Dear Friends,
Thank you so much for your likes and comments.
இரண்டல்ல ஒன்று – 15
உணர்ச்சி பிழம்புகளால் வாசுதேவன் தடுமாறிக் கொண்டிருக்க, "அவுகளை... வான்னு கூப்பிடுங்களேன்..." என்று சந்துருவின் காதில் முணுமுணுத்தாள் கோமதி.
"தேவா எனக்காக வரலை... அவன் மச்சினிச்சியைப் பாக்க வந்திருக்கான்... அவன் பொஞ்சாதி மனசு வருத்தப்படக்கூடாதுன்னு வந்திருக்கான்..." என்று சந்துரு கூற, 'இவுகளுக்கு பிரச்சனையை முடிக்கும் எண்ணம் இருக்கா இல்லியானே தெரியலியே...' என்ற எண்ணத்தோடு சந்துருவை யோசனையாகப் பார்த்தாள் கோமதி.
தன் மனைவியின் பார்வைக்கெல்லாம் அசறுவேனா, என்பது போல் சந்துரு வாசுதேவனை பார்த்துக் கொண்டிருந்தான்.
வாசுதேவன், தன் என்ன ஓட்டத்தை ஆழ் மனதில் புதைத்துவிட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்றான்.
கோமதி அனைவருக்கும் பர்பி, மிச்சர் கொடுக்க... சந்துரு கோமதியிடம், "தேவாவுக்கு லட்டு கொண்டு வா... அவனுக்கு பர்பி பிடிக்காது." என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.
ஆனால், சந்துருவின் உதட்டசைவில் அவன் கூறியதை புரிந்து கொண்ட வாசுதேவன், "எனக்கு எதுவும் வேணாம்..." என்று கோமதியிடம் மறுப்பு தெரிவித்தான்.
சந்துருவின் மொத்த குடும்பமும் வாசுதேவனைக் கவனிக்க, பவித்ராவின் குடும்பம் தீவிரமாக நந்தினியிடம் பேசி கொண்டிருந்தனர்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்க, வாசுதேவன் யாரிடமும் பேசாமல் அமைதியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
வாசுதேவனின் ஒதுக்கம், சந்துருவின் குடும்பத்திற்கு மட்டுமே தெளிவாக தெரிந்தது.
சந்தோஷ், அகல்யா இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, 'சந்தோஷ்... அதுக்குள்ள இந்த வீட்டில் நெருக்கமா பழகிட்டானே...' என்ற எண்ணத்தோடு தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்குப் பின், நந்தினியின் பெற்றோர் விடைபெறுகையில், "நாங்க மூணு நாளில் சென்னை கிளம்பறோம்..." என்று நந்தினியின் தாய் செல்வி கூற, அனைவரும் சம்மதமாக தலை அசைக்க, "என்ன அத்தை அதுக்குள்ள சென்னை கிளம்பறீக? இருந்துட்டு போலாமே..." என்று கேள்வியாய் நிறுத்தினான் வாசுதேவன்.
"இல்லை மாப்பிளை லீவு அவ்வுளவு தான்... அது தான் நந்தினிக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்களே..." என்று ஆவுடையப்பன் வாசுதேவனிடம் உரிமையாகக் கூற, வாசுதேவன் சிரித்த முகமாகத் தலை அசைத்தான்.
"நாங்க உங்க வீட்டுக்கும் வரோம்.. அண்ணாச்சி கிட்டயும்... மதினி கிட்டயும் சொல்லிட்டு தான் கிளம்புவோம்..." என்று செல்வி கூற, வாசுதேவன் புன்னகைத்துக் கொண்டான்.
"பவித்ரா... நாம கிளம்பலாமா?" என்று வாசுதேவன் கேட்க, "அப்பா... நாளைக்கி லீவு தானே... நான் விளையாடிட்டு நாளைக்கி வரட்டுமா..." என்று இறைஞ்சுதலாகக் கேட்டான் சந்தோஷ்.
வாசுதேவன் அவன் உயரத்திற்கு அமர்ந்து, "இல்லை டா..." என்று பொறுமையாக பேச ஆரம்பிக்க, "தேவா பெரியப்பா... ப்ளீஸ்..." என்று கெஞ்சுதலாக கேட்டாள் அகல்யா.
"அட.. பெரியப்பாவா? இதெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுத்தது?" என்று அகல்யாவை அருகே அழைத்து வாசுதேவன் கேட்க, "சுபா அத்தை..." என்று பளிச்சென்று பதில் கூறினாள் அகல்யா.
அங்கு அசாத்திய அமைதி நிலவ, 'இவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?' என்ற யோசனையில் வாசுதேவன் மூழ்க, அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக, "பெரியப்பா ப்ளீஸ்... சந்தோஷ் இங்க இருக்கட்டுமே... புது சித்தி இங்க தானே இருக்காங்க..." என்று சமர்த்தியசாலித்தனமாக அகல்யா நந்தினியை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
குழந்தையை ஏமாற்ற விரும்பாமல், "அத்தான் சந்தோஷ் இங்க இருக்கட்டுமே... நான் பார்த்துப்பேன்..." என்று நந்தினி அகல்யாவுக்கு ஆதரவாகப் பேச, 'இவ பாத்துப்பாளா? ஏன் நாங்கெல்லாம் பாத்துக்க மாட்டோமா?' என்று எண்ணினான் ராம் பிரசாத்.
பவித்ரா செய்வதறியாமல் தர்ம சங்கடமாக நெளிந்தாள். முதியவர்கள் அங்கு நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சந்தோஷ் இங்க இருக்கட்டும்... அவன் கேட்டா… நான் கொண்டு வந்து விடறேன்..." என்று அவர்கள் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சந்துரு.
வாசுதேவன் எதுவும் கூறாமல் கிளம்ப, பவித்ரா சந்தோஷுக்கு பல அறிவுரைகளைக் கூறிவிட்டு கிளம்பினாள்.
பவித்ரா ஜீப்பில் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க… வாசுதேவனின் எண்ணங்கள் பலவாக சுற்றிக் கொண்டிருக்க… எதுவும் பேசாமல் மௌனமாக வாசுதேவன் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவர்கள் உள்ளே செல்ல, "சந்தோஷ் எங்க?" என்று உத்தமி தன் கண்களால் சந்தோஷை தேடியபடியே கேட்க, "அவன் நந்தினியோடு இருக்கான்..." என்று பவித்ரா தயக்கமாக கூறினாள்.
"யாராவது புதுசா கல்யாணம் ஆனவங்க கிட்டக் குழந்தையை விட்டுவிட்டு வருவாகளா?" என்று உத்தமி பவித்ராவிடம் சிடுசிடுக்க, பவித்ரா சுபாவை கண்களால் தேடினாள்.
'அது தானே... என்கிட்டே பேச மாட்டா... ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துகிட்டு... அப்படியே புருஷன் காதில் ஓதி ஓதி எல்லா வேலையையும் முடிச்சிப்பா...' என்று எண்ணியவராக பவித்ராவை அளவிடும் விதமாகப் பார்த்தார்.
"பவித்ரா..." என்று வாசுதேவன் அழைக்க, அவர்கள் அறையை நோக்கி வேகமாகச் சென்றாள் பவித்ரா.
"எப்பப்பாரு... கூப்பிட்டு கூப்பிட்டு என்னதென் சொல்லுவானோ?" என்று உத்தமி முணுமுணுக்க, "நான் வேணா மருமககிட்ட கேட்டு சொல்லட்டுமா?" என்று நயாண்டி தொனியில் கேட்டபடியே அங்கு வந்து அமர்ந்தார் மஹாதேவன்.
"என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீக போல? எல்லாம் நீங்க ஆசை பட்டபடி நடக்குதுன்னு ரொம்ப ஆனந்த படவேண்டாம்... அவன் பொஞ்சாதிக்காக அவுக வீட்டுக்கு போயிருக்கான்... அம்புட்டுதேன்... அவன் பழசை எதையும் மறக்கலை... மறக்கவும் மாட்டான்..." என்று உத்தமி கழுத்தை நொடிக்க, 'காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது...' என்ற எண்ணத்தோடு மஹாதேவன் சிரித்து கொண்டார்.
பவித்ரா அவர்கள் அறையில் யோசனையாக அமர்ந்திருக்க, "எட்டி, என்ன யோசனை பலமா இருக்கு... அத்தானுக்கு எதுவும் வச்சிருக்கியா?" என்று வாசுதேவன் நாற்காலியில் அமர்ந்தபடி பவித்ராவிடம் வம்பிழுத்தான்.
"ம்... ச்.." என்று பவித்ரா உச்சு கொட்ட, "ஒத்தை தங்கைக்கு ஜோரா கல்யாணத்தை முடிச்சிருக்கீக? எதுக்கு இம்புட்டு சலிப்பு?" என்று பவித்ராவின் முகம் பார்த்து கேட்டான் வாசுதேவன்.
"சந்தோஷ் இருந்துப்பானா? புது இடம் ஆச்சே? நாம அவனை விட்டுட்டு வந்திருக்க கூடாதோ?" என்று யோசனையாக கேட்டாள் பவித்ரா.
"ஆம்புளை புள்ளை டீ... அம்மா அம்மான்னு உன் பின்னாடி அலையாகக் கூடாது..." என்று வாசுதேவன் மிடுக்காகக் கூற, 'அதை நீங்க சொல்றீங்களா?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் பவித்ரா.
அவள் பார்வையை ரசித்துச் சிரித்து, "இருந்தாலும் உனக்குக் குசும்பு அதிகந்தென்..." என்று வாசுதேவன் சிரித்தான்.
பவித்ரா எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, "சந்துரு பார்த்துப்பான்..." என்று நேரடியாகக் கூறினான் வாசுதேவன்.
Thank you so much for your likes and comments.
இரண்டல்ல ஒன்று – 15
உணர்ச்சி பிழம்புகளால் வாசுதேவன் தடுமாறிக் கொண்டிருக்க, "அவுகளை... வான்னு கூப்பிடுங்களேன்..." என்று சந்துருவின் காதில் முணுமுணுத்தாள் கோமதி.
"தேவா எனக்காக வரலை... அவன் மச்சினிச்சியைப் பாக்க வந்திருக்கான்... அவன் பொஞ்சாதி மனசு வருத்தப்படக்கூடாதுன்னு வந்திருக்கான்..." என்று சந்துரு கூற, 'இவுகளுக்கு பிரச்சனையை முடிக்கும் எண்ணம் இருக்கா இல்லியானே தெரியலியே...' என்ற எண்ணத்தோடு சந்துருவை யோசனையாகப் பார்த்தாள் கோமதி.
தன் மனைவியின் பார்வைக்கெல்லாம் அசறுவேனா, என்பது போல் சந்துரு வாசுதேவனை பார்த்துக் கொண்டிருந்தான்.
வாசுதேவன், தன் என்ன ஓட்டத்தை ஆழ் மனதில் புதைத்துவிட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்றான்.
கோமதி அனைவருக்கும் பர்பி, மிச்சர் கொடுக்க... சந்துரு கோமதியிடம், "தேவாவுக்கு லட்டு கொண்டு வா... அவனுக்கு பர்பி பிடிக்காது." என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.
ஆனால், சந்துருவின் உதட்டசைவில் அவன் கூறியதை புரிந்து கொண்ட வாசுதேவன், "எனக்கு எதுவும் வேணாம்..." என்று கோமதியிடம் மறுப்பு தெரிவித்தான்.
சந்துருவின் மொத்த குடும்பமும் வாசுதேவனைக் கவனிக்க, பவித்ராவின் குடும்பம் தீவிரமாக நந்தினியிடம் பேசி கொண்டிருந்தனர்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்க, வாசுதேவன் யாரிடமும் பேசாமல் அமைதியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
வாசுதேவனின் ஒதுக்கம், சந்துருவின் குடும்பத்திற்கு மட்டுமே தெளிவாக தெரிந்தது.
சந்தோஷ், அகல்யா இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, 'சந்தோஷ்... அதுக்குள்ள இந்த வீட்டில் நெருக்கமா பழகிட்டானே...' என்ற எண்ணத்தோடு தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்குப் பின், நந்தினியின் பெற்றோர் விடைபெறுகையில், "நாங்க மூணு நாளில் சென்னை கிளம்பறோம்..." என்று நந்தினியின் தாய் செல்வி கூற, அனைவரும் சம்மதமாக தலை அசைக்க, "என்ன அத்தை அதுக்குள்ள சென்னை கிளம்பறீக? இருந்துட்டு போலாமே..." என்று கேள்வியாய் நிறுத்தினான் வாசுதேவன்.
"இல்லை மாப்பிளை லீவு அவ்வுளவு தான்... அது தான் நந்தினிக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்களே..." என்று ஆவுடையப்பன் வாசுதேவனிடம் உரிமையாகக் கூற, வாசுதேவன் சிரித்த முகமாகத் தலை அசைத்தான்.
"நாங்க உங்க வீட்டுக்கும் வரோம்.. அண்ணாச்சி கிட்டயும்... மதினி கிட்டயும் சொல்லிட்டு தான் கிளம்புவோம்..." என்று செல்வி கூற, வாசுதேவன் புன்னகைத்துக் கொண்டான்.
"பவித்ரா... நாம கிளம்பலாமா?" என்று வாசுதேவன் கேட்க, "அப்பா... நாளைக்கி லீவு தானே... நான் விளையாடிட்டு நாளைக்கி வரட்டுமா..." என்று இறைஞ்சுதலாகக் கேட்டான் சந்தோஷ்.
வாசுதேவன் அவன் உயரத்திற்கு அமர்ந்து, "இல்லை டா..." என்று பொறுமையாக பேச ஆரம்பிக்க, "தேவா பெரியப்பா... ப்ளீஸ்..." என்று கெஞ்சுதலாக கேட்டாள் அகல்யா.
"அட.. பெரியப்பாவா? இதெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுத்தது?" என்று அகல்யாவை அருகே அழைத்து வாசுதேவன் கேட்க, "சுபா அத்தை..." என்று பளிச்சென்று பதில் கூறினாள் அகல்யா.
அங்கு அசாத்திய அமைதி நிலவ, 'இவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?' என்ற யோசனையில் வாசுதேவன் மூழ்க, அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக, "பெரியப்பா ப்ளீஸ்... சந்தோஷ் இங்க இருக்கட்டுமே... புது சித்தி இங்க தானே இருக்காங்க..." என்று சமர்த்தியசாலித்தனமாக அகல்யா நந்தினியை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
குழந்தையை ஏமாற்ற விரும்பாமல், "அத்தான் சந்தோஷ் இங்க இருக்கட்டுமே... நான் பார்த்துப்பேன்..." என்று நந்தினி அகல்யாவுக்கு ஆதரவாகப் பேச, 'இவ பாத்துப்பாளா? ஏன் நாங்கெல்லாம் பாத்துக்க மாட்டோமா?' என்று எண்ணினான் ராம் பிரசாத்.
பவித்ரா செய்வதறியாமல் தர்ம சங்கடமாக நெளிந்தாள். முதியவர்கள் அங்கு நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சந்தோஷ் இங்க இருக்கட்டும்... அவன் கேட்டா… நான் கொண்டு வந்து விடறேன்..." என்று அவர்கள் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சந்துரு.
வாசுதேவன் எதுவும் கூறாமல் கிளம்ப, பவித்ரா சந்தோஷுக்கு பல அறிவுரைகளைக் கூறிவிட்டு கிளம்பினாள்.
பவித்ரா ஜீப்பில் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க… வாசுதேவனின் எண்ணங்கள் பலவாக சுற்றிக் கொண்டிருக்க… எதுவும் பேசாமல் மௌனமாக வாசுதேவன் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவர்கள் உள்ளே செல்ல, "சந்தோஷ் எங்க?" என்று உத்தமி தன் கண்களால் சந்தோஷை தேடியபடியே கேட்க, "அவன் நந்தினியோடு இருக்கான்..." என்று பவித்ரா தயக்கமாக கூறினாள்.
"யாராவது புதுசா கல்யாணம் ஆனவங்க கிட்டக் குழந்தையை விட்டுவிட்டு வருவாகளா?" என்று உத்தமி பவித்ராவிடம் சிடுசிடுக்க, பவித்ரா சுபாவை கண்களால் தேடினாள்.
'அது தானே... என்கிட்டே பேச மாட்டா... ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துகிட்டு... அப்படியே புருஷன் காதில் ஓதி ஓதி எல்லா வேலையையும் முடிச்சிப்பா...' என்று எண்ணியவராக பவித்ராவை அளவிடும் விதமாகப் பார்த்தார்.
"பவித்ரா..." என்று வாசுதேவன் அழைக்க, அவர்கள் அறையை நோக்கி வேகமாகச் சென்றாள் பவித்ரா.
"எப்பப்பாரு... கூப்பிட்டு கூப்பிட்டு என்னதென் சொல்லுவானோ?" என்று உத்தமி முணுமுணுக்க, "நான் வேணா மருமககிட்ட கேட்டு சொல்லட்டுமா?" என்று நயாண்டி தொனியில் கேட்டபடியே அங்கு வந்து அமர்ந்தார் மஹாதேவன்.
"என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீக போல? எல்லாம் நீங்க ஆசை பட்டபடி நடக்குதுன்னு ரொம்ப ஆனந்த படவேண்டாம்... அவன் பொஞ்சாதிக்காக அவுக வீட்டுக்கு போயிருக்கான்... அம்புட்டுதேன்... அவன் பழசை எதையும் மறக்கலை... மறக்கவும் மாட்டான்..." என்று உத்தமி கழுத்தை நொடிக்க, 'காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது...' என்ற எண்ணத்தோடு மஹாதேவன் சிரித்து கொண்டார்.
பவித்ரா அவர்கள் அறையில் யோசனையாக அமர்ந்திருக்க, "எட்டி, என்ன யோசனை பலமா இருக்கு... அத்தானுக்கு எதுவும் வச்சிருக்கியா?" என்று வாசுதேவன் நாற்காலியில் அமர்ந்தபடி பவித்ராவிடம் வம்பிழுத்தான்.
"ம்... ச்.." என்று பவித்ரா உச்சு கொட்ட, "ஒத்தை தங்கைக்கு ஜோரா கல்யாணத்தை முடிச்சிருக்கீக? எதுக்கு இம்புட்டு சலிப்பு?" என்று பவித்ராவின் முகம் பார்த்து கேட்டான் வாசுதேவன்.
"சந்தோஷ் இருந்துப்பானா? புது இடம் ஆச்சே? நாம அவனை விட்டுட்டு வந்திருக்க கூடாதோ?" என்று யோசனையாக கேட்டாள் பவித்ரா.
"ஆம்புளை புள்ளை டீ... அம்மா அம்மான்னு உன் பின்னாடி அலையாகக் கூடாது..." என்று வாசுதேவன் மிடுக்காகக் கூற, 'அதை நீங்க சொல்றீங்களா?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் பவித்ரா.
அவள் பார்வையை ரசித்துச் சிரித்து, "இருந்தாலும் உனக்குக் குசும்பு அதிகந்தென்..." என்று வாசுதேவன் சிரித்தான்.
பவித்ரா எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, "சந்துரு பார்த்துப்பான்..." என்று நேரடியாகக் கூறினான் வாசுதேவன்.
Last edited: