MithraPrasath
SM Exclusive
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 4
மலரை செல்வம் அண்ணன் கூட்டி கொண்டு வந்தார். அதை பார்த்த பின்னரே மீனாட்சிக்கு நிம்மதியாக இருந்தது. வேகமாக மலரிடம் ஓடி சென்று கட்டி கொண்டு அழுதாள் மீனாட்சி. பின்பு செல்வம் அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு மலரை அவள் கூட்டி கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
வேகமாக அவள் செயல் பட்டாள். சுந்தரம், ஆனந்த், செல்வம் அண்ணன் அனைவருக்கும் புரியவில்லை. இருந்தாலும் ஒன்றும் கூறாமல் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.
மலரை இழுத்து கொண்டு மீனாட்சி வேகமாக சென்று ஆட்டோ ஒன்றில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டாள். அவள் சென்ற பின் சுந்தரம் செல்வம் அண்ணனிடம் நன்றி சொன்னான்.
“ரொம்ப நன்றி அண்ணே... நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணிருக்கீங்க.. நாங்க மறக்கவே மாட்டோம். நாங்க ரொம்ப பயந்து போயிருந்தோம். ஆனா நீங்க நல்ல நேரத்துல வந்து உதவி பண்ணிட்டீங்க... ரொம்ப நன்றி அண்ணே..” என்றான்.
“இதுக்கு போய் எதுக்கு தம்பி நன்றிலாம் சொல்லிட்டு... உங்க அப்பா எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னாடி இது எல்லாம் ஒண்ணுமே இல்ல...
நீங்க மொதல்ல போய் தங்கச்சிய பாருங்க.. பொண்ணு ரொம்ப பயந்த மாதிரி இருக்கு.. எதுக்குன்னு தெரியல, அழுதுட்டே தான் வந்தது பஸ் ல வரும்போது கூட...
ஏற்கனவே நேரம் ஆச்சு... நான் வீட்டுக்கு போறேன் தம்பி..” என்று செல்வம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
உடனே சுந்தரம் அவரிடம், “அண்ணே..! ஒரு நிமிஷம்.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் அண்ணே... உங்களுக்கே தெரியும் இந்த பொம்பள பிள்ளை விஷயம். வெளில தெரிஞ்சா தப்பா பேசுவாங்க.. அதுக்கு தான் சொல்றேன்.” என்று கூறவும்
“எனக்கும் தெரியும் தம்பி. நான் வேற யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க நிம்மதியா போங்க..”
அங்கிருந்து செல்வம் அண்ணன் கிளம்பவும் அதுவரை பேசாமல் அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆனந்த் அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல்,
“என்ன தான்டா நடக்குது...??!! மலர் எங்க போனா..? செல்வம் அண்ணே எப்டி கூட்டிட்டு வர்றாரு..? எனக்கு ஒண்ணுமே புரியல... என்னன்னு விளக்கமா சொல்லு. மண்டையே வெடிக்குது.” என்று சந்தேகத்தை கேட்டான்.
“இல்ல நம்ம செல்வம் அண்ணா ஏதோ வேலையா தஞ்சாவூர் மெயின் போயிருக்காரு. போயிட்டு திரும்பி வரும் போது பஸ் ஸ்டாண்ட் ல மலர் தனியா உக்காந்துருக்கா..
என்ன, ஏதுன்னு விசாரிச்சுருக்காறு, அதுக்கும் எந்த பதிலும் சொல்லல போல. சரி வா வீட்டுக்கு போகலாம்ன்னு கூட்டிட்டு வந்துருக்காரு..
மற்ற படி என்ன ஏதுன்னு இன்னும் தெரியாது. போய் கேக்கணும்.” என்று சுந்தரமும் யோசித்து கொண்டே சொல்லினான்.
“ஆமாம்... எதுக்கு மலர் பட்டு சேலை எல்லாம் கட்டிருக்கு..? முகத்தை பார்த்தா ரொம்ப நேரம் அழுத மாதிரி தெரியுது.”
“ஆமாம்டா எனக்கும் அது தான் தெரியல..”
யோசித்து கொண்டே ஆனந்த், “ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே..??!!” என்று தயங்கி கொண்டே கேட்டான்.
சுந்தரம் “என்ன..? சொல்லு நான் தப்பா நினைக்க மாட்டேன்...” என்று அவன் அமைதியாகவே அதே நேரத்தில் அவன் என்ன சொல்ல போகிறானோ..? என்று பயந்து கொண்டே கேட்டான்.
“இல்ல இன்னைக்கு மலர் கூட படிக்கிற ஜனா கிட்ட பேசினேன். ரெண்டு மூணு முறை அவன் மலர ஒரு பையன் கூட வெளில பார்த்ததா சொன்னான்.
அதான் ஒருவேள அவ யாரையாது காதலிச்சு, அவன கல்யாணம் பண்ண எதுவும் போயருப்பாலோ..?
எனக்கு அப்டி தோணுது...” என்று ஆனந்த் கூறினான்.
சுந்தரம் வேகமாக, “இல்லடா தங்கச்சி அப்டி பட்டவ இல்ல.. கண்டிப்பா வேற ஏதாது நடந்துருக்கணும்.” என்று ஏதோ போல் சொன்னான்.
“மலர் எங்க போனான்னு மீனாட்சிக்கு தெரியுமா..?”
என்று ஆனந்த் மறுபடியும் கேள்வி கேக்க, எரிச்சலாய் பார்த்தான் சுந்தரம்.
“இல்ல.... அவ எந்த கேள்வியும் கேக்காம மலர கூட்டிட்டு வேகமா போய்ட்டா... அதான் அவளுக்கு எங்க போனான்னு தெரிஞ்சுருக்குமோன்னு கேட்டேன். இதுக்கு போய் முறைக்கிற..?” என்று சலித்து கொண்டான்.
“டேய்..! அவ கூட நீயும் தான் இருந்த...??! அப்பறம் எப்டி, அவளுக்கு தெரிஞ்சு கிட்டே அவ மலர காணோம்னு அழுவாளா..? முட்டாள் தனமா கேள்வி கேக்காத...
நான் கிளம்புறேன். நீயும் கிளம்பு. லேட் ஆகிடுச்சு, நீ போய்ட்டு வா, வீட்டுல தேட போறாங்க...” என்று சுந்தரம் ஆனந்தை அனுப்ப முயற்சித்தான்.
“ஏண்டா..?!! என்ன அணுப்புறதுல குறியா இருக்க... நான் தேடுற வரைக்கும் வேணும், கிடைச்சதுக்கு அப்பறம் வேணாம்... போடா...
என்ன விஷயம்ன்னு என்கிட்டயே மறைக்கிறயா...
போடா...! போய் தங்கச்சிய பாரு... நான் உங்க குடும்ப விஷயத்துல தலையிடல....
சரியா, போதுமா...?! நான் கிளம்புறேன். ” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.
சுந்தரம் அவனை சமாதான படுத்த எதுவும் முயற்சிக்க வில்லை. மீனாட்சிக்கு பாதுகாப்பாக உடன் சென்றதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.
அதை எல்லாம் யோசிக்கும் மன நிலையில் அவன் இல்லை அப்போது. தங்கச்சி பற்றிய கவலை தான் உள்ளுக்குள் இருந்தது.
அங்கிருந்து நேராக வீட்டிற்கு சென்றான். அப்போது தான் மீனாட்சியும் மலரும் கூட ஆட்டோவில் வந்து இறங்கினர். அவர்களை பார்த்ததும் அழகன் தான் சந்தோஷ மடைந்தான்.
ஆட்டோவில் இருந்து இறங்கியதும் நேராக மலர் உள்ளே சென்றாள். அவளிடம் அழகன் வந்து பேசுவதை கூட கவனிக்காமல் பிரம்மை பிடித்தது போலவே நடந்து போனாள்.
சுந்தரமும் பின்னாலே சென்றான். மீனாட்சி உள்ளே வந்ததும்,
“ஏய்...! மலர்...” என்று அழைத்தாள்.
மலரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்.
மீனாட்சி மலரை அவள் புறம் இழுத்து திரும்ப செய்தாள். அவள் பொம்மை போல நடந்து கொண்டாள். எதிர் பார்க்காத நேரத்தில் மீனாட்சி சட்டென்று மலரை கன்னத்தில் ஓங்கி அடித்தாள்.
சுந்தரம், அழகன் இருவரும் அதிர்ந்தனர். அதற்கு மாறாக மலர் அப்போது தான் சுயநினைவுக்கே வந்தது போல, மீனாட்சியை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தாள். விடாமல் அழுது கொண்டே இருந்தாள்.
பதறி கொண்டு என்ன நடந்தது என்று அனைவரும் ஒருபுறம் கேக்க, மீனாட்சி முதுகில் தடவி கொடுத்து கொண்டே சமாதான படுத்த முயற்சித்தாள். ஆனால் மலரின் அழுகையும் குறைய வில்லை, அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
மீனாட்சிக்கு கோபம் வந்தது. மலரின் தோள்களை குலுக்கி,
“ஏன் அழுகுற....? என்ன நடந்தது...? எங்க போன...?!! சொல்லிட்டு அழு...” என்று சத்தமாக கேட்டாள்.
சுந்தரம் அழகனை பார்த்து, “ போய் தண்ணி எடுத்துட்டு வந்து அக்காக்கு கொடு...” என்று கூறிவிட்டு அவர்களிடம் சென்று, “மீனாட்சி, மலர் கொஞ்சம் அமைதி ஆகட்டும். அப்பறம் கேளு இதெல்லாம்...” என்று கூறி மலரை கை பிடித்து கூட்டி சென்று ஷேரில் அமர செய்தான்.
அழகன் வந்து தண்ணீர் கொடுக்கவும், அதை குடிக்க ஆரம்பித்தாள். சிறிது அழுகை குறையவும், கண்களை மூடி தன்னை தானே ஆசுவாசபடுத்தி கொண்டு பேசினாள்.
“அக்கா... நான் ப்ரெண்ட் கல்யாணத்துக்காக தஞ்சாவூர் போனேன்.”
“சரி... அத ஏன் முன்னாடியே சொல்லல என்கிட்ட...??”
“சொன்னா நீ என்னை தனியா அனுப்புவியோ என்னம்மோன்னு தான் சொல்லல...”
“சரி அப்போ சொல்லல... அதுக்கு அடுத்தாது சொல்லிருக்கலாம்ல...? ஏன் சொல்லல...?” என்று மீனாட்சி கேக்கவும் மலர் பதிலே சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“நான் உன்கிட்ட அக்கா மாதிரியா இருந்துருக்கேன்... ஒரு ப்ரெண்ட் மாதிரி தான இருக்கேன்...??! அப்டி இருந்தும் என்கிட்டே சொல்ல என்ன தயக்கம்..? இல்ல பயமா...?!!” என்று வருத்த பட்டு கேட்டால் மீனாட்சி.
“சாரி அக்கா...”
“சரி. அப்டி எந்த ப்ரெண்ட் க்கு கல்யாணம்...?”
“அது.... ராஜி க்கு தான் கல்யாணம். அந்த பொண்ணு ஒரு பையன லவ் பண்ணா... அவன் கூட ஓடி போய் கல்யாணம் பண்ண தான் என்ன கூப்பிட்டா. அதான் சொன்னா நீ என்னை அனுப்ப மாட்டியோன்னு சொல்லாமல் போனேன்..” என்று தலை தொங்க போட்டவாறே மலர் சொன்னாள்.
சுந்தரம், “சரி கல்யாணம் எப்போ நடந்தது...?” என்று கேட்டான்.
“காலைல...” என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள்.
“அப்பறம் ஏன் அக்கா இவ்ளோ லேட்டா வர்ற..?” என்று அழகன் சரியாய் கேட்டான்.
பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“என்ன நடந்தது, ஏன் இவ்ளோ லேட் ன்னு கேட்டுட்டு இருக்கோம்...? அப்டியே உக்காந்துருக்க..? பதில் சொல்லு மலர்..”என்று எரிச்சலுடன் கேட்டால் மீனாட்சி.
அப்போதும் அவளிடம் பதில் இல்லை. “என்ன நாங்க கேள்வி கேக்க கேக்க, அதுக்கு மட்டும் நீ பதில் சொல்லுவியா...? நீயா என்ன நடந்ததுன்னு சொல்லமாட்டியா..?!!
நீ ஏன் இப்டி இருக்க...?? என்ன நடந்ததுன்னு சொல்லு...” என்று கேட்டு கொண்டே இருந்தாள் மீனாட்சி.
சுந்தரம், “சரி விடும்மா... நீ போய் ரெஸ்ட் எடு மலர்... நாளைக்கு காலேஜ் போகணும் ல... அப்பறமா எல்லாம் பேசிக்கலாம்.” என்று கூறவும் அவள் எழுந்தால் செல்வதற்கு.
மீனாட்சிக்கு அதிக கோபம் வந்து விட்டது. “என்னடி நினைச்சுட்டு இருக்கு... பேசிட்டு இருக்க என்னை பார்த்தா முட்டாளு மாதிரி இருக்கா... கேட்ட எதுவும் பதில் சொல்லாம அப்டியே போற...?” என்று மலரின் கையை இறுக பிடித்து கொண்டு கேட்டாள்.
“ராஜி தான் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமும் என்னை கூடவே இருன்னு சொல்லி கட்டாய படுத்துன்னா... அதான் கூட இருந்துட்டு வந்தேன்...” என்று சொல்லி மீனாட்சியின் கையில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு கிளம்பினாள்.
மறுபடியும் திரும்பி, “போன் ஒடைஞ்ச போச்சு.. அதான் கால் பண்ணி இன்பார்ம் பண்ண முடியல... என்னோட பணத்த யாரோ திருடிட்டு போயிட்டாங்க... அதான் எப்டி வர்றதுன்னு தெரியாமா யார் கிட்டயும் உதவியும் கேக்க முடியாம தனியா பஸ் ஸ்டாண்ட் ல நின்னுட்டு இருந்தேன்.
அப்போ தான் செல்வம் அண்ணா வந்தாங்க. என்னை கூட்டிட்டு வந்தாங்க. அவ்ளோ தான் நடந்தது.” என்று வேகமாக பேசிவிட்டு மாடியில் இருக்கும் தனது ரூம்க்கு சென்றுவிட்டாள்.
அவள் கூறியதில் உண்மை இருக்குமோ அல்லது சமாளிக்க பொய் பேசுகிறாளோ என்று எண்ணம் அழகனுக்கும் மீனாட்சிக்கும் வந்தது. ஆனால் சுந்தரம் மலரை நம்பினான்.
“சரி விடுங்க... தங்கச்சி அதான் எல்லாம் சொல்லிட்டால... அப்பறம் என்ன...?
கிளம்பி ஊருக்கு வர காசு இல்லைன்னு தான் மலர் பயந்து போய், தனியா நிக்கிறத நினைச்சு அழுதுருப்பா...
மற்றபடி வேற எதுவும் இருக்காது. நீங்க நிம்மதியா போய் படுங்க..” என்று சுந்தரம் கூறவும்,
“இல்ல அண்ணா...!” என்று அழகன் இழுத்தான்.
“மனச போட்டு குழப்பிக்காத... அதெல்லாம் ஒன்னும் இல்ல... நான் கிளம்புறேன்...” என்றான் சுந்தரம்.
சமாளித்து விட்டு சுந்தரம் அங்கிருந்து கிளம்பினான். வண்டியில் போகும் போது அவனுக்கும் அழகன் சொல்லியது, ஆனந்த் சொல்லியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் நம் தங்கை நம்மிடம் பொய் சொல்ல என்ன அவசியம் இருக்கு, நாம தான் தேவை இல்லாம சந்தேக படுறோம் என்று எண்ணி தன்னையே திட்டி கொண்டான்.