Dear Friends,
Thank you so much for your likes and comments... Really happy to see your comments... Thought of coming with an episode on Sunday...
இரண்டல்ல ஒன்று – 30
வாசுதேவனும் பவித்ராவும் பேசிக் கொண்டிருந்த வேளையில் பண்ணை வீட்டில்...
ராம் பிரசாத் யோசனையாக அமர்ந்திருந்தான். 'நந்தினிக்கு என்னைப் பிடிக்கவில்லையா?' இந்த கேள்வி ராம் பிரசாத்தை குடைந்தது. 'நந்தினியின் இன்றைய பேச்சு... பிடிக்கவில்லை என்று சொன்னாலும், அவள் பார்வை... செயல் அப்படிச் சொல்லவில்லையே...' என்று சிந்தித்தான் ராம் பிரசாத்.
ராம் பிரசாத்தின் முகம் குழப்பத்தைப் பிரதிபலிக்க... அப்பொழுது அவர்கள் அறைக்குள் நுழைந்த நந்தினி, "பிரசாத்... நீங்க ஏன் இவ்வளவு யோசனையா இருக்கீங்க... வைஷ்ணவி போட்ட மனு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... அதெல்லாம் சரி ஆகிரும்... நீங்க வேலையை ஆரம்பிங்க... விவசாய நிலத்துக்கு தண்ணீ பாய்ச்சறது, அப்புறம் மருந்தடிக்கிறது... களை எடுக்கிறது... இப்படி எல்லாத்துக்கும் ரோபோட் டிசைன் ரெடி... நாம எப்ப வேலையை ஆரம்பிக்கப் போறோம் ?" என்று நந்தினி ஆர்வமாக வினவினாள்.
"நீ உங்க அக்காவுக்காக தானே இங்க இருக்க... அப்புறம் என் மேலயும்... என் வேலை மேலயும் உனக்கு என்ன அக்கறை..." என்று கோபமாகக் கேட்டான் ராம் பிரசாத்.
'சம்பந்தமே இல்லாம எதுக்கு இவங்க கோபப்படணும்?' என்ற சிந்தனையோடு... தோளைக் குலுக்கிக் கொண்டு... ராம் பிரசாத்தை ஆழமாகப் பார்த்தாள் நந்தினி.
'நல்லா பார்ப்பா... நல்லா இனிய இனிய பேசுவா... ஆனால் விட்டுட்டு போயிருவேன்னு சொல்லுவா....' என்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ராம் பிரசாத்.
'ஏற்கனவே அக்கா பிரச்சனையோடு வீட்டில் இருக்கா... இப்ப நானும் பிரச்சனைன்னு போனேன்... அம்மா அவ்விளவு தான் இரண்டு பேரையும் நார் நாரா கிழிச்சி தொங்க விட்டுருவாங்க... அமைதியா இரு நந்தினி...' என்று தனக்கு தானே கூறிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் நந்தினி.
பார்வதியிடம் தன் அக்காவைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள் நந்தினி.
நந்தினி தலை கோத, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பவித்ரா நிமிர்ந்து பார்க்க... நந்தினி பவித்ராவை பார்த்து புன்னகைத்தாள்.
"அக்கா... ரொம்ப வருத்தப்படாத... வருத்தப்படுற அளவுக்கு எதுவும் நடக்கலை..." என்று சமாதானமாகக் கூறினாள் நந்தினி.
பவித்ரா அவளைப் புரியாமல் பார்க்க, "அத்தான்... உன் மேல் எவ்வளவு பாசமா இருக்காங்க... அந்த பாசம் எல்லா பிரச்சனையும் சரிசெஞ்சிரும் அக்கா..." என்று நம்பிக்கையோடு கூறினாள் நந்தினி.
வாசுதேவன் பற்றிய பேச்சில், பவித்ராவின் கண்களில் கோபத்தைத் தாண்டி, ஒரு கனிவு பிறந்தது.
அந்த கனிவை பார்த்து, 'இவளுக்கெல்லாம் இந்த வீராப்பு தேவையா...' என்ற கேலி நந்தினி மனதில் உதித்தது.
"நான் வீட்டை விட்டு வந்தது தப்பா நந்தினி?" என்று பவித்ரா பரிதாபமாகக் கேட்க, 'ஆம்... நீ உள்ள இருந்து தைரியமா போராடிருக்கணும்... அங்கிருந்து எல்லாரையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்ருக்கணும்...' என்று நந்தினியின் அறிவு சொல்ல விழைந்தாலும், பவித்ராவின் சோக முகம் நந்தினியை அமைதி காக்கச் செய்தது.
ஒரு நொடி மௌனத்திற்கு பின், "அப்படி எல்லாம் இல்லை அக்கா... நீயும் எவ்வளவு நாள் தான் பொறுத்துப் போவ... எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டிருவோம்... உங்க மாமியாரைப் பத்தி ஊரே தப்பு தப்பாத் தான் பேசுது... அவங்களை பார்த்து நறுக்குன்னு ஒரு நாலு வார்த்தைக் கேட்டுட்டு அப்புறம் போலாம் உங்க வீட்டுக்கு..." என்று தன் தமக்கைக்கு ஆறுதலாகப் பேசினாள் நந்தினி.
"கேட்பீங்க... கேட்பீங்க... அக்காளும்... தங்கச்சியும் எல்லாரையும் கேட்பீங்க... அவ போய் அந்த வீட்டில் வாழ வேண்டாம்..." என்று செல்வி கோபமாக கூறிய படி வர, "செல்வி..." என்று தன் மனைவியை அடக்கினார் ஆவுடையப்பன்.
"என்னை அடக்காதீங்க... இவளுக்கே இவ்வளவு வீம்பு இருந்தா... மாப்பிள்ளைக்கு இருக்காதா?" என்று கோபமாகக் கேட்டார் செல்வி.
"அந்த அம்மா வேற ஒரு மாதிரி... மாப்பிள்ளையும் இவளையும் ஒரேடியா பிரிச்சிட்டா என்ன பண்ண முடியும்... உள்ள இருக்கும் போதே பிரிச்சி இவ வெளிய வர அளவுக்கு நடந்துக்கிட்டவங்க… இன்னும் என்ன நாளும் பண்ணுவாங்க... பெண்ணை பெத்த நாம தான் இறங்கி போகணும்... வேற வழி இல்லை..." என்று செல்வி கோபமாகக் கூறினார்.
"அப்படி எல்லாம் ஒன்னும் செய்திற முடியாது செல்வி... கொஞ்சம் பொறுமையா இரு.” என்று கூறினார் ஆவுடையப்பன்.
"அத்தான் பாத்துப்பாங்க..." என்று பவித்ரா உறுதியாகக் கூறினாள். "அப்புறம் ஏன் டீ இங்க வந்த?" என்று செல்வி கோபமாகக் கேட்க, "நான் இங்க இருக்கிறது தான் உங்களுக்கு பிரச்சனைனா… நான் போயிடுறேன்..." என்று கண்ணீர் மல்கக் கூறினாள் பவித்ரா.
"பவித்ரா... நான் அப்படிச் சொல்லலை... பிரச்சனையை வளர்க்க வேண்டாமுன்னு தான் சொல்றேன்... மாப்பிள்ளை மாதிரி நல்லவரை பார்க்க முடியாது... உன்னை இப்ப போகச் சொல்லலை... ஆனால், மாப்பிள்ளை மன்னிப்பு கேட்கும் பொழுது தலைஞ்சி போன்னு தான் சொல்றேன்." என்று பவித்ராவின் தாய் செல்வி கண்ணீர் மல்கக் கூறினார்.
பவித்ரா தன் தாயின் கண்ணீரைக் கையாலாகாத தனத்தோடு பார்த்தாள்.
செல்வி, ஆவுடையப்பன் இருவரும் சென்று விட, "அக்கா... நீ அம்மா அழறதை எல்லாம் பார்க்காத... உன் அத்தையை இரண்டில் ஒன்னு கேட்டே ஆகணும்... நீயும் பேசுவன்னு அவங்களுக்கு தெரியணும்... இந்த பார் உன் பிரச்சனைக்கு நான் பேச முடியாது... நீ தான் பேசணும்... நாம குனிய குனிய இந்த உலகம் நம்மைக் குட்டத் தான் செய்யும்... யாரையும் நாம எதிர்க்க வேண்டாம்... ஆனால், அதே நேரத்தில் நீ இப்படின்னா இப்படி தான்னு இரு அக்கா... நாம குடும்பம் நல்லாருக்கணுமுன்னு வளஞ்சி கொடுக்கலாம்... உடைஞ்சி போக கூடாது... சுயமரியாதையை இழக்கக் கூடாது அக்கா... நம்ம பிள்ளைங்க கூட பிற்காலத்தில் நம்மை மதிக்காமல் போய்டும்..." என்று நந்தினி தீவிரமாகக் கூற, நந்தினி கூறுவதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் பவித்ரா.
"எல்லாரும் நம்ம கிட்ட பழகுற அளவுக்கு நல்லவளா இருந்தா போதும்.. உன்னை போற வர்றவன் எல்லாம் கேள்வி கேட்கற அளவுக்கு நீ நல்லவளா இருந்து என்ன சாதிக்க போற?" என்று நந்தினி பவித்ராவை பார்த்து கோபமாகக் கேட்டாள்.
"அந்த சுபா... ஒரு சிண்டு... அதெல்லாம் உன்னைக் கேள்வி கேட்டுருக்கு... நீ யார் டீ என்னை கேட்க, கல்யாணம் ஆச்சுல்ல உன் வேலையை பாருன்னு சொல்லாம... அதுக்கெல்லாம் நீ பீல் பண்ணிருக்க... நண்டு, சிண்டெல்லாம் நம்மைக் கேள்வி கேட்க கூடாது அக்கா..." என்று நந்தினி கூற, "உண்மை தான் நந்தினி... எல்லாருக்கும் இடம் கொடுத்துட்டேன்... இப்ப குத்துதே... குடையுதேன்னு சொல்லி என்ன பிரயோஜனம்..." என்று பவித்ரா சலிப்பாக கூறினாள்.
"அப்படி எல்லாம் இல்லை அக்கா... இப்பவாது சொன்னியே... எனக்கென்னவோ அத்தான் அவங்க அம்மாவை கூட்டிட்டு வருவாங்கன்னு தோணுது." என்று நந்தினி யோசனையாகக் கூற, "வரலைனா?" என்று பவித்ரா சற்று அச்சத்தோடு கேட்டாள்.
"வர வைப்போம்... அதுக்கெல்லாம் நமக்கு ஆளு இருக்கு... நீ கவலை படாத..." என்று கூற, பவித்ரா நந்தினியோடு சென்றாள்.
Thank you so much for your likes and comments... Really happy to see your comments... Thought of coming with an episode on Sunday...
இரண்டல்ல ஒன்று – 30
வாசுதேவனும் பவித்ராவும் பேசிக் கொண்டிருந்த வேளையில் பண்ணை வீட்டில்...
ராம் பிரசாத் யோசனையாக அமர்ந்திருந்தான். 'நந்தினிக்கு என்னைப் பிடிக்கவில்லையா?' இந்த கேள்வி ராம் பிரசாத்தை குடைந்தது. 'நந்தினியின் இன்றைய பேச்சு... பிடிக்கவில்லை என்று சொன்னாலும், அவள் பார்வை... செயல் அப்படிச் சொல்லவில்லையே...' என்று சிந்தித்தான் ராம் பிரசாத்.
ராம் பிரசாத்தின் முகம் குழப்பத்தைப் பிரதிபலிக்க... அப்பொழுது அவர்கள் அறைக்குள் நுழைந்த நந்தினி, "பிரசாத்... நீங்க ஏன் இவ்வளவு யோசனையா இருக்கீங்க... வைஷ்ணவி போட்ட மனு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... அதெல்லாம் சரி ஆகிரும்... நீங்க வேலையை ஆரம்பிங்க... விவசாய நிலத்துக்கு தண்ணீ பாய்ச்சறது, அப்புறம் மருந்தடிக்கிறது... களை எடுக்கிறது... இப்படி எல்லாத்துக்கும் ரோபோட் டிசைன் ரெடி... நாம எப்ப வேலையை ஆரம்பிக்கப் போறோம் ?" என்று நந்தினி ஆர்வமாக வினவினாள்.
"நீ உங்க அக்காவுக்காக தானே இங்க இருக்க... அப்புறம் என் மேலயும்... என் வேலை மேலயும் உனக்கு என்ன அக்கறை..." என்று கோபமாகக் கேட்டான் ராம் பிரசாத்.
'சம்பந்தமே இல்லாம எதுக்கு இவங்க கோபப்படணும்?' என்ற சிந்தனையோடு... தோளைக் குலுக்கிக் கொண்டு... ராம் பிரசாத்தை ஆழமாகப் பார்த்தாள் நந்தினி.
'நல்லா பார்ப்பா... நல்லா இனிய இனிய பேசுவா... ஆனால் விட்டுட்டு போயிருவேன்னு சொல்லுவா....' என்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ராம் பிரசாத்.
'ஏற்கனவே அக்கா பிரச்சனையோடு வீட்டில் இருக்கா... இப்ப நானும் பிரச்சனைன்னு போனேன்... அம்மா அவ்விளவு தான் இரண்டு பேரையும் நார் நாரா கிழிச்சி தொங்க விட்டுருவாங்க... அமைதியா இரு நந்தினி...' என்று தனக்கு தானே கூறிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் நந்தினி.
பார்வதியிடம் தன் அக்காவைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள் நந்தினி.
நந்தினி தலை கோத, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பவித்ரா நிமிர்ந்து பார்க்க... நந்தினி பவித்ராவை பார்த்து புன்னகைத்தாள்.
"அக்கா... ரொம்ப வருத்தப்படாத... வருத்தப்படுற அளவுக்கு எதுவும் நடக்கலை..." என்று சமாதானமாகக் கூறினாள் நந்தினி.
பவித்ரா அவளைப் புரியாமல் பார்க்க, "அத்தான்... உன் மேல் எவ்வளவு பாசமா இருக்காங்க... அந்த பாசம் எல்லா பிரச்சனையும் சரிசெஞ்சிரும் அக்கா..." என்று நம்பிக்கையோடு கூறினாள் நந்தினி.
வாசுதேவன் பற்றிய பேச்சில், பவித்ராவின் கண்களில் கோபத்தைத் தாண்டி, ஒரு கனிவு பிறந்தது.
அந்த கனிவை பார்த்து, 'இவளுக்கெல்லாம் இந்த வீராப்பு தேவையா...' என்ற கேலி நந்தினி மனதில் உதித்தது.
"நான் வீட்டை விட்டு வந்தது தப்பா நந்தினி?" என்று பவித்ரா பரிதாபமாகக் கேட்க, 'ஆம்... நீ உள்ள இருந்து தைரியமா போராடிருக்கணும்... அங்கிருந்து எல்லாரையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்ருக்கணும்...' என்று நந்தினியின் அறிவு சொல்ல விழைந்தாலும், பவித்ராவின் சோக முகம் நந்தினியை அமைதி காக்கச் செய்தது.
ஒரு நொடி மௌனத்திற்கு பின், "அப்படி எல்லாம் இல்லை அக்கா... நீயும் எவ்வளவு நாள் தான் பொறுத்துப் போவ... எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டிருவோம்... உங்க மாமியாரைப் பத்தி ஊரே தப்பு தப்பாத் தான் பேசுது... அவங்களை பார்த்து நறுக்குன்னு ஒரு நாலு வார்த்தைக் கேட்டுட்டு அப்புறம் போலாம் உங்க வீட்டுக்கு..." என்று தன் தமக்கைக்கு ஆறுதலாகப் பேசினாள் நந்தினி.
"கேட்பீங்க... கேட்பீங்க... அக்காளும்... தங்கச்சியும் எல்லாரையும் கேட்பீங்க... அவ போய் அந்த வீட்டில் வாழ வேண்டாம்..." என்று செல்வி கோபமாக கூறிய படி வர, "செல்வி..." என்று தன் மனைவியை அடக்கினார் ஆவுடையப்பன்.
"என்னை அடக்காதீங்க... இவளுக்கே இவ்வளவு வீம்பு இருந்தா... மாப்பிள்ளைக்கு இருக்காதா?" என்று கோபமாகக் கேட்டார் செல்வி.
"அந்த அம்மா வேற ஒரு மாதிரி... மாப்பிள்ளையும் இவளையும் ஒரேடியா பிரிச்சிட்டா என்ன பண்ண முடியும்... உள்ள இருக்கும் போதே பிரிச்சி இவ வெளிய வர அளவுக்கு நடந்துக்கிட்டவங்க… இன்னும் என்ன நாளும் பண்ணுவாங்க... பெண்ணை பெத்த நாம தான் இறங்கி போகணும்... வேற வழி இல்லை..." என்று செல்வி கோபமாகக் கூறினார்.
"அப்படி எல்லாம் ஒன்னும் செய்திற முடியாது செல்வி... கொஞ்சம் பொறுமையா இரு.” என்று கூறினார் ஆவுடையப்பன்.
"அத்தான் பாத்துப்பாங்க..." என்று பவித்ரா உறுதியாகக் கூறினாள். "அப்புறம் ஏன் டீ இங்க வந்த?" என்று செல்வி கோபமாகக் கேட்க, "நான் இங்க இருக்கிறது தான் உங்களுக்கு பிரச்சனைனா… நான் போயிடுறேன்..." என்று கண்ணீர் மல்கக் கூறினாள் பவித்ரா.
"பவித்ரா... நான் அப்படிச் சொல்லலை... பிரச்சனையை வளர்க்க வேண்டாமுன்னு தான் சொல்றேன்... மாப்பிள்ளை மாதிரி நல்லவரை பார்க்க முடியாது... உன்னை இப்ப போகச் சொல்லலை... ஆனால், மாப்பிள்ளை மன்னிப்பு கேட்கும் பொழுது தலைஞ்சி போன்னு தான் சொல்றேன்." என்று பவித்ராவின் தாய் செல்வி கண்ணீர் மல்கக் கூறினார்.
பவித்ரா தன் தாயின் கண்ணீரைக் கையாலாகாத தனத்தோடு பார்த்தாள்.
செல்வி, ஆவுடையப்பன் இருவரும் சென்று விட, "அக்கா... நீ அம்மா அழறதை எல்லாம் பார்க்காத... உன் அத்தையை இரண்டில் ஒன்னு கேட்டே ஆகணும்... நீயும் பேசுவன்னு அவங்களுக்கு தெரியணும்... இந்த பார் உன் பிரச்சனைக்கு நான் பேச முடியாது... நீ தான் பேசணும்... நாம குனிய குனிய இந்த உலகம் நம்மைக் குட்டத் தான் செய்யும்... யாரையும் நாம எதிர்க்க வேண்டாம்... ஆனால், அதே நேரத்தில் நீ இப்படின்னா இப்படி தான்னு இரு அக்கா... நாம குடும்பம் நல்லாருக்கணுமுன்னு வளஞ்சி கொடுக்கலாம்... உடைஞ்சி போக கூடாது... சுயமரியாதையை இழக்கக் கூடாது அக்கா... நம்ம பிள்ளைங்க கூட பிற்காலத்தில் நம்மை மதிக்காமல் போய்டும்..." என்று நந்தினி தீவிரமாகக் கூற, நந்தினி கூறுவதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் பவித்ரா.
"எல்லாரும் நம்ம கிட்ட பழகுற அளவுக்கு நல்லவளா இருந்தா போதும்.. உன்னை போற வர்றவன் எல்லாம் கேள்வி கேட்கற அளவுக்கு நீ நல்லவளா இருந்து என்ன சாதிக்க போற?" என்று நந்தினி பவித்ராவை பார்த்து கோபமாகக் கேட்டாள்.
"அந்த சுபா... ஒரு சிண்டு... அதெல்லாம் உன்னைக் கேள்வி கேட்டுருக்கு... நீ யார் டீ என்னை கேட்க, கல்யாணம் ஆச்சுல்ல உன் வேலையை பாருன்னு சொல்லாம... அதுக்கெல்லாம் நீ பீல் பண்ணிருக்க... நண்டு, சிண்டெல்லாம் நம்மைக் கேள்வி கேட்க கூடாது அக்கா..." என்று நந்தினி கூற, "உண்மை தான் நந்தினி... எல்லாருக்கும் இடம் கொடுத்துட்டேன்... இப்ப குத்துதே... குடையுதேன்னு சொல்லி என்ன பிரயோஜனம்..." என்று பவித்ரா சலிப்பாக கூறினாள்.
"அப்படி எல்லாம் இல்லை அக்கா... இப்பவாது சொன்னியே... எனக்கென்னவோ அத்தான் அவங்க அம்மாவை கூட்டிட்டு வருவாங்கன்னு தோணுது." என்று நந்தினி யோசனையாகக் கூற, "வரலைனா?" என்று பவித்ரா சற்று அச்சத்தோடு கேட்டாள்.
"வர வைப்போம்... அதுக்கெல்லாம் நமக்கு ஆளு இருக்கு... நீ கவலை படாத..." என்று கூற, பவித்ரா நந்தினியோடு சென்றாள்.
Last edited: