Eswari kasirajan
முதலமைச்சர்
#ரிலாக்ஸ்_ப்ளீஸ்?
??
உங்க பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம்பண்ணீங்களே….
பொண்ணு எப்படி இருக்கா?
அவ நல்லாத்தான் இருக்கா…
மாப்பிள்ளைதான்,....
’50 லட்ச ரூபாய் தர்றேன்…என்னைக்காப்பாத்துங்க மாமான்னு’ கெஞ்சறான்
*மனைவி: என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்...கோழி அடிச்சு குழம்பு வெக்கட்டும்மா..??*
*கணவன்: நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்குற...*????
*மனைவி: ???!*
? *காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.*
? *காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?*
? *காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி*
???
திருடிய சிரிப்பு
?கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா
மனைவி: தனியா வந்துருப்பாளே
கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்
மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே
-இனி பேசுவ
???
____________________________
கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?
கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma
மனைவி : ?????
____________________________
மனைவி:உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி....!!!???
____________________________
மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...?
கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !
மனைவி: !!!!!!!!!!!!!!!
____________________________
மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?
கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..
மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?
கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?
____________________________
?????
மழை, ?மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???
ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..
வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.
????
____________________________
மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
??
சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!
??
---------------------------------------??
*கரண்டி ரொம்ப_ "வெயிட்டு*"
*என்பது, கடையில வாங்கும்*
*போது தெரியாது!
*வீட்ல*
*"வாங்கும்"போது தான்*
*தெரியுது* *என்னா அடி*????
*நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நீதிக் கதை..*?
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்
கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
வையத்தியரும் சொன்னதில்லை!
மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!
ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்
காணவில்லை.
மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.
யாரம்மா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.
வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
" உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள்
வைத்தியர் பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்.
வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!
*நீதி 1.பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..*
*நீதி 2. அப்படி செஞ்சால் பொண்டாட்டிக்கு தான் லாபம்..*
*நமக்கு எப்பவுமே அல்வா தான்..?*
?????????
_*... ? ... "இந்தக் கல்யாணத்துல புதுமையா டிஜிட்டல் பந்தியாமே?" ...*_
_*... "மொய் எழுதுனதும் உங்க மொபைல் நம்பருக்கு OTP அனுப்புவாங்க. அந்த நம்பரைச் சொன்னாதான் சாப்பாடாம்!" ... ? ...*_