Indha madhiri nama onna seiyarathuku pogamothu adha namma kitta solvanga.....apo oru gandu aagum parunga....வாசுதேவன் குரலில் உள்ள கடினம், அவன் செயலோடு ஒட்டாமல் நிற்க, அவன் தலை கோதி, "அப்படி எல்லாம் இல்லை அத்தான். சுபா கொஞ்ச நேரத்தில் வந்திருவா..." என்று மெலிதாக கூறினாள் பவித்ரா.
"வரட்டும்..." என்று அவள் முகம் பார்த்து கூறினான் வாசுதேவன். அவர்கள் செல்ல சீண்டல்கள் நீண்டு கொண்டே போக, "வாசு..." என்று உத்தமியின் குரல் ஓங்கி ஒலித்தது.
"வரேன் அம்மா." என்று கூறி வாசுதேவன் அவர்களை நோக்கிச் சென்றான்.
சுபா வந்திருக்க அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கோவிலுக்குக் கிளம்பினர்.
சுபா, வாசுதேவன்,பவித்ரா அவர்களின் மகன் சந்தோஷ் அனைவரும் காரில் கோவிலுக்குச் சென்றனர்.
காரை வாசலில் நிறுத்திவிட்டு, அவர்கள் கோவிலுக்குள் செல்ல, வாசுதேவன், பவித்ரா வயதை ஒட்டிய இளம் ஜோடி எதிரே வந்தது. அவர்களுடன் சந்தோஷ் வயதை ஒட்டிய ஒரு பெண் குழந்தையும் வந்தது.
அந்தப் பெண் குழந்தையைப் பார்த்ததும் சந்தோஷ் வேகமாக அவர்களை நோக்கி ஓடினான்.
"ஹை... அகல்யா..." என்று சந்தோஷ் பெரிய மனிதன் போல் கூற, "ஹாய் சந்தோஷ்...." என்று பெரிய மனுஷியாக அவனுக்கு கை குலுக்கினாள் அகல்யா.
அவர்களைப் பார்த்ததும் தன் கணவனை தயக்கத்தோடு பார்த்தாள் பவித்ரா. வாசுதேவனின் முகம் இறுகி இருந்தது.
வாசுதேவன் வீடு அருகே வசிக்கும் இவர்கள் பண்ணை வீடு என்று அழைக்கப்படுவர்.
'இவர்கள் குடும்பத்திற்குள் ஏதோ பகை. இவர்களைப் பற்றி அத்தான் பேச விருப்பப்பட்டதும் இல்லை. நானும் கேட்டதில்லை. ஏதாவது பொது இடத்தில் கோமதியை பார்த்தால், நான் பேசுவதோடு சரி. சந்தோஷுக்கு அவங்க வீட்டு பெண் தோழியா... நல்ல புடிக்கிறாய்ங்க freindship...' என்று யோசனையோடு தடுமாற்றமாக நின்றாள் பவித்ரா.
பண்ணை வீட்டு மனிதர்களை கண்டதும், அவர்கள் அருகே ஓடி சென்று, "சந்துரு அண்ணா... சுவமா இருக்கீயளா?" என்று பாசமாக கேட்டாள் சுபா.
'இவளுக்கு இந்த வீட்டுக் கட்டுப்பாடு எதுவும் பொருந்தாது.' என்று எண்ணி பவித்ரா அங்கு நடப்பதை மெளனமாக வேடிக்கை பார்த்தாள்.
சுபாவிடம் தலை அசைத்து, பதில் பேசாமல் சந்துரு என்ற அழைக்கப்பட்ட சந்திரசேகர் வாசுதேவனைக் கூர்மையாக பார்த்தான்.
கோமதி சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டு, "சுவம் தான் சுபா... நீங்க எல்லாரும் எப்படி இருக்கீக?" என்று கோமதி வினவச் சுபா சிரித்தமுகமாக தலை அசைத்தாள்.
"நான் பவித்ராவை அங்கனக்குள்ள அப்ப அப்ப பாப்பேன்... உன்னைத் தான் பாக்க முடியறதில்லை சுபா..." என்று கோமதி கூற, "உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்கே..." என்று சுபா உணர்ச்சி பொங்க கூறினாள்.
"என்ன சுபா இப்படி சொல்லிப்புட்ட.... இவுக உங்களைப் பத்தி பேசாத நாளே கிடையாது." என்று கோமதி சுபாவிடம் கூற, வாசுதேவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
" நானும் உங்களை பார்க்கணும்... பேசணுமுன்னு நினைப்பேன்... முடியறதில்லை.. நான் உங்களை மதினின்னு கூப்பிடட்டுமா?" என்று பாசமாக கேட்டாள் சுபா.
கோமதி சிரித்த முகமாகத் தலை அசைத்தாள்.
அகல்யாவும், சந்தோஷும் பேசிக்கொண்டிருக்க, "குழந்தைகளுக்குத் தெரிந்த நாகரிகம் கூட பெரியவர்களுக்குத் தெரியலை." என்று குழந்தைகளை பார்த்தபடி முணுமுணுத்தாள் சுபா.
"பவித்ரா கோவிலுக்கு வந்தியா இல்லை கதை பேசிட்டு இருக்க வந்தியா?" என்று பவித்ராவிடம் எகிறினான் வாசுதேவன்.
'அது தானே சிங்கம் என் கிட்ட தானே சீறும்..." என்று அவனை அமைதியாகப் பார்த்தாள் பவித்ரா.
"சுபா, உன் வீட்டுக்காரரை கூட்டிட்டு வீட்டுக்கு வா." என்று உரிமையோடு அழைத்தான் சாத்திரசேகர்.
"வரேன் அண்ணா..." என்று சுபா சம்மதமாகத் தலை அசைக்க, வாசுதேவனின் கை முஷ்டி இறுகியது.
வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்த தந்தையை அழைத்து, "அப்பா. My friend அகல்யா." என்று சந்தோஷ் கூற, மௌனமாக தலை அசைத்தான் வாசுதேவன்.
தன் உணர்ச்சிகளை மறைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான் வாசுதேவன்.
"தேவா அங்கிள். அப்பா உங்களை அப்படி தான் சொல்லுவாங்க." என்று அகல்யா மழலை குரலில் கூற, அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தான் வாசுதேவன்.
'தேவா.. இந்த அழைப்பு அவனுக்கு மட்டுமே உரிமையான அழைப்பு...' என்ற எண்ணம் வாசுதேவனை நிலை குழைய செய்தது.
வாசுதேவன் அகல்யாவை தூக்கி கன்னத்தில் முத்தமிட, 'இவன் என் தேவா.' என்று அவனைப் பெருமையாக பார்த்தான் சந்திரசேகர்.
குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, "போகலாம்... நேரம் ஆகிருச்சு." என்று கடினமான குரலில் கூறினான் வாசுதேவன்.
பவித்ரா, சுபா அனைவரும் தலை அசைப்போடு கோவிலுக்குள் சென்றனர்.
"என்றாவது ஒரு நாள் எல்லாப் பிரச்சனைகளும் தீராதா?" என்று பெருமூச்சு விட்டான் சந்திர சேகர்.
"நிச்சயமாகச் சரி ஆகிரும்..." என்று கோமதி நம்பிக்கையோடு கூறி, சந்துருவோடு நடந்தாள் கோமதி.
விதி இவர்களைப் பார்த்து Rolling on the Floor Laughing emoji ஆக மாறி உருண்டு உருண்டு சிரித்தது.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
அடுத்த பதிவோடு உங்களை வெள்ளி அன்று சந்திக்கிறேன்.