Dear Friends,
Thank you so much for your likes and comments...
இரண்டல்ல ஒன்று – 6
முகமன் பேச்சுக்களோடு பவித்ராவின் தாயார் செல்வி, அனைவருக்கும் காபி கொடுக்க, சந்துருவிற்கு காபி கொடுக்கையில், "இல்லை... அவன் கடுங்காப்பி..." என்று ஆரம்பித்துவிட்டு, தன் பற்களை கடித்து பாதியில் நிறுத்தினான் வாசுதேவன்.
மற்றவர்கள் வாசுதேவனை ஆச்சரியமாகப் பார்க்க, சந்துரு சிரித்த முகமாக அவனைப் பார்த்தான்.
சந்துரு சிரித்தாலும் அந்த சிரிப்பின் பின் ஒரு வலி இருந்தது. அன்று வாசுதேவன் கூறிய வார்த்தைகள், இன்றும் வாசுதேவன் முகத்தைப் பார்க்கும் பொழுது சந்துருவின் காதில் ஒலித்தது.
சந்துருவிடம் இருந்து தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்ட வாசுதேவன், "இல்லை... பொதுவா ஊர் பழக்கம்..." என்று சாமளித்து, "நீங்க குடுங்க அத்தை..." என்று கூறினான்.
உரிமையோடு தன்னை அம்மா… என்று அழைத்துப் பேசும் வாசுதேவன், இன்று தடுமாறுவதை தாங்க முடியாமல் தன் தலையைக் குனிந்து கொண்டார் பார்வதி சந்துருவின் தாயார்.
'கடவுளே... இந்தச் சோதனைக்கெல்லாம் ஒரு முடிவைத் தர கூடாதா? நான் சின்ன வயசிலிருந்து, சந்துருவையும், வாசுவையும் வேற மாதிரி நினைத்ததில்லையே... எல்லாம் இந்த சந்துருவால் வந்தது…' என்று இறைவனிடம் கோபிக்க ஆரம்பித்து, மனக் குமுறலை தன் மகனிடம் முடித்தார் பார்வதி.
சிவசைலம் சூழ்நிலையை தன் கைக்குள் கொண்டு வந்து, "பெண்ணைப் பார்க்கலாமா?" என்று கேட்டார்.
கணவரின் குரலில் நிகழ் காலத்திற்கு திரும்பினார் பார்வதி. தன் இரண்டாவது மகன் ராமப்ரசாத்தின் எண்ணங்கள் மேலோங்க தன் கவனத்தை முழுதாக பெண் பார்க்கும் படலத்திற்கு திருப்பினார்.
சந்தோஷ் சந்துரு மடியில் இருந்து இறங்கி, அகல்யாவை அழைத்துக் கொண்டு நந்தினி இருக்கும் அறைக்குள் சென்றான். பவித்ரா சிரித்த முகமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில்… நந்தினி வர, அனைவரும் நந்தினியைப் பார்க்க, நந்தினி தர்மசங்கடமாக தலை குனிந்து கொண்டாள்.
ராம் பிரசாத் குற்ற உணர்ச்சியில் நந்தினியைத் தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஆவுடையப்பன் தன் மகளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது வைஷ்ணவி என்ற பெயர் மின்ன, ராம் பிரசாத்தின் மொபைல் ஒலித்தது.
அந்தச் சத்தத்தில், ராமப்ரசாத்தின் தந்தை சிவசைலம், அவனை முறைக்க callயை துண்டித்தான் ராம்பிரசாத்.
ராம் call யை துண்டிக்க, "என்னை மீறி நீ வேற யாரையாவது கல்யாணம் செய்தால், நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது." என்று வைஷ்ணவியின் மெசேஜ் pop up ஆக, ராம் மொபைலை switch ஆப் செய்தான்.
நந்தினி உள்ளே சென்று விட, "பெண்ணை பிடிச்சிருக்கா?" என்று சந்துருவின் மனைவி கோமதி, ராம் பிரசாத்திடம் கண்களால் வினவ, 'என்னை மீறி நீ வேற யாரையாவது கல்யாணம் செய்தால், நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது.' என்ற வைஷ்ணவியின் message ராம் பிரசாதின் காதில் ஒலித்தது.
வைஷ்ணவியின் குரலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து… அறைக்குள் இருந்த நந்தினியைப் பார்த்தான் ராம்பிரசாத்.
வரி வடிவமாகத் காட்சி அளித்தாள்... அவள் மடியில், அகல்யாவும் சந்தோஷும் அமர்ந்திருக்க அவள் அவர்களோடு சிரித்த முகமாக விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
மனதில் பதிந்த அழகிய வைஷ்ணவியின் முகம் ராம் பிரசாத் கண் முன் தோன்றியது. நந்தினியின் முகத்தை அவன் பார்த்ததுமில்லை. குழந்தைகளிடம் நந்தினி விளையாடிக் கொண்டிருப்பது மட்டுமே மனதில் பதிந்தது.
சந்துருவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, வாசுதேவன் முகத்தில் உள்ள கோபத்தை தாண்டிய ஓர் மெல்லிய உணர்வு... அனைவரின் முகத்தில் உள்ள எதிர்பார்ப்பு ராமப்ரசாத்தின் கண்களில் பட, 'இந்தத் திருமணம் அனைவருக்கும் நன்மை பயக்கும்...' என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியது.
அனைவரையும் மனதில் கொண்டு, "பிடிச்சிருக்கு..." என்று ராம் பிரசாத் தலை அசைத்தான்.
பவித்ரா ஆர்வமாக உள்ளே சென்று நந்தினியிடம் ஏதோ கேட்க, 'மாப்பிளையை சரியா கூட பார்க்கலியே...' என்ற எண்ணம் தோன்றினாலும், தன் அக்காவின் கண்களில் உள்ள ஆர்வத்தையும், சிரித்த முகத்தையும் பார்த்து, "எனக்குச் சம்மதம் அக்கா..." என்று தலை அசைத்தாள் நந்தினி.
ஆண்... பெண்... இருவரும் குடும்பம்… அன்பு… பாசம்… பந்தம்… இவற்றுக்கெல்லாம் கட்டு பட்டவர்கள் தானே!
இதில் நீ… நான்… என்ற அகந்தையும் தோற்று தானே போகிறது.
பேச்சு வார்த்தையாக உறுதி அளித்து, அடுத்த மாதம் அழகியபுரத்தில், நிச்சயதார்த்தத்தையும், கல்யாணத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன. எதிர் காலத்தை யார் அறிவார்?
தம் பணிகளை முடித்துக் கொண்டு சந்துருவின் குடும்பமும், விடுமுறையை இனிதாக முடித்துவிட்டு வாசுவின் குடும்பமும்… என அனைவரும் அழகியபுரம் நோக்கிப் பயணித்தனர்.
நாமும் இவர்களோடு அழகியபுரம் பயணித்தாலும், இடையில் வைஷ்ணவியின் வீட்டுக்குச் சென்று அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வோம்.
வைஷ்ணவி சோகமே உருவாகி கண்ணீரோடு விலை உயர்ந்த மெத்தையில் அமர்ந்திருந்தாள். வைஷ்னவியின் வீட்டில் ஒவ்வொரு இடமும் செல்வத்தை பறைசாற்றியது.
தன் மகளுக்காக வானவில்லையும் வளைக்கும் வல்லமை கொண்ட வைஷ்ணவியின் தந்தை அவள் அருகே சென்று, "வைஷு... இப்ப எதுக்கு அழற? இப்ப அவசரப்பட்டு நாம ராம் பிரசாத் வீட்டில் பேசினா, உனக்கும் அந்தத் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க... ஆனால், நீ காலம் முழுக்க அந்தக் கிராமத்தில் தான் இருக்கனும்…” என்று அழுத்தமாகக் கூறினார். வைஷ்னவி அமைதியாக இருக்க, வைஷ்ணவியின் தந்தை மேலும் தொடர்ந்தார்.
“அதுவே கொஞ்சம் பொறுமையா இருந்து... கல்யாணத்தனைக்கு நாம அங்க போய்… விஷயத்தை சொன்னா மொத்த கிராமமும் உன் கண்ணீருக்கு மதிப்பு கொடுக்கும். அவங்க மேல தப்பு இருக்கிறதால... சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாத்தி… மாப்பிள்ளையை இங்க கூட்டிட்டு வந்திருவோம்." என்று வைஷ்னவியின் தந்தை திட்டம் தீட்ட, வைஷ்னவி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தலை அசைத்தாள்.
'அப்படி என்ன அந்த ராம் பிரசாத் உயர்ந்தவன்? தன் மகளின் கண்ணீருக்கு தகுதியானவன்?' என்ற வருத்தம், கோபம் நிறைந்த கேள்விகள் அவர் மனதில் எழுந்தாலும், தன் மகள் வைஷ்னவயின் கண்ணீரை தாங்க முடியமால் அவளுக்கு ராம் பிரசாதை திருமணம் செய்து வைப்பதாக வாக்களித்தார் வைஷ்னவயின் தந்தை. அவர் முகத்திலும் தன் மகளின் வாழ்க்கையைக் குறித்த கவலையின் ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தது.
ராம் பிரசாத் நந்தினியின் திருமணத்திற்கு இவர்கள் வருகையை உறுதி செய்து, நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.
பண்ணை வீட்டில் அனைவரும் கல்யாண கனவுகளோடு செல்ல, விஷயத்தை அறிந்த உத்தமி கடுங்கோபத்தில் இருந்தார்.
"வாசு... நீ ஏன் என் கிட்ட இதை முதலில் சொல்லலை?" என்று காட்டமாக வினவினார் உத்தமி.
Thank you so much for your likes and comments...
இரண்டல்ல ஒன்று – 6
முகமன் பேச்சுக்களோடு பவித்ராவின் தாயார் செல்வி, அனைவருக்கும் காபி கொடுக்க, சந்துருவிற்கு காபி கொடுக்கையில், "இல்லை... அவன் கடுங்காப்பி..." என்று ஆரம்பித்துவிட்டு, தன் பற்களை கடித்து பாதியில் நிறுத்தினான் வாசுதேவன்.
மற்றவர்கள் வாசுதேவனை ஆச்சரியமாகப் பார்க்க, சந்துரு சிரித்த முகமாக அவனைப் பார்த்தான்.
சந்துரு சிரித்தாலும் அந்த சிரிப்பின் பின் ஒரு வலி இருந்தது. அன்று வாசுதேவன் கூறிய வார்த்தைகள், இன்றும் வாசுதேவன் முகத்தைப் பார்க்கும் பொழுது சந்துருவின் காதில் ஒலித்தது.
சந்துருவிடம் இருந்து தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்ட வாசுதேவன், "இல்லை... பொதுவா ஊர் பழக்கம்..." என்று சாமளித்து, "நீங்க குடுங்க அத்தை..." என்று கூறினான்.
உரிமையோடு தன்னை அம்மா… என்று அழைத்துப் பேசும் வாசுதேவன், இன்று தடுமாறுவதை தாங்க முடியாமல் தன் தலையைக் குனிந்து கொண்டார் பார்வதி சந்துருவின் தாயார்.
'கடவுளே... இந்தச் சோதனைக்கெல்லாம் ஒரு முடிவைத் தர கூடாதா? நான் சின்ன வயசிலிருந்து, சந்துருவையும், வாசுவையும் வேற மாதிரி நினைத்ததில்லையே... எல்லாம் இந்த சந்துருவால் வந்தது…' என்று இறைவனிடம் கோபிக்க ஆரம்பித்து, மனக் குமுறலை தன் மகனிடம் முடித்தார் பார்வதி.
சிவசைலம் சூழ்நிலையை தன் கைக்குள் கொண்டு வந்து, "பெண்ணைப் பார்க்கலாமா?" என்று கேட்டார்.
கணவரின் குரலில் நிகழ் காலத்திற்கு திரும்பினார் பார்வதி. தன் இரண்டாவது மகன் ராமப்ரசாத்தின் எண்ணங்கள் மேலோங்க தன் கவனத்தை முழுதாக பெண் பார்க்கும் படலத்திற்கு திருப்பினார்.
சந்தோஷ் சந்துரு மடியில் இருந்து இறங்கி, அகல்யாவை அழைத்துக் கொண்டு நந்தினி இருக்கும் அறைக்குள் சென்றான். பவித்ரா சிரித்த முகமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில்… நந்தினி வர, அனைவரும் நந்தினியைப் பார்க்க, நந்தினி தர்மசங்கடமாக தலை குனிந்து கொண்டாள்.
ராம் பிரசாத் குற்ற உணர்ச்சியில் நந்தினியைத் தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஆவுடையப்பன் தன் மகளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது வைஷ்ணவி என்ற பெயர் மின்ன, ராம் பிரசாத்தின் மொபைல் ஒலித்தது.
அந்தச் சத்தத்தில், ராமப்ரசாத்தின் தந்தை சிவசைலம், அவனை முறைக்க callயை துண்டித்தான் ராம்பிரசாத்.
ராம் call யை துண்டிக்க, "என்னை மீறி நீ வேற யாரையாவது கல்யாணம் செய்தால், நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது." என்று வைஷ்ணவியின் மெசேஜ் pop up ஆக, ராம் மொபைலை switch ஆப் செய்தான்.
நந்தினி உள்ளே சென்று விட, "பெண்ணை பிடிச்சிருக்கா?" என்று சந்துருவின் மனைவி கோமதி, ராம் பிரசாத்திடம் கண்களால் வினவ, 'என்னை மீறி நீ வேற யாரையாவது கல்யாணம் செய்தால், நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்க முடியாது.' என்ற வைஷ்ணவியின் message ராம் பிரசாதின் காதில் ஒலித்தது.
வைஷ்ணவியின் குரலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து… அறைக்குள் இருந்த நந்தினியைப் பார்த்தான் ராம்பிரசாத்.
வரி வடிவமாகத் காட்சி அளித்தாள்... அவள் மடியில், அகல்யாவும் சந்தோஷும் அமர்ந்திருக்க அவள் அவர்களோடு சிரித்த முகமாக விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
மனதில் பதிந்த அழகிய வைஷ்ணவியின் முகம் ராம் பிரசாத் கண் முன் தோன்றியது. நந்தினியின் முகத்தை அவன் பார்த்ததுமில்லை. குழந்தைகளிடம் நந்தினி விளையாடிக் கொண்டிருப்பது மட்டுமே மனதில் பதிந்தது.
சந்துருவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, வாசுதேவன் முகத்தில் உள்ள கோபத்தை தாண்டிய ஓர் மெல்லிய உணர்வு... அனைவரின் முகத்தில் உள்ள எதிர்பார்ப்பு ராமப்ரசாத்தின் கண்களில் பட, 'இந்தத் திருமணம் அனைவருக்கும் நன்மை பயக்கும்...' என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியது.
அனைவரையும் மனதில் கொண்டு, "பிடிச்சிருக்கு..." என்று ராம் பிரசாத் தலை அசைத்தான்.
பவித்ரா ஆர்வமாக உள்ளே சென்று நந்தினியிடம் ஏதோ கேட்க, 'மாப்பிளையை சரியா கூட பார்க்கலியே...' என்ற எண்ணம் தோன்றினாலும், தன் அக்காவின் கண்களில் உள்ள ஆர்வத்தையும், சிரித்த முகத்தையும் பார்த்து, "எனக்குச் சம்மதம் அக்கா..." என்று தலை அசைத்தாள் நந்தினி.
ஆண்... பெண்... இருவரும் குடும்பம்… அன்பு… பாசம்… பந்தம்… இவற்றுக்கெல்லாம் கட்டு பட்டவர்கள் தானே!
இதில் நீ… நான்… என்ற அகந்தையும் தோற்று தானே போகிறது.
பேச்சு வார்த்தையாக உறுதி அளித்து, அடுத்த மாதம் அழகியபுரத்தில், நிச்சயதார்த்தத்தையும், கல்யாணத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன. எதிர் காலத்தை யார் அறிவார்?
தம் பணிகளை முடித்துக் கொண்டு சந்துருவின் குடும்பமும், விடுமுறையை இனிதாக முடித்துவிட்டு வாசுவின் குடும்பமும்… என அனைவரும் அழகியபுரம் நோக்கிப் பயணித்தனர்.
நாமும் இவர்களோடு அழகியபுரம் பயணித்தாலும், இடையில் வைஷ்ணவியின் வீட்டுக்குச் சென்று அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வோம்.
வைஷ்ணவி சோகமே உருவாகி கண்ணீரோடு விலை உயர்ந்த மெத்தையில் அமர்ந்திருந்தாள். வைஷ்னவியின் வீட்டில் ஒவ்வொரு இடமும் செல்வத்தை பறைசாற்றியது.
தன் மகளுக்காக வானவில்லையும் வளைக்கும் வல்லமை கொண்ட வைஷ்ணவியின் தந்தை அவள் அருகே சென்று, "வைஷு... இப்ப எதுக்கு அழற? இப்ப அவசரப்பட்டு நாம ராம் பிரசாத் வீட்டில் பேசினா, உனக்கும் அந்தத் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க... ஆனால், நீ காலம் முழுக்க அந்தக் கிராமத்தில் தான் இருக்கனும்…” என்று அழுத்தமாகக் கூறினார். வைஷ்னவி அமைதியாக இருக்க, வைஷ்ணவியின் தந்தை மேலும் தொடர்ந்தார்.
“அதுவே கொஞ்சம் பொறுமையா இருந்து... கல்யாணத்தனைக்கு நாம அங்க போய்… விஷயத்தை சொன்னா மொத்த கிராமமும் உன் கண்ணீருக்கு மதிப்பு கொடுக்கும். அவங்க மேல தப்பு இருக்கிறதால... சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாத்தி… மாப்பிள்ளையை இங்க கூட்டிட்டு வந்திருவோம்." என்று வைஷ்னவியின் தந்தை திட்டம் தீட்ட, வைஷ்னவி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தலை அசைத்தாள்.
'அப்படி என்ன அந்த ராம் பிரசாத் உயர்ந்தவன்? தன் மகளின் கண்ணீருக்கு தகுதியானவன்?' என்ற வருத்தம், கோபம் நிறைந்த கேள்விகள் அவர் மனதில் எழுந்தாலும், தன் மகள் வைஷ்னவயின் கண்ணீரை தாங்க முடியமால் அவளுக்கு ராம் பிரசாதை திருமணம் செய்து வைப்பதாக வாக்களித்தார் வைஷ்னவயின் தந்தை. அவர் முகத்திலும் தன் மகளின் வாழ்க்கையைக் குறித்த கவலையின் ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தது.
ராம் பிரசாத் நந்தினியின் திருமணத்திற்கு இவர்கள் வருகையை உறுதி செய்து, நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.
பண்ணை வீட்டில் அனைவரும் கல்யாண கனவுகளோடு செல்ல, விஷயத்தை அறிந்த உத்தமி கடுங்கோபத்தில் இருந்தார்.
"வாசு... நீ ஏன் என் கிட்ட இதை முதலில் சொல்லலை?" என்று காட்டமாக வினவினார் உத்தமி.
Last edited: