Dear Friends,
Thank you so much for your likes and comments
இரண்டல்ல ஒன்று – 32
வாசுதேவன் கேட்ட கேள்வியின் தாக்கத்தில், அவனை ஆழமாகப் பார்த்தாள் பவித்ரா.
'அத்தான்... அத்தான்... அத்தான்...' என்று கதறியது பவித்ராவின் மனது.
'கடவுளே... நான் என்ன தப்பு பண்ணேன்... என் அத்தான் இப்படி புலம்புவதைப் பார்க்கிற தண்டனையை ஏன் எனக்கு கொடுக்குற?' என்று இறைவனைத் திட்டியபடி வாசுதேவனைச் சோகம் கவ்விய முகத்தோடு பார்த்தாள் பவித்ரா.
பவித்ராவின் மனம் வாசுதேவனின் பக்கம் சாய, 'நீ மன்னிப்பு கேட்கலைன்னா உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை...' அன்று வாசுதேவன் கூறிய, வார்த்தைகள் பவித்ராவின் காதில் தெளிவாக ஒலித்தது.
பவித்ராவின் மனம் சற்று நிலை பெற, அவள் அறிவு வேலை செய்தது. 'பவி... உன் வாழ்வில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்... இப்பொழுது உன் பிரச்சனையைச் சரி செய்யவில்லை என்றால்... ஒரு நாளும் சரி செய்ய முடியாது...' என்று பவித்ராவின் அறிவு எச்சரித்தது.
பவித்ரா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"என்ன பாக்குற பவி?" என்று கேட்டான் வாசுதேவன்.
"இல்லை.... அத்தை இங்க இல்லை... அது தான் இப்படி எல்லாம் பேசுறீங்க... அத்தை இங்க இருந்தா நிலைமையே மாறிரும்..." என்று பவித்ரா நக்கலான சிரிப்போடு கூறினாள்.
"பவி... நீ என்னை நம்பலை?" என்று ஏமாற்றமாகக் கேட்டான் வாசுதேவன்.
"நம்பலை..." என்று அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.
முதன் முறையாக தன் முன் வீற்றிருக்கும் பிரச்சனையின் வீரியம் வாசுதேவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
இழந்தது அன்பை அல்ல... நம்பிக்கையை என்று...
வாசுதேவனுக்கான அன்பு பவித்ராவிடம் உயிருள்ள வரை குறையாது... ஆனால் நம்பிக்கை அது சுக்கு நூறாக உடைந்து எங்கோ காணாமல் சென்று விட்ட அவல நிலை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.
'நான் பவித்ராவுக்கு நம்பிக்கையின் பாத்திரமாக இல்லையா?' இந்த கேள்வி வாசுதேவனின் மனதை ரணமாக்கியது.
"நான் உங்களை எப்படி நம்ப முடியும்? இப்ப உங்க அம்மா என்னைப் பத்தி தப்பா சொன்னா… நீங்க உங்க அம்மா சொல்றதை தான் கேட்பீங்கன்னு நான் நினைக்கிறேன்..." என்று வாசுதேவனைப் பார்த்து ஏமாற்றமாகக் கூறினாள் பவித்ரா.
வாசுதேவனின் கைகள், "பளார்..." என்று பவித்ராவின் கன்னத்தில் இறங்கியது.
"ஏதோ தப்பு பண்ணிடோம்முனு இறங்கி பேசினா... ரொம்ப தான் பேசுற..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.
"அம்மா அப்படி சொல்லுவாங்களா?" என்று உறுமினான் வாசுதேவன். "அப்படி உன்னை யாரவது சொன்னால் நான் அவங்களை சும்மா விட்டுருவேனா?" என்று கோபமாகக் கேட்டான் வாசுதேவன்.
பவித்ரா அடி வாங்கிய தடம் எதுவுமின்றி வாசுதேவனைப் பார்த்து கம்பீரமாகச் சிரித்தாள்.
"நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் இது தான்... இது தான் நீங்க... இது தான் பிரச்சனை..." என்று பவித்ரா கூற, அவளைப் புரியாமல் பார்த்தான் வாசுதேவன்.
"புரியலைல.... புரியாது... என்னை பத்தின சிந்தனை உங்களுக்கு அப்புறம் தான் வரும்... உங்க அம்மா சொல்ல மாட்டங்க... இது தான் உங்களுக்கு முதலில் வரும்..." என்று பவித்ரா சீறினாள்.
வாசுதேவன் பவித்ராவை குழப்பமாகப் பார்த்தான்.
"உங்க அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க... எதுவும் செய்ய மாட்டங்க... இது தான் உங்க நம்பிக்கை... நான் சொன்னாலும் நம்ப மாட்டீங்க... அப்படி உங்க மூளை... ரத்தம்... நாடி... நரம்பு... எங்கயும் பதிஞ்சிருச்சு... அதை நான் தப்பு சொல்லலை... சொல்லவும் மாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.
"உங்க அம்மா எப்படியும் இருந்துட்டு போகட்டும்... எனக்குக் கவலை இல்லை... அன்னைக்கி அவங்க நெஞ்சு வலி வந்த மாதிரி நடிச்சது எனக்குப் பெரிய விஷயம் இல்லை... புதிய விஷயமும் இல்லை... இதை மாதிரி நிறைய நடிப்பை நான் பார்த்திருக்கேன்… உங்க கிட்ட சொல்லிருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்க... அன்னைக்கி அவங்க நடிப்போ... அவங்க பிரச்சனையைத் திசை திருப்பின விதமோ என்னை பாதிக்கலை... பாதிச்சது நீங்க... உங்க செயல்..." என்று சலிப்பாகக் கூறினாள் பவித்ரா.
"பவி..." என்று வாசுதேவன் கெஞ்சுதலாக அழைத்தான்.
"நான் பேசணும்... இன்னைக்காவது நான் பேசணும்... நான் பேசணுமுன்னு சொல்லை... நீங்க தான் என்னை பேச கூப்பிட்டீங்க... அப்ப நான் பேசுறதை கேளுங்க..." என்று பிடிவாதமாகக் கூறினாள் பவித்ரா.
வாசுதேவன் மௌனம் காக்க, "நான் பழகிட்டேன்... அத்தையை நான் உங்களுக்காக ஏத்துக்கிட்டேன்... என் அத்தானுக்காக அவங்க அம்மா செய்ற எல்லா தப்பையும் ஏத்துக்கிட்டு, பொறுத்துகிட்டு வாழ பழகிட்டேன்... எல்லாம் என் அத்தானுக்காக மட்டும் தான்…" என்று கண்ணீர் மல்கக் கூறினாள் பவித்ரா.
"ஆனால், அன்னைக்கி என்னை பாதிச்ச விஷயம் என்ன தெரியுமா? நீங்க... உங்க அம்மா செய்ற தப்புக்கு விலை பேசியது... என் சுயமரியாதையை... எந்த நேரமும் அம்மா... அம்மா... அம்மா... அப்படின்னா நான் எதுக்கு? உங்களுக்கு எதுக்கு கல்யாணம்?" என்று காட்டமாகக் கேட்டாள் பவித்ரா.
வாசுதேவன் பவித்ராவை புதிதாகப் பார்த்தான். 'இவள் என் பவியா?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.
பவித்ராவின் கேள்விகள் வாசுதேவன் மனதில் சாட்டையடியாக, இறங்கி அவன் கோபத்தை ஏற்றிக் கொண்டு தான் இருந்தது.
"இதை ஏன் இத்தனை வருஷம் கேட்கலைன்னு நீங்க கேட்கலாம்..." என்று பவித்ரா தலை அசைத்து வாசுதேவனை பார்த்து கோபமாகக் கேட்டாள்.
வாசுதேவன், பவித்ராவை மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அம்மா மேல பாசம் இருந்தாலும்... என் அத்தானுக்கு என் மேலும் பாசம் இருக்கும்னு நம்பின முட்டாள் நான்... அம்மா மேல் மரியாதை இருந்தாலும்... என்னை எங்கயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்கன்னு என் அத்தானை பத்து வருஷமா நம்பின மிக பெரிய ஏமாளி நான்." என்று தலையில் அடித்தாள் பவித்ரா.
"நந்தினி சொன்னா உண்மையான அன்பு சுயமரியாதையை விலை பேசாதுன்னு... இப்ப புரியுது உங்களுக்கு என் மேல் இருக்கிறது அன்பே இல்லைன்னு… அன்பே இல்லைன்னு நான் அடித்து சொல்லுவேன்... " என்று பவித்ரா கூற, "எல்லா பிரச்ச்னைக்கும் அவ தான் காரணம்." என்று கோபமாக முணுமுணுத்தான் வாசுதேவன்.
Thank you so much for your likes and comments
இரண்டல்ல ஒன்று – 32
வாசுதேவன் கேட்ட கேள்வியின் தாக்கத்தில், அவனை ஆழமாகப் பார்த்தாள் பவித்ரா.
'அத்தான்... அத்தான்... அத்தான்...' என்று கதறியது பவித்ராவின் மனது.
'கடவுளே... நான் என்ன தப்பு பண்ணேன்... என் அத்தான் இப்படி புலம்புவதைப் பார்க்கிற தண்டனையை ஏன் எனக்கு கொடுக்குற?' என்று இறைவனைத் திட்டியபடி வாசுதேவனைச் சோகம் கவ்விய முகத்தோடு பார்த்தாள் பவித்ரா.
பவித்ராவின் மனம் வாசுதேவனின் பக்கம் சாய, 'நீ மன்னிப்பு கேட்கலைன்னா உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை...' அன்று வாசுதேவன் கூறிய, வார்த்தைகள் பவித்ராவின் காதில் தெளிவாக ஒலித்தது.
பவித்ராவின் மனம் சற்று நிலை பெற, அவள் அறிவு வேலை செய்தது. 'பவி... உன் வாழ்வில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்... இப்பொழுது உன் பிரச்சனையைச் சரி செய்யவில்லை என்றால்... ஒரு நாளும் சரி செய்ய முடியாது...' என்று பவித்ராவின் அறிவு எச்சரித்தது.
பவித்ரா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"என்ன பாக்குற பவி?" என்று கேட்டான் வாசுதேவன்.
"இல்லை.... அத்தை இங்க இல்லை... அது தான் இப்படி எல்லாம் பேசுறீங்க... அத்தை இங்க இருந்தா நிலைமையே மாறிரும்..." என்று பவித்ரா நக்கலான சிரிப்போடு கூறினாள்.
"பவி... நீ என்னை நம்பலை?" என்று ஏமாற்றமாகக் கேட்டான் வாசுதேவன்.
"நம்பலை..." என்று அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.
முதன் முறையாக தன் முன் வீற்றிருக்கும் பிரச்சனையின் வீரியம் வாசுதேவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
இழந்தது அன்பை அல்ல... நம்பிக்கையை என்று...
வாசுதேவனுக்கான அன்பு பவித்ராவிடம் உயிருள்ள வரை குறையாது... ஆனால் நம்பிக்கை அது சுக்கு நூறாக உடைந்து எங்கோ காணாமல் சென்று விட்ட அவல நிலை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.
'நான் பவித்ராவுக்கு நம்பிக்கையின் பாத்திரமாக இல்லையா?' இந்த கேள்வி வாசுதேவனின் மனதை ரணமாக்கியது.
"நான் உங்களை எப்படி நம்ப முடியும்? இப்ப உங்க அம்மா என்னைப் பத்தி தப்பா சொன்னா… நீங்க உங்க அம்மா சொல்றதை தான் கேட்பீங்கன்னு நான் நினைக்கிறேன்..." என்று வாசுதேவனைப் பார்த்து ஏமாற்றமாகக் கூறினாள் பவித்ரா.
வாசுதேவனின் கைகள், "பளார்..." என்று பவித்ராவின் கன்னத்தில் இறங்கியது.
"ஏதோ தப்பு பண்ணிடோம்முனு இறங்கி பேசினா... ரொம்ப தான் பேசுற..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.
"அம்மா அப்படி சொல்லுவாங்களா?" என்று உறுமினான் வாசுதேவன். "அப்படி உன்னை யாரவது சொன்னால் நான் அவங்களை சும்மா விட்டுருவேனா?" என்று கோபமாகக் கேட்டான் வாசுதேவன்.
பவித்ரா அடி வாங்கிய தடம் எதுவுமின்றி வாசுதேவனைப் பார்த்து கம்பீரமாகச் சிரித்தாள்.
"நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் இது தான்... இது தான் நீங்க... இது தான் பிரச்சனை..." என்று பவித்ரா கூற, அவளைப் புரியாமல் பார்த்தான் வாசுதேவன்.
"புரியலைல.... புரியாது... என்னை பத்தின சிந்தனை உங்களுக்கு அப்புறம் தான் வரும்... உங்க அம்மா சொல்ல மாட்டங்க... இது தான் உங்களுக்கு முதலில் வரும்..." என்று பவித்ரா சீறினாள்.
வாசுதேவன் பவித்ராவை குழப்பமாகப் பார்த்தான்.
"உங்க அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க... எதுவும் செய்ய மாட்டங்க... இது தான் உங்க நம்பிக்கை... நான் சொன்னாலும் நம்ப மாட்டீங்க... அப்படி உங்க மூளை... ரத்தம்... நாடி... நரம்பு... எங்கயும் பதிஞ்சிருச்சு... அதை நான் தப்பு சொல்லலை... சொல்லவும் மாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள் பவித்ரா.
"உங்க அம்மா எப்படியும் இருந்துட்டு போகட்டும்... எனக்குக் கவலை இல்லை... அன்னைக்கி அவங்க நெஞ்சு வலி வந்த மாதிரி நடிச்சது எனக்குப் பெரிய விஷயம் இல்லை... புதிய விஷயமும் இல்லை... இதை மாதிரி நிறைய நடிப்பை நான் பார்த்திருக்கேன்… உங்க கிட்ட சொல்லிருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்க... அன்னைக்கி அவங்க நடிப்போ... அவங்க பிரச்சனையைத் திசை திருப்பின விதமோ என்னை பாதிக்கலை... பாதிச்சது நீங்க... உங்க செயல்..." என்று சலிப்பாகக் கூறினாள் பவித்ரா.
"பவி..." என்று வாசுதேவன் கெஞ்சுதலாக அழைத்தான்.
"நான் பேசணும்... இன்னைக்காவது நான் பேசணும்... நான் பேசணுமுன்னு சொல்லை... நீங்க தான் என்னை பேச கூப்பிட்டீங்க... அப்ப நான் பேசுறதை கேளுங்க..." என்று பிடிவாதமாகக் கூறினாள் பவித்ரா.
வாசுதேவன் மௌனம் காக்க, "நான் பழகிட்டேன்... அத்தையை நான் உங்களுக்காக ஏத்துக்கிட்டேன்... என் அத்தானுக்காக அவங்க அம்மா செய்ற எல்லா தப்பையும் ஏத்துக்கிட்டு, பொறுத்துகிட்டு வாழ பழகிட்டேன்... எல்லாம் என் அத்தானுக்காக மட்டும் தான்…" என்று கண்ணீர் மல்கக் கூறினாள் பவித்ரா.
"ஆனால், அன்னைக்கி என்னை பாதிச்ச விஷயம் என்ன தெரியுமா? நீங்க... உங்க அம்மா செய்ற தப்புக்கு விலை பேசியது... என் சுயமரியாதையை... எந்த நேரமும் அம்மா... அம்மா... அம்மா... அப்படின்னா நான் எதுக்கு? உங்களுக்கு எதுக்கு கல்யாணம்?" என்று காட்டமாகக் கேட்டாள் பவித்ரா.
வாசுதேவன் பவித்ராவை புதிதாகப் பார்த்தான். 'இவள் என் பவியா?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.
பவித்ராவின் கேள்விகள் வாசுதேவன் மனதில் சாட்டையடியாக, இறங்கி அவன் கோபத்தை ஏற்றிக் கொண்டு தான் இருந்தது.
"இதை ஏன் இத்தனை வருஷம் கேட்கலைன்னு நீங்க கேட்கலாம்..." என்று பவித்ரா தலை அசைத்து வாசுதேவனை பார்த்து கோபமாகக் கேட்டாள்.
வாசுதேவன், பவித்ராவை மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அம்மா மேல பாசம் இருந்தாலும்... என் அத்தானுக்கு என் மேலும் பாசம் இருக்கும்னு நம்பின முட்டாள் நான்... அம்மா மேல் மரியாதை இருந்தாலும்... என்னை எங்கயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்கன்னு என் அத்தானை பத்து வருஷமா நம்பின மிக பெரிய ஏமாளி நான்." என்று தலையில் அடித்தாள் பவித்ரா.
"நந்தினி சொன்னா உண்மையான அன்பு சுயமரியாதையை விலை பேசாதுன்னு... இப்ப புரியுது உங்களுக்கு என் மேல் இருக்கிறது அன்பே இல்லைன்னு… அன்பே இல்லைன்னு நான் அடித்து சொல்லுவேன்... " என்று பவித்ரா கூற, "எல்லா பிரச்ச்னைக்கும் அவ தான் காரணம்." என்று கோபமாக முணுமுணுத்தான் வாசுதேவன்.
Last edited: