்ன தூக்கிட்டு போய் ப்ரஷ் பண்ணவைபிங்க..அதுவரைகுமே நான் பாதி தூக்காத்துல தான் இருப்பேன்..”என்றவள் கண் கலங்க கூறினால்.. கலங்கியது இருவரின் கண்களும் தான்..

“ஏன் மனசுல அடிகடி ஓடுற விஷயம் இது ஒன்னு தான் பா.. எனக்கு உங்க மேல இருகிற பிரியம் இன்னும் அணு அளவு கூட போகல நீங்களும் அப்டிதான்னு எனக்கு தெரியும்... ஆனா என்னோட வயசு உங்க கிட்ட இருந்து என்ன தூரமா கொண்டு போய்டுச்சு பா... நான் பருவம் அடைஞ்ச அந்த நாள் இன்னும் ஏன் கண்ணுக்குள்ள இருக்கு பா..எப்பவும் உங்க கூட கை போட்டு கால் போட்டு தூங்குன பழக்கம் ..பஸ்ட் நாள் நீங்க இல்லாம தனிய தூங்க வச்சாங்க.. நாடு ராத்திரி எழுந்து அப்பா எங்க அப்பா எங்கனு நான் கத்திட்டு நீங்க இல்லாதாத தெரிஞ்சி அழுதேன் காலைல வர.. “

தோப்போறோம் அமர்ந்தனர் இருவரும்.. கண்கள் பொங்கி தயாராய் இருந்தன எந்நேரமும் வெடிக்கும் என்பதற்கு அத்தாச்சியாய்...

“பாப்பா ..நம்ம வாழ்கைல நிறைய விஷயம் நிறைய சிச்சுவேஷன்ல விட்டுட்டு போகவேண்டிய நேரம் வரும் ...அது எல்லாத்துக்கும் அழுது ஓய கூடாது...இதுவும் கடந்து போகும்னு நினச்சிட்டு அடுத்த கட்டத்துக்கு உன்ன நீ தயார் பண்ணிக்கணும்...”

எதை சொல்கிறார் என்பது தெளிவில்லை ஆனால் தன் மனநிலையை புரிந்தவர்கள் மட்டுமே கூற முடிந்த வார்த்தைகள் என்பதில் மாற்றம் இல்லை என்பது அவள் மூளைக்கு உரைத்தது..

“அப்பா ..நா ஒன்னு கேப்பேன் நீங்க மாட்டேன்னு சொல்ல கூடாது..”

“சொல்லு பாப்பா..உனக்கு போக தான் இந்த உயிரில மிச்சம்..”என்றார் தன்மையாக..

“அப்பா நான் கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு இருக்கேன் பா.. உங்க கூட மட்டும் இருந்தா போதும்னு நினைக்றேன் பா.. உங்கள விட யாராலையும் என்ன இப்டி பாத்துக்க முடியாது பா,,ப்ளீஸ் பா”காதலை இழந்தவர்கள் நினைப்பது இதுதானே..

சிறு பிள்ளையாய் அடம் பிடித்தவளை என்ன செய்வதென்று தெரியாமல்.. நெற்றியில் இதழ் பதித்து ஒரு கை கொண்டு அணைத்துக்கொண்டார்...

“பாப்பா .. நான் இப்டி கூப்ட்ரதால நீ இன்னும் பாப்பா இல்ல மா..நீ ஒரு நல்ல டாக்டர்.. உனக்குன்னு ஒரு குடும்பம் உன்ன மட்டும் நேசிக்ற ஒரு உறவு வேணும் பாப்பா..”

“என்ன மட்டும் நேசிக்கிற உறவு என்ன விட்டு தூரமா போய்ட்டு பா.. நா இனி யாருக்காக வெயிட் பணனும்னு தெரில பா.......”மனதில் நினைதுக்கொண்டவள் பெருமூச்சு விட்டாள்...

“யாரும் இல்லைனு நினைகிற தான பாப்பா...என்னோட ராஜகுமாரிக்கு எத்த ராஜகுமாரன் சீக்கிரம வருவான் மா..”

அவர் கூறுவதை கேட்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது..சாதாரனமான நேராமாய் இருந்திருந்தாள் கலாய்திருபால்...நம் வாழ்கையில் நம்பகமான சுயநலமற்ற உறவு என்றால் அது தாய் தந்தை மட்டும் தான்.. இதற்கான மாற்று உறவு இன்னும் தோன்றவில்லை அவளுக்கு....

“நடப்பது எல்லாம் நல்லதுக்கு தான் பாப்பா...ஜஸ்ட் லிவ் தி மொமென்ட் டா கண்ணா..”என்றவர் செல்லமாய் கன்னத்தில் தட்டினார்..

“பாப்பா மழை வரும்னு நினைக்றேன் நாம வீட்டுக்கு போலாமா..”வந்து இரண்டு மணி நேரம் ஆகித்தான் விட்டது..

சாஷினியின் மனம் லேசானது..ஆனால் தனக்கான ஏதோ காத்திருப்பது போல் தோன்றியது அவள் மனதில்..அது நல்லதா இல்லை தன்னை வேதனை படுத்துவதா ஏதும் புறியாமல் போக மௌனமாய் வீட்டை நோக்கி நடந்தனர்...

தாயின் இழந்தவனின் தவிப்பும்.. காதலை இழந்தவளின் தவிப்பும் தொடருமா..

கனவுகள் தொடரும்...................................

 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top