- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
காதல் 5
முடிவு பண்ணிய கையுடன், அன்றே வேகமாக ஆதிக் அதற்கான வேலைகளை கவனிக்க அவள் அசந்து தான் போனாள் அவளின் இத்தகையை வேகத்தை பார்த்து.
“பிரீத்தி! அவர் செம ஷார்ப், ஸ்பீடா வேற இருக்கார். நம்ம பண்ண பிராஜக்ட் பார்த்து பாராட்டியதோடு நிறுத்தாமல், அதை அக்கு வேறா அலசி சொல்லுறார். நம்ம அவர் கூட டை அப் பண்ணது சரியா” என்று கேட்டாள் பிரீத்தியின் தோழி ஒருத்தி.
“மாலதி! நான் நேத்து எவ்வளவு பயந்தேன் தெரியாது உனக்கு, ஒரு கட்டத்தில் இவர் என்னை காப்பாத்தி இருந்தாலும், அப்போ இவர் மேல கூட சந்தேகம் எனக்கு. இவரே ஆட்களை அனுப்பி இருக்கலாமே அப்படினு”.
“அதான், நான் விசாரிக்க நினைச்சு உடனே இதை பத்தி நம்ம நேஹா அண்ணா கிட்ட நேத்தே இதை பத்தி பேசிட்டேன். அவங்க இன்னைக்கு காலையில், எனக்கு செமையா ஒரு ஷாகிங் நியூஸ் சொன்னாங்க”.
“அந்த போட்டி கம்பெனி ஆளும், இவரும் ஒரு காலத்தில் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அப்படினு. அப்புறம் அவர் டிராக் மாறவும், இவர் அது பிடிக்காம உடனே விலகி வந்துட்டார் அப்படினு சொன்னாங்க”.
“அதான் யோசிச்சேன், நமக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆகிடுச்சு. நம்ம இந்த பிராஜக்ட் மூலம், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அப்படினு உடனே ஓகே சொல்லிட்டேன்” என்று கூறியவளை கூர்ந்து பார்த்தாள்.
“ஆர் யூ இன் லவ் வித் ஹிம் பிரீத்தி?” என்று கேட்டாள்.
இக்கேள்விக்கு தான் பதில் தேடிக் கொண்டு இருக்கிறாள் இன்னும், ஏனோ அது தான் அவளுக்கு தெரியவில்லை. இதில் திருமண நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது, அது வேறு ஒரு பக்கம் படபடப்பாக வேறு இருந்தது அவளுக்கு.
அவனோ, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் வேலையில் மட்டுமே கவனம் வைத்து இருந்தான். அவனுக்கு இப்பொழுது எண்ணம் எல்லாம், அவளை காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டுமே.
“பிரீத்தி! இதை படிச்சு பார்த்துட்டு ஒரு சைன் பண்ணு. அப்புறம் இந்த பிராஜக்ட் முடியும் வரை, இங்க என் ஆபிஸ் ல ஒர்க் வச்சுக்கலாம். உன் அசிஸ்டன்ட்ஸ் எல்லோருக்கும், தேவையான பாதுகாப்பு கொடுக்க சொல்லி இருக்கேன்”.
“நானே, உன்னை கூட்டிட்டு வரேன் டெய்லி இனி சரியா. வேற எதுவும் கேட்கணுமா உனக்கு, என் கிட்ட இப்போ” என்று கேட்டான்
“நாளைக்கு மார்னிங் ல தான், அப்போ இனி பிராஜக்ட் கண்டினு பண்ண முடியுமா!” என்று கேட்டாள் அவசரமாக.
“ஆமாம், ஏன்?” என்று புரியாமல் கேட்டான்.
“இல்லை! இப்போ தான் முக்கிய கட்டத்துல இருக்கேன், அதை கொஞ்சம் பார்த்து சரி பண்ணிக்கிட்டா, நாளைக்கு கொஞ்சம் மிச்ச வேலை இருக்கு அதை பார்க்கலாம் அதான் கேட்கிறேன்” என்றவள் அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.
“ம். ஓகே! பட் சீக்கிரம் முடிக்கனும், இப்போவே லேட் ஆகிடுச்சு” என்று கூறி அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்தான்.
காலையில் இருந்து, அலைந்து திரிந்து எல்லா வேலைகளையும் முடிக்க இரவு எட்டு மணி ஆனது. இவர்கள் பிராஜக்ட் டை அப் செய்யும் வேலைகள்,
இவ்வளவு பெரிய பிராசஸ் இருக்கும் என்று எண்ணவில்லை.
ஆனால், அவன் அதை கணித்து வைத்து எல்லாவற்றையும் ஒரே நாளில் முடித்து இருக்கிறான் என்றால், அவன் இதை முன்னமே எதிர்பார்த்தது போல் தான் உள்ளது என்று அவளின் அடி மனம் அடித்து கூறியது.
இது ஒரு வாரம் இழுக்க கூடிய வேலை என்று அதன் பிராசஸ் முறையிலே தெரிந்தது. ஆனால் அவன் நேரம் கடத்தாமல், உடனே யார் யாரையோ எல்லாம் பிடித்து இதை அவளுக்காக செய்து இருக்கிறான்.
“நிஜமாவே நமக்காக தான் செய்தானா? இல்லை இதுல அவனுக்கு எதும் காரியமாக வேண்டி இருக்கா” என்று மீண்டும் முருங்கை மரம் ஏறின கதையாக யோசிக்க தொடங்கினாள்.
அவனோ, பிசி முன் அமர்ந்து வேலை செய்வது போல் தோன்றினாலும், அவன் கண்கள் முழுவதும் அவள் மேல் தான் இருந்தது. அவனை பொறுத்த வரை, எடுத்து வைத்த முதல் படியில் வெற்றி பெற்று விட்டான்.
“குழம்பின குட்டையில் தான் மீன் பிடிக்க வசதியாக இருக்கும். இப்படியே குழம்பிகிட்டு இரு, அப்போ தான் நீ தெளிய முன்னாடி என் காரியத்தை நான் சாதிசிக்க முடியும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
முடிவு பண்ணிய கையுடன், அன்றே வேகமாக ஆதிக் அதற்கான வேலைகளை கவனிக்க அவள் அசந்து தான் போனாள் அவளின் இத்தகையை வேகத்தை பார்த்து.
“பிரீத்தி! அவர் செம ஷார்ப், ஸ்பீடா வேற இருக்கார். நம்ம பண்ண பிராஜக்ட் பார்த்து பாராட்டியதோடு நிறுத்தாமல், அதை அக்கு வேறா அலசி சொல்லுறார். நம்ம அவர் கூட டை அப் பண்ணது சரியா” என்று கேட்டாள் பிரீத்தியின் தோழி ஒருத்தி.
“மாலதி! நான் நேத்து எவ்வளவு பயந்தேன் தெரியாது உனக்கு, ஒரு கட்டத்தில் இவர் என்னை காப்பாத்தி இருந்தாலும், அப்போ இவர் மேல கூட சந்தேகம் எனக்கு. இவரே ஆட்களை அனுப்பி இருக்கலாமே அப்படினு”.
“அதான், நான் விசாரிக்க நினைச்சு உடனே இதை பத்தி நம்ம நேஹா அண்ணா கிட்ட நேத்தே இதை பத்தி பேசிட்டேன். அவங்க இன்னைக்கு காலையில், எனக்கு செமையா ஒரு ஷாகிங் நியூஸ் சொன்னாங்க”.
“அந்த போட்டி கம்பெனி ஆளும், இவரும் ஒரு காலத்தில் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அப்படினு. அப்புறம் அவர் டிராக் மாறவும், இவர் அது பிடிக்காம உடனே விலகி வந்துட்டார் அப்படினு சொன்னாங்க”.
“அதான் யோசிச்சேன், நமக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆகிடுச்சு. நம்ம இந்த பிராஜக்ட் மூலம், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அப்படினு உடனே ஓகே சொல்லிட்டேன்” என்று கூறியவளை கூர்ந்து பார்த்தாள்.
“ஆர் யூ இன் லவ் வித் ஹிம் பிரீத்தி?” என்று கேட்டாள்.
இக்கேள்விக்கு தான் பதில் தேடிக் கொண்டு இருக்கிறாள் இன்னும், ஏனோ அது தான் அவளுக்கு தெரியவில்லை. இதில் திருமண நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது, அது வேறு ஒரு பக்கம் படபடப்பாக வேறு இருந்தது அவளுக்கு.
அவனோ, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் வேலையில் மட்டுமே கவனம் வைத்து இருந்தான். அவனுக்கு இப்பொழுது எண்ணம் எல்லாம், அவளை காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டுமே.
“பிரீத்தி! இதை படிச்சு பார்த்துட்டு ஒரு சைன் பண்ணு. அப்புறம் இந்த பிராஜக்ட் முடியும் வரை, இங்க என் ஆபிஸ் ல ஒர்க் வச்சுக்கலாம். உன் அசிஸ்டன்ட்ஸ் எல்லோருக்கும், தேவையான பாதுகாப்பு கொடுக்க சொல்லி இருக்கேன்”.
“நானே, உன்னை கூட்டிட்டு வரேன் டெய்லி இனி சரியா. வேற எதுவும் கேட்கணுமா உனக்கு, என் கிட்ட இப்போ” என்று கேட்டான்
“நாளைக்கு மார்னிங் ல தான், அப்போ இனி பிராஜக்ட் கண்டினு பண்ண முடியுமா!” என்று கேட்டாள் அவசரமாக.
“ஆமாம், ஏன்?” என்று புரியாமல் கேட்டான்.
“இல்லை! இப்போ தான் முக்கிய கட்டத்துல இருக்கேன், அதை கொஞ்சம் பார்த்து சரி பண்ணிக்கிட்டா, நாளைக்கு கொஞ்சம் மிச்ச வேலை இருக்கு அதை பார்க்கலாம் அதான் கேட்கிறேன்” என்றவள் அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.
“ம். ஓகே! பட் சீக்கிரம் முடிக்கனும், இப்போவே லேட் ஆகிடுச்சு” என்று கூறி அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்தான்.
காலையில் இருந்து, அலைந்து திரிந்து எல்லா வேலைகளையும் முடிக்க இரவு எட்டு மணி ஆனது. இவர்கள் பிராஜக்ட் டை அப் செய்யும் வேலைகள்,
இவ்வளவு பெரிய பிராசஸ் இருக்கும் என்று எண்ணவில்லை.
ஆனால், அவன் அதை கணித்து வைத்து எல்லாவற்றையும் ஒரே நாளில் முடித்து இருக்கிறான் என்றால், அவன் இதை முன்னமே எதிர்பார்த்தது போல் தான் உள்ளது என்று அவளின் அடி மனம் அடித்து கூறியது.
இது ஒரு வாரம் இழுக்க கூடிய வேலை என்று அதன் பிராசஸ் முறையிலே தெரிந்தது. ஆனால் அவன் நேரம் கடத்தாமல், உடனே யார் யாரையோ எல்லாம் பிடித்து இதை அவளுக்காக செய்து இருக்கிறான்.
“நிஜமாவே நமக்காக தான் செய்தானா? இல்லை இதுல அவனுக்கு எதும் காரியமாக வேண்டி இருக்கா” என்று மீண்டும் முருங்கை மரம் ஏறின கதையாக யோசிக்க தொடங்கினாள்.
அவனோ, பிசி முன் அமர்ந்து வேலை செய்வது போல் தோன்றினாலும், அவன் கண்கள் முழுவதும் அவள் மேல் தான் இருந்தது. அவனை பொறுத்த வரை, எடுத்து வைத்த முதல் படியில் வெற்றி பெற்று விட்டான்.
“குழம்பின குட்டையில் தான் மீன் பிடிக்க வசதியாக இருக்கும். இப்படியே குழம்பிகிட்டு இரு, அப்போ தான் நீ தெளிய முன்னாடி என் காரியத்தை நான் சாதிசிக்க முடியும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.