MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 17
சாப்பிட்டு கீழே வந்த போது அங்கு ஆனந்தின் பெற்றோர் சுந்தரத்திற்காக காத்திருந்தனர். சென்று பேசினான் சுந்தரம்.
“சுந்தரம் எல்லா ஏற்பாடும் நல்லா பண்ணிருக்க.. அதுவும் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குன்னு எங்க சொந்தகாரங்க எல்லாரும் பாராட்டிட்டு போனாங்க... இதே போல நாளைக்கும் நல்லபடியா இருக்கணும்...” என்று சொல்லி அவனிடம் விடாமல் இன்னும் பல விவரங்கள் சொல்லியும், கேட்டும் கொண்டிருந்தனர்.
அனைத்திற்கும் சுந்தரம் சரி சரி என்று சொல்லி நாளை செய்ய இருப்பதை எல்லாம் சொல்லி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஆனந்த் சாப்பிட்டு கீழே வந்தான். அவனும் அருகில் சென்று அமர்ந்தான்.
“உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்... அத...” என்று இழுத்தார் ஆனந்தின் அப்பா. பின் ஆனந்தின் பக்கம் திரும்பி அவனை சொல்லுமாறு கண்ணசைத்தார். அவனும் அருகில் இருந்தவர்களை காட்டி,
“இவங்க என்னோட பெரியப்பா, பெரியம்மா... உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்..?” என்று சொல்லவும்,
“ஹ்ம்ம்... எனக்கும் தெரியும்.. நீங்க என்ன சொல்லணுமோ அத சொல்லுங்க..” என்று கூறி யோசித்தான்.
ஆனந்த் சிரித்தான். “அவங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு... பொண்ண உனக்கு கட்டி வைக்கலாம்ன்னு அவங்க ஆசை படுறாங்க... அத தான் கேட்க நினைச்சோம்..” என்று சொல்லி விக்னேஷ் பக்கம் திரும்பினான்.
“ஆமாம் உனக்கு சம்மதம்ன்னு சொன்னா உடனே நாளைக்கு நிச்சயம் பண்ணிடலாம்ன்னும் நினைக்கிறாங்க.. நீ என்ன நினைக்கிற சொல்லு..” என்று கூறினான் விக்னேஷ்.
சுந்தரம் சற்று அதிர்ச்சிக்குள்ளனான். திடீரென்று கேட்டதால் எதுவும் சொல்ல முடியாமல் அவன் அமைதியாக இருந்தான்.
அழகன் வேகமாக அருகில் வந்து, “அண்ணா.. அண்ணி எனக்கு பிடிச்சுருக்கு.. சிவா அண்ணா, மாமா, அக்கா எல்லாருக்குமே இதுல சம்மதம் தான்.. நாங்க எல்லாருமே அண்ணி பார்த்து பேசிட்டோம். ரொம்ப நல்லவங்க.. நல்லா பேச கூட செய்றாங்க.. எங்க எல்லாருக்குமே பிடிச்சுருக்கு.. பார்த்தா உங்களுக்குமே பிடிக்கும்.. சம்மதம் சொல்லுங்க...” என்றான்.
தனக்கே தெரியாமல் தனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்திருப்பது தெரிந்தது. ஆனாலும் அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மலருக்கும் கல்யாணம் செய்த பிறகு தான் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சுந்தரம் நினைத்து வைத்திருந்தான். எதுவும் சொல்லாமல் அமைதியாக யோசித்து கொண்டிருந்தான்.
உடனே ஆனந்தின் பெரியப்பா, “நீங்க நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க தம்பி... எங்களுக்கு எந்த கட்டாயமும் இல்ல..” என்று சொன்னார். பின் அவர்கள் பேசட்டும் என்று எண்ணி ஆனந்தின் குடும்பத்தினர் அனைவரும் எழுந்து சென்றனர்.
விக்னேஷ், “இன்னும் என்னடா யோசிக்குற..? சம்மதம் சொல்லு..” என்று கட்டாய படுத்தினான்.
“இல்ல நான் என் சின்ன தங்கச்சி கல்யாணமும் முடிஞ்ச பின்னாடி தான் கல்யாணம் பண்ணனும்ன்னு இருக்கேன்... அதான் இப்போ ” என்று கூறும் போதே, மலர் இடையே புகுந்து,
“அண்ணா... எனக்கு இப்போ வயசு இருவது தான் ஆகுது. எனக்கு கல்யாணம் இன்னும் ஒரு நாலு அல்லது ஐந்து வருசம் கழிச்சு தான்.. அப்போ உங்களுக்கு முப்பத தாண்டிடும்... அதுவரைக்கும் நீங்க கல்யாணமே பண்ணாம இருக்குறதா... என்ன அண்ணா பேசுறீங்க..” என்று அவள் சொல்ல,
மீனாட்சி, “அண்ணா இது தான் உங்களுக்கு சரியான வயசு.. நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. அதுவும் அண்ணி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.. நம்ம வீட்டுக்கு சரியானவங்க.. ஒத்துக்கோங்க அண்ணா..” என்று கூறி அவளும் வற்புறுத்தினாள்.
முகுந்தனின் அப்பா, “சுந்தரம் நீங்க அண்ணன் தம்பின்னு எல்லாரும் பசங்க... உன்னோட தங்கச்சி ஒரே பொண்ணு.. இப்போவே சில பிரச்சனைகள் எல்லாம் வந்துருச்சு.. பொண்ணு எல்லா விஷயத்தையும் அண்ணன் கிட்ட சொல்ல முடியாது. அவளுக்கு கூட ஒரு அம்மா மாதிரி, இல்ல அக்கா மாதிரி கூடவே ஒரு பொண்ணு இருக்கணும். அதுக்காகவாது நீ கல்யாணம் பண்ணிக்கணும்... யோசிப்பா..” என்று அவரும் ஒன்று சொல்லி அவனை யோசிக்க வைத்தார்.
சிறிது நேரம் யோசித்தவன், முகுந்தனின் அப்பா சொன்னது போல தங்கைக்காக தாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
சுந்தரம் சம்மதம் சொல்லவும் அங்கு இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர் அனைவரும். சுந்தரத்தை கட்டி தழுவி ஆனந்த் இன்னும் மகிழ்ச்சியானான்.
சுந்தரம் சம்மதம் சொல்லுவான் என்று தான் அனைவரும் எண்ணி இருந்தனர். அதனால் முன்னரே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவனை எப்டியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணி செய்து இருந்தனர். இன்று அவன் சம்மதம் சொன்னதை உடன் பிறப்புக்கள் அனைவரும் கொண்டாடினர்.
ஆனந்த், விக்னேஷ், சுந்தரம் மூவரும் தனியே சென்று பேசினர்.
“என் கிட்ட கேட்காமலே எல்லாம் நடத்திருக்கீங்க.. உனக்கு கூட இது தெரிஞ்சுருக்கு., ஆனா நீயும் என்கிட்டே சொல்லாம மறைச்சுருக்க..” என்று விக்னேஷிடம் போலி கோபம் காட்டினான்.
ஆனந்த், “இது அத்தனைக்கும் முதல் ஆரம்பமே அவன் தான்... அவன் தான் இந்த ஐடியா தந்தது..” என்று கூறினான்.
“அப்போ எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணதுக்கு நீ தான் காரணமா..?” என்று கேட்டான்.
அப்போதும் கல்யாண பெண் யார் என்று கேட்கவில்லை அவன். அத்தனை நம்பிக்கை தம்பி, தங்கைகள் மீது. இருந்தாலும் பெண் பற்றி தெரிந்து கொள்ளவோ, பார்க்கவோ கூட அவனுக்கு தோன்றவில்லை.
அங்கு வந்த அழகன் நாளை அவனுக்கு நடக்கும் நிச்சயத்திற்கு பெண்ணுக்கு போட வாங்கிய மோதிரத்தை அண்ணனுக்கு ஆர்வமாக காட்டினான்.
“அப்டியே உங்க அண்ணனுக்கு அண்ணியையும் கூட்டிட்டு வந்து காட்டிடு.. அத கூட கேட்கமாட்டான்... ரொம்ப நல்லவன் தான்..” என்று கிண்டலாக சொன்னான் விக்னேஷ்.
அப்போது தான் சுந்தரத்தின் மண்டைக்கு உரைத்தது பெண் பற்றி நாம் எதுவுமே கேட்கவில்லை என்று. அடுத்த நொடி அவனுக்கு மனதில் ஒரு பெண் தோன்றி மறைந்தாள். அவள் தான் சற்று முன்பு அவன் பார்த்து ரசித்தவள்.
“அவ இங்க இல்ல.. அவளுக்கு அவசர வேலை வந்துருச்சு.. அதான் போய்ட்டா... நாளைக்கு தான் நீ பார்க்க முடியும்.” என்று ஆனந்த் சொன்னான்.
சுந்தரம் மெதுவாக, “உன்னோட தங்கச்சி பேரு என்ன.. அவங்கள பத்தி சொல்லு...” என்று பட்டும் படாமல் கேட்டான்.
“அப்பாடா.. கேட்க தோணிடுச்சு... இதுக்கு என்ன என்ன சொல்ல வேண்டி இருக்கு...” என்று விக்னேஷ் கூற, ஆனந்த் போனை எடுத்து சுந்தரத்திடம் நீட்டினான்.
அதை வாங்கி பார்த்தவன் முகத்தில் ஆனந்த அதிர்ச்சி. அவன் ரசித்த அதே பெண் தான் அந்த போட்டோவிலும் இருந்தாள். நம்ப முடியாமல் அவன் தலையில் கை வைத்து கண் மூடி சிரித்தான்
சாப்பிட்டு கீழே வந்த போது அங்கு ஆனந்தின் பெற்றோர் சுந்தரத்திற்காக காத்திருந்தனர். சென்று பேசினான் சுந்தரம்.
“சுந்தரம் எல்லா ஏற்பாடும் நல்லா பண்ணிருக்க.. அதுவும் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குன்னு எங்க சொந்தகாரங்க எல்லாரும் பாராட்டிட்டு போனாங்க... இதே போல நாளைக்கும் நல்லபடியா இருக்கணும்...” என்று சொல்லி அவனிடம் விடாமல் இன்னும் பல விவரங்கள் சொல்லியும், கேட்டும் கொண்டிருந்தனர்.
அனைத்திற்கும் சுந்தரம் சரி சரி என்று சொல்லி நாளை செய்ய இருப்பதை எல்லாம் சொல்லி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஆனந்த் சாப்பிட்டு கீழே வந்தான். அவனும் அருகில் சென்று அமர்ந்தான்.
“உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்... அத...” என்று இழுத்தார் ஆனந்தின் அப்பா. பின் ஆனந்தின் பக்கம் திரும்பி அவனை சொல்லுமாறு கண்ணசைத்தார். அவனும் அருகில் இருந்தவர்களை காட்டி,
“இவங்க என்னோட பெரியப்பா, பெரியம்மா... உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்..?” என்று சொல்லவும்,
“ஹ்ம்ம்... எனக்கும் தெரியும்.. நீங்க என்ன சொல்லணுமோ அத சொல்லுங்க..” என்று கூறி யோசித்தான்.
ஆனந்த் சிரித்தான். “அவங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு... பொண்ண உனக்கு கட்டி வைக்கலாம்ன்னு அவங்க ஆசை படுறாங்க... அத தான் கேட்க நினைச்சோம்..” என்று சொல்லி விக்னேஷ் பக்கம் திரும்பினான்.
“ஆமாம் உனக்கு சம்மதம்ன்னு சொன்னா உடனே நாளைக்கு நிச்சயம் பண்ணிடலாம்ன்னும் நினைக்கிறாங்க.. நீ என்ன நினைக்கிற சொல்லு..” என்று கூறினான் விக்னேஷ்.
சுந்தரம் சற்று அதிர்ச்சிக்குள்ளனான். திடீரென்று கேட்டதால் எதுவும் சொல்ல முடியாமல் அவன் அமைதியாக இருந்தான்.
அழகன் வேகமாக அருகில் வந்து, “அண்ணா.. அண்ணி எனக்கு பிடிச்சுருக்கு.. சிவா அண்ணா, மாமா, அக்கா எல்லாருக்குமே இதுல சம்மதம் தான்.. நாங்க எல்லாருமே அண்ணி பார்த்து பேசிட்டோம். ரொம்ப நல்லவங்க.. நல்லா பேச கூட செய்றாங்க.. எங்க எல்லாருக்குமே பிடிச்சுருக்கு.. பார்த்தா உங்களுக்குமே பிடிக்கும்.. சம்மதம் சொல்லுங்க...” என்றான்.
தனக்கே தெரியாமல் தனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்திருப்பது தெரிந்தது. ஆனாலும் அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மலருக்கும் கல்யாணம் செய்த பிறகு தான் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சுந்தரம் நினைத்து வைத்திருந்தான். எதுவும் சொல்லாமல் அமைதியாக யோசித்து கொண்டிருந்தான்.
உடனே ஆனந்தின் பெரியப்பா, “நீங்க நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க தம்பி... எங்களுக்கு எந்த கட்டாயமும் இல்ல..” என்று சொன்னார். பின் அவர்கள் பேசட்டும் என்று எண்ணி ஆனந்தின் குடும்பத்தினர் அனைவரும் எழுந்து சென்றனர்.
விக்னேஷ், “இன்னும் என்னடா யோசிக்குற..? சம்மதம் சொல்லு..” என்று கட்டாய படுத்தினான்.
“இல்ல நான் என் சின்ன தங்கச்சி கல்யாணமும் முடிஞ்ச பின்னாடி தான் கல்யாணம் பண்ணனும்ன்னு இருக்கேன்... அதான் இப்போ ” என்று கூறும் போதே, மலர் இடையே புகுந்து,
“அண்ணா... எனக்கு இப்போ வயசு இருவது தான் ஆகுது. எனக்கு கல்யாணம் இன்னும் ஒரு நாலு அல்லது ஐந்து வருசம் கழிச்சு தான்.. அப்போ உங்களுக்கு முப்பத தாண்டிடும்... அதுவரைக்கும் நீங்க கல்யாணமே பண்ணாம இருக்குறதா... என்ன அண்ணா பேசுறீங்க..” என்று அவள் சொல்ல,
மீனாட்சி, “அண்ணா இது தான் உங்களுக்கு சரியான வயசு.. நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. அதுவும் அண்ணி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.. நம்ம வீட்டுக்கு சரியானவங்க.. ஒத்துக்கோங்க அண்ணா..” என்று கூறி அவளும் வற்புறுத்தினாள்.
முகுந்தனின் அப்பா, “சுந்தரம் நீங்க அண்ணன் தம்பின்னு எல்லாரும் பசங்க... உன்னோட தங்கச்சி ஒரே பொண்ணு.. இப்போவே சில பிரச்சனைகள் எல்லாம் வந்துருச்சு.. பொண்ணு எல்லா விஷயத்தையும் அண்ணன் கிட்ட சொல்ல முடியாது. அவளுக்கு கூட ஒரு அம்மா மாதிரி, இல்ல அக்கா மாதிரி கூடவே ஒரு பொண்ணு இருக்கணும். அதுக்காகவாது நீ கல்யாணம் பண்ணிக்கணும்... யோசிப்பா..” என்று அவரும் ஒன்று சொல்லி அவனை யோசிக்க வைத்தார்.
சிறிது நேரம் யோசித்தவன், முகுந்தனின் அப்பா சொன்னது போல தங்கைக்காக தாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
சுந்தரம் சம்மதம் சொல்லவும் அங்கு இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர் அனைவரும். சுந்தரத்தை கட்டி தழுவி ஆனந்த் இன்னும் மகிழ்ச்சியானான்.
சுந்தரம் சம்மதம் சொல்லுவான் என்று தான் அனைவரும் எண்ணி இருந்தனர். அதனால் முன்னரே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவனை எப்டியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணி செய்து இருந்தனர். இன்று அவன் சம்மதம் சொன்னதை உடன் பிறப்புக்கள் அனைவரும் கொண்டாடினர்.
ஆனந்த், விக்னேஷ், சுந்தரம் மூவரும் தனியே சென்று பேசினர்.
“என் கிட்ட கேட்காமலே எல்லாம் நடத்திருக்கீங்க.. உனக்கு கூட இது தெரிஞ்சுருக்கு., ஆனா நீயும் என்கிட்டே சொல்லாம மறைச்சுருக்க..” என்று விக்னேஷிடம் போலி கோபம் காட்டினான்.
ஆனந்த், “இது அத்தனைக்கும் முதல் ஆரம்பமே அவன் தான்... அவன் தான் இந்த ஐடியா தந்தது..” என்று கூறினான்.
“அப்போ எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணதுக்கு நீ தான் காரணமா..?” என்று கேட்டான்.
அப்போதும் கல்யாண பெண் யார் என்று கேட்கவில்லை அவன். அத்தனை நம்பிக்கை தம்பி, தங்கைகள் மீது. இருந்தாலும் பெண் பற்றி தெரிந்து கொள்ளவோ, பார்க்கவோ கூட அவனுக்கு தோன்றவில்லை.
அங்கு வந்த அழகன் நாளை அவனுக்கு நடக்கும் நிச்சயத்திற்கு பெண்ணுக்கு போட வாங்கிய மோதிரத்தை அண்ணனுக்கு ஆர்வமாக காட்டினான்.
“அப்டியே உங்க அண்ணனுக்கு அண்ணியையும் கூட்டிட்டு வந்து காட்டிடு.. அத கூட கேட்கமாட்டான்... ரொம்ப நல்லவன் தான்..” என்று கிண்டலாக சொன்னான் விக்னேஷ்.
அப்போது தான் சுந்தரத்தின் மண்டைக்கு உரைத்தது பெண் பற்றி நாம் எதுவுமே கேட்கவில்லை என்று. அடுத்த நொடி அவனுக்கு மனதில் ஒரு பெண் தோன்றி மறைந்தாள். அவள் தான் சற்று முன்பு அவன் பார்த்து ரசித்தவள்.
“அவ இங்க இல்ல.. அவளுக்கு அவசர வேலை வந்துருச்சு.. அதான் போய்ட்டா... நாளைக்கு தான் நீ பார்க்க முடியும்.” என்று ஆனந்த் சொன்னான்.
சுந்தரம் மெதுவாக, “உன்னோட தங்கச்சி பேரு என்ன.. அவங்கள பத்தி சொல்லு...” என்று பட்டும் படாமல் கேட்டான்.
“அப்பாடா.. கேட்க தோணிடுச்சு... இதுக்கு என்ன என்ன சொல்ல வேண்டி இருக்கு...” என்று விக்னேஷ் கூற, ஆனந்த் போனை எடுத்து சுந்தரத்திடம் நீட்டினான்.
அதை வாங்கி பார்த்தவன் முகத்தில் ஆனந்த அதிர்ச்சி. அவன் ரசித்த அதே பெண் தான் அந்த போட்டோவிலும் இருந்தாள். நம்ப முடியாமல் அவன் தலையில் கை வைத்து கண் மூடி சிரித்தான்