MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 3
ஆனந்த் சுந்தரத்தின் முகத்தை பார்த்தே சந்தேகபட்டான். அதேபோல சுந்தரம் மலரை காணவில்லை என்று கூறவும் சிறிது அதிர்ச்சிக்குள்ளானான். பின்பு சுதாரித்து கொண்டு சுந்தரத்திடம் விசாரித்தான்.
சுந்தரம், “மலர காணோம்.. தம்பி தான் கால் பண்ணான். மலர் காலைல இருந்தே காணோம் அப்டின்னு சொல்றான்...,”
என்று கூறி கொண்டு இருக்கும் போதே ஆனந்த்,
“காலேஜ் போனாளா.. நான் இன்னைக்கு காலேஜ்க்கு லேட்டா தான் போனேன். அதனால நான் கவனிக்கல..”
“இல்லடா இன்னைக்கு மலர் மீனாட்சி கூட போகல... சீக்கிரம் போய்ட்டாளாம். ஆனா காலேஜ்க்கு வரலைன்னு சொல்லிருக்காங்க அவுங்க ப்ரெண்ட்ஸ். க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் சிலர் வீட்டுக்கு போய் கேட்டுட்டும் வந்துருக்கா மீனாட்சி.., ஆனா அவ அங்க இல்ல. இப்போ அவுங்க அங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க.. நான் உடனே அங்க போகணும்..” என்று பதறி கொண்டே பேசினான் சுந்தரம்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆனந்த் தானும் உடனே பதறாமல் நிதானமாக நடந்து கொண்டான்.
“நம்ம முதல்ல அங்க போவோம், பார்ப்போம். அதுவும் எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி எங்கயும் போயிருக்க மாட்டா. அவ சின்ன பொண்ணு இல்ல. மலர் எங்க போனான்னு நாம தான் கண்டுபிடிக்கணும். அங்க அவுங்க பதட்டத்துல சரியா தேடாம விட்டுருக்கலாம்.
எனக்கு புரியுது... இப்போ நேரத்துல நீ தான் அவுங்களுக்கு உடன் இருக்கணும். உனக்கு உதவிக்கு நான் வர்றேன் கூட... வா போகலாம்.”
ஆனந்த் கூறியது போல தானும் பதட்டப்ட்டு செயல் பட கூடாது என்று நினைத்தான் சுந்தரம். இருவரும் கிளம்பினர் தேவலூருக்கு. சுந்தரமும், ஆனந்த் இருவரும் அவர்களது வண்டிகளை எடுத்து கொண்டு கிளம்பினர்.
தேவலூர். அங்கு மீனாட்சியும், அழகனும் குழப்பத்துடன் இருந்தனர். மீனாட்சி தெரிந்த அனைவரிடமும் மறைமுகமாக விசாரித்தாள். வெளியில் சென்று தேடவில்லை. ஒரு சிறு நம்பிக்கை இருந்தது தங்கை எப்படியும் வந்து விடுவாள் என்று மீனாட்சிக்கு.
அதனாலே யாருக்கும் அவள் காணவில்லை என்பதை சொல்லாமல் இருந்தாள். ஒரு பெண்ணை காணவில்லை என்றால் மற்றவர்கள் ஏதாவது தவறாக நினைத்து விடுவார்கள் என்பதற்காக வீட்டு வேலை செய்யும் கோமதி கேட்டதற்கு கூட உண்மையையை மறைத்து மலர் தோழியின் வீட்டிற்கு சென்றதாக சொல்லி சமாளித்து வைத்திருந்தாள்.
பெரியவர்கள் யாரும் இல்லாமல் தனி ஆளாக இருந்து கஷ்ட படுவதை இன்று நன்கு உணர்ந்தாள் மீனாட்சி. பதட்டமும் பயமும் அதிகரித்து கொண்டே இருந்தது நேரம் செல்ல செல்ல. அழகன் சுந்தரத்திற்கு இந்த தகவலை சொல்லி உடனே அழைத்தது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவன் மூலம் மலர் காணவில்லை என்ற தகவல் ஊருக்குள் கசிந்து கெட்ட பெயர் கிடைத்து விடுமோ என்று பயந்து கொண்டு இருந்தால் மீனாட்சி.
எங்கு போய் இருப்பாள், எதற்காக போய் இருப்பாள், ஏன் இன்னும் வர வில்லை என்று எண்ணி எண்ணி சந்தேகம் கோபமாக மாறி கொண்டே சென்றது மீனாட்சிக்கு. பொறுப்பில்லாமல் இப்படி அவள் எங்கு சென்றாலோ என்று எண்ணி அவளை மனதில் திட்டி கொண்டிருந்தாள்.
இரவு ஏழாகி விட்டது மணி. யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு மீனாட்சி ஆவலாக வந்து கதவை திறந்து பார்த்தாள். அங்கு சுந்தரம், ஆனந்த் இருவரும் நின்றிருந்தனர். உள்ளே கூப்பிடவும் இஷ்டம் இல்லாமல் உள்ளே வர சொல்லவும் மனம் இல்லாமல் அவள் முறைத்து கொண்டு அப்படியே நின்றிருந்தாள். அழகன் சத்தம் கேட்டு மாடியில் இருந்து வேகமாக வந்தான்.
வாங்க அண்ணா...!! என்று அவன் அழைத்தான் இருவரையும். உடனே மீனாட்சி கோபமாக முறைத்தாள் அழகனை. “உன்னை யாரு இவுங்களுக்கு எல்லாம் சொல்ல சொன்னது..?” என்று கோபமாக கேட்டாள். பின்பு எரிச்சல் பட்டு கொண்டே உள்ளே சென்று அமர்ந்தாள்.
அழகன் உள்ளே அழைத்தும் இருவரும் உள்ளே வராமல் வெளியே வராண்டாவிலே நின்றனர்.
“மலர் வந்துட்டாளா..?” என்று சுந்தரம் கேட்டான்.
அழகன் சுந்தரத்தின் கையை பிடித்து கொண்டே, “ அண்ணா உள்ள வாங்க அண்ணா..!!” என்று பாவம் போல கூப்பிட்டான்.
பின்பு இருவரும் உள்ளே சென்றனர். “மலர் வந்துட்டாளா..? இல்ல இன்னும் வரலையா..?”என்று அழகனிடம் மறுபடியும் கேட்டான்.
“இல்ல அண்ணா..! இன்னும் அக்கா வரல. எங்க போச்சுன்னே தெரியல.” என்று சிறு வருத்தத்துடன் சொன்னான்.
“அக்கா எங்கயாது ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கும். நீ கவலை படாத. எப்டியும் வந்துருவா மலர்.” என்று அவனுக்கு ஆறுதல் கூறினான்.
உடனே மீனாட்சி, “உங்க ஆறுதல் எங்களுக்கு தேவை இல்ல. மலர் எப்டியும் திரும்பி வந்துரதான் போறா.. அது எங்களுக்கே தெரியும். நீங்க கிளம்பலாம்.” என்று முகத்தில் அடித்தால் போல பேசி இருவரையும் வெளியே போக சொன்னாள்.
ஆனந்திற்கு கோபம் வந்தது. சுந்தரம் பதிலுக்கு அழகனை பார்த்து, “என்னோட தம்பி தங்கைகளுக்கு எதாதுன்னா என்னால தாங்கிக்க முடியாது. மலருக்கு நான் அண்ணன். அது போல அப்பா இடத்துல இருந்து தங்கை பாத்துக்குற பொறுப்பு என்னோடது தான். அது யார் என்ன சொன்னாலும் எப்டி சொன்னாலும் மாறாது. நான் மலர் வர்ற வரைக்கும் இங்க தான் இருப்பேன். மலர கண்டு பிடிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. அது வரைக்கும் என்ன யார் என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்.”
என்று அமைதியாக அதே நேரத்தில் மீனாட்சியை அமைதியாக்கும் வகையில் பேசி விட்டான். அதற்க்கு மேல் அவளும் பேசவில்லை. ஆனால் ஆனந்திற்கு அது பிடிக்கவில்லை என்பதால் அவன் கிளம்புவதாக கூறினான். மீனாட்சிக்காக சுந்தரம் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.
மேலும் ஆனந்தை சுந்தரம் இன்னும் கொஞ்சம் நேரம் உடன் இருந்து பார்த்து விட்டு பின்பு செல்ல சொன்னான். அவனுக்காக ஒப்பு கொண்டான் ஆனந்த். அதிக நேரம் ஆகியும் மலர் வராததால் அனைவரும் பதற்றமாகினர்.
ஆனந்த் சுந்தரத்தின் முகத்தை பார்த்தே சந்தேகபட்டான். அதேபோல சுந்தரம் மலரை காணவில்லை என்று கூறவும் சிறிது அதிர்ச்சிக்குள்ளானான். பின்பு சுதாரித்து கொண்டு சுந்தரத்திடம் விசாரித்தான்.
சுந்தரம், “மலர காணோம்.. தம்பி தான் கால் பண்ணான். மலர் காலைல இருந்தே காணோம் அப்டின்னு சொல்றான்...,”
என்று கூறி கொண்டு இருக்கும் போதே ஆனந்த்,
“காலேஜ் போனாளா.. நான் இன்னைக்கு காலேஜ்க்கு லேட்டா தான் போனேன். அதனால நான் கவனிக்கல..”
“இல்லடா இன்னைக்கு மலர் மீனாட்சி கூட போகல... சீக்கிரம் போய்ட்டாளாம். ஆனா காலேஜ்க்கு வரலைன்னு சொல்லிருக்காங்க அவுங்க ப்ரெண்ட்ஸ். க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் சிலர் வீட்டுக்கு போய் கேட்டுட்டும் வந்துருக்கா மீனாட்சி.., ஆனா அவ அங்க இல்ல. இப்போ அவுங்க அங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க.. நான் உடனே அங்க போகணும்..” என்று பதறி கொண்டே பேசினான் சுந்தரம்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆனந்த் தானும் உடனே பதறாமல் நிதானமாக நடந்து கொண்டான்.
“நம்ம முதல்ல அங்க போவோம், பார்ப்போம். அதுவும் எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி எங்கயும் போயிருக்க மாட்டா. அவ சின்ன பொண்ணு இல்ல. மலர் எங்க போனான்னு நாம தான் கண்டுபிடிக்கணும். அங்க அவுங்க பதட்டத்துல சரியா தேடாம விட்டுருக்கலாம்.
எனக்கு புரியுது... இப்போ நேரத்துல நீ தான் அவுங்களுக்கு உடன் இருக்கணும். உனக்கு உதவிக்கு நான் வர்றேன் கூட... வா போகலாம்.”
ஆனந்த் கூறியது போல தானும் பதட்டப்ட்டு செயல் பட கூடாது என்று நினைத்தான் சுந்தரம். இருவரும் கிளம்பினர் தேவலூருக்கு. சுந்தரமும், ஆனந்த் இருவரும் அவர்களது வண்டிகளை எடுத்து கொண்டு கிளம்பினர்.
தேவலூர். அங்கு மீனாட்சியும், அழகனும் குழப்பத்துடன் இருந்தனர். மீனாட்சி தெரிந்த அனைவரிடமும் மறைமுகமாக விசாரித்தாள். வெளியில் சென்று தேடவில்லை. ஒரு சிறு நம்பிக்கை இருந்தது தங்கை எப்படியும் வந்து விடுவாள் என்று மீனாட்சிக்கு.
அதனாலே யாருக்கும் அவள் காணவில்லை என்பதை சொல்லாமல் இருந்தாள். ஒரு பெண்ணை காணவில்லை என்றால் மற்றவர்கள் ஏதாவது தவறாக நினைத்து விடுவார்கள் என்பதற்காக வீட்டு வேலை செய்யும் கோமதி கேட்டதற்கு கூட உண்மையையை மறைத்து மலர் தோழியின் வீட்டிற்கு சென்றதாக சொல்லி சமாளித்து வைத்திருந்தாள்.
பெரியவர்கள் யாரும் இல்லாமல் தனி ஆளாக இருந்து கஷ்ட படுவதை இன்று நன்கு உணர்ந்தாள் மீனாட்சி. பதட்டமும் பயமும் அதிகரித்து கொண்டே இருந்தது நேரம் செல்ல செல்ல. அழகன் சுந்தரத்திற்கு இந்த தகவலை சொல்லி உடனே அழைத்தது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவன் மூலம் மலர் காணவில்லை என்ற தகவல் ஊருக்குள் கசிந்து கெட்ட பெயர் கிடைத்து விடுமோ என்று பயந்து கொண்டு இருந்தால் மீனாட்சி.
எங்கு போய் இருப்பாள், எதற்காக போய் இருப்பாள், ஏன் இன்னும் வர வில்லை என்று எண்ணி எண்ணி சந்தேகம் கோபமாக மாறி கொண்டே சென்றது மீனாட்சிக்கு. பொறுப்பில்லாமல் இப்படி அவள் எங்கு சென்றாலோ என்று எண்ணி அவளை மனதில் திட்டி கொண்டிருந்தாள்.
இரவு ஏழாகி விட்டது மணி. யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு மீனாட்சி ஆவலாக வந்து கதவை திறந்து பார்த்தாள். அங்கு சுந்தரம், ஆனந்த் இருவரும் நின்றிருந்தனர். உள்ளே கூப்பிடவும் இஷ்டம் இல்லாமல் உள்ளே வர சொல்லவும் மனம் இல்லாமல் அவள் முறைத்து கொண்டு அப்படியே நின்றிருந்தாள். அழகன் சத்தம் கேட்டு மாடியில் இருந்து வேகமாக வந்தான்.
வாங்க அண்ணா...!! என்று அவன் அழைத்தான் இருவரையும். உடனே மீனாட்சி கோபமாக முறைத்தாள் அழகனை. “உன்னை யாரு இவுங்களுக்கு எல்லாம் சொல்ல சொன்னது..?” என்று கோபமாக கேட்டாள். பின்பு எரிச்சல் பட்டு கொண்டே உள்ளே சென்று அமர்ந்தாள்.
அழகன் உள்ளே அழைத்தும் இருவரும் உள்ளே வராமல் வெளியே வராண்டாவிலே நின்றனர்.
“மலர் வந்துட்டாளா..?” என்று சுந்தரம் கேட்டான்.
அழகன் சுந்தரத்தின் கையை பிடித்து கொண்டே, “ அண்ணா உள்ள வாங்க அண்ணா..!!” என்று பாவம் போல கூப்பிட்டான்.
பின்பு இருவரும் உள்ளே சென்றனர். “மலர் வந்துட்டாளா..? இல்ல இன்னும் வரலையா..?”என்று அழகனிடம் மறுபடியும் கேட்டான்.
“இல்ல அண்ணா..! இன்னும் அக்கா வரல. எங்க போச்சுன்னே தெரியல.” என்று சிறு வருத்தத்துடன் சொன்னான்.
“அக்கா எங்கயாது ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கும். நீ கவலை படாத. எப்டியும் வந்துருவா மலர்.” என்று அவனுக்கு ஆறுதல் கூறினான்.
உடனே மீனாட்சி, “உங்க ஆறுதல் எங்களுக்கு தேவை இல்ல. மலர் எப்டியும் திரும்பி வந்துரதான் போறா.. அது எங்களுக்கே தெரியும். நீங்க கிளம்பலாம்.” என்று முகத்தில் அடித்தால் போல பேசி இருவரையும் வெளியே போக சொன்னாள்.
ஆனந்திற்கு கோபம் வந்தது. சுந்தரம் பதிலுக்கு அழகனை பார்த்து, “என்னோட தம்பி தங்கைகளுக்கு எதாதுன்னா என்னால தாங்கிக்க முடியாது. மலருக்கு நான் அண்ணன். அது போல அப்பா இடத்துல இருந்து தங்கை பாத்துக்குற பொறுப்பு என்னோடது தான். அது யார் என்ன சொன்னாலும் எப்டி சொன்னாலும் மாறாது. நான் மலர் வர்ற வரைக்கும் இங்க தான் இருப்பேன். மலர கண்டு பிடிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. அது வரைக்கும் என்ன யார் என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்.”
என்று அமைதியாக அதே நேரத்தில் மீனாட்சியை அமைதியாக்கும் வகையில் பேசி விட்டான். அதற்க்கு மேல் அவளும் பேசவில்லை. ஆனால் ஆனந்திற்கு அது பிடிக்கவில்லை என்பதால் அவன் கிளம்புவதாக கூறினான். மீனாட்சிக்காக சுந்தரம் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.
மேலும் ஆனந்தை சுந்தரம் இன்னும் கொஞ்சம் நேரம் உடன் இருந்து பார்த்து விட்டு பின்பு செல்ல சொன்னான். அவனுக்காக ஒப்பு கொண்டான் ஆனந்த். அதிக நேரம் ஆகியும் மலர் வராததால் அனைவரும் பதற்றமாகினர்.