Dear Friends,
Thank you so much for your likes and comments...
இரண்டல்ல ஒன்று – 34
இத்தனை வருடங்கள் கழித்துக் கிடைத்த தனிமையில் அந்த கேள்வியை சந்துரு கேட்க, வாசுதேவன் சந்துருவை ஆழமாகப் பார்த்தான்.
"நீ ஒரு செயல் செஞ்சா அதில் நியாயமிருக்குமுன்னு எனக்குத் தெரியாதா? இல்லை உனக்குச் சுபாவிடம் இல்லாத உரிமையா?" என்று வாசுதேவன் கலங்கிய குரலில் கேட்டான்.
"ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லிருக்கலாம்... நான் தான் செஞ்சேன்னு அம்மா கிட்ட சொல்லிருப்பேன்... குடும்ப பகையாகியிருக்காது... நீ செஞ்சதால் தானே குடும்ப பகையாகிருச்சு... எனக்கு அது கோபம் தான்... வருத்தம் தான்..." என்று வாசுதேவன் உடைய, அவனை ஆரத் தழுவி... 'என் நண்பன்...' என்று பெருமையாக எண்ணினான் சந்துரு.
அப்பொழுது சுபா, உத்தமி, மஹாதேவன் அனைவரும் மருத்துவமனைக்குள் நுழைய, சுபா கார்த்திகேயனை நோக்கி வேகமாக ஓடினாள்.
உத்தமி சந்துருவின் சட்டையை பிடித்து, "உன்னை மகனாய் நினைத்ததற்கு இப்படி எம் பொண்ணு வாழ்க்கையை ஆக்கிட்டியே..." என்று உத்தமி சந்துருவை அடிக்க முற்பட, வாசுதேவன் சந்துருவிற்கு அடி விழாமல், அதைத் தான் வாங்கிக் கொண்டு, "அம்மா... உங்களுக்கு என்ன நேரத்தில், எது பேசணுமுன்னு தெரியாது..." என்று கடுப்பாக கூறினான்.
"இவன் சகவாசமே வேண்டாமுன்னு தான் நான் சொல்றனே... உன் மண்டைக்கு உறைக்கவே உறைக்காதா?" என்று உத்தமி வாசுதேவனை அடிக்க முயல, சந்துரு உத்தமியின் கைகளை உறுதியாகப் பிடித்தான்.
'இவன் தான் சந்துரு... சின்ன வயதிலிருந்து வாசு தவறு செய்தாலும்... மாட்டிக் கொண்டாலும்... யாரையும், எதையும் சிந்திக்காமல் அவனை பாதுகாக்கும் நண்பன் இவன் தான்... சந்துரு தவறே செய்ய விடாமல் அவனைப் பாதுகாக்கும் நல்லவனே வாசுதேவன்...' என்ற சிந்தனையோடு அவர்களைப் பெருமையாக பார்த்தார் மஹாதேவன்.
"அம்மா... தப்பு செஞ்சது நான்... என்னை அடிங்க... எதுக்கு தேவாவை அடிக்கிறீங்க?" என்று உத்தமியின் முகம் பார்த்துக் கேட்டான் சந்துரு.
"ஊரான் வீட்டு பிள்ளையை அடிக்கும் உரிமை எனக்கு கிடையாது..." என்று உத்தமி தன் வார்த்தைகளால் சந்துருவைத் தூர நிறுத்த, "அம்மா... நான் ஊரான் வீட்டுப் பிள்ளையா? நீங்க வளர்த்த சந்துரு இல்லையா?" என்று பரிதாபமாகக் கேட்டான் சந்துரு.
சுபா கண்களைக் கசக்கியபடி வர, "இந்த பார்... பெத்த பாவத்துக்கு உன்னை மன்னிச்சிட்டேன்... அவனை வெளிய போக சொல்லு..." என்று சந்துருவை கை காட்டினார் உத்தமி.
"அம்மா... கொஞ்சம் அமைதியா இருங்களேன்... அன்னைக்கி என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று சுபா கோபமாகக் கேட்க, "சுபா..." என்று அழுத்தமாக அழைத்து, சந்துரு மறுப்பாகத் தலை அசைத்தான்.
"ஐயோ... சந்துரு அண்ணா போதும்..." என்று சந்துருவைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள் சுபா.
"நானும்... அவங்களும் குற்ற உணர்ச்சியிலே செத்துருவோம் அண்ணா.... உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் தான் நாங்க இவ்வுளவு நாள் அமைதியா இருந்தோம்... போதும் அண்ணா... நான் எல்லாத்தயும் சொல்லுறேன் அண்ணா... நீங்க சரின்னு சொல்லுங்க..." என்று சந்துருவிடம் சுபா யாசகம் கேட்டு நின்றாள்.
சந்துரு வேறு வழியின்றி அமைதி காக்க, "அன்னைக்கி சந்துரு அண்ணா... எங்க கல்யாண விஷயம் கேட்டு, அதைத் தடுக்கத் தான் அங்கு வந்தாக... ஆனால் அதுக்குள்ள, கோவிலில் கல்யாணம் முடிஞ்சிருச்சு... அவங்க என் கழுத்தில் தாலியையும் கட்டிட்டாங்க... நாங்க தான் பண்ணொமுன்னு உங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை பெருசாகும்னு சந்துரு அண்ணா அவங்க கல்யாணம் செஞ்சி வச்சதா சொல்லி பழியை தான் ஏத்துகிட்டாக... சந்துரு அண்ணா அப்புறம் போட்டது சாட்சி கையெழுத்து மட்டும் தான்...." என்று சுபா கூற, அங்கு மௌனம் நிலவியது.
"அந்த ஏமாத்துக்கார பையன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டானா?" என்று உத்தமி கோபமாக வெடிக்க, "நாங்க விரும்பினோம்... உங்க கிட்ட சொன்னோம், நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்களை... அது தான் நாங்களே பண்ணிக்கிட்டோம்..." என்று சுபா இறுமாப்பாகக் கூற, "இப்படி இருக்கிறவனுக்கு யார் பொண்ணு கொடுப்பா?" என்று கோபமாகக் கேட்டார் உத்தமி.
"அம்மா... இதெல்லாம் ஒரு நோயே இல்லை... மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருச்சு... இவர் இப்படின்னு தெரிஞ்சி தான் நான் விரும்பினேன்... நேத்து நம்ம வீட்டில் நடந்த பிரச்சனையில் எனக்கும் அவங்களுக்கு சண்டை... கொஞ்சம் பதட்டமாகிட்டாக காலையில்... அது தான் ரொம்ப வருஷம் கழிச்சி இன்னைக்கி திரும்பி வந்திருக்கு..." என்று சுபா வருத்தம் தொனித்த குரலில் கூறினாள்.
உத்தமி சுபாவை வெறுப்பாகப் பார்க்க, "அம்மா... நம்ம வாசு அண்ணனைச் சின்ன வயசில் கிணற்றில் விழுந்து காப்பாத்தும் பொழுது தலையில் அடிபட்டதால் தான் அம்மா அவங்களுக்கு இப்படி வருது... எல்லாரும் கிணற்றில் தவறி விழுந்த வாசு அண்ணாவைப் பார்த்தோம்... காப்பாத்த போன இவங்களுக்கு பட்ட அடியை அப்ப யாரும் கவனிக்கலை... ரொம்ப நாள் கழிச்சி தான் தெரிஞ்சிருக்கு..." என்று தாழ்ந்த குரலில் கூறினாள் சுபா.
"எனக்கு அவங்களை விரும்பும் பொது இந்த விஷயம் தெரியாது... தெரிஞ்ச பிறகு, யாருக்காகவும் அவங்களை விட எனக்கு மனசில்லை... இது உங்க யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான் அவங்க சொல்லிருந்தாக.... ஆனால், சொல்லாம உங்களுக்கு மனுஷங்களை புரியத் தெரியாது அம்மா..." என்று உத்தமியைப் பார்த்துச் சலிப்பாகக் கூறி சென்றாள் சுபா.
"கடைசியில் எல்லாரும் நல்லவங்களா ஆகி என்னை ஒதுக்கி வச்சிட்டிங்கள்ள?" என்று வாசுதேவன் வருத்தமாகக் கேட்க, வாசுதேவனைத் தோளோடு அணைத்து, "நல்லவன் நீ வருத்தப்பட்டிற கூடாதுன்னு தான் தேவா..." என்று உணர்ச்சி பொங்கக் கூறினான் சந்துரு.
'நல்ல நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமே...' என்று எண்ணினான் வாசுதேவன்.
சில மணி நேர சிகிச்சைக்குப் பின், கார்த்திகேயன் உடல் நிலை தேறிவிட... அனைவரும் வீடு திரும்பினர்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. உத்தமியால், சுபா சொன்ன எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் எந்த உறவையும் புதுப்பித்துக் கொள்ளவும் விரும்பவில்லை.
ஆனால், முன் போல் வாசுதேவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சந்துரு, வாசுதேவன் இருவரும் முன் போல் சுதந்திரமாக ஊரை சுற்றினர்.
கார்த்திகேயனும் அவ்வப்பொழுது இவர்களோடு சேர்ந்து கொண்டான்.
ராம் பிரசாத் நந்தினியின் நெருக்கம் அதிகமானாலும், வாசுதேவன் பவித்ராவின் இடைவெளி குறையவில்லை.
வாசுதேவனின் அன்பு குறையவில்லை. "எட்டி..." என்ற அழைப்பும் குறையவில்லை.
அதே நேரம், அவன் பவித்ராவை முன் போல் வீட்டிற்கு அழைத்துக் கட்டாயப்படுத்த வில்லை. பவித்ராவின் அன்பும் குறையவில்லை. கோபமும்... வலியும் குறைந்தபாடில்லை. அவள் பிரசவத்திற்கான நாளும் நெருங்கி இருந்தது.
அவர்கள் சண்டை சந்தோஷுக்கு தெரியாமல் இருவரும் சாமர்த்தியசாலித்தனமாக பார்த்துக் கொண்டார்கள்.
அன்று, வாசுதேவன் சந்தோஷை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு மறுபடியும் பவித்ராவை தேடி வந்தான்.
Thank you so much for your likes and comments...
இரண்டல்ல ஒன்று – 34
இத்தனை வருடங்கள் கழித்துக் கிடைத்த தனிமையில் அந்த கேள்வியை சந்துரு கேட்க, வாசுதேவன் சந்துருவை ஆழமாகப் பார்த்தான்.
"நீ ஒரு செயல் செஞ்சா அதில் நியாயமிருக்குமுன்னு எனக்குத் தெரியாதா? இல்லை உனக்குச் சுபாவிடம் இல்லாத உரிமையா?" என்று வாசுதேவன் கலங்கிய குரலில் கேட்டான்.
"ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லிருக்கலாம்... நான் தான் செஞ்சேன்னு அம்மா கிட்ட சொல்லிருப்பேன்... குடும்ப பகையாகியிருக்காது... நீ செஞ்சதால் தானே குடும்ப பகையாகிருச்சு... எனக்கு அது கோபம் தான்... வருத்தம் தான்..." என்று வாசுதேவன் உடைய, அவனை ஆரத் தழுவி... 'என் நண்பன்...' என்று பெருமையாக எண்ணினான் சந்துரு.
அப்பொழுது சுபா, உத்தமி, மஹாதேவன் அனைவரும் மருத்துவமனைக்குள் நுழைய, சுபா கார்த்திகேயனை நோக்கி வேகமாக ஓடினாள்.
உத்தமி சந்துருவின் சட்டையை பிடித்து, "உன்னை மகனாய் நினைத்ததற்கு இப்படி எம் பொண்ணு வாழ்க்கையை ஆக்கிட்டியே..." என்று உத்தமி சந்துருவை அடிக்க முற்பட, வாசுதேவன் சந்துருவிற்கு அடி விழாமல், அதைத் தான் வாங்கிக் கொண்டு, "அம்மா... உங்களுக்கு என்ன நேரத்தில், எது பேசணுமுன்னு தெரியாது..." என்று கடுப்பாக கூறினான்.
"இவன் சகவாசமே வேண்டாமுன்னு தான் நான் சொல்றனே... உன் மண்டைக்கு உறைக்கவே உறைக்காதா?" என்று உத்தமி வாசுதேவனை அடிக்க முயல, சந்துரு உத்தமியின் கைகளை உறுதியாகப் பிடித்தான்.
'இவன் தான் சந்துரு... சின்ன வயதிலிருந்து வாசு தவறு செய்தாலும்... மாட்டிக் கொண்டாலும்... யாரையும், எதையும் சிந்திக்காமல் அவனை பாதுகாக்கும் நண்பன் இவன் தான்... சந்துரு தவறே செய்ய விடாமல் அவனைப் பாதுகாக்கும் நல்லவனே வாசுதேவன்...' என்ற சிந்தனையோடு அவர்களைப் பெருமையாக பார்த்தார் மஹாதேவன்.
"அம்மா... தப்பு செஞ்சது நான்... என்னை அடிங்க... எதுக்கு தேவாவை அடிக்கிறீங்க?" என்று உத்தமியின் முகம் பார்த்துக் கேட்டான் சந்துரு.
"ஊரான் வீட்டு பிள்ளையை அடிக்கும் உரிமை எனக்கு கிடையாது..." என்று உத்தமி தன் வார்த்தைகளால் சந்துருவைத் தூர நிறுத்த, "அம்மா... நான் ஊரான் வீட்டுப் பிள்ளையா? நீங்க வளர்த்த சந்துரு இல்லையா?" என்று பரிதாபமாகக் கேட்டான் சந்துரு.
சுபா கண்களைக் கசக்கியபடி வர, "இந்த பார்... பெத்த பாவத்துக்கு உன்னை மன்னிச்சிட்டேன்... அவனை வெளிய போக சொல்லு..." என்று சந்துருவை கை காட்டினார் உத்தமி.
"அம்மா... கொஞ்சம் அமைதியா இருங்களேன்... அன்னைக்கி என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று சுபா கோபமாகக் கேட்க, "சுபா..." என்று அழுத்தமாக அழைத்து, சந்துரு மறுப்பாகத் தலை அசைத்தான்.
"ஐயோ... சந்துரு அண்ணா போதும்..." என்று சந்துருவைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள் சுபா.
"நானும்... அவங்களும் குற்ற உணர்ச்சியிலே செத்துருவோம் அண்ணா.... உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் தான் நாங்க இவ்வுளவு நாள் அமைதியா இருந்தோம்... போதும் அண்ணா... நான் எல்லாத்தயும் சொல்லுறேன் அண்ணா... நீங்க சரின்னு சொல்லுங்க..." என்று சந்துருவிடம் சுபா யாசகம் கேட்டு நின்றாள்.
சந்துரு வேறு வழியின்றி அமைதி காக்க, "அன்னைக்கி சந்துரு அண்ணா... எங்க கல்யாண விஷயம் கேட்டு, அதைத் தடுக்கத் தான் அங்கு வந்தாக... ஆனால் அதுக்குள்ள, கோவிலில் கல்யாணம் முடிஞ்சிருச்சு... அவங்க என் கழுத்தில் தாலியையும் கட்டிட்டாங்க... நாங்க தான் பண்ணொமுன்னு உங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை பெருசாகும்னு சந்துரு அண்ணா அவங்க கல்யாணம் செஞ்சி வச்சதா சொல்லி பழியை தான் ஏத்துகிட்டாக... சந்துரு அண்ணா அப்புறம் போட்டது சாட்சி கையெழுத்து மட்டும் தான்...." என்று சுபா கூற, அங்கு மௌனம் நிலவியது.
"அந்த ஏமாத்துக்கார பையன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டானா?" என்று உத்தமி கோபமாக வெடிக்க, "நாங்க விரும்பினோம்... உங்க கிட்ட சொன்னோம், நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்களை... அது தான் நாங்களே பண்ணிக்கிட்டோம்..." என்று சுபா இறுமாப்பாகக் கூற, "இப்படி இருக்கிறவனுக்கு யார் பொண்ணு கொடுப்பா?" என்று கோபமாகக் கேட்டார் உத்தமி.
"அம்மா... இதெல்லாம் ஒரு நோயே இல்லை... மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருச்சு... இவர் இப்படின்னு தெரிஞ்சி தான் நான் விரும்பினேன்... நேத்து நம்ம வீட்டில் நடந்த பிரச்சனையில் எனக்கும் அவங்களுக்கு சண்டை... கொஞ்சம் பதட்டமாகிட்டாக காலையில்... அது தான் ரொம்ப வருஷம் கழிச்சி இன்னைக்கி திரும்பி வந்திருக்கு..." என்று சுபா வருத்தம் தொனித்த குரலில் கூறினாள்.
உத்தமி சுபாவை வெறுப்பாகப் பார்க்க, "அம்மா... நம்ம வாசு அண்ணனைச் சின்ன வயசில் கிணற்றில் விழுந்து காப்பாத்தும் பொழுது தலையில் அடிபட்டதால் தான் அம்மா அவங்களுக்கு இப்படி வருது... எல்லாரும் கிணற்றில் தவறி விழுந்த வாசு அண்ணாவைப் பார்த்தோம்... காப்பாத்த போன இவங்களுக்கு பட்ட அடியை அப்ப யாரும் கவனிக்கலை... ரொம்ப நாள் கழிச்சி தான் தெரிஞ்சிருக்கு..." என்று தாழ்ந்த குரலில் கூறினாள் சுபா.
"எனக்கு அவங்களை விரும்பும் பொது இந்த விஷயம் தெரியாது... தெரிஞ்ச பிறகு, யாருக்காகவும் அவங்களை விட எனக்கு மனசில்லை... இது உங்க யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான் அவங்க சொல்லிருந்தாக.... ஆனால், சொல்லாம உங்களுக்கு மனுஷங்களை புரியத் தெரியாது அம்மா..." என்று உத்தமியைப் பார்த்துச் சலிப்பாகக் கூறி சென்றாள் சுபா.
"கடைசியில் எல்லாரும் நல்லவங்களா ஆகி என்னை ஒதுக்கி வச்சிட்டிங்கள்ள?" என்று வாசுதேவன் வருத்தமாகக் கேட்க, வாசுதேவனைத் தோளோடு அணைத்து, "நல்லவன் நீ வருத்தப்பட்டிற கூடாதுன்னு தான் தேவா..." என்று உணர்ச்சி பொங்கக் கூறினான் சந்துரு.
'நல்ல நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமே...' என்று எண்ணினான் வாசுதேவன்.
சில மணி நேர சிகிச்சைக்குப் பின், கார்த்திகேயன் உடல் நிலை தேறிவிட... அனைவரும் வீடு திரும்பினர்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. உத்தமியால், சுபா சொன்ன எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் எந்த உறவையும் புதுப்பித்துக் கொள்ளவும் விரும்பவில்லை.
ஆனால், முன் போல் வாசுதேவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சந்துரு, வாசுதேவன் இருவரும் முன் போல் சுதந்திரமாக ஊரை சுற்றினர்.
கார்த்திகேயனும் அவ்வப்பொழுது இவர்களோடு சேர்ந்து கொண்டான்.
ராம் பிரசாத் நந்தினியின் நெருக்கம் அதிகமானாலும், வாசுதேவன் பவித்ராவின் இடைவெளி குறையவில்லை.
வாசுதேவனின் அன்பு குறையவில்லை. "எட்டி..." என்ற அழைப்பும் குறையவில்லை.
அதே நேரம், அவன் பவித்ராவை முன் போல் வீட்டிற்கு அழைத்துக் கட்டாயப்படுத்த வில்லை. பவித்ராவின் அன்பும் குறையவில்லை. கோபமும்... வலியும் குறைந்தபாடில்லை. அவள் பிரசவத்திற்கான நாளும் நெருங்கி இருந்தது.
அவர்கள் சண்டை சந்தோஷுக்கு தெரியாமல் இருவரும் சாமர்த்தியசாலித்தனமாக பார்த்துக் கொண்டார்கள்.
அன்று, வாசுதேவன் சந்தோஷை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு மறுபடியும் பவித்ராவை தேடி வந்தான்.
Last edited: