Dear Friends,
Thank you so much for your wonderful likes and lovely comments.
இரண்டல்ல ஒன்று – 2
சென்னை வேளச்சேரி பரபரப்பான சாலை அருகே அமைந்திருந்த அபார்ட்மெண்ட். அந்த இரவிலும் வாகனங்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன.
மெத்தையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நந்தினி, "அக்கா..." என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
"அக்கா... கண் இல்லாமல்.... அக்கா.. கண் இல்லாமல்..." என்று திக்கி திணறி மூச்சு வாங்கிக் கொண்டு பயத்தோடு முணுமுணுத்தாள் நந்தினி.
அவள் சத்தத்தை கேட்டு எழுந்து வந்த, ஆவுடையப்பன்,செல்வி இருவரும் அவளை மேலும் கீழும் பார்த்தனர்.
"ஏய்! என்ன டீ ஆச்சு?" என்று தூக்க கலக்கத்தோடு கேட்டார் செல்வி.
"அம்மா... அக்கா படம் கண் இல்லாமல்..." என்று தயங்கியபடியே கூற, ஆவுடையப்பன் நந்தினியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு படுக்கச் சென்றார்.
"லூசு... இதுக்கு தான் முட்டாள் தனமா விளையாடாதீங்கன்னு படிச்சி படிச்சி சொல்றேன்." என்று செல்வி கடுப்பாகக் கூறினார்.
"எம்மா.... நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்... எங்களைப் பார்த்தா விளையாடுற மாதிரியா இருக்கு? " என்று கோபமாக கேட்டாள் நந்தினி.
"எது டி சீரியஸ்? உங்க அக்கா பவித்ரா யார் மேலையாவது கோபம் வந்தா, அவ அவங்க படத்தைக் கண் இல்லாமல் வரைவா... கேட்டா… கண் இருந்து பார்க்க முடிந்தால் தப்பு பண்ணுவாங்களான்னு நியாயம் கேட்பா... உடனே நீங்க எல்லாம் தெரிந்த மகராசி… அவங்க கிட்ட சண்டைக்குப் போய், அதைச் சரி செய்து அந்தப் படத்துக்கு கண் வரைவீங்க... இதெல்லாம் ஒரு பொழப்பா ..." என்று செல்வி கோபமாகக் கூற, நந்தினி "ஈ...." என்று சிரித்தாள்.
"அர்த்த ராத்திரில, ஆ ஊ ன்னு கத்திட்டு என்ன டி சிரிப்பு?" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த அலமாரியைத் திறந்தார்.
"பாரு பவித்ரா வரைந்த படங்கள்... அதில் பாதி என் படமும், அப்பா படமும் தான் இருக்கு. அக்காளும், தங்கச்சியும் வரிஞ்சி கட்டிக்கிட்டு என் கிட்டயும், அப்பா கிட்டயும் சண்டைக்கு வந்திற வேண்டியது." என்று கூறி கொண்டே அந்தக் கதவை மூடினார் செல்வி.
"இந்தக் குப்பையை வெளிய போடவும் மனசில்லாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லால்..." என்று செல்வி சலிப்பாக ஆரம்பிக்க, "அம்மா... அக்காவை திட்டாதீங்க... உங்களால் இப்படி படம் வரைய முடியுமா?" என்று கோபமாக கேட்டாள் நந்தினி.
"நான் ஏன் டி வரையனும்? எனக்கு எதுக்கு வரைய தெரியணும்?" என்று அந்தத் தூக்கத்திலும் சட்டம் பேசினார் செல்வி.
'தன் தாயிடம் பேசி ஜெயிக்க முடியாது.' என்றறிந்த நந்தினி, தன் தாயை அமைதியாகப் பார்த்தாள்.
"சரி... விடு... இப்ப எதுக்கு தூக்கத்தில் கத்தி ஊரைக் கூட்டின?" என்று செல்வி அதே கடுப்போடு கேட்க, "ஊரா?" என்று நந்தினி தன் தாயின் பின்னே தேட, அவள் தலையில் நறுக்கென்று கொட்டினார் செல்வி.
"என்ன விளையாடிகிட்டு இருக்க?" என்று கோபமாக கேட்ட தன் தாயை சமாதானம் செய்து, "அம்மா... அக்காவுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். அக்கா, அவ படத்தை அவளே கண் இல்லாமல் வரைந்த மாதிரி எனக்கு தோணுச்சு அம்மா." என்று தீவிரமாக கூறினாள் நந்தினி.
மெலிதாக சிரித்த செல்வி, நந்தினியின் தலையை ஆதரவாகத் தடவி, "நீ பவித்ராவையே நினைச்சுகிட்டு இருந்ததால் இப்படி எல்லாம் தோணுது." என்று மெதுவாகக் கூறினார்.
"நீ இங்க இருந்தாலும் உன் மனசு பவித்ரா கிட்டத் தான் இருக்கு நந்தினி." என்று பெருமையாக கூறினார் அவர்களின் தாய் செல்வி.
"எதாவது பிரச்சனைனா நம்ம கிட்ட சொல்லிருக்க மாட்டாளா?" என்று செல்வி நந்தினியைப் பார்த்து கேட்க, "அம்மா... உங்களுக்கு பொண்ணு மேல் அக்கறையே இல்லை. யாரவது அக்காவை அப்படி ஒரு கிராமத்தில் கல்யாணம் செய்து குடுப்பாங்களா?" என்று கோபமாக கேட்டாள் நந்தினி.
"அமெரிக்கா... லண்டன் மாப்பிள்ளை வேண்டாமுன்னு நீ தானே சொன்ன?" என்று செல்வி விடாமல் கேட்க, "ஆமா.. அக்கா அங்க போய்ட்டா நான் எப்படி அவளைப் பார்ப்பது? இங்குச் சென்னையில் நாம அடிக்கடி போய் பார்க்க முடியுற மாதிரி நீங்க ஒரு மாப்பிளை பார்த்திருக்கலாம்." என்று நந்தினி முகம் சுருக்கி கூறினாள்.
இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையப்பன், "பவித்ராவுக்கு ஒரு குறையும் கிடையாது. மாப்பிள்ளை அவள் மேல் உயிரா இருக்கார். மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லாத்துக்கும் மேல் சொந்தம்." என்று சமாதானமாக கூறினார்.
சற்று இடைவெளி விட்டு மேலும் தொடர்ந்தார் ஆவுடையப்பன். "அதுவும் பவித்ரா குணத்துக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும், பொறுமையாக இருந்து சமாளித்து வந்திருவா... ஆனால், உன்னை நினைத்துத் தான் எங்களுக்குக் கவலையே... நீ பேசுற பேச்சுக்கு உன்னை எல்லாம் ஒரு நாள் கூட நீ போகிற வீட்டில் வச்சிருக்க மாட்டாங்க." என்று தீவிரமாக ஆரம்பித்து, கேலியாக முடித்தார்.
தன் கணவரை ஆமோதிப்பது போல் தலை அசைத்து, செல்வி நகைத்தார்.
தன் தாயை பார்த்த நந்தினி, "இது அவ்வளவு பெரிய ஜோக் இல்லை." என்று கடுப்பாக கூறினாள்.
"நான் என்ன சொல்றேன்னு யாருக்கும் புரியலை. இதில் என்னைக் கேலி பேச வேண்டியது." என்று நந்தினி மீண்டும் தீவிரமான குரலில் ஆரம்பித்தாள்.
நந்தினியை இடைமறித்து, "தண்ணியை குடிச்சிட்டு பேசாமல் படு." என்று கூறினார் செல்வி, ‘மனதில் பவித்ராவோடு நாளைப் பேச வேண்டும்’ என்ற எண்ணத்தோடு!
தன் தமக்கையின் இடம் காலியாக இருப்பதைப் பார்த்தாள் நந்தினி. திருமணம் ஆகி பவித்ரா சென்று பல ஆண்டுகள் ஆன பின்பும், அவள் இடத்தில் அவள் பொருளில் அவள் வாசனையை உணர்ந்தாள் நந்தினி.
'முதலில் நாளைக் காலை பவித்ராவுக்கு call செய்து பேச வேண்டும். அக்காவை ஒரு வாரம் இங்கு வர சொல்லணும். நானும், பவித்ராவும் mall, பீச், தியேட்டர் ன்னு scooty இல் சுத்தணும். ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடணும். அக்காவின் திருமணத்திற்கு முன் இருந்த பொன்னான நாட்களை மீட்க வேண்டும்... குட்டி பையன் சந்தோஷோடு விளையாட வேண்டும்…' என்று எண்ணிக் கொண்டே தூங்கினாள் நந்தினி.
மணி இரவு 1 : 30 அனைவரும் உறங்கிவிட, நாம் சாலையில் பயணிப்போம்.
வேளச்சேரி தரமணி சாலையில், இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்தது.
அங்கு ஒரு அபார்ட்மெண்ட் இல் மெலிதான ரகசிய குரல் நம் கவனத்தை ஈர்த்தது.
ஓர் இளம் பெண்ணின் கொஞ்சும் குரல் நம் காதுகளை தீண்ட, சற்று தயக்கத்தோடு நாம் அந்த வீட்டிற்குள் செல்வோம்.
அந்த வீட்டில், ஓர் இளைஞன் கம்பீரமாக சோபாவில் சாய்ந்து, மொபைல் phone இல் பேசிக்கொண்டிருந்தான்.
"ராம்... லவ் யு... லவ் யு.. லவ் யு.. சோ மச்.... இச்… இச்… இச்… " என்று அந்தப் பெண் பல முத்தங்களோடு காதல் சொட்ட சொட்ட அவள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை மொபைல் வழியாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான் ராம்.
அவன் முகத்தில் மெல்லிய புன்னகை. "லவ் யு டார்லிங்." என்று மெதுவாகக் கூறினான் ராம் என்றழைக்கப்பட்ட ராம்பிரசாத்.
"இப்படி தான் லவ் யு சொல்லுவியா?" என்று அந்தப் பெண் குரல் உரிமையோடு சிணுங்க, "வைஷு... நீ என் பக்கத்தில் இருந்தால் நான் லவ் யு சொல்லும் ஸ்டைலே வேற மாதிரி இருக்கும்." என்று கிரக்கமாக கூறினான் ராம்.
மொபைலில் அந்தப் பெண் வெட்க புன்னகை சிந்த, "நாம எப்ப கல்யாணம் செய்துக்கலாம்?" என்று கொஞ்சும் குரலில் கேட்டான் ராம்.
“அழகியபுரம் வேண்டாம்... இந்த அழகி பொதுமுன்னு சொல்லுங்க. கல்யாணத்தை நாளைக்கே வைத்துப்போம்." என்று மயக்கும் தொனியில் ஒலித்தது அந்தப் பெண் குரல்.
"வைஷ்னவி…. விளையாடாத. நான் இங்க வேலை பார்ப்பதே, எங்க ஊரில் கம்பெனி ஆரம்பிக்கணும். அதுக்கு, எனக்கு ஒரு exposure கிடைக்கணும். அதுக்காகத்தான். எனக்கு இவங்க கொடுக்கிற சம்பளம் முக்கியம் இல்லை. நான் எங்க ஊரில் கம்பனி ஆரம்பித்து அம்மா... அப்பா... எங்க அண்ணன்.. அண்ணி கூட தான் இருப்பேன்." என்று கண்டிப்போடு கூறினான் ராம்பிரசாத்.
"ஹா... ஹா...இந்த வைஷு இல்லாமலா ராம்?" என்று கேலியும், கொஞ்சலும் கலந்து கேட்டாள் வைஷ்னவி.
"விதி எப்படி இருக்குன்னு தெரியலை வைஷு. எங்க வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்காங்க. நான் தான் நல்ல படித்த பெண் வேணும்னு சொல்லி அவங்க சொல்ற பெண்ணை எல்லாம் தட்டிக் கழிக்கிறேன்... இது எவ்வளவு நாள் சாத்தியமாகுமுன்னு எனக்கு தெரியலை.” என்று நிதானமாக கூறினான் ராம்.
எதிர்முனை அமைதியாக இருக்க, தன் பேச்சை மேலும் தொடர்ந்தான் ராம்பிரசாத். “எங்க வீட்டில் ஒரு படித்த பெண்ணை பார்த்துட்டாங்கன்னா, நான் நம் காதலை பற்றி வீட்டில் சொல்லணும். என் வீட்டில் நிச்சயம் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, சம்மதம் சொல்லுவாங்க. ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் நீ அங்க தான் இருக்கனும். உன் காரணத்தை யாரும் ஏத்துக்க மாட்டாங்க வைஷு.” என்று சூழ்நிலையை விளக்கினான் ராம்பிரசாத்.
Thank you so much for your wonderful likes and lovely comments.
இரண்டல்ல ஒன்று – 2
சென்னை வேளச்சேரி பரபரப்பான சாலை அருகே அமைந்திருந்த அபார்ட்மெண்ட். அந்த இரவிலும் வாகனங்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன.
மெத்தையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நந்தினி, "அக்கா..." என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
"அக்கா... கண் இல்லாமல்.... அக்கா.. கண் இல்லாமல்..." என்று திக்கி திணறி மூச்சு வாங்கிக் கொண்டு பயத்தோடு முணுமுணுத்தாள் நந்தினி.
அவள் சத்தத்தை கேட்டு எழுந்து வந்த, ஆவுடையப்பன்,செல்வி இருவரும் அவளை மேலும் கீழும் பார்த்தனர்.
"ஏய்! என்ன டீ ஆச்சு?" என்று தூக்க கலக்கத்தோடு கேட்டார் செல்வி.
"அம்மா... அக்கா படம் கண் இல்லாமல்..." என்று தயங்கியபடியே கூற, ஆவுடையப்பன் நந்தினியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு படுக்கச் சென்றார்.
"லூசு... இதுக்கு தான் முட்டாள் தனமா விளையாடாதீங்கன்னு படிச்சி படிச்சி சொல்றேன்." என்று செல்வி கடுப்பாகக் கூறினார்.
"எம்மா.... நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்... எங்களைப் பார்த்தா விளையாடுற மாதிரியா இருக்கு? " என்று கோபமாக கேட்டாள் நந்தினி.
"எது டி சீரியஸ்? உங்க அக்கா பவித்ரா யார் மேலையாவது கோபம் வந்தா, அவ அவங்க படத்தைக் கண் இல்லாமல் வரைவா... கேட்டா… கண் இருந்து பார்க்க முடிந்தால் தப்பு பண்ணுவாங்களான்னு நியாயம் கேட்பா... உடனே நீங்க எல்லாம் தெரிந்த மகராசி… அவங்க கிட்ட சண்டைக்குப் போய், அதைச் சரி செய்து அந்தப் படத்துக்கு கண் வரைவீங்க... இதெல்லாம் ஒரு பொழப்பா ..." என்று செல்வி கோபமாகக் கூற, நந்தினி "ஈ...." என்று சிரித்தாள்.
"அர்த்த ராத்திரில, ஆ ஊ ன்னு கத்திட்டு என்ன டி சிரிப்பு?" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த அலமாரியைத் திறந்தார்.
"பாரு பவித்ரா வரைந்த படங்கள்... அதில் பாதி என் படமும், அப்பா படமும் தான் இருக்கு. அக்காளும், தங்கச்சியும் வரிஞ்சி கட்டிக்கிட்டு என் கிட்டயும், அப்பா கிட்டயும் சண்டைக்கு வந்திற வேண்டியது." என்று கூறி கொண்டே அந்தக் கதவை மூடினார் செல்வி.
"இந்தக் குப்பையை வெளிய போடவும் மனசில்லாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லால்..." என்று செல்வி சலிப்பாக ஆரம்பிக்க, "அம்மா... அக்காவை திட்டாதீங்க... உங்களால் இப்படி படம் வரைய முடியுமா?" என்று கோபமாக கேட்டாள் நந்தினி.
"நான் ஏன் டி வரையனும்? எனக்கு எதுக்கு வரைய தெரியணும்?" என்று அந்தத் தூக்கத்திலும் சட்டம் பேசினார் செல்வி.
'தன் தாயிடம் பேசி ஜெயிக்க முடியாது.' என்றறிந்த நந்தினி, தன் தாயை அமைதியாகப் பார்த்தாள்.
"சரி... விடு... இப்ப எதுக்கு தூக்கத்தில் கத்தி ஊரைக் கூட்டின?" என்று செல்வி அதே கடுப்போடு கேட்க, "ஊரா?" என்று நந்தினி தன் தாயின் பின்னே தேட, அவள் தலையில் நறுக்கென்று கொட்டினார் செல்வி.
"என்ன விளையாடிகிட்டு இருக்க?" என்று கோபமாக கேட்ட தன் தாயை சமாதானம் செய்து, "அம்மா... அக்காவுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். அக்கா, அவ படத்தை அவளே கண் இல்லாமல் வரைந்த மாதிரி எனக்கு தோணுச்சு அம்மா." என்று தீவிரமாக கூறினாள் நந்தினி.
மெலிதாக சிரித்த செல்வி, நந்தினியின் தலையை ஆதரவாகத் தடவி, "நீ பவித்ராவையே நினைச்சுகிட்டு இருந்ததால் இப்படி எல்லாம் தோணுது." என்று மெதுவாகக் கூறினார்.
"நீ இங்க இருந்தாலும் உன் மனசு பவித்ரா கிட்டத் தான் இருக்கு நந்தினி." என்று பெருமையாக கூறினார் அவர்களின் தாய் செல்வி.
"எதாவது பிரச்சனைனா நம்ம கிட்ட சொல்லிருக்க மாட்டாளா?" என்று செல்வி நந்தினியைப் பார்த்து கேட்க, "அம்மா... உங்களுக்கு பொண்ணு மேல் அக்கறையே இல்லை. யாரவது அக்காவை அப்படி ஒரு கிராமத்தில் கல்யாணம் செய்து குடுப்பாங்களா?" என்று கோபமாக கேட்டாள் நந்தினி.
"அமெரிக்கா... லண்டன் மாப்பிள்ளை வேண்டாமுன்னு நீ தானே சொன்ன?" என்று செல்வி விடாமல் கேட்க, "ஆமா.. அக்கா அங்க போய்ட்டா நான் எப்படி அவளைப் பார்ப்பது? இங்குச் சென்னையில் நாம அடிக்கடி போய் பார்க்க முடியுற மாதிரி நீங்க ஒரு மாப்பிளை பார்த்திருக்கலாம்." என்று நந்தினி முகம் சுருக்கி கூறினாள்.
இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையப்பன், "பவித்ராவுக்கு ஒரு குறையும் கிடையாது. மாப்பிள்ளை அவள் மேல் உயிரா இருக்கார். மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லாத்துக்கும் மேல் சொந்தம்." என்று சமாதானமாக கூறினார்.
சற்று இடைவெளி விட்டு மேலும் தொடர்ந்தார் ஆவுடையப்பன். "அதுவும் பவித்ரா குணத்துக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும், பொறுமையாக இருந்து சமாளித்து வந்திருவா... ஆனால், உன்னை நினைத்துத் தான் எங்களுக்குக் கவலையே... நீ பேசுற பேச்சுக்கு உன்னை எல்லாம் ஒரு நாள் கூட நீ போகிற வீட்டில் வச்சிருக்க மாட்டாங்க." என்று தீவிரமாக ஆரம்பித்து, கேலியாக முடித்தார்.
தன் கணவரை ஆமோதிப்பது போல் தலை அசைத்து, செல்வி நகைத்தார்.
தன் தாயை பார்த்த நந்தினி, "இது அவ்வளவு பெரிய ஜோக் இல்லை." என்று கடுப்பாக கூறினாள்.
"நான் என்ன சொல்றேன்னு யாருக்கும் புரியலை. இதில் என்னைக் கேலி பேச வேண்டியது." என்று நந்தினி மீண்டும் தீவிரமான குரலில் ஆரம்பித்தாள்.
நந்தினியை இடைமறித்து, "தண்ணியை குடிச்சிட்டு பேசாமல் படு." என்று கூறினார் செல்வி, ‘மனதில் பவித்ராவோடு நாளைப் பேச வேண்டும்’ என்ற எண்ணத்தோடு!
தன் தமக்கையின் இடம் காலியாக இருப்பதைப் பார்த்தாள் நந்தினி. திருமணம் ஆகி பவித்ரா சென்று பல ஆண்டுகள் ஆன பின்பும், அவள் இடத்தில் அவள் பொருளில் அவள் வாசனையை உணர்ந்தாள் நந்தினி.
'முதலில் நாளைக் காலை பவித்ராவுக்கு call செய்து பேச வேண்டும். அக்காவை ஒரு வாரம் இங்கு வர சொல்லணும். நானும், பவித்ராவும் mall, பீச், தியேட்டர் ன்னு scooty இல் சுத்தணும். ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடணும். அக்காவின் திருமணத்திற்கு முன் இருந்த பொன்னான நாட்களை மீட்க வேண்டும்... குட்டி பையன் சந்தோஷோடு விளையாட வேண்டும்…' என்று எண்ணிக் கொண்டே தூங்கினாள் நந்தினி.
மணி இரவு 1 : 30 அனைவரும் உறங்கிவிட, நாம் சாலையில் பயணிப்போம்.
வேளச்சேரி தரமணி சாலையில், இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்தது.
அங்கு ஒரு அபார்ட்மெண்ட் இல் மெலிதான ரகசிய குரல் நம் கவனத்தை ஈர்த்தது.
ஓர் இளம் பெண்ணின் கொஞ்சும் குரல் நம் காதுகளை தீண்ட, சற்று தயக்கத்தோடு நாம் அந்த வீட்டிற்குள் செல்வோம்.
அந்த வீட்டில், ஓர் இளைஞன் கம்பீரமாக சோபாவில் சாய்ந்து, மொபைல் phone இல் பேசிக்கொண்டிருந்தான்.
"ராம்... லவ் யு... லவ் யு.. லவ் யு.. சோ மச்.... இச்… இச்… இச்… " என்று அந்தப் பெண் பல முத்தங்களோடு காதல் சொட்ட சொட்ட அவள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை மொபைல் வழியாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான் ராம்.
அவன் முகத்தில் மெல்லிய புன்னகை. "லவ் யு டார்லிங்." என்று மெதுவாகக் கூறினான் ராம் என்றழைக்கப்பட்ட ராம்பிரசாத்.
"இப்படி தான் லவ் யு சொல்லுவியா?" என்று அந்தப் பெண் குரல் உரிமையோடு சிணுங்க, "வைஷு... நீ என் பக்கத்தில் இருந்தால் நான் லவ் யு சொல்லும் ஸ்டைலே வேற மாதிரி இருக்கும்." என்று கிரக்கமாக கூறினான் ராம்.
மொபைலில் அந்தப் பெண் வெட்க புன்னகை சிந்த, "நாம எப்ப கல்யாணம் செய்துக்கலாம்?" என்று கொஞ்சும் குரலில் கேட்டான் ராம்.
“அழகியபுரம் வேண்டாம்... இந்த அழகி பொதுமுன்னு சொல்லுங்க. கல்யாணத்தை நாளைக்கே வைத்துப்போம்." என்று மயக்கும் தொனியில் ஒலித்தது அந்தப் பெண் குரல்.
"வைஷ்னவி…. விளையாடாத. நான் இங்க வேலை பார்ப்பதே, எங்க ஊரில் கம்பெனி ஆரம்பிக்கணும். அதுக்கு, எனக்கு ஒரு exposure கிடைக்கணும். அதுக்காகத்தான். எனக்கு இவங்க கொடுக்கிற சம்பளம் முக்கியம் இல்லை. நான் எங்க ஊரில் கம்பனி ஆரம்பித்து அம்மா... அப்பா... எங்க அண்ணன்.. அண்ணி கூட தான் இருப்பேன்." என்று கண்டிப்போடு கூறினான் ராம்பிரசாத்.
"ஹா... ஹா...இந்த வைஷு இல்லாமலா ராம்?" என்று கேலியும், கொஞ்சலும் கலந்து கேட்டாள் வைஷ்னவி.
"விதி எப்படி இருக்குன்னு தெரியலை வைஷு. எங்க வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்காங்க. நான் தான் நல்ல படித்த பெண் வேணும்னு சொல்லி அவங்க சொல்ற பெண்ணை எல்லாம் தட்டிக் கழிக்கிறேன்... இது எவ்வளவு நாள் சாத்தியமாகுமுன்னு எனக்கு தெரியலை.” என்று நிதானமாக கூறினான் ராம்.
எதிர்முனை அமைதியாக இருக்க, தன் பேச்சை மேலும் தொடர்ந்தான் ராம்பிரசாத். “எங்க வீட்டில் ஒரு படித்த பெண்ணை பார்த்துட்டாங்கன்னா, நான் நம் காதலை பற்றி வீட்டில் சொல்லணும். என் வீட்டில் நிச்சயம் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, சம்மதம் சொல்லுவாங்க. ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் நீ அங்க தான் இருக்கனும். உன் காரணத்தை யாரும் ஏத்துக்க மாட்டாங்க வைஷு.” என்று சூழ்நிலையை விளக்கினான் ராம்பிரசாத்.