வாசு மாதிரி இருதலை கொள்ளி எறும்பு நிலைமையில் நம்ம சமுதாயத்தில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்.
முதன்முறையாக சாப்பாடு வேண்டாம் என்று வாசு தன் அம்மாவின் பேச்சுக்கு சின்ன எதிர்ப்பை காண்பித்து இருக்கிறான்.
தன் அம்மாவின் மனது வருத்தப்படும் என்று அம்மா எது சொன்னாலும்/செய்தாலும் அப்படியே சரி என்று வாசு எடுத்துக்கொள்ள கூடாது. தன் மனைவி இவ்வளவு சொல்லும் போது அதில் உள்ள உண்மைத் தன்மையை சற்றே ஆராய்ந்தால் போதும்.உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும். அன்புக்கும், ஏமாளித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு.இது இன்னும் தன் தாய் விசயத்தில் வாசுவிற்கு தெரியவில்லை. தெரிய வரும் நாளில் உத்தமி அம்மா நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.