அன்பான வாசகர்களின் சொல்லுக்கிணங்க வாரம் மூன்று பதிவுகள் தர முயற்சிக்கிறேன். தங்கள் likes மற்றும் comments க்கு நன்றி... உங்கள் விமர்சனங்களை எதிர் பார்த்து அடுத்த பதிவு இதோ...
இரண்டல்ல ஒன்று – 9
ரயிலின் அசைவுக்கு ஏற்ப… அனைவரும் அசைந்தபடியே பயணிக்க, நெல்லை எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்... செங்கல்பட்… பாதையில் திருநெல்வேலி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
செல்வி தன் மகளை, "கூறு கெட்டவ... " என அவளைத் தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்க, நந்தினி தன் தாயின் மொபைலில் இருந்து பவித்ராவுக்கு, ஒரு புது மொபைல் வாங்கி வைக்குமாறு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஒரு சிறு குழந்தை ஓட, "ராம் நில்லு..." என்று அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டு அந்தக் குழந்தையின் தாய் பின்னே ஓடினாள்.
"ராம்..." இந்தப் பெயர், அதே ரயில் பெட்டியில் பயணிக்கும் நந்தினி, வைஷ்ணவி இருவரின் காதிலும் விழுந்தது.
நந்தினியின் முகத்தில் வெட்க புன்னகை தோன்ற, அந்தக் குழந்தையை பார்த்துச் சிரித்தாள். அந்தக் குழந்தை நந்தினியைப் பார்த்து சிரித்து விட்டு வேகமாக ஓடியது.
வைஷ்ணவி முகத்தில் ஓர் கசப்பான புன்னகை தோன்ற, அந்தக் குழந்தையை தன் அருகில் வருமாறு, தன் தலையை அசைத்தாள்.
குழந்தை மறுப்பாகத் தலை அசைக்க, 'பெயர் ராம் இல்லையா? அது தான் வர மாட்டேங்குது...' என்று தோன்றும் கசப்பான சிந்தனையை வைஷ்ணவியால் தவிர்க்க முடியவில்லை.
வைஷ்ணவியின் எண்ணங்கள் ஒரு ஏளன புன்னகையோடு பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. ராம் நிறைந்திருந்தான் வைஷ்ணவியின் நினைவுகளில்... வைஷ்ணவியின் தந்தை கவலை தோய்ந்த முகத்தோடு தன் மகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
செல்வி நந்தினியை திட்டிக் கொண்டிருந்தாலும், நந்தினியின் முகத்தில் வெட்கப் புன்னகை… 'நம்ம ரோபோட்டை எப்ப கொடுக்கலாம்... கல்யாணத்துக்கு முன்னாடி ராமை சந்திக்க முடியுமா? இல்லை கல்யாணம் முடிந்த பின் கொடுக்கலாமா? இந்த வீட்டில் எல்லாரும் சுத்த வேஸ்ட்… ஒரு மொபைல் நம்பர் கூட வாங்கித் தரலை... இந்த அக்கா என்னன்னா, அது கிராமம்... அப்படி இருக்கனும்... இப்படி இருக்கணுமுன்னு சட்டம் பேசுறா... " என்று பவித்ராவை மனதிற்குள் திட்டியபடி, நந்தினியின் ராம் பற்றிய எண்ணங்கள் முன்நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
"நந்தினி நம்ம பவித்ரா மாதிரி பொறுமை கிடையாது... அந்த ஊரில் சாமாளிச்சிருவாளா?" என்று செல்வி தன் கணவர் ஆவுடையப்பனிடம், பயத்தோடும், சந்தேகத்தோடும் கேட்க ஆவுடையப்பன் சிரித்துக் கொண்டார்.
இவ்வாறான பேச்சுகளோடு, அவர்கள் பயணம் தொடர்ந்தது.
மறுநாள் காலை,
“ போளி.... போளி.... கடம்பூர் போளி.... கடலை மிட்டாய்... கடலை மிட்டாய்... கோவில்பட்டி கடலை மிட்டாய்.... வட வட மசால் வடை... வட வட உளுந்த வடை... காபி... காபி... காபி...” எனக் குரல்களோடு ரயிலில் அவர்கள் காலை பொழுது விடிந்தது.
"என்னமா... சரியா தூங்கலியா?" என்ற கேள்வியோடு தன் துப்பட்டாவை சரி செய்த படியே நந்தினி இறங்க, "கையில் அவ்வளவு நகை இருக்கு... உங்க அம்மாவுக்குத் தூக்கம் வருமா?" என்று ஆவுடையப்பன் தன் மகளின் காதில் கிசுகிசுக்க, நந்தினி "க்ளுக்..." என்று சிரித்தாள்.
"சிரி... நல்ல சிரி... என்னவோ எனக்குக் கல்யாணம் மாதிரி நான் தென் பதட்டமா இருக்கேன்..." என்று செல்வி மகளைப் பார்த்து கழுத்தை நொடிக்க, "நான் ஏன்மா பதட்டமா இருக்கணும். கூப்பிட்டா ஓடி வரத் தூரத்தில் அக்கா வீடு... அந்த கேம்ப்... இந்த கேம்ப்... இதெல்லாம் போய்… எனக்குக் கிராமத்தில் தங்கி பழக்கம் தான்... Infact I love villages..." என்று நந்தினி ஸ்டைலாக கூறினாள்.
"பாவம் மாப்பிள்ளை தான் சிட்டி பொண்ணுன்னு கொஞ்சம் பதட்டமா இருப்பாருன்னு நினைக்கிறேன்... You don ' t worry ma ... I will take care ... " என்று நந்தினி சமாதானமாக கூறிக் கொண்டே, "அம்மா... நான் Refresh ஆகிட்டு வரேன்..." என்று அங்கிருந்து சென்றாள்.
உண்மையில் ராம் பிரசாத் திருமணத்தை எண்ணி பதட்டமாகத்தான் இருந்தான்.
"கடம்பூர் போளி... உளுந்த வடை... காபி..." என மூன்றையும் வாங்கிக் கொண்டு, நந்தினி அமைதியாகச் சாப்பிட, "நல்லா சாப்பிடு... ஆனால் சமையல் வேலை மட்டும் கத்துகவே இல்லை..." என்று செல்வி சிடுசிடுத்தாள்.
"பவித்ரா எல்லாம் கத்துக்கிட்டு போனதுக்கே, அவங்க மாமியார் இன்னய வரைக்கும் அடுப்படியை அவங்க கையில் தான் வச்சிருக்காங்க... பவித்ராவுக்கு வேலைத் தெரியாத மாதிரியே தான் பேசுவாங்க... அவளுக்கு என்ன தெரியுமுன்னு மாப்பிள்ளைக்காவது இன்னைக்கு வரைக்கும் தெரியுமான்னு எனக்கு தெரியலை... பவித்ரா சந்தோஷமா தான் இருக்கா... அவ பொறுமைசாலி பொழச்சிப்பா... ஏதோ சண்டை சச்சரவு இல்லாம அவ வாழ்க்கை ஓடுது... காலப் போக்கில் எல்லாம் சரி ஆகிருமுன்னு நானும் விட்டுட்டேன்..." என்று செல்வி மெதுவாக நந்தினிக்கு மட்டும் கேட்கும் படி கூறினார்.
"சமையல் ஒரு விஷயமா... நான் எல்லாம் baking பண்ண ஆரம்பிச்சேன்னு வைங்க… நீங்க எல்லாம் என்கிட்டே கிளாஸ்சுக்கு வரணும்..." என்று நந்தினி கெத்தாக கூறினாள்...
"எது மைதா மாவுல பண்ணுவியே.. அந்த pizza... cake... donuts... burger...bread… sandwich... muffins... cookies... இதெல்லாமா? " என்று செல்வி முகத்தைச் சுழித்து கொண்டு வினவ, "ம்... oven மட்டும் கையில் கொடுத்து பார்த்தா மெர்ஸெல் ஆகிடுவாங்கள்ள..." என்று நந்தினி பெருமையாக கூறினாள்.
"முதல்ல… இங்கெல்லாம் oven எல்லாம் வச்சிருக்க மாட்டாங்க... அப்படியே இருந்தாலும், இதெல்லாம் யாரும் சாப்பிட மாட்டாங்க... நானே இதெல்லாம் சாப்பிட மாட்டேன்... காலையில் sandwich ... மத்தியானம் salad ... நைட் pizza சாப்பிட நீ எந்த நாட்டில் இருக்க?" என்று செல்வி கடுப்பாகக் கூறினார்.
"சரி விடுங்க... பொங்கல், இட்லி, தோசை... பண்ணிட்டா போச்சு..." என்று நந்தினி தோளை குலுக்க, "அதெல்லாம் உனக்குத் தெரியாதே..." என்று செல்வி பற்களைக் கடித்தார்.
"அம்மா... நீங்க செய்ற மாதிரியே செஞ்சா போதும் தானே..." என்று நந்தினி தீவிரமாக கேட்க, "என் கிட்ட ஒரு நாள் கேட்டுட்டு அப்புறம் ஞபாகம் வச்சி எல்லாம் நான் செய்ற மாதிரியே செய்ய முடியாது..." என்று நந்தினிக்குப் புரிய வைக்கும் எண்ணத்தோடு கூறினார் செல்வி.
"நீங்க சொல்ல சொல்ல நான் செஞ்சா?" என்று நந்தினி குழந்தையின் ஆர்வத்தோடு கேள்வியாக நிறுத்த, "என்னால, உனக்குத் தினமும் phone இல் சொல்லி தர முடியாது." என்று செல்வி கோபமாகக் கூறினார்.
நந்தினி தன் தாயிடம் அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டி, சின்ன மொபைல் போன்ற device ஒன்றைக் கையில் எடுத்தாள்.
நந்தினி அதை ON செய்ய, "hai நந்தினி..." என்று இயந்திர குரலில் கூறியது அந்த device. Display எதுவும் வரவில்லை. "ஹாய் ஹனி... இட்'ஸ் மீ நந்தினி..." என்று நந்தினி கூற, display ON ஆனது.
"என்ன வேணும் நந்தினி?" என்று ஹனி கேட்க… நந்தினி, "பொங்கல் எப்படி வைக்கணும் ஹனி?" என்று நந்தினி கேள்வியாக நிறுத்தினாள்.
"சக்கர பொங்கலா? வெண் பொங்கலா?" என்று ஹனி எதிர்க் கேள்வி கேட்டது.
"அது என்ன ஹனி?" என்று செல்வி அந்த Device யை பார்த்தபடி கேட்க, "Name ... இதுக்கு நான் வச்ச பேரு" என்று நந்தினி கூற செல்வி பதில் ஏதும் கூறாமல் மனதிற்குள் நொந்தபடி மௌனமாக தலை அசைத்தார்.
இவர்கள் பதில் கூறாததால், "சக்கர பொங்கலா? வெண் பொங்கலா?" என்று மீண்டும் ஹனி வினவ, "வெண் பொங்கல்..." என்று நந்தினி தன் தாயைக் குறும்பு புன்னகையோடு பார்த்தபடியே கூறினாள்.
அப்பொழுது ஹனி, செல்வியின் குரலில் பொங்கல் செய்முறையை கூற, "அடிப்பாவி... நான் பேசினதை எப்ப ரெகார்ட் பண்ண?" என்று செல்வி ஆச்சரியமாகக் கேட்க, " இது மட்டுமில்லை… நீங்கச் சொன்ன ரெசிபி எல்லாம் ரெகார்ட் ஆகிருக்கு... இது நான் பண்ண device அம்மா...” என்று நந்தினி பெருமையாக கூறினாள்.
இரண்டல்ல ஒன்று – 9
ரயிலின் அசைவுக்கு ஏற்ப… அனைவரும் அசைந்தபடியே பயணிக்க, நெல்லை எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்... செங்கல்பட்… பாதையில் திருநெல்வேலி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
செல்வி தன் மகளை, "கூறு கெட்டவ... " என அவளைத் தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்க, நந்தினி தன் தாயின் மொபைலில் இருந்து பவித்ராவுக்கு, ஒரு புது மொபைல் வாங்கி வைக்குமாறு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஒரு சிறு குழந்தை ஓட, "ராம் நில்லு..." என்று அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டு அந்தக் குழந்தையின் தாய் பின்னே ஓடினாள்.
"ராம்..." இந்தப் பெயர், அதே ரயில் பெட்டியில் பயணிக்கும் நந்தினி, வைஷ்ணவி இருவரின் காதிலும் விழுந்தது.
நந்தினியின் முகத்தில் வெட்க புன்னகை தோன்ற, அந்தக் குழந்தையை பார்த்துச் சிரித்தாள். அந்தக் குழந்தை நந்தினியைப் பார்த்து சிரித்து விட்டு வேகமாக ஓடியது.
வைஷ்ணவி முகத்தில் ஓர் கசப்பான புன்னகை தோன்ற, அந்தக் குழந்தையை தன் அருகில் வருமாறு, தன் தலையை அசைத்தாள்.
குழந்தை மறுப்பாகத் தலை அசைக்க, 'பெயர் ராம் இல்லையா? அது தான் வர மாட்டேங்குது...' என்று தோன்றும் கசப்பான சிந்தனையை வைஷ்ணவியால் தவிர்க்க முடியவில்லை.
வைஷ்ணவியின் எண்ணங்கள் ஒரு ஏளன புன்னகையோடு பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. ராம் நிறைந்திருந்தான் வைஷ்ணவியின் நினைவுகளில்... வைஷ்ணவியின் தந்தை கவலை தோய்ந்த முகத்தோடு தன் மகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
செல்வி நந்தினியை திட்டிக் கொண்டிருந்தாலும், நந்தினியின் முகத்தில் வெட்கப் புன்னகை… 'நம்ம ரோபோட்டை எப்ப கொடுக்கலாம்... கல்யாணத்துக்கு முன்னாடி ராமை சந்திக்க முடியுமா? இல்லை கல்யாணம் முடிந்த பின் கொடுக்கலாமா? இந்த வீட்டில் எல்லாரும் சுத்த வேஸ்ட்… ஒரு மொபைல் நம்பர் கூட வாங்கித் தரலை... இந்த அக்கா என்னன்னா, அது கிராமம்... அப்படி இருக்கனும்... இப்படி இருக்கணுமுன்னு சட்டம் பேசுறா... " என்று பவித்ராவை மனதிற்குள் திட்டியபடி, நந்தினியின் ராம் பற்றிய எண்ணங்கள் முன்நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
"நந்தினி நம்ம பவித்ரா மாதிரி பொறுமை கிடையாது... அந்த ஊரில் சாமாளிச்சிருவாளா?" என்று செல்வி தன் கணவர் ஆவுடையப்பனிடம், பயத்தோடும், சந்தேகத்தோடும் கேட்க ஆவுடையப்பன் சிரித்துக் கொண்டார்.
இவ்வாறான பேச்சுகளோடு, அவர்கள் பயணம் தொடர்ந்தது.
மறுநாள் காலை,
“ போளி.... போளி.... கடம்பூர் போளி.... கடலை மிட்டாய்... கடலை மிட்டாய்... கோவில்பட்டி கடலை மிட்டாய்.... வட வட மசால் வடை... வட வட உளுந்த வடை... காபி... காபி... காபி...” எனக் குரல்களோடு ரயிலில் அவர்கள் காலை பொழுது விடிந்தது.
"என்னமா... சரியா தூங்கலியா?" என்ற கேள்வியோடு தன் துப்பட்டாவை சரி செய்த படியே நந்தினி இறங்க, "கையில் அவ்வளவு நகை இருக்கு... உங்க அம்மாவுக்குத் தூக்கம் வருமா?" என்று ஆவுடையப்பன் தன் மகளின் காதில் கிசுகிசுக்க, நந்தினி "க்ளுக்..." என்று சிரித்தாள்.
"சிரி... நல்ல சிரி... என்னவோ எனக்குக் கல்யாணம் மாதிரி நான் தென் பதட்டமா இருக்கேன்..." என்று செல்வி மகளைப் பார்த்து கழுத்தை நொடிக்க, "நான் ஏன்மா பதட்டமா இருக்கணும். கூப்பிட்டா ஓடி வரத் தூரத்தில் அக்கா வீடு... அந்த கேம்ப்... இந்த கேம்ப்... இதெல்லாம் போய்… எனக்குக் கிராமத்தில் தங்கி பழக்கம் தான்... Infact I love villages..." என்று நந்தினி ஸ்டைலாக கூறினாள்.
"பாவம் மாப்பிள்ளை தான் சிட்டி பொண்ணுன்னு கொஞ்சம் பதட்டமா இருப்பாருன்னு நினைக்கிறேன்... You don ' t worry ma ... I will take care ... " என்று நந்தினி சமாதானமாக கூறிக் கொண்டே, "அம்மா... நான் Refresh ஆகிட்டு வரேன்..." என்று அங்கிருந்து சென்றாள்.
உண்மையில் ராம் பிரசாத் திருமணத்தை எண்ணி பதட்டமாகத்தான் இருந்தான்.
"கடம்பூர் போளி... உளுந்த வடை... காபி..." என மூன்றையும் வாங்கிக் கொண்டு, நந்தினி அமைதியாகச் சாப்பிட, "நல்லா சாப்பிடு... ஆனால் சமையல் வேலை மட்டும் கத்துகவே இல்லை..." என்று செல்வி சிடுசிடுத்தாள்.
"பவித்ரா எல்லாம் கத்துக்கிட்டு போனதுக்கே, அவங்க மாமியார் இன்னய வரைக்கும் அடுப்படியை அவங்க கையில் தான் வச்சிருக்காங்க... பவித்ராவுக்கு வேலைத் தெரியாத மாதிரியே தான் பேசுவாங்க... அவளுக்கு என்ன தெரியுமுன்னு மாப்பிள்ளைக்காவது இன்னைக்கு வரைக்கும் தெரியுமான்னு எனக்கு தெரியலை... பவித்ரா சந்தோஷமா தான் இருக்கா... அவ பொறுமைசாலி பொழச்சிப்பா... ஏதோ சண்டை சச்சரவு இல்லாம அவ வாழ்க்கை ஓடுது... காலப் போக்கில் எல்லாம் சரி ஆகிருமுன்னு நானும் விட்டுட்டேன்..." என்று செல்வி மெதுவாக நந்தினிக்கு மட்டும் கேட்கும் படி கூறினார்.
"சமையல் ஒரு விஷயமா... நான் எல்லாம் baking பண்ண ஆரம்பிச்சேன்னு வைங்க… நீங்க எல்லாம் என்கிட்டே கிளாஸ்சுக்கு வரணும்..." என்று நந்தினி கெத்தாக கூறினாள்...
"எது மைதா மாவுல பண்ணுவியே.. அந்த pizza... cake... donuts... burger...bread… sandwich... muffins... cookies... இதெல்லாமா? " என்று செல்வி முகத்தைச் சுழித்து கொண்டு வினவ, "ம்... oven மட்டும் கையில் கொடுத்து பார்த்தா மெர்ஸெல் ஆகிடுவாங்கள்ள..." என்று நந்தினி பெருமையாக கூறினாள்.
"முதல்ல… இங்கெல்லாம் oven எல்லாம் வச்சிருக்க மாட்டாங்க... அப்படியே இருந்தாலும், இதெல்லாம் யாரும் சாப்பிட மாட்டாங்க... நானே இதெல்லாம் சாப்பிட மாட்டேன்... காலையில் sandwich ... மத்தியானம் salad ... நைட் pizza சாப்பிட நீ எந்த நாட்டில் இருக்க?" என்று செல்வி கடுப்பாகக் கூறினார்.
"சரி விடுங்க... பொங்கல், இட்லி, தோசை... பண்ணிட்டா போச்சு..." என்று நந்தினி தோளை குலுக்க, "அதெல்லாம் உனக்குத் தெரியாதே..." என்று செல்வி பற்களைக் கடித்தார்.
"அம்மா... நீங்க செய்ற மாதிரியே செஞ்சா போதும் தானே..." என்று நந்தினி தீவிரமாக கேட்க, "என் கிட்ட ஒரு நாள் கேட்டுட்டு அப்புறம் ஞபாகம் வச்சி எல்லாம் நான் செய்ற மாதிரியே செய்ய முடியாது..." என்று நந்தினிக்குப் புரிய வைக்கும் எண்ணத்தோடு கூறினார் செல்வி.
"நீங்க சொல்ல சொல்ல நான் செஞ்சா?" என்று நந்தினி குழந்தையின் ஆர்வத்தோடு கேள்வியாக நிறுத்த, "என்னால, உனக்குத் தினமும் phone இல் சொல்லி தர முடியாது." என்று செல்வி கோபமாகக் கூறினார்.
நந்தினி தன் தாயிடம் அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டி, சின்ன மொபைல் போன்ற device ஒன்றைக் கையில் எடுத்தாள்.
நந்தினி அதை ON செய்ய, "hai நந்தினி..." என்று இயந்திர குரலில் கூறியது அந்த device. Display எதுவும் வரவில்லை. "ஹாய் ஹனி... இட்'ஸ் மீ நந்தினி..." என்று நந்தினி கூற, display ON ஆனது.
"என்ன வேணும் நந்தினி?" என்று ஹனி கேட்க… நந்தினி, "பொங்கல் எப்படி வைக்கணும் ஹனி?" என்று நந்தினி கேள்வியாக நிறுத்தினாள்.
"சக்கர பொங்கலா? வெண் பொங்கலா?" என்று ஹனி எதிர்க் கேள்வி கேட்டது.
"அது என்ன ஹனி?" என்று செல்வி அந்த Device யை பார்த்தபடி கேட்க, "Name ... இதுக்கு நான் வச்ச பேரு" என்று நந்தினி கூற செல்வி பதில் ஏதும் கூறாமல் மனதிற்குள் நொந்தபடி மௌனமாக தலை அசைத்தார்.
இவர்கள் பதில் கூறாததால், "சக்கர பொங்கலா? வெண் பொங்கலா?" என்று மீண்டும் ஹனி வினவ, "வெண் பொங்கல்..." என்று நந்தினி தன் தாயைக் குறும்பு புன்னகையோடு பார்த்தபடியே கூறினாள்.
அப்பொழுது ஹனி, செல்வியின் குரலில் பொங்கல் செய்முறையை கூற, "அடிப்பாவி... நான் பேசினதை எப்ப ரெகார்ட் பண்ண?" என்று செல்வி ஆச்சரியமாகக் கேட்க, " இது மட்டுமில்லை… நீங்கச் சொன்ன ரெசிபி எல்லாம் ரெகார்ட் ஆகிருக்கு... இது நான் பண்ண device அம்மா...” என்று நந்தினி பெருமையாக கூறினாள்.
Last edited: