எனது அன்பான தோழிகள்
அனைவருக்கும் எனது இரவு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது புன்னகையின் முகவரி கதையைப்பற்றி உங்கள் அனைவரிடமும் கொஞ்சம் பேசலாம் என்று வந்தேன்..
என்ன பேச போகிறாய்..?! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.. நான் அதிகம் சிரிக்க வைக்கிறேனா..?! இல்ல எபியை படிக்கும் பொழுது எனக்கு தூக்கம் வருதுபா என்று சொல்பவர்கள் என்னிடம் நேரடியாக சொல்லுங்கள் என்னால் முடிந்த அளவு நல்ல ஒரு கதையை கருத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி..
படிக்கும் பொழுது தூக்கம் வந்தால் அடுத்த எபிகளில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் யாருக்குமே வராதுப்பா.. எனக்கு உங்களின் கதையைப் படிக்கும் பொழுது தூக்கம் தான் சிஸ் வருது என்று சொல்பவர்கள் உண்மையை சொன்னால் அடுத்த எபியில் இருந்து அந்த தவறை நான் கொஞ்சம் திருத்திக் கொள்வேன்..
அடுத்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகம் எனது எபியில் வரும் அதை முதலில் படிக்கும் தோழிகள் [பானும்மா] தவிர மற்றவர்கள் மேலோட்டமாக படித்தாலும் உடனே நீங்கள் என்னிடம் சொல்லிவிட்டால், அது அடுத்து படிப்பவர்களுக்கு திருத்திக் கொடுக்க எனக்கு உதவியாக இருக்கும்.. மற்றவர்களுக்கும் படிக்கும் பொழுது குழப்பம் வாராது..
கதையின் தொடர்ச்சி விட்டு போகிறது என்றாலும் எனக்கு சொல்லுங்க பா.. ஏன் என்றால் நான் தினமும் ஒரு எபி கொடுக்கிறேன் என்பதற்காக இவள் கதை முழுவதையும் எழுதிவிட்டுத்தான் நமக்கு எபி கொடுக்கிறாள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. நான் தினமும் இதற்காகவே நேரம் ஒதிக்கி செய்கிறேன்..
என்னோட நோக்கம் ஒரு கதையை படித்தால் அதில் ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் என்னோட கருத்தை அனைவருக்கும் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே..! இதற்கு நீங்கள் அனைவரும் எனக்கு என்னோட தவறை சுட்டிக் காட்டினால் நான் அழுகும் ரகம் இல்லைபா.. நான் என்னோட தவறுகளை திருத்திக் கொள்ள மட்டுமே நினைப்பேன்.. நான் சந்தோசமாக கதையை கொடுக்க உங்களின் கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப முக்கியம் பா.. அதுதான் நான் உங்களிடம் பேசலாம் என்று வந்தேன்..
நான் ஏதாவது தவறாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும் புன்னகையின் முகவரி அழுகை முகவரியாக மாறிவிட கூடாது என்பதற்காக இந்த முயற்சிப்பா.. என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் தோழிகளே..
இப்படிக்கு
உங்களின் தோழி
சந்தியா ஸ்ரீ