மக்களே... நீதிமன்ற நடைமுறைகள்.... நுகர்வோர் சட்ட பிரிவுகள் அதையெல்லாம் தொடாம... வாதி... பிரதிவாதி.... [வழக்கு பதிவிட்டவர்... எதிர்ப்பவர்] -ன்னு புரியாத பாஷை-ல பேசாம..., நறுக்குன்னு ரெண்டு மூணு முக்கியமான ஸீன்கள் மட்டும்... உங்க பார்வைக்கு...
IM 17
"ஸ்ரீ ராம் .. ஜெய் ராம்.. ஜெய் ஜெய் ராம்", சரண்யு -வின் மனம் விடாது பிரார்த்தித்து கொண்டு இருந்தது.. காரணம், அவர்களின் வீடு வெறும் வசிப்பிடம் ஆகி இருந்தது. ஒருவர்.. மற்றவர் முகம் காண, தயங்கினர். சரண்யு... SNPஇடமும், பாஸ்கரிடமும் பேசுவதை .. . வெகுவாய் குறைத்திருந்தாள் .. காரணம்... கல்பா-விற்கு இவ்வழக்கிற்கு சட்ட நுணுக்கங்களை சொல்லி கொடுத்துக் கொண்டுதானே இருக்கின்றாள்? ஏதேனும் பேசி .. தகராறு வந்தால்? என்ற எண்ணம் .
இது தவிர.. இவள் வட்டாரத்தில் புறமுதுகு பேசுவதெற்கென இருக்கும் கூட்டம் வேறு, "என்னமா... அலையறாங்க பாரு... பப்ளிசிட்டிக்கு?. எப்போதும்.. ஊர்வம்பு இழுத்து விட்டுப்பாங்களே ரெண்டு பேரு ... அதுல ஒருத்தி.... வீட்டுக்காரர் கம்பெனி மேலயே... கேஸ் போட்டுருக்கா... யார் வின் பண்ணினாலும்.. கொண்டாடலாம் பாரு... இவ கச்சேரி-ல சண்டை போடுவா... வீட்டுல கொஞ்சிப்பா... கர்மம் கர்மம்.. இதெல்லாம் ஒரு பொழப்பு....".. என்று நீட்டி முழக்க, மீம்ஸ்-களில் வதந்திகள் வலம் வர... மனதளவில் நொந்துதான் போயிருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் , லதிகாவை சாட்சி சொல்ல நீதி மன்றம் அழைத்திருக்க, அங்கு..... [ஒரு சின்ன FB .. So கொசுவர்த்தி ப்ளீஸ்...]
சத்திய பிராமாணம் முடிந்து,
"உங்களை பத்தி, சொல்லுங்க."
"அதிதி ஸந்த்யா இளம்பரிதி டாட்டர் ஆஃப், சூர்ய நாராயண பிரகாஷ், நியோநேட்டாலஜிஸ்ட் "
"உங்க வேலை மற்றும் இங்க நீங்க இருக்கிறதுக்கான காரணம் பற்றி சொல்ல முடியுமா?"
"சிசுக்குழந்தைகள் மருத்துவம் என்னோட வேலை , முக்கியமா குறை பிரசவ குழந்தைகள், அவங்களோட பிரச்சனைகள் பார்க்கறது, மகப்பேறு மருத்துவருக்கு (obstetrician), மற்றும் அந்த குழந்தைகளை பாக்கற வேற டாக்டர்ஸ்க்கு சஜெஷன் தர்றது எங்க வேலை.. தவிர, தேவைன்னு தோணினா, OT -ல கூட இருப்போம்..", என்றவள் தொடர்ந்தாள்...
"இந்த அக்சஸரீ[வெண்டிலேட்டர் சர்க்யூட்] , நாங்க ஒரு குழந்தைக்கு, ஃபிக்ஸ் பண்றதா இருந்தோம், தேங்க் காட். பண்ணல.."
"ஒருவேளை பண்ணி இருந்தா, அதோட விளைவுகள்?"
"ரூம் டெம்ப். லேயே இளக ஆரம்பிக்கிற இது, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்குமோ தெரியாது, ஆனா, கண்டிப்பா நேனோ பிளாஸ்டிக்கை அந்த குழந்தைக்குள்ள எடுத்திட்டு போயிருக்கும்."
"நேனோ பிளாஸ்டிக்?"
"யெஸ் .. நேனோ பிளாஸ்டிக்.. இப்போதைக்கு உலகமே பயந்து பாக்கிற ஒரு துகள், தான உருவானதில்ல, நம்ம உருவாக்கினது. மருத்துவ உலகத்துக்கே இன்னமும் அதோட விளைவுகள் தெரிய ஆரம்பிக்கல "
"புரியல டாக்டர்."
"வெல் .. நாம தூக்கி போடற பிளாஸ்டிக் எல்லாம், சீக்கிரம் மக்காதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், ஆனா அதெல்லாம் நாளாவட்டத்தில் காத்து, வெயில், தண்ணி பட்டு பட்டு, கண்ணுக்கே தெரியாத பிளாஸ்டிக் துகள்களா மாறி நம்ம உணவுல, காத்துல, தண்ணீல கலந்துடுது-ங்கிற விஷயம் நமக்கு தெரியுமா?. சின்னதா, புரியறா மாதிரி சொல்றேன், பெட் [PET - polyethylene terephthalate]பாட்டில்-ல தண்ணீ வாங்கறோம் இல்லையா?, அந்த பாட்டிலை கொஞ்ச நாள் வெயில்ல வச்சு பாத்தீங்கன்னா, அதோட இளகும் தன்மை போயிருக்கும். அது உடைஞ்சு பொடி பொடியா ஆகி, பாதி காணாம போய் இருக்கும்."
"ரீசென்ட்-ஆ நடந்த ஆராய்ச்சிகள் ல , கடல் உணவுகள், கீரைகள் -ன்னு எல்லாத்திலேயும் நேனோ பிளாஸ்டிக் இருக்கு..., அதுவாவது சுற்றுப்புறத்தினால வருதுன்னு சொல்லலாம்.. ஆனா, பிறந்த குழந்தையின் கழிவு-ல, தாய் பால்-ல கூட நேனோ பிளாஸ்டிக் இருக்கு. எப்படி ?"
"சாதாரணமான பிளாஸ்டிக் தயாரிப்புக்கே, நிறைய முன்னெச்சரிக்கைகள் /கட்டுப்பாடுகள் இருக்கு.. இந்த சர்க்யூட் உயிர் சம்பத்தப்பட்ட விஷயம்.. இதுல கவனக்குறைவுங்கிறது மன்னிக்க முடியாத குற்றம். இனி யாருக்கும் இந்த கம்பெனி சம்பத்தப்பட்ட எதையும் நான் ரெகமெண்ட் பண்ண மாட்டேன்.. இது என்னோட ஸ்டாண்ட் ". தெளிவாய் தியா, SNP & Co.-வை சாடினாள் .
"தேங்க்ஸ் டாக்டர் ", என்று தியாவிடம் கூற,
நீதிபதி .. SNP யின் வக்கீலை பார்த்து, "நீங்க இவங்களை குறுக்கு விசாரணை செய்யணுமா?", கேட்க..
"யெஸ் மை லார்ட் "
"ப்ரொசீட் "
"வணக்கம் டாக்டர். எனக்கு ரெண்டு கேள்விதான். ஒன்னு, தரமான மருத்துவ உபகரணங்கள் கூட , சீரான இடைவெளில மாற்றப்படணுமா இல்லையா?"
"மாற்றப்படணும்"
"ஏன்?"
"அதிக நாள் யூஸ் பண்ணினா, இன்பெக்ஷன் வர வாய்ப்புகள் இருக்கு.. உதாரணத்துக்கு சமீபத்துல இறந்து போன கழக தலைவர்.. அவர் உபயோகிச்ச ட்யூப் சீரான இடைவெளில மாற்றப்பட வேண்டிய ஒன்னு ."
"நன்றி டாக்டர்.. அடுத்து.. இந்த சர்க்யூட், SNP & Co லேர்ந்து சப்ளை பண்ணப்படலைன்னு ஆதாரத்தோடு நிரூபிச்சா.. உங்க so called ஸ்டான்ட் மாறுமா?"
"மாறலாம்.. ஆனாலும் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யும். ", என்றாள் பொறுப்பான டாக்டராக.
"தந்தையின் தயாரிப்புகளை நிராகரித்த மகள்" - என்று அடுத்த மணித் துளிகளில் செய்திகள் வலம் வர துவங்கியது .. இன்றுவரை நின்றபாடில்லை..
எனவே .. சரண் விடிந்ததில் இருந்தே மிகவும் அலைப்புறுதலில் இருந்தாள் .. எனினும் எழுந்து... நரேனுக்கு கஞ்சி தயாரித்து.. பூஜை முடித்து... டிஃபன் தயார் செய்து.... என அனைத்தும் இயந்திர கதியில் செய்து கொண்டிருந்தாள்.... இருவரும் ரெடியாகி வர.. கணவனுக்கும், மகனுக்கும் பரிமாறி.... கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.. காரணம், இன்று விசாரணைக்கு கம்பெனி டைரக்டரை அழைத்திருந்தனர்.
ஒருவிதமான பயம், கல்பாவின் பேச்சாற்றல் இவள் அறியாததா? என்ன கேட்பாளோ? இவர்கள் இருவருமே சாமான்யர்கள் இல்லையே? அதுவும் பாஸ்கர்....? கோபம் வந்தால்... ஆடித்தீர்த்து விடுவானே? இத்தனைக்கும் மீறி , பத்திரிக்கையாளர்கள். ஏதாவது ஏடாகூடமாய் நடந்தால்.... நரேனுக்கு அகௌரவமாகி விடுமே ? ஏற்கனவே, இரண்டு நாள் முன்பு தியாவின் வாததினால் பிரச்சனை ... என நினைத்து , நினைத்து முகமே ரத்தப் பசையின்றி வெளுத்திருந்தது.
அமைதியாய் பாஸ்கர் சாப்பிட்டு.., " ம்மா.... போயிட்டு வர்றேன்...." என்றவாறே.... கிளம்பி ... கார் ஷெட் -ஐ நோக்கி ... நடந்துவிட்டான் ...
SNP சாப்பிட்டு முடித்து நேராய். சரண்யுவிடம் வந்தான்... "எல்லாம் நல்லபடி முடியும் சரண்... எதுக்கு இவ்வ்ளோ டென்ஷன்?", சொல்லியவாறே.. அவள்.. கைகளை பிடித்து இருந்தான்.. ஜில்லிட்டுருந்தன.. "நம்ம லைஃப் வேற . இந்த கேஸ் வேற... அதுபோலத்தான்... பாஸ்கர் கல்பாவோடதும்... அவங்க ஸ்ட்ராங்-ஆ இருந்தா இது ஒண்ணுமேயில்ல.... இதோட விளைவுகள் தெரியாம, நீங்க கேஸ் போட்டீங்களா?, இல்லையே? அப்பறம் எதுக்கு இவ்வளவு பதட்டம்?", SNP -க்கு கோபம் எட்டிப்பார்த்தது.
"இதை யாருக்குமே பாதகமில்லாம நான் முடிச்சுடுவேன்.. ஆனா, எனக்கு நம்பிக்கை கொடு.. நீ அழுதா.. வருத்தத்தோடு இருந்தா.. எனக்கு எதுவுமே ஓடாது... கவலையா இருக்கிற உன் முகம்தான் கண்ணுக்கு வருது.. ".. என்று பேசி.. அவளின் கைகளை... தன கைகளில் வைத்து .. சூடு பறக்க தேய்த்தான்.
சரண், கண்களில் இருந்து மளுக்கென நீர் இறங்கியது... அவன் கைகளின் வேலையை நிறுத்தி... அவனை நிமிர்ந்து பார்த்து ...."இவன் என் கணவன்.. இவனுக்கு எதிரான வழக்கிற்கு நான் ஆலோசனை சொல்கிறேன்.. ஆனாலும்... செய்யாதே.. வேண்டாம்.. என்று ஒரு வார்த்தை கூறாத ... என்னவன்... ", கர்வமாய் நினைத்தவாறு, SNP -யை மிக இறுக்கமாய் அணைத்திருந்தாள்...
ஆழ மூச்செடுத்து.. SNP யின் வாசத்தினை உள்ளிழுத்து.... மனதை சமன் செய்தாள்..."SNP க்கு நிக் நேம் சக்ஸஸ்.. , தெரியுமா நரேன்..?", என்று அவள் அவன் காதினில் முணுமுணுக்க... சரண் மட்டுமல்ல .. நரேனும் மீண்டிருந்தான்... ஆம்.. விழியும் .. இதழும்தான் மொழி பேசுமா என்ன? இதோ பாஷைகள் தோன்றும் முன்... தோன்றிய ஆதி மனிதனின் உடல் மொழி... அத்தனை இறுக்கத்தையும் சரி செய்து இருந்தது... இது காமமில்லை.. காதல் கூட இல்லை... அதைவிட பெரிய நம்பிக்கை.... எதுவாகினும் சரி , சேர்ந்தே எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை...
அவன் கேட்ட புத்துணர்வை... வார்த்தைகளிலும் .. உடல் மொழியாலும் தந்திருந்தாள், சரண்... அவளை அவனது உடலும் உணர்ந்து மறுமொழி சொல்ல... பாஸ்கர் கார் ஹார்ன் சத்தமிட...சரண்யு-வின் நெற்றியில் முட்டி , "வர்றேன்டி... என் பொண்டாட்டி..." , புன்னகையுடன் SNP கூறி விடைபெற... கவலைகள் நீங்கி ... விடியலின் கதிரோனாய் மலர்ந்தவள், "ம்ம்ம்...", என்று விடை கொடுத்தாள். காதல் சுகமானது....எந்த வயதிலும்....