வணக்கம் நட்பூஸ் .என் பெயர் அனிதா ராஜ்குமார் .என் பெயரில் உள்ள ராஜ் என் தந்தை .குமார்-என் கணவர் .எனது சொந்த ஊர் கோவில் நகரமான காஞ்சிபுரம் .கால் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிவலிங்கம் மண்ணில் உண்டு என்று சொல்ல படும் நகரம் .காஞ்சி காமாக்ஷி ,வரதராஜ பெருமாள் ,சுயம்பு மணலிங்கம் ஏகாம்பரேஸ்வரர் ,கந்த புராணம் அரங்கேறிய ஊர் .அதை விட பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் பட்டு புடவைக்கு பெயர் பெற்ற டவுன் .இந்த ஊரில் உள்ள என் குடும்பத்தின் இளவரசி நான் .(கொஞ்சம் ஓவர் ரா தான் build up .நோ முட்டை அண்ட் அழுகின தக்காளி )முடித்தது M .sc நுண்ணுயிரியியல் .கணவரின் வேலை காரணமாக இப்பொது சிங்கார சென்னையில் வாசம் .(god save chennaites )பிடித்தது இளையராஜஜா சார் மியூசிக் (மழையின் பொது டீ வித் ராஜா சார் மியூசிக் அண்ட் பயணங்களின் போதும் .next புக்ஸ் ரீடிங் அண்ட் கதை எழுதுவது கதை (noooo வன்முறை friends )இது வரை எந்த வலை தளத்திலும் பதிவூ இட வில்லை .என் கணவரின் முதல் கிபிட் 700 ரூபாய்க்கு அவரிடம் புக்ஸ் வாங்கியது தான் (purse காலி .யாரு பெத்த புள்ளையோனு உங்க mind வாய்ஸ் கேக்குது .ஹி ஹி )இன்று இந்த வலைத்தளம் மூலம் மேலும் பல நல்ல படைப்புக்களை படிப்பதில் சந்தோசம்.எழுதுபவர்கள் விடாமல் தொடர்ந்து எழுதவும் ,இனி எழுத போகிறவர்கள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் .நட்புக்கு வந்தனங்கள் .நம்ம கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹாசினி கேரக்டர் .சோ நட்புன்னு கை நீட்றவங்க பத்திரம் பா