குழந்தையென பிறந்து
கஷ்டம் அறியாம வளர்ந்து
வாழ்க்கை என்ற பயணத்தில் தனித்து
நடக்க வேண்டி இருக்கிறதே..
இது என்ன பயணமோ..?
இந்த பயணத்தில்
நான் தொட்ட பூக்கள்
எல்லாம் முள்ளாக மலர்கிறதே..?
இது என்ன பயணமோ..?
கடந்து வந்த வழியெங்கும்
கண்ணீர் நதி ஓடுகிறதே
இது என்ன பயணமோ..?
பூக்களை தீண்டிச் செல்லும்
தென்றல் கூட எதிரி எனக்கு
என்று தோன்றுகிறதே..?
இது என்ன பயணமோ..?
நான் நடந்த பாதை
எங்கும் ரயில் வழி
பயணமாக இருக்கிறதே..?
தண்டவாளத்தின் பிரிவுதான்
வாழ்க்கை எனக்கு
கற்பிக்கும் பாடமோ..?
இது என்ன பயணமோ..?
மதி இருந்தும் கண்களை
யோசிக்க முடியாத வண்ணம்
செய்து விடுகிறதே..?
இந்த வாழ்க்கை என்ற பயணம்..
எது வந்த போதிலும்
வந்த பாதையில் திரும்பி
செல்லவும் முடியாது..
வழியில் இருக்கும் முட்களை
பறிக்கவும் முடியாது..
கண்ணீரை மாற்றவும் முடியாது..
இது ஒருவழி பயணம்..
இதுதான் வாழ்க்கை என்ற பயணமோ..?
- சந்தியா ஸ்ரீ
கஷ்டம் அறியாம வளர்ந்து
வாழ்க்கை என்ற பயணத்தில் தனித்து
நடக்க வேண்டி இருக்கிறதே..
இது என்ன பயணமோ..?
இந்த பயணத்தில்
நான் தொட்ட பூக்கள்
எல்லாம் முள்ளாக மலர்கிறதே..?
இது என்ன பயணமோ..?
கடந்து வந்த வழியெங்கும்
கண்ணீர் நதி ஓடுகிறதே
இது என்ன பயணமோ..?
பூக்களை தீண்டிச் செல்லும்
தென்றல் கூட எதிரி எனக்கு
என்று தோன்றுகிறதே..?
இது என்ன பயணமோ..?
நான் நடந்த பாதை
எங்கும் ரயில் வழி
பயணமாக இருக்கிறதே..?
தண்டவாளத்தின் பிரிவுதான்
வாழ்க்கை எனக்கு
கற்பிக்கும் பாடமோ..?
இது என்ன பயணமோ..?
மதி இருந்தும் கண்களை
யோசிக்க முடியாத வண்ணம்
செய்து விடுகிறதே..?
இந்த வாழ்க்கை என்ற பயணம்..
எது வந்த போதிலும்
வந்த பாதையில் திரும்பி
செல்லவும் முடியாது..
வழியில் இருக்கும் முட்களை
பறிக்கவும் முடியாது..
கண்ணீரை மாற்றவும் முடியாது..
இது ஒருவழி பயணம்..
இதுதான் வாழ்க்கை என்ற பயணமோ..?
- சந்தியா ஸ்ரீ
Last edited: