• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla ondru Episode - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
"Unknown number அண்ணா..." என்று தன் மொபைலை silent mode க்கு மாற்றினான் ராம் பிரசாத்.

நந்தினி ராம் பிரசாத்தின் பதட்டத்தை மனதில் குறித்துக் கொண்டு உணவை ரசித்துச் சாப்பிட்டாள். ராம் பிரசாத் அதன் பின் உணவைக் கைகளால் அளந்த படி அமர்ந்திருந்தான்.

அவர்கள் உணவு முடிந்து சிறிது நேரத்தில் உத்தமி வர, "அத்தை நல்லா இருக்கீங்களா?" என்று மரியாதையாகக் கேட்டாள் நந்தினி.

உத்தமி, நந்தினியிடம் சிரித்த முகமாகத் தன்மையாக பேசிக் கொண்டார். ராம் பிரசாத்தை அவர் பார்த்தாரா... இல்லை பார்க்கவே இல்லையா என்று கேள்வி கேட்கும் படி நடந்து கொண்டார்.
உத்தமியின் செய்கையை யாரும் கண்டுகொண்டது போலவும் தெரியவில்லை.


அப்பொழுது உத்தமி, தன் பையிலிருந்து, தட்டை, முறுக்கு போன்ற பலகாரங்களை எடுக்க, "அக்கா... இந்நேரம் சாப்பிட நல்லாருக்குமுன்னு வாங்கினீகளா அத்தை?" என்று நந்தினி சகஜமாக கேட்க, பவித்ரா தர்மசங்கடமாக நெளிந்தாள்.

நந்தினியின் கேள்வி, பவித்ராவின் தர்மசங்கடம் உத்தமிக்கு விஷயத்தைத் தெளிவு படுத்த, "ஆமா... நந்தினி..." என்று உத்தமி சிரித்த முகமாகத் தலை அசைத்தார்.

நந்தினி, ராம் பிரசாத் இருவரும் கிளம்ப, ராம் பிரசாத்தின் மொபைல் மீண்டும் மீண்டும் vibrate ஆனது.

'யாருன்னு கேட்போமா...' என்று நந்தினி சிந்திக்க, 'குடும்பம்னா பார்த்துப் பக்குவமா நடக்கணுமுன்னு அக்கா சொல்லிருக்கா... படக்குன்னு கேட்கக் கூடாது... ஆனால் எதுக்கு இப்படி டென்ஷன் ஆகணும்... யாரா இருக்கும்?' என்று எண்ணத்தோடு நந்தினி அமைதியாக நடந்தாள்.


வாசுதேவனின் இல்லத்தில், "வாசு பாத்தியா டா... நம்ம கிட்ட கூடச் சொல்லலை... அவ தங்கச்சி கிட்ட சொல்லிருக்கா..." என்று உத்தமி கூற, "அம்மா... எனக்குத் தெரியும் அம்மா... நான் தான் மருத்துவரைப் பார்த்துட்டு எல்லார் கிட்டயும் சொல்லலாமுன்னு சொன்னேன்..." என்று பவித்ராவை பார்த்தபடி அழுத்தமாகக் கூறினான் வாசுதேவன்.

உத்தமி சந்தேக கண்களோடு, அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள் பவித்ரா, வாசுதேவன் இருவரும் அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

வாசுதேவன் அவர்கள் அறைக்குள் நுழைந்து, எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.


சிறிது நேரம் கழித்து, "உன் தங்கை கிட்ட சொல்லணுமுன்னு தோணிருக்கு... ஆனால், என்கிட்டே சொல்லணுமுன்னு தோணலைல..." என்று வாசுதேவன் கேட்க, "அத்தான் நந்தினி கிட்ட நான் சொல்லலை... அவளா கண்டுபிடிச்சிட்டா... உங்க யாருக்கும் தெரியாதுன்னு கூட, அவளுக்கு தெரியாது..." என்று அந்த நேரத்திலும் தன் தங்கையை விட்டுக் கொடுக்காமல் கூறினாள் பவித்ரா.

"எனக்கும் தெரியும் பவித்ரா... நந்தினி கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்... நீயா சொல்லுவ... நீ சந்தோஷமா சொல்லும் பொழுது கொடுக்க தான் நெக்லஸ் வாங்கி வச்சிருந்தேன்... நீ கல்யாணத்திலயும் புதுசா போட்டுக்கலாமுன்னு தோணுச்சு... ஆனால், நீ சொல்லவே இல்லை..." என்று வாசுதேவன் குறைபட, "அத்தான் கல்யாண வேலை முடிஞ்சி நிதானமா சொல்லலாமுன்னு தான் அன்னைக்கி சொல்லலை..." என்று பவித்ரா தரையை பார்த்தபடி கூறினாள்.


வாசுதேவன் பவித்ராவை கேள்வியாகப் பார்க்க, "அப்புறம்... அன்னைக்கி சண்டை வந்திருச்சு..." என்று பவித்ரா பட்டென்று கூறினாள்.

"அப்புறம்?" என்று வாசுதேவன் பவித்ராவை கேள்வியாகப் பார்க்க, பவித்ரா கூறிய பதிலில் வாசுதேவன் கண்கலங்க அவளை விலகல் தன்மையோடு பார்த்தான்.

வாசுதேவன் கேட்ட கேள்வியில், "அத்தான்..." என்ற விம்மலோடு அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் பவித்ரா.


அழும் மனைவியை ஆதரவாகத் தழுவ வாசுதேவனின் மனம் எண்ணினாலும், வாசுதேவனின் கோபம் பவித்ராவை தூர நிறுத்தச் செய்தது.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…

Nice update
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Miga arumai.nandini&pavis conversation arumai rendu perin pasathin veli pattu.. vasu enna kelvi kettan ... Ini vaishu neril vanthutuvaalo ram enn seiyaporan waiting eagerly sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top