Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
17.
பவதாரிணி உடல்தேறி வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, இத்தனை நாளாக அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் மொத்தமாக கிருஷ்ணாவின் மீது காட்டினார் பாஸ்கர் மாமா!
கிருஷ்ணாவை தனியே அழைத்துச் சென்று கத்தத் தொடங்கினார் மாமா!
"ஏன் இப்டி பண்ண?"
"நா என்ன பண்ணேன் பாஸ்கரா?" என்று குழப்பமாய்க் கேட்டார் கிருஷ்ணா!
"எதுக்கு நீ வாசுவுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச? அந்தப் பொண்ண இவந்தான் கெடுக்கலல்ல... அப்றம் என்ன ம...க்கு இப்டி ஒரு கல்யாணம்....."
"பாஸ்கரா... நா சொல்றதக் கொஞ்சம் நிதானமா கேளுடா...."
இவர்கள் தனியாகப் போய் பேசினாலும் பாஸ்கர் மாமாவின் குரல்தான் எட்டு ஊருக்கு கேட்கிறதே! வாசுவுக்குக் கேட்காதா? இல்லை யாமினிக்குதான் கேட்காதா? வாசு, யாமினி, பவதாரிணி, ருக்மணி மாமி, மற்றும் இளையவர்கள் ஐஷூ மற்றும் சௌமிக்கும் கூட இதெல்லாம் காதில் விழத்தான் செய்தது!
"நீ ஒண்ணும் சொல்ல வேணாம்..... இந்தக் கல்யாணத்தப் பண்ணி வெச்சி அவன் வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டுட்ட நீ...."
"என்னடா இப்டில்லாம் பேசற...."
"இந்தக் கல்யாணத்துக்கு என்ன அர்த்தம்..... அப்ப இவன ஒரு கெட்டுப் போன பொண்ணுதான் கட்டுவான்னு அர்த்தமா?"
இதைக் கேட்டு யாமினி மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்! ஐஷுவும் சௌமியும் அவளைத் தேற்ற முயல, யாமினி அவர்களிடம் வேண்டாம் என்பது போல தலையாட்டிவிட்டு தனியாகச் சென்று யார் கண்ணிலும் படாதவாறு அமர்ந்துவிட்டாள்! ஆனால் அவள் காதுகளில் இவர்கள் பேசுவது இன்னும் கேட்கத்தான் செய்தது!
"பாஸ்கரா...." அலறினார் கிருஷ்ணா!
"என்ன... நா சொல்றதில இருக்கற உண்மை சுடுதா?"
"பாஸ்கரா... நீ தேவையில்லாம பிரச்சனை பண்ற.... வேணாம்...."
"நா எவ்ளோ நல்ல நல்ல ஜாதகம்லாம் கொண்டு வந்தேன்..... எவ்ளோ பெரிய பெரிய வீட்டு பொண்ணுங்க சம்மந்தம் எல்லாம் எடுத்துண்டு வந்தேன்! அதுல எதையாவது வாசுவுக்கு பாத்திருக்கலாமே..... அப்பனும் புள்ளயும் அதல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இப்ப இந்தக் கேடு கெட்ட.... "
"பாஸ்கரா.... வார்த்தைய அளந்து பேசு...." கிருஷ்ணா கோபமாகச் சொன்னார்!
"சரி வேணாம்..... நீ போலீஸ்காரன்தானே.... அந்தப் பொண்ணு வந்து நியாயம் கேட்டா.... நீ நியாயமானவனா இருந்திருந்தா..... என்ன பண்ணியிருக்கணும்... வாசு தப்பு பண்லன்னு நிரூபிச்சி அந்தப் பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பியிருக்கணும்..... அத வுட்டுட்டு..... பெரிய இவன் மாதிரி..... கட்றா தாலியன்னானாம்.... இவனும் கட்டினானாம்....."
"இப்ப என்ன பண்ணனும்கற...."
"இந்த கல்யாணம் செல்லாது..... அந்தப் பொண்ண வீட்ட விட்டு அனுப்பு....."
"அதச் சொல்ல நீங்க யாரு!" என்று காரமாகக் கேட்டான் வாசு!
"நீ அவ கழுத்தில தாலி கட்டியிருக்கவே கூடாது..... அவள இப்பவே வீட்ட விட்டு வெளிய அனுப்பு..."
"அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பனும்னு சொல்ல நீங்க யாருன்னு கேட்டேன்....." தெளிவாகவும் அழுத்தமாகவும் கேட்டான் வாசு.
"டேய்.... நீ புரிஞ்சிதான் பேசறியா.... அவ யாரோ ஒருத்தனால....." என்று அவர் முகத்தைச் சுளிக்கிக் கொண்டு கூறத் தொடங்கும்போதே வாசுவின் கடுமையான எச்சரிக்கைக் குரல் ஒலித்தது.
"ப்போதும் நிறுத்துங்க மாமா..... எம்பொண்டாட்டியப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசினீங்க... அவ்ளோதான்.... மரியாதை கெட்டுடும்...."
மாமா மட்டும் சளைத்தவரா என்ன?
"என்னடா பெரிய பொண்டாட்டி.... அவ கழுத்தில தாலி கட்டினா, அவ உனக்கு பொண்டாட்டி ஆய்டுவாளா... இல்ல நீதான் அவளுக்கு புருஷனாய்டுவியா..... நடந்தது ஒரு பொம்மைக் கல்யாணம்டா....."
"என் கல்யாணத்தப் பத்தி பேசற யோக்யதை உங்களுக்கில்ல மாமா!" என்று நக்கலாக சொன்னான் வாசு.
"எப்ட்றா கல்யாணம் செஞ்சுண்ட.... என்னமோ அவள தொறத்தி தொறத்தி லவ் பண்ணி.... பார்க், பீச்சுன்னு ஊர் சுத்தி உருகி உருகி காதலிச்சு.... அத நாங்க ஒத்துக்காம ஓடிப்போய் ரிஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிண்டியா..... அவளப் பிடிச்சா கல்யாணம் பண்ணிண்ட.... இல்லல்ல...."
"நா அவள என் மனசால ஏத்துகிட்டுதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்! எது எப்டியிருந்தாலும் இந்த ஜென்மத்துக்கு அவதான்... அவ மட்டும்தான் என் பொண்டாட்டி...."
"பெரிசா பொண்டாட்டின்னு சொல்றியே.... நீயும் அவளும் என்ன லட்சணத்தில குடும்பம் நடத்தறீங்கன்னு எனக்குத் தெரியாதா..... என்ன அப்டியே அவ கூட கொஞ்சிண்டும் குலாவிண்டுமா இருக்க.... அட ஒரு கிஸ்ஸாவது அடிச்சிருப்பியாடா அவள.... அவளும் நீயும் புருஷன் பொண்டாட்டியா வாழவேல்ல.... இந்தக் கர்மமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டிருக்கியா....."
"மாமா.... வயசுப் பொண்ணுங்க இருக்கற வீட்ல எதப் பேசறதுன்னு வெவஸ்தையேயில்லாம....." என்றான் வாசு கோபமாக!
"டேய்.... நீ பேச்ச மாத்தாத....." நக்கலாகச் சொன்னார் மாமா.
"உங்களுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்!" என்றான் வாசு!
"நா கேட்டதுக்கு இது பதில் இல்ல.... நீ அவ கூட குடும்பம் நடத்தவேயில்ல...."
"இவன் கெடக்கான்! வாசு! நீ உள்ள போப்பா! பாரு! யாமினி அழுதுகிட்டிருக்கா! அவளப் போய்ப் பாருப்பா!" என்றார் கிருஷ்ணா!
"இருங்கப்பா! அவளுக்கு ஒண்ணுமில்ல! அவள நா சமாதானப்படுத்திக்கறேன்! ஆனா இதுதான் இப்ப முக்கியம்! இதுக்கு இன்னிக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்!" என்று தன் தந்தையிடம் கூறிவிட்டு மாமாவை நேராகப் பார்த்து சொன்னான்.
"என்ன சொன்னீங்க..... நானும் அவளும் குடும்பம் நடத்தவேயில்லன்னா.... குடும்பம்ன்னா என்ன மாமா... புருஷன் பொண்டாட்டின்னா என்னன்னு நெனச்சீங்க.... கல்யாணம் ஆனதும் எப்பவும் கொஞ்சிகிட்டும் குலாவிகிட்டும் இருக்கணும்! அவ கிட்ட எல்லா வேலையும் வாங்கிகணும்.... அவ கையால சமைச்சி சாப்பிடணும்... அவ கிட்ட எல்லா துணியையும் தோச்சி வாங்கிக்கணும்.... அப்றம் ராத்ரியானா...." என்று கூறிவிட்டு தன் கையை முறுக்கி காற்றில் கோபமாகக் குத்தினான்!
மாமா அவனை ஏளனமாகப் பார்த்தார்! அவன் தொடர்ந்தான்.
"பொண்டாட்டியா வரவ, இதெல்லாம் வாய மூடிகிட்டு செய்யணும்.... அப்றம் புருஷங்காரன் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரச்சே, அழகா பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிகிட்டு...." இன்னும் அதிகக் கோபமாக சுவற்றைக் குத்தினான்.
இதைக் கேட்டு ஐஷுவும் சௌமியும் சங்கடமாக நெளிந்தார்கள்!
"இப்டிதானே குடும்பம் நடத்தறீங்க நீங்க...." என்று ஏளனமாகக்
கேட்டான் வாசு!
இதிலென்ன தப்பு என்பது போல மாமா அவனைப் பார்த்தார்.
"பொண்டாட்டியோட தேவைகளை அவ சொல்லாமயே புரிஞ்சிகிட்டு அத நிறைவேத்தறவன்தான் புருஷன்! அவ கண்லேந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவிடாதவன்தான் புருஷன்! அவ கிட்ட தன்னோட கோவத்தக் காட்டி அவள கண்கலங்க வெக்காதவன்தான் புருஷன்! அவ பசிக்கிதுன்னு வாயால சொல்லாமலே அவ பசிய புரிஞ்சி அத போக்கறவன்தான் புருஷன்! ஒரு பொண்ணு யார் கூட எந்த பயமும் இல்லாம நிம்மதியா பாதுகாப்பா உணர்ந்து தன்னை மறந்து தூங்கறாளோ அவன்தான் அவளுக்கு நல்ல புருஷன்னு அர்த்தம்!"
கேட்டிருந்த யாமினியின் அழுகை குறைந்தது! ஐஷுவும் சௌமியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்! பவதாரிணியும் கிருஷ்ணாவும் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்! ஆனால் ருக்மணி மாமி கண்கலங்கினாள். இதைப் பார்த்த வாசு மேலும் சொன்னான்.
"பொண்டாட்டின்னா யாரு மாமா..... புருஷனோட தேவைகளை மட்டும் செய்யறவளா என்ன..... எல்லா வேலையும் பொண்டாட்டிகிட்ட தள்ளறவன்! ஏன்.... புருஷனுக்கு கைகால் இல்ல? அவன் என்ன எதுக்கும் கையாலாகாதவனா? எதுக்கும் கையாலாகலன்னா அந்தக் கேடு கெட்டவனுக்கு பொண்டாட்டி மட்டும் எதுக்கு? பொண்டாட்டின்னா, புருஷன் சொல்லாமலேயே அவன் பிரச்சனை என்னன்னு புரிஞ்சிக்கறவதான் பொண்டாட்டி! எந்த சூழ்நிலையிலயும் எப்படிப்பட்ட பிரச்சனை வந்த போதும் புருஷன் கூட நின்னு அவனுக்கு மானசீகமா சப்போர்ட் பண்றவதான் பொண்டாட்டி! புருஷனுக்கு சமைச்சி போட மட்டும் பொண்டாட்டியில்ல.... அவனுக்கு எதுனா பிரச்சனையிருக்கும் போது சமயோஜிதமா செயல்படறவதான் பொண்டாட்டி! எல்லாத்துக்கும் மேல யார் கூட இருக்கும்போது அவன் மனசில இந்த உலகத்தையே ஜெயிக்கற அளவுக்கு சக்தி வருதோ அவதான் அவனுக்கு நல்ல பொண்டாட்டி!
இதுக்கு மேல கொஞ்சறதும் குலாவறதும்தான் வாழ்க்கைன்னு நீங்க நெனச்சா அது உங்க அறியாமை!
நா யாமிக்கு நல்ல புருஷன்! அத விட யாமினி எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல பொண்டாட்டி! நாங்க புருஷன் பொண்டாட்டியாதான் வாழறோம்! இத நாங்க யாருக்கும் நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல!"
ருக்மணி மாமி வாசுவிடம் கூறினாள்!
"வேணாம் வாசு! அவர்தான் ஏதோ புரியாம பேசறார்ன்னா.... நீயும் ஏன் அவர்கூட மல்லுக்கு நிக்கற! விடு! அவருக்காக நா மன்னிப்பு கேக்கறேன்! மன்னிச்சுடுப்பா!"
"நீங்க ஏன் மாமி, எங்கிட்ட மன்னிப்பு கேக்கறீங்க! நீங்க என்ன தப்பு பண்ணீங்க!"
"ஐயோ விடேன்! அவருக்கு எதுனா ஆகிடப்போறதுடா...." தன் கணவனின் ரத்த அழுத்தத்தை மனதில் வைத்து கூறினாள் மாமி!
"பாருங்க! நல்லாப் பாருங்க மாமா! நீங்க இப்டி கத்தறதுனால உங்க உடம்புக்கு எதாவது வந்துடுமோன்னு பதறறாங்களே! இவங்க நல்ல பொண்டாட்டி! சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாமா! உங்க இலக்கணப்படியும் சரி! நா சொன்ன இலக்கணப்படியும் சரி! மாமி உங்களுக்கு எப்பவுமே நல்ல பொண்டாட்டியாதான் நடந்துகிட்டிருக்காங்க! ஆனா நீங்க ஒரு நல்ல புருஷன் கிடையாது! நல்ல தகப்பன் கிடையாது! நல்ல மகன் கிடையாது!" என்று கூறி நிறுத்தி பின்னர் மிக மிக அதிகக் கோபமாக, கடுமையான குரலில் "நல்ல அண்ணனும் கிடையாது!" என்று கூறிவிட்டு யாமினியின் அருகில் வேகமாகச் சென்றான்!
அவளை கைதூக்கி எழுப்பினான். அவளுடைய கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினான்!
"நீ ஏன் யாமினி, இந்தாள் பேச்செல்லாம் கேட்டு இப்டி அழற! உன் கண்ணீருக்கு மதிப்பு ரொம்ப ஜாஸ்த்தி! அத நீ இப்டி தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் செலவழிச்சி வீணாக்காத!"
"ஆனா.... அவர் சொல்ற மாதிரி நா கெட்டுப் போனவதானே வாசு!" என்று மேலும் அழுதாள் யாமினி!
"ஒரு பொண்ண வெறும் உடம்பா பாக்கறவங்க அப்டிதான் உளறுவாங்க! பொண்ணுங்கறவ ஒரு உயிர்! அவளுக்கும் மனசு இருக்கு! அவளுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கு! உன்ன நா உயிராதான் பாக்கறேன்! அதுவும் எனக்கே எனக்குன்னு இருக்கற என்னோட சொந்த உயிராதான் பாக்கறேன்! நீ என் உயிர் யாமினி! நீ என்ன நெனச்சி என்ன கல்யாணம் பண்ணிகிட்டியோ.... ஆனா உன் கழுத்தில இப்டி நெனச்சிதான் தாலி கட்டினேன்!" என்றான் வாசு தெளிவாக!
யாமினிக்கு அவன் சொல்வது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது! மகிழ்ச்சியாக இருந்தது! தன்னையும் ஒருவன் உயிராக நினைக்கிறானா என்று நினைத்தாள்!
மாமா மறுபடியும் குறுக்கிட்டார்!