Sugaaa
முதலமைச்சர்
???நந்தினியின் தெளிவான பேச்சு அகிலாவின் பிரதியோ. .....
???நந்தினியின் தெளிவான பேச்சு அகிலாவின் பிரதியோ. .....
Oh.....sorry....na enamo prachana nu thappa nenachiten.....சற்று நிதானித்துவிட்டு, "இந்த ஊருக்கு வரதுக்கு காரணம்... எங்க ஊரும் இது தான்... எங்க அக்கா இங்க தான் இருக்கா..." என்று கூறி இடைவெளி விட்டாள் நந்தினி.
"வேலையை விட்டதுக்குக் காரணம்... எனக்கு பிடிக்கலை..." என்று தோளை குலுக்கினாள்.
"சம்பளம் குடுக்கிறாங்கன்னு வேலை பார்க்கணும் அப்படிங்கிற எண்ணம் எல்லாம் எனக்கில்லை... நான் படித்த படிப்பை ரசிச்சு... அனுபவிச்சு வேலை பார்க்கணும்... எதாவது புதுசா பண்ணனும்... அது என் மனசுக்கு பிடிச்சதா இருக்கனும்.... வேலை மட்டும் இல்லை மனிதர்கள் உட்பட..." என்று ராம் பிரசாத்தின் கேள்விக்குப் பதில் கூற ஆரம்பித்து, இருபொருள் பட முடித்தாள் நந்தினி.
'இவள் ஹனியில் எதோ விஷயம் இருக்கும்...' என்று எண்ணினான் ராம் பிரசாத்.
"நீங்க என்ன முடிவோடு, வேலையை விட்டுவிட்டு இங்க இருக்கீங்க?" என்று தெளிவாக கேட்டாள் நந்தினி.
இது வரை ராம் பிரசாத்தை யாரும் கேள்வி கேட்டதில்லை. அவர்கள் கிராமத்தில் ராம் பிரசாத் அதிகமாகப் படித்திருப்பதால் அவனுக்கென்று தனி மரியாதை உண்டு... ராம் பிரசாத் தன் கனவை யாரிடமும் இது வரை பகிர்ந்து கொண்டதும் இல்லை... 'ஏதோ ஒரு பொம்மை செய்ததால், இவளுக்கு எல்லாம் தெரியுமா? இவளால் என் ஆசையை… கனவைப் புரிந்து கொள்ள முடியுமா?' என்ற யோசனையோடு நந்தினியைச் சந்தேகமாக பார்த்தான் ராம் பிரசாத்.
"ஒரு நல்ல காரணம் சொல்ற மாதிரி இருந்தா சொல்லுங்க... நேத்து மாதிரி மொக்கை கதை எல்லாம் வேண்டாம்..." என்று நந்தினி நக்கல் தொனியில் கூற, ராம் பிரசாத் அவளைக் கேள்வியாக பார்த்தான்.
ராம் பிரசாத்தின் பார்வையை சட்டை செய்யமால், தன் பொருட்களை தன் பையில் அடுக்கி வைக்க, "எது மொக்கைக் கதை?" என்று கோபமாக கேட்டான் ராம் பிரசாத்.
"உங்க கதை தான்... ஒரு பொண்ணுக்கு நம்ம வீட்டைப் பிடிக்குமா? நாம வாழற ஊரைப் பிடிக்குமா? நம்ம கூட வாழ்க்கை முழுதும் வருவாளான்னு கூட தெரியாம லவ் பண்ண வேண்டியது... அப்புறம் அந்தப் பெண்ணை குறை சொல்ல வேண்டியது..." என்று நந்தினி வியாக்கியானம் பேச, "நான் யாரையும் குறை சொல்லை..." என்று அழுத்தமாகக் கூறினான் ராம் பிரசாத்.
"நான் உங்களைச் சொல்லலை... பொதுவா சொன்னேன்..." என்று நந்தினி தோளை குலுக்க, ராம் பிரசாத் மௌனம் காத்தான்.
"தப்பு ரெண்டு பக்கமும் தான்... ஆனால், லவ் ஸ்டோரி சுமார் தான்." என்று நந்தினி முகம் சுழிக்க, 'இவ இப்ப என்ன சொல்ல வரா?' என்று நந்தினியை யோசனையாகப் பார்த்தான் ராம் பிரசாத்.
அவர்கள் பேச்சை திசை திருப்பும் விதமாக, "ராம்... நந்தினி... சாப்பிட வாங்க..." என்ற குரல் கேட்க, நந்தினி வெளியே சென்றாள்.
'பழைய விஷயத்தை எண்ணி மனதைக் குழப்பி, நம்மிடம் சண்டை போடுவாளோ? சந்தேகப்படுவாளோ? இல்லை ஏதோ யதார்தமாகத்தான் பேசுகிறாளா?' போன்ற கேள்விகளால் குழம்பினான் ராம் பிரசாத்.
'காதலில் விழுவது அத்தனை பெரிய குற்றமா?' என்ற கேள்வி ராம் பிராசத்தின் மனதில் எழுந்தது.
"ராம்..." என்று மீண்டும் அவன் பெயர் வீடெங்கும் ஒலிக்க, ராம் அவர்கள் அறையில் இருந்து வெளியே வந்தான்.
தேக்கால் செய்யப்பட்ட வேலைப் பாடு நிறைந்த சாப்பாடு மேஜை. பார்வதி, சிவசைலம் ஏதோ வேலையாக உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். சந்துரு, கோமதி, அகல்யா, சந்தோஷ் அமர்ந்திருக்க, ராம் பிரசாத் அமர, அவன் அருகே நந்தினி அமர்ந்தாள்.
இட்லி... தக்காளி சட்னி... பாசி பருப்பு சாம்பார்... கேசரி... அனைத்தும் மணக்க , "யாருக்கு பர்த்டே கேசரி பண்ணிருக்கீங்க?" என்று குழந்தை தனத்தோடு கேட்டான் சந்தோஷ்.
"பர்த்டே மட்டும் இல்லை டா... ஏதாவது சந்தோஷமான விஷயம் நாளும் கேசரி பண்ணலாம்..." என்று கூறினான் சந்துரு.
சந்தோஷ் சந்துருவை புரியாமல் பார்க்க, "நீ இங்க நம்ம வீட்டுக்கு வந்ததுக்குத் தான் கேசரி..." என்று அவனை மடியில் தூக்கி வைத்து அவனை கொஞ்சியபடியே கூறினான் சந்துரு.
குழந்தைகள் சாப்பிட்டு முடிக்கும் வரை, அமைதியாக இருந்த நந்தினி, அவர்கள் விளையாட சென்றவுடன், "உங்களுக்கும், அத்தானுக்கும் என்ன பிரச்சனை?" என்று சந்த்ருவிடம் கேட்டாள் நந்தினி.
"நந்தினி..." என்று ராம் நந்தினியிடம் அழுத்தமாகக் கூற, ராம்பிரசாத்திடம் மறுப்பாகத் தலை அசைத்து, "எல்லாருக்கும் பேசும் உரிமை இருக்கு ராம்..." என்று விளக்கமாகக் கூறினான் சந்துரு.
"அதுக்காக என்ன வேணாலும் கேட்கலாமா?" என்று ராம் பிரசாத் கோபமாக கேட்க, "நான் என்ன வேணாலும் கேட்கலை... எங்க அக்கா அந்தக் குடும்பத்தில் இருக்கா... நான் இங்க இருக்கேன்... நம்ம குடும்ப விஷயம் நான் தெரிஞ்சிக்க கூடாதா? அதனால் தான் கேட்கறேன்..." என்று நந்தினி தன்மையாக தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
'ஏன் இந்தத் திருமணத்தை செய்தீர்கள்?' என்று கேட்டு அனைவரையும் குற்றம் சாட்டாமல், அதே நேரத்தில் மௌனமாகவும் இல்லாமல், நினைத்ததை அவர்களுள் ஒருத்தியாக மாறிக் கேட்ட நந்தினியைக் கோமதியும், சந்துருவும் மெச்சும் பார்வை பார்த்தனர்.
அங்கு அமைதி நிலவ, மௌனத்தைக் கலைக்கும் விதமாக, "சுபா விரும்பிய பையனை வாசுவுக்கு பிடிக்கலை... அவுக வீட்ல ஏத்துக்களை... நான் அவுக வீட்டுக்குத் தெரியாமல் நான் பதிவு திருமணம் செய்து வச்சிட்டேன்..." என்று இட்லி சாப்பிட்டு கொண்டே, இட்லி சாப்பிடுவது போல் எளிதாகக் கூறினான் சந்துரு.
"அப்ப... எங்க அத்தான் கோபம் நியாயம் தான்... அவுங்க தங்கச்சிக்குக் கல்யாணம் செய்து வைத்தால் சும்மா இருப்பாங்களா?" என்று நந்தினி தன் கண்களை உருட்டி நிதானமாகக் கூற, ராம் பிரசாத், கோமதி இருவரும் நந்தினியின் தைரியத்தை சற்று பயத்தோடு பார்த்தனர். சிறிதும் உணர்ச்சிவசப்படாமல், நந்தினியை ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் சந்துரு.
"சுபாவை நான் யாரோவா நினைச்சதே இல்லை... எனக்கு ராம் எப்படியோ அப்படி தான் சுபாவும்... சுபா எனக்கும் தங்கை தான்..." என்று உரிமையோடு கூறினான் சந்துரு.
"ஆனால்..." என்று நந்தினி கேட்ட கேள்வியிலும், அவள் மேலே பேசிய பேச்சிலும் சந்துரு அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான். ராம் பிரசாத் அவளைக் கடுப்பாக பார்த்தான். கோமதி சற்று பொறாமை ததும்பும் விழிகளோடு பார்த்தாள்.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…