View attachment 3772ஷ்யாம் மஹா திருமண இரவு அத்தியாயத்திற்கு எழுதியது.
எதை சொல்ல நான்
அழகு தேவதை ஒன்று
அறைவாசல் வந்ததையா
அலைபாயும் கண்களுடன்
அதிர்ந்து நின்றதையா
எதை சொல்ல நான்
சில்மிஷச்சிரிப்போடு நான்
சின்ன வலியுடன் நீ
பிடிக்காத ஒன்றை எனக்காய் அருந்தியதையா..
பாவை நீ வைத்த மீதம்
எனக்கு தேனாய் இனித்ததையா..
எதை சொல்ல நான்
வாசமாய் நீ
வார்த்தையற்று நான்
வாசமலர்ச்சூடி வசமிழக்க செய்ததையா..
வஞ்சியவளை என்
நெஞ்சம் சாய்த்ததையா
எதை சொல்ல நான்.
தயக்கத்தில் நீ
மயக்கத்தில் நான்
அணிகலன் அகற்ற
ஆவலாய் வந்ததையா..
மயில்கழுத்தில்
மயங்கி நின்றதையா..
எதை சொல்ல நான்.
மயக்கத்தில் நீ
கிறக்கத்தில் நான்
உண்மை சுட்டது உன்னை
உடனே வெறுத்தாய் என்னை
கைசேர்ந்தவள் மெய்சேரவில்லை
என்ற வருத்தம் எனக்கில்லை
ஏனெனில்
உனக்கான என் காதலில்
காதலைவிட காமம் அதிகமில்லை
கடந்த காலம் மறக்க
காலத்தால் முடியாவிட்டால் என்ன
என் காதலால் அது முடியும்
காத்திருப்பேன் அதுவரை
கலக்கமாய்
சிறிது கண்ணீருமாய்
நீ மஹா
நான் உன் ஷ்யாம்