Dear Friends,
Thank you so much for your likes and comments...
இரண்டல்ல ஒன்று – 19
நம்மை பற்றிப் பிறர் பேசவதை கேட்பதும் ஒரு சுவாரஸ்யம் தான்!
அந்தச் சுவாரசியம் வாசுதேவனின் முகத்தில் தெரிந்தாலும், அதை தாண்டி அவன் முகத்தில் சிந்தனை ரேகைகைள். 'பவித்ரா நந்தினியிடம் மறுத்துப் பேசினால்… நந்தினி சந்துரு குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாள்? அவுக பேசுவதாவும் சொன்னாளே…' என்ற கேள்வி வாசுதேவனின் நல்ல உள்ளத்தில் எழுந்தது.
‘சந்துருவை திட்டவோ... அவனிடம் சண்டையிடவோ... அவனைக் குறை கூறவோ... முழு உரிமை தனக்கு மட்டுமே உண்டு…’ என்ற இறுமாப்பும் வாசுதேவனின் முகத்தில் தெரிந்தது.
பவித்ரா நந்தினியை அமைதியாகப் பார்த்தாள்.
'நந்தினியின் கூற்றை மறுத்து... என் அத்தானுக்கு சாதகமாகப் பேச, எனக்கு ஒரு நொடி போதும்... ஆனால்? அந்த ஒரு நொடியில் நான் என் தங்கை நந்தினி வாழப் போகும் வீட்டின் மீதுள்ள நம்பிக்கையை... அவள் தன் கணிப்பின் மீதுள்ள நம்பிக்கையை உடைத்தது போல் ஆகிவிடும்...' என்று பவித்ராவின் நிதானம் அவளை எச்சரித்தது.
"நீ சொல்றது... உங்க வீட்டில் சொல்றது எல்லாம் சரி தான்... அத்தானுக்கு அவங்க அம்மா மேல பாசம் ஜாஸ்தி தான்... அத்தை சொல்லறதை கேட்கத் தான் செய்வாங்க... ஆனால் அதில் என்ன தப்பு இருக்கு? அம்மா சொல்றதை பசங்க கேட்க மாட்டாங்களா?" என்று பவித்ரா கேள்வியோடு நிறுத்த, வாசுதேவனின் உதடுகள் மெலிதாக வளைந்தது.
'யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டா...' என்று மனதார தன் மனைவியை மெச்சினான் வாசுதேவன்.
"ஏன் நீயும்... நானும்... அம்மா, அப்பா சொல்றதை கேட்கறதில்லையா?" என்று பவித்ரா கேட்க, நந்தினி அவளை யோசனையாகப் பார்த்தாள்.
"அத்தானுக்கு அவுங்க அம்மாக்கு அப்புறம் தான் எல்லாரும்..." என்று நந்தினி கூறியதை நந்தினி போலவே கூறி சிரித்தாள் பவித்ரா.
"ஏன் அக்கா சிரிக்கிற?" என்று நந்தினி பரிதாபமாகக் கேட்க, "அந்த வரிசையெல்லாம் எனக்குத் தெரியாது நந்தினி... ஆனால்..." என்று பவித்ரா ஆரம்பிக்க, வாசுதேவனின் புருவங்கள் யோசனையாக நெளிந்தது.
"அத்தான்... வேறு நான் வேறு கிடையாது பவி... நாங்க ரெண்டு பேரும் ஒன்னு தானே... அத்தான் மனசில் பட்டியில் போட்டு இடம் பிடிக்க எனக்கு அவசியமில்லை... அத்தான் மனசே நான் தான் நந்தினி..." என்று முகத்தில் வெட்கத்தோடு, குரலில் காதல் வழிய கூறினாள் பவித்ரா.
வாசுதேவன் கம்பீர புன்னகையோடு, மீசையை முறுக்கிக் கொண்டு பவித்ராவின் சொல்லில், 'போங்கடா... ஆண்டவனே எங்க பக்கம்...' என்ற பாவனையோடு பட்டாளை நோக்கி நடந்து சென்றான்.
"அப்படினா நீ சந்தோஷமா தான் இருக்க?" என்று நந்தினி சந்தேகத்தோடு கேட்க, "ஏய்... உனக்கு என்ன பிரச்சனை?" என்று பவித்ரா தன் வேலையை விட்டுவிட்டு நந்தினியை கூர்மையாகப் பார்த்து கோபமாகக் கேட்டாள்.
"நீ கோபப்படறதில் அர்த்தம் இல்லை அக்கா... நான் சம்பந்தமில்லாத யார் கிட்டயோ அவங்க வீட்டு விஷயத்தைத் துருவி துருவி அநாகரிகமாக கேட்கலை... என் அக்கா கிட்ட கேட்கறேன்... என் அக்கா என்னை மாதிரி வெளிப்படையா பேச மாட்டா... ஒவ்வொரு விஷயத்தையும் வெளிய சொல்லாம வருத்தப்படுவா..." என்று சிடுசிடுப்பாகக் கூறினாள் நந்தினி.
பவித்ரா மௌனம் காக்க, "நீ உன் அத்தானுக்கு மனசா இரு... இல்லை மூளையா இரு... எனக்கு அதை பத்தி கவலை இல்லை... எங்க இருந்தாலும் என் அக்கா சந்தோஷமா இருக்கனும்... இல்லைனா நான் அமைதியா இருக்க மாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள் நந்தினி.
"நான் சந்தோஷமா தான்டி இருக்கேன்..." என்று பவித்ரா சமாதானமாகக் கூற, "நீ பொய் சொல்ற அக்கா... சந்தோஷமா இருக்கிற நீ ஏன் கண்ணிலா சித்திரத்தை வரையனும்?" என்று நந்தினி நேரடியாகக் கேட்டாள்.
"உங்க மாமியார் படம் அத்தனை இருக்கு..." என்று கடுப்பாக கூறினாள் நந்தினி.
'எல்லாத்தையும் இவ பாத்து தொலைச்சிட்டா போல... உள்ள தானே வச்சிருந்தேன்...' என்று பவித்ரா சிந்திக்க, "இதில் உன் படம் வேற... அது உன் கையாலாகாத தனத்தை காண்பிக்குது..." என்று நந்தினி சிறு குழந்தையின் பிடிவாதத்தோடு கூறினாள்.
" அப்படி எல்லாம் இல்லை நந்தினி... பல விஷயங்கள் அறிவுக்கு புரியும் மனசுக்கு புரியாது... சுபா வீட்டை எதிர்த்து பண்ண திருமணம்... அதனால் வந்த ஏமாற்றம்... அது தான் அத்தை அப்படி இருக்கிறாங்க... ஆனா மத்த எல்லாருக்கும் நல்லவங்க தான்... சுபா வந்து போனாலும் அங்க எல்லாம் சுமுகமா இல்லை... மகனும் தன்னை விட்டுட்டு போயிருவானோன்னு அத்தைக்கு பயம்... அதனால் வீட்டை தன் கையில் வச்சிக்கணும்னுங்கிற எண்ணம்... " என்று உத்தமியை பற்றி கூறினாள் பவித்ரா.
நந்தினி திருப்தி இல்லமால் பார்க்க, “அம்மா வயசான காலத்தில் வருத்தப்பட கூடாதுங்குற சராசரி மகனோட ஆசை தான் உங்க அத்தானுக்கு... அவங்க அம்மாக்கு நான் விட்டுக் கொடுத்து போகணுமுன்னு, அத்தான் எனக்கு விட்டுக் கொடுக்கிறது நிறைய..." என்று நந்தினியிடம் பக்குவமாக கூறினாள் பவித்ரா.
நந்தினி தன் தமக்கையை பேச விட்டு அமைதியாக இருந்தாள்.
"எல்லாம் அறிவுக்கு புரிஞ்சாலும், இந்தப் பாழா போன மனசு ஏத்துக்காது... மனசு நல்லா தான் இருக்கும்... ஆனால், அந்த நொடி ஏமாற்றத்தை ஏத்துக்கும்போது வரக் கோபம் தான் இந்தக் கண்ணில்லா சித்திரங்கள்... என் கோபத்தின் வடிகால்... எனக்கும் வயசு கம்மி தானே... பொறுமை கம்மியாகும்... கோபம் வரும்... சில சமயம் விஷயங்களை எப்படி கையாளணுமுன்னு தெரியாது... இதெல்லாம் நம்ம பிறந்த வீட்டில் பழக்கமில்லை... இங்க தானே கத்துகிறோம்..." என்று தன் மனபாரத்தை முதன்முறையாக இறக்கி வைத்தாள் பவித்ரா.
வாழ்க்கை பாடத்தை ஒரு பெண் எவ்வளவு பொறுமையாக கற்று எத்தகைய சாமர்த்தியசாலித்தனமாக வாழ்வின் போக்கை கையாளுகிறாளோ அதுவே அவள் வாழ்வின் வெற்றியின் அளவுகோல்.
"இது வரைக்கும் நீ இதை சொன்னதே இல்லியே?" என்று நந்தினி வினவ, "பிரச்சனை இல்லாத வீடு உண்டா நந்தினி... சின்ன சின்னப் பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும்... மாமியார் அம்மாவாக முடியுமா? இல்லை மருமகள் தான் மகளாக முடியுமா?" என்று பவித்ரா விளக்கம் கொடுக்க, "சின்ன சின்னப் பிரச்சனைனா அத்தான் கிட்ட சொல்ல வேண்டியது தானே..." என்று நந்தினி தன் கண்களைச் சுருக்கி கேட்டாள்.
Thank you so much for your likes and comments...
இரண்டல்ல ஒன்று – 19
நம்மை பற்றிப் பிறர் பேசவதை கேட்பதும் ஒரு சுவாரஸ்யம் தான்!
அந்தச் சுவாரசியம் வாசுதேவனின் முகத்தில் தெரிந்தாலும், அதை தாண்டி அவன் முகத்தில் சிந்தனை ரேகைகைள். 'பவித்ரா நந்தினியிடம் மறுத்துப் பேசினால்… நந்தினி சந்துரு குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாள்? அவுக பேசுவதாவும் சொன்னாளே…' என்ற கேள்வி வாசுதேவனின் நல்ல உள்ளத்தில் எழுந்தது.
‘சந்துருவை திட்டவோ... அவனிடம் சண்டையிடவோ... அவனைக் குறை கூறவோ... முழு உரிமை தனக்கு மட்டுமே உண்டு…’ என்ற இறுமாப்பும் வாசுதேவனின் முகத்தில் தெரிந்தது.
பவித்ரா நந்தினியை அமைதியாகப் பார்த்தாள்.
'நந்தினியின் கூற்றை மறுத்து... என் அத்தானுக்கு சாதகமாகப் பேச, எனக்கு ஒரு நொடி போதும்... ஆனால்? அந்த ஒரு நொடியில் நான் என் தங்கை நந்தினி வாழப் போகும் வீட்டின் மீதுள்ள நம்பிக்கையை... அவள் தன் கணிப்பின் மீதுள்ள நம்பிக்கையை உடைத்தது போல் ஆகிவிடும்...' என்று பவித்ராவின் நிதானம் அவளை எச்சரித்தது.
"நீ சொல்றது... உங்க வீட்டில் சொல்றது எல்லாம் சரி தான்... அத்தானுக்கு அவங்க அம்மா மேல பாசம் ஜாஸ்தி தான்... அத்தை சொல்லறதை கேட்கத் தான் செய்வாங்க... ஆனால் அதில் என்ன தப்பு இருக்கு? அம்மா சொல்றதை பசங்க கேட்க மாட்டாங்களா?" என்று பவித்ரா கேள்வியோடு நிறுத்த, வாசுதேவனின் உதடுகள் மெலிதாக வளைந்தது.
'யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டா...' என்று மனதார தன் மனைவியை மெச்சினான் வாசுதேவன்.
"ஏன் நீயும்... நானும்... அம்மா, அப்பா சொல்றதை கேட்கறதில்லையா?" என்று பவித்ரா கேட்க, நந்தினி அவளை யோசனையாகப் பார்த்தாள்.
"அத்தானுக்கு அவுங்க அம்மாக்கு அப்புறம் தான் எல்லாரும்..." என்று நந்தினி கூறியதை நந்தினி போலவே கூறி சிரித்தாள் பவித்ரா.
"ஏன் அக்கா சிரிக்கிற?" என்று நந்தினி பரிதாபமாகக் கேட்க, "அந்த வரிசையெல்லாம் எனக்குத் தெரியாது நந்தினி... ஆனால்..." என்று பவித்ரா ஆரம்பிக்க, வாசுதேவனின் புருவங்கள் யோசனையாக நெளிந்தது.
"அத்தான்... வேறு நான் வேறு கிடையாது பவி... நாங்க ரெண்டு பேரும் ஒன்னு தானே... அத்தான் மனசில் பட்டியில் போட்டு இடம் பிடிக்க எனக்கு அவசியமில்லை... அத்தான் மனசே நான் தான் நந்தினி..." என்று முகத்தில் வெட்கத்தோடு, குரலில் காதல் வழிய கூறினாள் பவித்ரா.
வாசுதேவன் கம்பீர புன்னகையோடு, மீசையை முறுக்கிக் கொண்டு பவித்ராவின் சொல்லில், 'போங்கடா... ஆண்டவனே எங்க பக்கம்...' என்ற பாவனையோடு பட்டாளை நோக்கி நடந்து சென்றான்.
"அப்படினா நீ சந்தோஷமா தான் இருக்க?" என்று நந்தினி சந்தேகத்தோடு கேட்க, "ஏய்... உனக்கு என்ன பிரச்சனை?" என்று பவித்ரா தன் வேலையை விட்டுவிட்டு நந்தினியை கூர்மையாகப் பார்த்து கோபமாகக் கேட்டாள்.
"நீ கோபப்படறதில் அர்த்தம் இல்லை அக்கா... நான் சம்பந்தமில்லாத யார் கிட்டயோ அவங்க வீட்டு விஷயத்தைத் துருவி துருவி அநாகரிகமாக கேட்கலை... என் அக்கா கிட்ட கேட்கறேன்... என் அக்கா என்னை மாதிரி வெளிப்படையா பேச மாட்டா... ஒவ்வொரு விஷயத்தையும் வெளிய சொல்லாம வருத்தப்படுவா..." என்று சிடுசிடுப்பாகக் கூறினாள் நந்தினி.
பவித்ரா மௌனம் காக்க, "நீ உன் அத்தானுக்கு மனசா இரு... இல்லை மூளையா இரு... எனக்கு அதை பத்தி கவலை இல்லை... எங்க இருந்தாலும் என் அக்கா சந்தோஷமா இருக்கனும்... இல்லைனா நான் அமைதியா இருக்க மாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள் நந்தினி.
"நான் சந்தோஷமா தான்டி இருக்கேன்..." என்று பவித்ரா சமாதானமாகக் கூற, "நீ பொய் சொல்ற அக்கா... சந்தோஷமா இருக்கிற நீ ஏன் கண்ணிலா சித்திரத்தை வரையனும்?" என்று நந்தினி நேரடியாகக் கேட்டாள்.
"உங்க மாமியார் படம் அத்தனை இருக்கு..." என்று கடுப்பாக கூறினாள் நந்தினி.
'எல்லாத்தையும் இவ பாத்து தொலைச்சிட்டா போல... உள்ள தானே வச்சிருந்தேன்...' என்று பவித்ரா சிந்திக்க, "இதில் உன் படம் வேற... அது உன் கையாலாகாத தனத்தை காண்பிக்குது..." என்று நந்தினி சிறு குழந்தையின் பிடிவாதத்தோடு கூறினாள்.
" அப்படி எல்லாம் இல்லை நந்தினி... பல விஷயங்கள் அறிவுக்கு புரியும் மனசுக்கு புரியாது... சுபா வீட்டை எதிர்த்து பண்ண திருமணம்... அதனால் வந்த ஏமாற்றம்... அது தான் அத்தை அப்படி இருக்கிறாங்க... ஆனா மத்த எல்லாருக்கும் நல்லவங்க தான்... சுபா வந்து போனாலும் அங்க எல்லாம் சுமுகமா இல்லை... மகனும் தன்னை விட்டுட்டு போயிருவானோன்னு அத்தைக்கு பயம்... அதனால் வீட்டை தன் கையில் வச்சிக்கணும்னுங்கிற எண்ணம்... " என்று உத்தமியை பற்றி கூறினாள் பவித்ரா.
நந்தினி திருப்தி இல்லமால் பார்க்க, “அம்மா வயசான காலத்தில் வருத்தப்பட கூடாதுங்குற சராசரி மகனோட ஆசை தான் உங்க அத்தானுக்கு... அவங்க அம்மாக்கு நான் விட்டுக் கொடுத்து போகணுமுன்னு, அத்தான் எனக்கு விட்டுக் கொடுக்கிறது நிறைய..." என்று நந்தினியிடம் பக்குவமாக கூறினாள் பவித்ரா.
நந்தினி தன் தமக்கையை பேச விட்டு அமைதியாக இருந்தாள்.
"எல்லாம் அறிவுக்கு புரிஞ்சாலும், இந்தப் பாழா போன மனசு ஏத்துக்காது... மனசு நல்லா தான் இருக்கும்... ஆனால், அந்த நொடி ஏமாற்றத்தை ஏத்துக்கும்போது வரக் கோபம் தான் இந்தக் கண்ணில்லா சித்திரங்கள்... என் கோபத்தின் வடிகால்... எனக்கும் வயசு கம்மி தானே... பொறுமை கம்மியாகும்... கோபம் வரும்... சில சமயம் விஷயங்களை எப்படி கையாளணுமுன்னு தெரியாது... இதெல்லாம் நம்ம பிறந்த வீட்டில் பழக்கமில்லை... இங்க தானே கத்துகிறோம்..." என்று தன் மனபாரத்தை முதன்முறையாக இறக்கி வைத்தாள் பவித்ரா.
வாழ்க்கை பாடத்தை ஒரு பெண் எவ்வளவு பொறுமையாக கற்று எத்தகைய சாமர்த்தியசாலித்தனமாக வாழ்வின் போக்கை கையாளுகிறாளோ அதுவே அவள் வாழ்வின் வெற்றியின் அளவுகோல்.
"இது வரைக்கும் நீ இதை சொன்னதே இல்லியே?" என்று நந்தினி வினவ, "பிரச்சனை இல்லாத வீடு உண்டா நந்தினி... சின்ன சின்னப் பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும்... மாமியார் அம்மாவாக முடியுமா? இல்லை மருமகள் தான் மகளாக முடியுமா?" என்று பவித்ரா விளக்கம் கொடுக்க, "சின்ன சின்னப் பிரச்சனைனா அத்தான் கிட்ட சொல்ல வேண்டியது தானே..." என்று நந்தினி தன் கண்களைச் சுருக்கி கேட்டாள்.
Last edited: