MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 15
மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு பதறி கொண்டு வேகமாக ஓடினான் உள்ளே. அங்கு உள்ளே நடந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டான். அந்த பரமு மீனாட்சியிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். கோபத்தின் உச்சிக்கு சென்றவன் பின்புறம் இருந்து அவனை காலால் எட்டி உதைத்தான். அவன் சென்று கீழே விழுந்த உடன் தங்கையை மீட்டு தனியாக அழைத்து வந்தான்.
கீழே விழுந்த வேகத்தில் பரமுவும் வேகமாக எழுந்து ஓடி வந்தான். சுந்தரம் அதற்குள் சுதாரித்து கொண்டு, அவனிடம் இருந்து மீனாட்சியை விலக்கி வெளியே போக சொன்னான். மீனாட்சி சுந்தரத்தை அங்கே தனியாக விட்டு செல்லவும் மனமின்றி, இருக்கவும் மனமின்றி வெளியே இரண்டடி வைத்துவிட்டு நின்று மீண்டும் உள்ளே பார்த்தாள்.
அங்கு சுந்தரமும், பரமுவும் பயங்கரமாக அடித்து புரண்டு கொண்டிருந்தனர். சுந்தரம் மறுபடியும் அவளை வெளியே போக சொல்லி கத்தினான். அவள் செல்ல எத்தனிக்கும் முன்னர் அந்த பரமு சுந்தரத்தை ஒரு கட்டையால் தலையில் அடித்து விட்டான். அவன் நிலை தடுமாறி விழுகவும் அவள் பயந்து போனாள்.
அந்த பரமு வேகமாக அவளை நோக்கி ஓடி வரவும் பயந்து போய் அவள் தப்பிக்க நினைக்க அதற்குள் அவன் அருகில் நெருங்கி அவளை பிடித்து விட்டான். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் மறுபடியும். அப்போது மீனாட்சி, “அண்ணா... அண்ணா...” என்று கத்தி அழுக
தலையில் இருந்து வரும் ரத்தத்தை ஒரு கையால் துடைத்து கொண்டே எழுந்து ஓடி வந்தான் சுந்தரம். மீனாட்சியை அவனிடம் இருந்து மீட்க முடியாமல் தவித்து கொண்டிருக்க அப்போது பரமு அவனது தலையிலே மறுபடியும் அடித்து விட தலை சுற்றி அங்கயே விழுந்தான்.
மீனாட்சி பயந்து போய், “அண்ணா... அண்ணா.. எழுந்திரிங்க... அண்ணா...” என்று சுந்தரத்தின் மேல் சாய்ந்து அழுதாள்.
பரமுவின் முகத்தில் அப்போது ஏளன புன்னகையை வந்து போனது.
“அவன் எழுந்திரிக்க மாட்டான். நீ வா..” என்று அவளை இழுத்து சென்றான். அவளை கீழே தள்ளி விட்டான். மறுபடியும் அவளிடம் நெருங்க முயற்சித்தான். அப்போது அவனை பின்னாளில் இருந்து கட்டையால் ஒருவர் அடிக்க, வலி தாங்காமல் யார் என்று கோபமாக எழுந்து திரும்பினான்.
அங்கு ஆனந்த் நின்றிந்தான். பரமு கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்க கையிலே அடித்தான். சரமாரியாக அடிக்க தொடங்கினான் ஆனந்த். எக்குதப்பாக எல்லாம் அடி விழுந்தது. பொருத்து கொள்ள முடியாமல் பரமு தத்தளிக்கும் போது கீழே அங்கு இருந்த தூசி மணலை எடுத்து ஆனந்தின் முகத்தில் வீசினான்.
கண்களுக்குள் தூசி சென்றதால் ஆனந்த் கட்டையை கீழே போட்டு விட்டு கண்களை தேய்த்தான். அதை பயன்படுத்தி அவன் ஆனந்தை கால்களிலே அடித்தான். தடுக்க நினைத்து மீனாட்சி பரமுவை தள்ளிவிடவும்., அவளையும் கட்டையால் தலையில் ஒரு அடி அடித்தான். அதில் அவளது தலையில் பலமாக அடி பட்டு ரத்தம் வழிய, “அம்மா...” என்று கத்தி கீழே அமர்ந்தாள்.
இனி இங்கு இருந்தால் நல்லது அல்ல என நினைத்து அங்கிருந்து செல்ல முயற்சித்தான். அதே நேரம் மீனாட்சியை விட்டு வைக்கவும் அவனுக்கு மனம் இல்லை. அப்போது தன்னோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான்.
“எனக்கு கிடைக்காத நீ நல்லாவே இருக்க கூடாது... யாருக்கும் கிடைக்கவும் கூடாது...” என்று கூறி அவள் அருகில் சென்றான்.
கத்தியை கவனித்த மீனாட்சி தன்னை காப்பாற்றி கொள்ள அங்கு இருந்து ஒரு இரும்பு கம்பியை எடுத்தாள்.
“கிட்ட வராத... வந்த...” என்று அவள் நடுங்கிய குரலில் சொல்லி கொண்டே பின்னே சென்றாள்,
“என்ன பண்ணிட முடியும் உன்னால என்னை..”என்று மிரட்டினான்.
சிரித்து கொண்டே அருகில் வந்தவன் அவள் அடிக்க கம்பியை ஓங்க அதை பிடுங்கி எறிந்தான். பின் சிரித்து விட்டு, கத்தியை வயிற்றில் குத்த வந்த போது சுந்தரம் வந்து விட்டான். அந்த இரும்பு கம்பியை கொண்டு பலமாக கையில் அடித்தான். அதில் கத்தி கீழே விழுந்து விட்டது.
மீனாட்சியை அப்போதும் கையால் கழுத்தை நெரிக்க முயற்சி செய்தான். சுந்தரமும், மீனாட்சியும் அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு வெளியே போலீஸ் வந்து சேர்ந்தது. அவர்கள் உள்ளே வரும் போது பரமுவை சுந்தரமும், மீனாட்சியும் சேர்ந்து அடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். பரமு தரையில் கிடந்தவாறு, கீழே அடி பட்டு வலியால் துடித்து கொண்டிருந்தான். இருவரையும் பிரித்து விட்டு அந்த பரமுவை கைது செய்து அழைத்து சென்றனர்.
போலீஸ் மீனாட்சி, சுந்தரம், ஆனந்த் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மூவரும் ஊருக்கு வந்து சேர்ந்தனர். அடுத்து சகோதர சகோதரிகள் அனைவரும் கிருஷ்ண புறத்தில் உள்ள அவர்களது வீட்டிலே இருந்தனர்.
அப்பாவிற்கு சாமி கும்பிடுவதற்கு முதல் நாள் இங்கு போலீஸ் சுந்தரத்தை அழைத்தார். அவனது பணம் கிடைத்து விட்டது என்ற சந்தோஷ செய்தி சொன்னார். சிவாவும் உடன் சென்றிருந்தான்.
“உங்க பணம் கிடைச்சுருச்சு... நீங்க வாங்கிட்டு போகலாம்...” என்று அவர் சொல்லவும் நிம்மதியாக இருந்தது சுந்தரத்திற்கு.
“நம்ம பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு அண்ணா...” என்று சிவா சந்தோஷபட்டான்.
“எப்டி கிடைச்சது சார்...? யாரு எடுத்தது..?” என்று சுந்தரம் கேட்டான்.
“நீங்க நினைச்சது போல தான் நடந்துருக்கு...” என்று இன்ஸ்பெக்டர் சொல்லவும் புரியாமல் இருவரும் பார்த்தனர்.
“நீங்க அந்த எதிர் வீட்டுகாரங்க மீது சந்தேக பட்டீங்க இல்லையா..? அது தான் உண்மை.. அவங்க தான் எடுத்துருக்காங்க...” என்று சொன்னார்.
“நிஜமாவா சார்..? அவங்களா ஒத்துகிட்டாங்களா..?” என்று சுந்தரம் ஆவலாக கேட்டான்.
“நான் அந்தம்மாவோட தம்பிய விசாரிக்க அனுப்பிருந்தேன். ஆனா அவன் அங்கே இல்ல... அதுவும் இல்லாம அவன் ஒரு ரெண்டு நாளாவே இங்க இல்லன்னு பக்கத்துல இருந்தவங்க மூலமா தெரிய வந்தது. அப்பறம் இன்னும் விசாரிச்சதுல அவன் அவங்க அக்கா வீட்டுக்கு போனதா தான் எல்லாரும் சொன்னாங்க...
அதான் அந்த அம்மா வீட்டுல சோதனை பண்ணோம்...” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே சிவா இடையே
“அங்க தான் பணம் இருந்ததா சார்..” என்று ஆவலாக கேட்டான்.
“இல்ல தம்பி அங்க பணம் இல்ல... உங்க அண்ணன் சொன்னது போல ஒரு ஜிப்லாக் கவர் இருந்தது... அத என்னன்னு விசாரிச்சா கொஞ்சம் அந்த அம்மா கிட்ட தடு மாற்றம் தெரிஞ்சது...
விடாம உன்னோட தம்பி எங்கன்னும் விசாரிச்சோம்... அதுக்கும் பதில் சரியா வரல...”
“அப்பறம் எப்டி சார்..?” என்று சந்தேகமாக கேட்டான் சிவா பொறுமை இழந்து.
“நாங்க எங்க பாணில விசாரிச்சோம்... கொஞ்சம் மிரட்டினதுக்கே அந்த அம்மா உண்மை எல்லாம் சொல்லிடுச்சு.
அந்த அம்மா தம்பி உங்கள கடைல வச்சு பார்த்தப்போவே உங்க கிட்ட பணம் இருக்குறத தெரிஞ்சு கிட்டு, அங்கயே எடுத்துட்டான் போல... ஆனா உங்களுக்கு சந்தேகம் வந்துருச்சான்னு தெரிஞ்சுக்க அவங்க அக்கா வீட்டுக்கு வந்துட்டு உங்கள நோட்டம் விட்டுருக்கான். அவங்க அக்காவுக்கே தெரியாம அவங்க வீட்டுல தான் பணத்தையும் மறைச்சு வச்சுருக்கான்.
அந்த விவரமும் நீங்க மறுநாள் அவங்க வீட்டுல போய் விசாரிச்சத தம்பி கிட்ட சொன்ன பிறகு தான் தெரிய வந்துருக்கு அந்த அம்மாக்கும், அவங்க புருசனுக்கும்..
உடனே ரெண்டு பேரும் பயந்து போய் அன்னைக்குகே பணத்த கொடுத்து அனுப்பிட்டாங்கன்னு சொன்னாங்க... அதுக்கு அப்பறம் தான் உங்க தம்பிய தைரியமா திட்டி அனுப்பிருக்காங்க...
ஆனா தம்பிகாரன் எங்க போயிருக்கான்னு அந்த அம்மாக்கு தெரியாதாம்... எங்க கிட்டயே நல்லா நடிச்சது அந்த அம்மா... அந்த அம்மா வீட்டுக்காரன கூட்டிட்டு வந்து அடிச்சு விசாரிக்கவும், தானா ரெண்டு பெரும் தம்பி எங்க இருக்கான்னு சொல்லிட்டாங்க..
வெளியூருல அவங்க சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி வச்சுருக்காங்க இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து. போய் கையும்களவுமா பிடிச்சாச்சு.. பணமும் அவன் கிட்ட தான் இருந்துச்சு..
இப்போ மூணு பேருமே உள்ள போய்ட்டாங்க..” என்று சொல்லி முடிக்கவும் சுந்தரத்தின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.
“விக்னேஷ் சார் உங்களுக்காக ரொம்ப கேட்டுக்கிட்டாரு.. அவர் தான் ரொம்ப புஷ் பண்ணாரு, அதான் எல்லாம் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சது.” என்று இன்ஸ்பெக்டர் மேலும் சொல்லி விட்டு பணத்தை பெற்று கொண்டதை எழுதி தர சொல்லி விட்டு சென்றார்.
இவர்களும் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்ததும், “எப்டியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது... ஆனா இந்த விக்னேஷ் இத்தனை நாள் கூட இருந்துட்டு இப்போ போய்ட்டான் பாரு...” என்று வருந்தினான் சுந்தரம்.
மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு பதறி கொண்டு வேகமாக ஓடினான் உள்ளே. அங்கு உள்ளே நடந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டான். அந்த பரமு மீனாட்சியிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். கோபத்தின் உச்சிக்கு சென்றவன் பின்புறம் இருந்து அவனை காலால் எட்டி உதைத்தான். அவன் சென்று கீழே விழுந்த உடன் தங்கையை மீட்டு தனியாக அழைத்து வந்தான்.
கீழே விழுந்த வேகத்தில் பரமுவும் வேகமாக எழுந்து ஓடி வந்தான். சுந்தரம் அதற்குள் சுதாரித்து கொண்டு, அவனிடம் இருந்து மீனாட்சியை விலக்கி வெளியே போக சொன்னான். மீனாட்சி சுந்தரத்தை அங்கே தனியாக விட்டு செல்லவும் மனமின்றி, இருக்கவும் மனமின்றி வெளியே இரண்டடி வைத்துவிட்டு நின்று மீண்டும் உள்ளே பார்த்தாள்.
அங்கு சுந்தரமும், பரமுவும் பயங்கரமாக அடித்து புரண்டு கொண்டிருந்தனர். சுந்தரம் மறுபடியும் அவளை வெளியே போக சொல்லி கத்தினான். அவள் செல்ல எத்தனிக்கும் முன்னர் அந்த பரமு சுந்தரத்தை ஒரு கட்டையால் தலையில் அடித்து விட்டான். அவன் நிலை தடுமாறி விழுகவும் அவள் பயந்து போனாள்.
அந்த பரமு வேகமாக அவளை நோக்கி ஓடி வரவும் பயந்து போய் அவள் தப்பிக்க நினைக்க அதற்குள் அவன் அருகில் நெருங்கி அவளை பிடித்து விட்டான். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் மறுபடியும். அப்போது மீனாட்சி, “அண்ணா... அண்ணா...” என்று கத்தி அழுக
தலையில் இருந்து வரும் ரத்தத்தை ஒரு கையால் துடைத்து கொண்டே எழுந்து ஓடி வந்தான் சுந்தரம். மீனாட்சியை அவனிடம் இருந்து மீட்க முடியாமல் தவித்து கொண்டிருக்க அப்போது பரமு அவனது தலையிலே மறுபடியும் அடித்து விட தலை சுற்றி அங்கயே விழுந்தான்.
மீனாட்சி பயந்து போய், “அண்ணா... அண்ணா.. எழுந்திரிங்க... அண்ணா...” என்று சுந்தரத்தின் மேல் சாய்ந்து அழுதாள்.
பரமுவின் முகத்தில் அப்போது ஏளன புன்னகையை வந்து போனது.
“அவன் எழுந்திரிக்க மாட்டான். நீ வா..” என்று அவளை இழுத்து சென்றான். அவளை கீழே தள்ளி விட்டான். மறுபடியும் அவளிடம் நெருங்க முயற்சித்தான். அப்போது அவனை பின்னாளில் இருந்து கட்டையால் ஒருவர் அடிக்க, வலி தாங்காமல் யார் என்று கோபமாக எழுந்து திரும்பினான்.
அங்கு ஆனந்த் நின்றிந்தான். பரமு கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்க கையிலே அடித்தான். சரமாரியாக அடிக்க தொடங்கினான் ஆனந்த். எக்குதப்பாக எல்லாம் அடி விழுந்தது. பொருத்து கொள்ள முடியாமல் பரமு தத்தளிக்கும் போது கீழே அங்கு இருந்த தூசி மணலை எடுத்து ஆனந்தின் முகத்தில் வீசினான்.
கண்களுக்குள் தூசி சென்றதால் ஆனந்த் கட்டையை கீழே போட்டு விட்டு கண்களை தேய்த்தான். அதை பயன்படுத்தி அவன் ஆனந்தை கால்களிலே அடித்தான். தடுக்க நினைத்து மீனாட்சி பரமுவை தள்ளிவிடவும்., அவளையும் கட்டையால் தலையில் ஒரு அடி அடித்தான். அதில் அவளது தலையில் பலமாக அடி பட்டு ரத்தம் வழிய, “அம்மா...” என்று கத்தி கீழே அமர்ந்தாள்.
இனி இங்கு இருந்தால் நல்லது அல்ல என நினைத்து அங்கிருந்து செல்ல முயற்சித்தான். அதே நேரம் மீனாட்சியை விட்டு வைக்கவும் அவனுக்கு மனம் இல்லை. அப்போது தன்னோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான்.
“எனக்கு கிடைக்காத நீ நல்லாவே இருக்க கூடாது... யாருக்கும் கிடைக்கவும் கூடாது...” என்று கூறி அவள் அருகில் சென்றான்.
கத்தியை கவனித்த மீனாட்சி தன்னை காப்பாற்றி கொள்ள அங்கு இருந்து ஒரு இரும்பு கம்பியை எடுத்தாள்.
“கிட்ட வராத... வந்த...” என்று அவள் நடுங்கிய குரலில் சொல்லி கொண்டே பின்னே சென்றாள்,
“என்ன பண்ணிட முடியும் உன்னால என்னை..”என்று மிரட்டினான்.
சிரித்து கொண்டே அருகில் வந்தவன் அவள் அடிக்க கம்பியை ஓங்க அதை பிடுங்கி எறிந்தான். பின் சிரித்து விட்டு, கத்தியை வயிற்றில் குத்த வந்த போது சுந்தரம் வந்து விட்டான். அந்த இரும்பு கம்பியை கொண்டு பலமாக கையில் அடித்தான். அதில் கத்தி கீழே விழுந்து விட்டது.
மீனாட்சியை அப்போதும் கையால் கழுத்தை நெரிக்க முயற்சி செய்தான். சுந்தரமும், மீனாட்சியும் அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு வெளியே போலீஸ் வந்து சேர்ந்தது. அவர்கள் உள்ளே வரும் போது பரமுவை சுந்தரமும், மீனாட்சியும் சேர்ந்து அடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். பரமு தரையில் கிடந்தவாறு, கீழே அடி பட்டு வலியால் துடித்து கொண்டிருந்தான். இருவரையும் பிரித்து விட்டு அந்த பரமுவை கைது செய்து அழைத்து சென்றனர்.
போலீஸ் மீனாட்சி, சுந்தரம், ஆனந்த் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மூவரும் ஊருக்கு வந்து சேர்ந்தனர். அடுத்து சகோதர சகோதரிகள் அனைவரும் கிருஷ்ண புறத்தில் உள்ள அவர்களது வீட்டிலே இருந்தனர்.
அப்பாவிற்கு சாமி கும்பிடுவதற்கு முதல் நாள் இங்கு போலீஸ் சுந்தரத்தை அழைத்தார். அவனது பணம் கிடைத்து விட்டது என்ற சந்தோஷ செய்தி சொன்னார். சிவாவும் உடன் சென்றிருந்தான்.
“உங்க பணம் கிடைச்சுருச்சு... நீங்க வாங்கிட்டு போகலாம்...” என்று அவர் சொல்லவும் நிம்மதியாக இருந்தது சுந்தரத்திற்கு.
“நம்ம பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு அண்ணா...” என்று சிவா சந்தோஷபட்டான்.
“எப்டி கிடைச்சது சார்...? யாரு எடுத்தது..?” என்று சுந்தரம் கேட்டான்.
“நீங்க நினைச்சது போல தான் நடந்துருக்கு...” என்று இன்ஸ்பெக்டர் சொல்லவும் புரியாமல் இருவரும் பார்த்தனர்.
“நீங்க அந்த எதிர் வீட்டுகாரங்க மீது சந்தேக பட்டீங்க இல்லையா..? அது தான் உண்மை.. அவங்க தான் எடுத்துருக்காங்க...” என்று சொன்னார்.
“நிஜமாவா சார்..? அவங்களா ஒத்துகிட்டாங்களா..?” என்று சுந்தரம் ஆவலாக கேட்டான்.
“நான் அந்தம்மாவோட தம்பிய விசாரிக்க அனுப்பிருந்தேன். ஆனா அவன் அங்கே இல்ல... அதுவும் இல்லாம அவன் ஒரு ரெண்டு நாளாவே இங்க இல்லன்னு பக்கத்துல இருந்தவங்க மூலமா தெரிய வந்தது. அப்பறம் இன்னும் விசாரிச்சதுல அவன் அவங்க அக்கா வீட்டுக்கு போனதா தான் எல்லாரும் சொன்னாங்க...
அதான் அந்த அம்மா வீட்டுல சோதனை பண்ணோம்...” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே சிவா இடையே
“அங்க தான் பணம் இருந்ததா சார்..” என்று ஆவலாக கேட்டான்.
“இல்ல தம்பி அங்க பணம் இல்ல... உங்க அண்ணன் சொன்னது போல ஒரு ஜிப்லாக் கவர் இருந்தது... அத என்னன்னு விசாரிச்சா கொஞ்சம் அந்த அம்மா கிட்ட தடு மாற்றம் தெரிஞ்சது...
விடாம உன்னோட தம்பி எங்கன்னும் விசாரிச்சோம்... அதுக்கும் பதில் சரியா வரல...”
“அப்பறம் எப்டி சார்..?” என்று சந்தேகமாக கேட்டான் சிவா பொறுமை இழந்து.
“நாங்க எங்க பாணில விசாரிச்சோம்... கொஞ்சம் மிரட்டினதுக்கே அந்த அம்மா உண்மை எல்லாம் சொல்லிடுச்சு.
அந்த அம்மா தம்பி உங்கள கடைல வச்சு பார்த்தப்போவே உங்க கிட்ட பணம் இருக்குறத தெரிஞ்சு கிட்டு, அங்கயே எடுத்துட்டான் போல... ஆனா உங்களுக்கு சந்தேகம் வந்துருச்சான்னு தெரிஞ்சுக்க அவங்க அக்கா வீட்டுக்கு வந்துட்டு உங்கள நோட்டம் விட்டுருக்கான். அவங்க அக்காவுக்கே தெரியாம அவங்க வீட்டுல தான் பணத்தையும் மறைச்சு வச்சுருக்கான்.
அந்த விவரமும் நீங்க மறுநாள் அவங்க வீட்டுல போய் விசாரிச்சத தம்பி கிட்ட சொன்ன பிறகு தான் தெரிய வந்துருக்கு அந்த அம்மாக்கும், அவங்க புருசனுக்கும்..
உடனே ரெண்டு பேரும் பயந்து போய் அன்னைக்குகே பணத்த கொடுத்து அனுப்பிட்டாங்கன்னு சொன்னாங்க... அதுக்கு அப்பறம் தான் உங்க தம்பிய தைரியமா திட்டி அனுப்பிருக்காங்க...
ஆனா தம்பிகாரன் எங்க போயிருக்கான்னு அந்த அம்மாக்கு தெரியாதாம்... எங்க கிட்டயே நல்லா நடிச்சது அந்த அம்மா... அந்த அம்மா வீட்டுக்காரன கூட்டிட்டு வந்து அடிச்சு விசாரிக்கவும், தானா ரெண்டு பெரும் தம்பி எங்க இருக்கான்னு சொல்லிட்டாங்க..
வெளியூருல அவங்க சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி வச்சுருக்காங்க இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து. போய் கையும்களவுமா பிடிச்சாச்சு.. பணமும் அவன் கிட்ட தான் இருந்துச்சு..
இப்போ மூணு பேருமே உள்ள போய்ட்டாங்க..” என்று சொல்லி முடிக்கவும் சுந்தரத்தின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.
“விக்னேஷ் சார் உங்களுக்காக ரொம்ப கேட்டுக்கிட்டாரு.. அவர் தான் ரொம்ப புஷ் பண்ணாரு, அதான் எல்லாம் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சது.” என்று இன்ஸ்பெக்டர் மேலும் சொல்லி விட்டு பணத்தை பெற்று கொண்டதை எழுதி தர சொல்லி விட்டு சென்றார்.
இவர்களும் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்ததும், “எப்டியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது... ஆனா இந்த விக்னேஷ் இத்தனை நாள் கூட இருந்துட்டு இப்போ போய்ட்டான் பாரு...” என்று வருந்தினான் சுந்தரம்.