MithraPrasath
SM Exclusive
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 9
சுந்தரம் சொன்ன பிறகு கமலா அக்கா மீதான சந்தேகம் அதிகரித்தது ஆனந்துக்கும், விக்னேஷ்க்கும். அந்த நேரத்தில் அந்த கமலா அக்கா அவரது கணவருடன் வண்டியில் வந்து கொண்டிருந்தார். அவர்களை பார்க்கவும் மூவரும் யோசித்தனர்.
“சுந்தரம் நம்ம இப்போவே போய் கேட்போம்..” என்று விக்னேஷ் சொன்னான்.
“இப்போவே போகவா...?!!” என்று சுந்தரம் இழுத்தான்.
“அது தான் சரி... சந்தேகம்ன்னு வந்துட்டா அத கேட்டு தெரிஞ்சுக்குறது நல்லது. அதுவும் இப்போவே போறது தான் நல்லது... நம்ம பணத்த தொலைச்சு ஒரு நாள் ஆக போகுது. அவுங்க பணத்த வேற எங்கையாது மாத்திடும் முன்னாடி நாம கண்டு பிடிக்கணும். அதுக்கு தான் இப்போவே போவோம்ன்னு சொன்னேன்...” என்று விக்னேஷ் சொல்லி சம்மதிக்க வைத்தான்.
அவர்கள் கமலா அக்கா வீட்டை அடைய அதே நேரம் அவர்களும் வந்து இறங்க சரியாக இருந்தது. மூவரும் ஒன்றாக வருவதை பார்க்கவும் கமலா அக்காவிற்கும் அவரது கணவர் முருகனுக்கும் குழப்பம். கமலா அக்கா வண்டியை விட்டு இறங்கினார்.
“என்ன சுந்தரம் எங்க வீட்டுக்கு வந்துருக்க...?!!” என்று முருகன் கேட்டார்.
“அது வந்து அண்ணே... என்னோட பணம் தொலைஞ்சு போச்சுல அதை பற்றி உங்களுக்கு ஏதாது தெரியுமான்னு விசாரிக்க தான் வந்தேன்..” என்று சுந்தரம் இழுத்தான்.
கமலாவும் முருகனும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்தனர்.
“எங்க கிட்ட விசாரிக்க என்ன இருக்குன்னு தெரியல., இருந்தாலும் சரி வா தம்பி வீட்டுக்குள்ள போய் பேசலாம். கூட வந்துருக்க ரெண்டு பேரும் யாரு..?” என்று கேட்டு கொண்டே முருகன் வண்டியை நிறுத்திவிட்டு வந்தார். கமலாவும் சென்று கதவை திறந்தார்.
“இவங்க ரெண்டு பேரும் என்னோட ப்ரெண்ட்ஸ்..” ஆனந்தை சுட்டி காட்டி, “இவன் ஆனந்த்., காலேஜ் ல ப்ரப்பஷரா வேலை பார்க்குறான். இந்த ஊர் தான்.” என்று கூறினான்.
முருகன் விக்னேஷ் பக்கம் திரும்ப உடனே, “இவன் விக்னேஷ், என்னோட காலேஜ் ப்ரெண்ட். இப்போ போலீசா இருக்கான். சென்னைல இருக்கான்.” என்று கூறவும் சற்று முகம் மாறியது முருகனுக்கும் கமலாக்கும். அதை கவனித்து விட்டான் விக்னேஷ்.
“சரி வாங்க எல்லாரும் வீட்டுக்குள்ள...” என்று கூறி கொண்டே உள்ளே அழைத்து சென்றார்.
வீடு அவர்கள் எதிர்பார்த்தை விட சுத்தமாக கடை போன்று அடுக்கி வைத்து அழகாக இருந்தது.
ஆனந்த் ஆச்சர்யமாக, “என்ன அக்கா இவ்ளோ நீட்டா வச்சுருக்கீங்க வீட்ட... நான் இது வரைக்கும் யாரோட வீட்டையும் இப்படி பார்த்தது இல்ல.” என்று சொல்லவும்., கமலா அக்காவிற்கு பெருமை தாங்கவில்லை.
முருகன் தான், “அது அவளுக்கு எப்போவும் உண்டான பழக்கம். எடுத்த பொருள் எடுத்த இடத்துக்கு போகலைனா நம்மள போட்டு வறுத்து எடுத்துருவா..” என்று சலித்து கொண்டே சொன்னார்.
என்னை யாராது பெருமையா சொன்னா உங்களுக்கு பிடிக்காதே என்று கமலா தான் முகத்தை சிலிப்பி கொண்டார்.
ஆனால் ஆனந்த் சந்தேகத்தை தெரிந்து கொள்ளவே அப்படி கேட்டான் என்பது அங்கு தான் தெரியாது.
சுந்தரம் அடுத்து பேச ஆரம்பித்தான்.
“நேற்று என்னோட பணம் காணாம போச்சு இல்லையா அதுக்கு தான் விசாரிச்சுட்டு போலாம்ன்னு வந்தேன். அதுவும் இங்க தெருவுல வச்சு காணாம போனதால தான் விசாரிக்க வந்தோம்.” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கமலா தான்
“அது எங்க வீட்டுக்கு வந்து விசாரிக்கிறீங்க..? ஏன்.. எங்க மேல எதுவும் சந்தேக படுறீங்களா..?” என்று கேட்டார்.
“இல்ல அக்கா அப்டிலாம் இல்ல. ஏற்கனவே பக்கத்து வீட்டுக் காரங்க கிட்ட விசாரிச்சோம். அது போல உங்க கிட்டயும் விசாரிக்க வந்தோம்.” என்று சுந்தரம் சொல்லவும்,
“எவ்ளோ பணம் தொலைஞ்சு போச்சு தம்பி..?” என்று முருகன் கேட்டார்.
“ஐந்து லட்சத்துக்கு கிட்ட காணாம போச்சு அண்ணே...”
“அவ்ளோ வா...” என்று கமலா கமலாவை வாய் பிளந்தார்.
முருகன் கமலாவை திரும்பி பார்த்து முறைத்தார். உடனே அமைதி ஆகிவிட்டார் கமலாவும்.
“அண்ணே நீங்க நேற்று தெருவுல வேற யாரையாது புதுசா பார்த்தீங்களா..? இல்ல யாராது என்னோட பைக்குல இருந்து பணத்த திருடுறத பார்த்தீங்களா..?” என்று கேட்டான்.
“இல்லையே தம்பி நாங்க யாரையுமே பார்க்கலையே.. அதுவும் நான் வந்ததுல இருந்து வீட்டுக்குள்ள தான் இருந்தேன். நான் வசூலுக்கு கிளம்பி வெளியே வந்தப்ப தான் நீ உட்கார்ந்து இருந்தத பார்த்தேன். எனக்கு வேற எதுவும் தெரியாது...” என்று கூறினார்.
“நீங்க நல்லா யோசிச்சு பாருங்க அண்ணே... அக்கா கிட்டயும் கேட்டு பாருங்க., யாரையாது பார்த்தாங்களான்னு...?” என்று சொல்லி கமலாவை பார்த்தான் சுந்தரம்.
கமலா, “நான் யாரையும் பார்க்கல தம்பி.. நானும் வெளிலையே வரல...” என்று சாதரணமாக சொன்னார்.
“இல்ல அக்கா நீங்க நேற்று எங்க வீட்டுக்கு வந்துட்டு போனீங்க இல்லையா.. அப்போ யாரையாது வண்டி கிட்ட பார்த்தீங்களா..?”
“இல்ல தம்பி.. பார்க்கல...” என்று கமலா சொல்லி கொண்டிருக்கும் போதே,
“நேற்று எப்போ நீ அங்க போன...?” என்று முருகன் கோபமாக கமலாவை பார்த்து கேட்டார்.
“அது நீங்க வர்றதுக்கு முன்னாடி போனேன்... சும்மா சுந்தரம் வந்துருக்கேன்னு பேச போனேன்...” என்று அவர் இழுத்து பேச,
“சும்மா போனியா... இல்ல அவுங்க வீட்டு விஷயத்துல முக்க நுழைக்க போனியா...?” என்று அவர் முறைத்து கொண்டே கேட்டார்.
“அப்டிலாம் ஒன்னும் இல்ல... என்ன சாப்பிடுற சுந்தரம்..? நான் ஏதாது உங்களுக்கு குடிக்க எடுத்துட்டு வர்றேன்... ” என்று தனது கணவரின் கேள்வியில் இருந்து தப்பிக்க எண்ணி வேகமாக பேசிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
சென்று மூன்று பேருக்கும் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.
“என்ன அக்கா உங்களுக்கு உடம்பு சரி இல்லையா..?” என்று சுந்தரம் கேட்டான்.
“அப்டிலாம் இல்ல தம்பி நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்.” என்று கூறவும்,
“இல்ல நேற்று நைட் அண்ணா வெளில வந்து என்கிட்டே பேசிட்டு இருக்கும் போது நீங்க வெளில வரவே இல்ல... அதான் உடம்பு சரி இல்லையோன்னு நினைச்சேன்... சாரி அக்கா...” என்று கூறி உண்மை என்ன என்று கேட்டான்.
கமலா எதுவும் பேசாமல் நின்றார். பெருமூச்செறிந்து விட்டு முருகன் தான் பேசினார்.
“இவள நான் தான் வீட்டுக்குள்ள இருக்கனும் வெளில வர கூடாதுன்னு சொல்லி வச்சுருந்தேன். அதான் வரல...”
மூவரும் புரியாமல் விழிக்க, அவரே பேசினார்.
“இவ நேத்து எதுக்கு உங்க வீட்டுக்கு வந்துருப்பான்னு எனக்கு தெரியும் தம்பி. உன்னோட தங்கச்சி இப்போ வீட்டுல இல்ல. அவ ஓடி போயிட்டாளான்னு கேட்டு விசாரிக்க தான வந்தா...? எனக்கு நல்லா தெரியும் இவள பத்தி. அதுக்கு தான் கண்டிப்பா வந்துருப்பா.
இந்த பொம்பளைங்களே அப்டி தான்... ஏதாது ஒரு விஷயம் கிடைச்சா போதும், அத ஊருக்கே தெரிவிச்சடனும்... என்ன எண்ணம்மோ...??” என்று அவர் சலித்து கொண்டார்.
“அப்டிலாம் இல்ல அண்ணே...” என்று சுந்தரம் சொல்ல,
“சும்மா சமாளிக்காத தம்பி.., எனக்கு தெரியாதா இவள பத்தி... இவளும் அந்த பக்கத்து வீட்டுகாரியும் சேர்ந்து செய்யுற வேலை எனக்கு தெரியாதா... அதான் நேற்று நான் இவள கொஞ்ச நாளுக்கு வெளிலையே வர கூடாது... யார் வீட்டு பிரச்சனைளையும் மூக்க நுழைக்க கூடாதுன்னு வீட்டுக்குள்ளயே இருக்க சொன்னேன். அதான் அவ வரல... நீ அத தப்பா நினைச்சுட்டியா..?” என்று கேட்டார்.
“அப்டிலாம் இல்ல அண்ணே... அக்கா எப்போவும் வெளில இருப்பாங்களே.. நேற்று வெளிலையே வரலையே, அதான் உடம்பு சரி இல்லையோன்னு நினைச்சு அப்டி கேட்டுட்டேன்.
மற்றபடி நான் தப்பா நினைக்கல, அவுங்க தான் தங்கச்சி தனியா இருக்கும் போது பக்கத்துல இருந்து பார்த்துக்குறாங்க.. அப்டி பட்டவங்களுக்கு உடம்பு சரி இல்லைனா விசாரிக்கனுமே ன்னு கேட்டுட்டேன். வேற ஒன்னும் இல்ல.
அத விடுங்க அண்ணே.. உங்களுக்கு வேற ஏதாது தெரிஞ்சா மட்டும் எனக்கு தகவல் சொல்லுங்க..
நாங்க கிளம்புறோம் அண்ணே.. கிளம்புறோம் அக்கா..” என்று கூறிவிட்டு மூவரும் வெளியே வந்தனர்.
நேராக சுந்தரம் வீட்டுக்குள் சென்றான். பின்னாடியே இருவரும் வந்தனர்.
உள்ளே நுழைந்து சோர்வாக அதே நேரம் ஏமாற்றத்தோடு சென்று சோபாவில் அமர்ந்தான். பின்னே வந்த விக்னேஷ், ஆனந்த் இருவரும் அவனிடம் சென்று “என்னடா வேகமா வந்துட்ட..?” என்று கேட்க,
அவன் பதிலே பேசாமல் யோசித்து கொண்டே அமர்ந்திருந்தான். அழகன் என்ன நடந்தது என்று கேட்டான். ஆனந்த் நடந்ததை விவரித்தான். அப்போ எதுவும் தெரியலையா அவங்க கிட்ட இருந்து..? என்று அழகன் ஏமாற்றமானான்.
விக்னேஷ், “அவுங்க பேசினது சந்தேகம் வர்ற மாதிரி இல்ல தான்... அதுக்காக உடனே சோர்ந்து போக கூடாது. நம்ம இன்னும் விசாரிக்கணும். அப்போ தான் தெரிஞ்சுக்க முடியும். அதுவும் நம்ம பணம் காணமா போய் ஒரு நாள் கூட ஆகல.. கண்டுபிடிச்சுடலாம்.” என்று சொல்லவும் சுந்தரம்,
“இல்ல எனக்கு அவுங்க மேல இன்னும் சந்தேகம் இருக்கு... அவுங்க பேசினது சந்தேகம் வர்ற மாதிரி இல்ல தான். இருந்தாலும் ஏதோ இடிக்குது... அத கண்டு பிடிக்கணும். அடுத்து நம்ம போய் தெரு முக்குல இருக்க கடைகாரர் கிட்ட விசாரிக்கணும்... இப்போ கடை மூடி இருக்கும், அதுனால சாயங்காலம் போய் விசாரிப்போம்.” என்று சுந்தரம் சொன்னான்.
சரி என்று மற்றவர்கள் சம்மதித்தனர்.