ishq wala love 3 teaser...
எழிலை ஏகபோக கடுப்பாக்கும் அந்த செயலை செய்து முடித்தனர் டாமும் விக்ரமும்.
அவ்வளவு நேரம் தங்களது அலைப்பேசியிலே புதைந்து விடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒரே நேரத்தில் அலைப்பேசியை அதன் இருப்பிடத்தில் வைத்துக்கொண்டு காரின் ஜன்னல் வழி தெரிந்த சிங்கார சென்னையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
சில நொடிகளில் எழிலின் அலைப்பேசி முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாவில் அறிவிப்புகள் வந்திருப்பதற்கான ஒலி எழுப்ப, இவர்கள் முன்பு அலைபேசியை எடுக்கலாமா? கூடாதா? என்ற தயக்கத்துடன் டாமையும் விக்ரமையும் மாற்றிமாற்றி பார்க்க, அவர்களோ அங்கு தங்களை தவிர யாருமே இல்லை என்பதைபோல் அழுத்தமாக அமர்ந்திருதார்கள்.
கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் எப்படி வேண்டுமனாலும் இருந்துக் கொள்ளலாம். ஆனால் வாங்கும் இடத்தில் இருப்பவர்கள் தங்களது அலைப்பேசியை பார்ப்பதற்கு கூட “இதனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை தானே” என்று கேட்டுக் கொண்டு தான் செய்யவேண்டும்.
இது தான் இங்கு அவர்களுக்கு சொல்லி தரப்படும் முதல் பாலப்பாடம். எனவே தான் எழில் டாமையும், விக்ரமையும் பார்த்தாள். அவர்கள் கண்டுக்கொள்வது போல் தெரியவில்லை. அதனால் தனது அலைப்பேசியை எடுத்து முகப்புத்தகத்தில் வந்த அறிவிப்பை அழுத்தி பார்த்தவள்,
தோர் தி சன் ஆப் ஓடின் தனது சுத்தியலை பயன்படுத்தி மொத்த மின்னல் சக்தியையும் ஒன்றாய் திரட்டி இவள் கைகளில் செலுத்தியதை போல் பதறி தனது கையில் வைத்திருந்த தனது அலைப்பேசியை ஐயோ என்ற அலறலுடன் கீழே விட்டாள்.
அந்த அலறலில் வண்டி சடன் பிரேக்கிட்டு நிற்க, டாமும் விக்ரமும் நமட்டு சிரிப்பை வாய்க்குள் மறைத்தவர்கள் ஒன்றுமே தெரியாது போல் “ஏன்ன ஆச்சு ஜெர்ரி?” என்று போலியான பதட்டத்துடன் விக்ரம் வினவ, டாமின் இடதுகை அவளது தலையை தடவி விட்டுக் கொண்டிருக்க அவனது வலதுகை தனக்கு முன்பிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்துக் கொண்டிருந்தது.
எழிலுக்கு எவ்வளவு முயன்றும் எரிச்சலை அடக்க முடியாமல் போக தனது தலையை தடவிக்கொண்டிருந்த டாமின் கையை சட்டென்று தட்டிவிட்டு விட, அவளிடம் விசாரித்துக்கொண்டிருந்த விக்ரமும் என்னவோ எதோ என்று வண்டியை நிற்பாட்டி விட்டு தனது இருக்கையில் இருந்து தலையை திருப்பி பார்த்துக்கொண்டிருந்த ஒட்டுநரும் அதிர்ந்து விட்டனர்.
அடுத்து என்ன செய்ய போகிறானோ என்பதைப் போல் இருவரும் பய பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். எழிலுக்கு இன்னும் புரியவே இல்லை. எப்படி பட்டவனை உதாசீனம் செய்து விட்டோம் என்று.. அவள் கீழே குனிந்து தனது அலைப்பேசியை எடுத்து நிமிர, டாம் அவளது தலையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் அவள் என்னவேன்று உணரும் முன்பே தனது நெஞ்சோடு அவளது முகத்தை அணைத்திருந்தான்.
“இந்த தவறை எப்பொழுதும் ஏன் உன் கனவில் கூட செய்யாதே மட்டி..விளைவுகள் ரொம்ப மோசமானதாக இருக்கும்.” என்று பல்லை கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாக கூறியவன், உடனே அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ளிவிட்டான்.
எழிலை ஏகபோக கடுப்பாக்கும் அந்த செயலை செய்து முடித்தனர் டாமும் விக்ரமும்.
அவ்வளவு நேரம் தங்களது அலைப்பேசியிலே புதைந்து விடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒரே நேரத்தில் அலைப்பேசியை அதன் இருப்பிடத்தில் வைத்துக்கொண்டு காரின் ஜன்னல் வழி தெரிந்த சிங்கார சென்னையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
சில நொடிகளில் எழிலின் அலைப்பேசி முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாவில் அறிவிப்புகள் வந்திருப்பதற்கான ஒலி எழுப்ப, இவர்கள் முன்பு அலைபேசியை எடுக்கலாமா? கூடாதா? என்ற தயக்கத்துடன் டாமையும் விக்ரமையும் மாற்றிமாற்றி பார்க்க, அவர்களோ அங்கு தங்களை தவிர யாருமே இல்லை என்பதைபோல் அழுத்தமாக அமர்ந்திருதார்கள்.
கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் எப்படி வேண்டுமனாலும் இருந்துக் கொள்ளலாம். ஆனால் வாங்கும் இடத்தில் இருப்பவர்கள் தங்களது அலைப்பேசியை பார்ப்பதற்கு கூட “இதனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை தானே” என்று கேட்டுக் கொண்டு தான் செய்யவேண்டும்.
இது தான் இங்கு அவர்களுக்கு சொல்லி தரப்படும் முதல் பாலப்பாடம். எனவே தான் எழில் டாமையும், விக்ரமையும் பார்த்தாள். அவர்கள் கண்டுக்கொள்வது போல் தெரியவில்லை. அதனால் தனது அலைப்பேசியை எடுத்து முகப்புத்தகத்தில் வந்த அறிவிப்பை அழுத்தி பார்த்தவள்,
தோர் தி சன் ஆப் ஓடின் தனது சுத்தியலை பயன்படுத்தி மொத்த மின்னல் சக்தியையும் ஒன்றாய் திரட்டி இவள் கைகளில் செலுத்தியதை போல் பதறி தனது கையில் வைத்திருந்த தனது அலைப்பேசியை ஐயோ என்ற அலறலுடன் கீழே விட்டாள்.
அந்த அலறலில் வண்டி சடன் பிரேக்கிட்டு நிற்க, டாமும் விக்ரமும் நமட்டு சிரிப்பை வாய்க்குள் மறைத்தவர்கள் ஒன்றுமே தெரியாது போல் “ஏன்ன ஆச்சு ஜெர்ரி?” என்று போலியான பதட்டத்துடன் விக்ரம் வினவ, டாமின் இடதுகை அவளது தலையை தடவி விட்டுக் கொண்டிருக்க அவனது வலதுகை தனக்கு முன்பிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்துக் கொண்டிருந்தது.
எழிலுக்கு எவ்வளவு முயன்றும் எரிச்சலை அடக்க முடியாமல் போக தனது தலையை தடவிக்கொண்டிருந்த டாமின் கையை சட்டென்று தட்டிவிட்டு விட, அவளிடம் விசாரித்துக்கொண்டிருந்த விக்ரமும் என்னவோ எதோ என்று வண்டியை நிற்பாட்டி விட்டு தனது இருக்கையில் இருந்து தலையை திருப்பி பார்த்துக்கொண்டிருந்த ஒட்டுநரும் அதிர்ந்து விட்டனர்.
அடுத்து என்ன செய்ய போகிறானோ என்பதைப் போல் இருவரும் பய பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். எழிலுக்கு இன்னும் புரியவே இல்லை. எப்படி பட்டவனை உதாசீனம் செய்து விட்டோம் என்று.. அவள் கீழே குனிந்து தனது அலைப்பேசியை எடுத்து நிமிர, டாம் அவளது தலையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் அவள் என்னவேன்று உணரும் முன்பே தனது நெஞ்சோடு அவளது முகத்தை அணைத்திருந்தான்.
“இந்த தவறை எப்பொழுதும் ஏன் உன் கனவில் கூட செய்யாதே மட்டி..விளைவுகள் ரொம்ப மோசமானதாக இருக்கும்.” என்று பல்லை கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாக கூறியவன், உடனே அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ளிவிட்டான்.