- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
காதல் 6
ஊரில் திருவிழாவிற்கு ஆதி அழைத்து இருந்தாள் பிரீத்தியை, அவளால் உடனே கிளம்ப முடியாத சூழல்.
காரணம் இன்னும் நான்கு நாட்களுக்குள், அந்த பிராஜக்ட் சப்மிட் செய்ய வேண்டும்.
அதற்கு தான் இரவும், பகலும் அயராது தங்களின் உழைப்பை இதில் கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்பதை அவள் நன்கு அறிவாள்.
அதுவும் ஆதிக், அவனின் வழிநடத்தல் இதில் அதிகம்.
நிறைய அவனிடம் இருந்து, கற்றுக் கொள்ளும்படி இருந்தது. அதிலும், அதில் ஏற்படும் சில நுணுக்கமான தவறுகள் எல்லாம் எப்படி சரி செய்வது என்பதை எளிய முறையில் கற்றுக் கொடுத்தான்.
“இவனை இன்னும் புரிஞ்சிக்க முடியல என்னால, நல்லா பார்துகிறான் என்னை. இவனோட எதிரி தட்டி பறிக்க வந்த பொழுது தைரியமா எதிர்த்து நின்றான்”.
“எனக்கும், என்னை சேர்ந்த எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுத்து இருக்கான். எல்லாத்துக்கும் மேல, அப்போ அப்போ என்னை நல்லா சைட் அடிக்கிறான். இவன் ஆனா நான் கிட்ட போனா மட்டும், முகத்தை ஏன் இறுக்கமாக வச்சு இருக்கான்?” என்று மனம் அவனை சுற்றி தான் வந்து கொண்டு இருந்தது.
அதோடு நிறுத்தாமல், இப்பொழுது இந்த நான்கு நாட்களாக அவளின் பார்வை முழுவதும் அவன் மேல் தான்.
“அடியே! சைட் அடிச்சது போதும், என்னை வேலை செய்ய விடேன்” என்று அவன் மனம் இப்பொழுது அரற்றி கொண்டு இருந்தது.
ஆதிக், அவளை இப்பொழுது அவனை நினைக்க வைத்து விட்டாலும், அவன் மனம் இன்னும் அவளாக திருமணம் குறித்து பேசவில்லை என்ற வருத்தம் இருக்க தான் செய்தது.
பெண் பார்க்கும் வைபவத்தில் அவளை சரியாக பார்க்க கூட இல்லை, ஆனால் அடுத்து பாட்டியுடன் கடைக்கு சென்ற இடத்தில் அவளை நன்றாக பார்வன், அவள் வசம் சிறிது விழுந்தான்.
அடுத்து இந்த பிராஜக்ட் குறித்து பேசும் பொழுது தான், அவளின் நிமிர்வும், கம்பீரமும் அவனை அவள் வசம் திரும்ப செய்தது. அதன் பிறகு, அவன் மனதில் ஒன்றே ஒன்று தான் ஓடிக் கொண்டு இருந்தது, அது இனி அவள் அவனை முழுவதுமாக நினைக்க வேண்டும், காதல் புரிய வேண்டும் என்பது.
“ஹ்ம்ம்.. இப்போ தான் சைட் அடிக்க ஆரம்பிச்சு இருக்கா, இனி எப்போ காதல் சொல்லி, எப்போ ஹனிமூன் பத்தி எல்லாம் பேசுறது” என்று சலித்து கொண்டான்.
“ஆதிக்! இன்னும் ஒரு நாலு நாள் ல பிராஜக்ட் முடிஞ்சு, நாம சப்மிட் பண்ணிடலாம் இல்லையா? ” என்று கேட்டாள் பிரீத்தி.
“ஆமா பிரீத்தி! முடிச்சிடலாம், என்ன திடீர்னு? நாம இதை பத்தி பேசி இருக்கோம் தானே” என்று எதற்கு கேட்கிறாள் என்று தெரியாமல் கேட்டான்.
“இல்லை என் சிஸ்டர் அபிஷேகப்பட்டி ஊர் ல இருக்கா, அவ அங்க திருவிழாவுக்கு கூப்பிட்டா. அதான் நாலு நாள் ல இது முடிஞ்சா, அடுத்த நாள் அங்க கிளம்பலாம் பார்க்கிறேன்” என்று கூறவும், அவன் விழித்தான்.
அந்த ஊர் அவனின் சொந்த ஊர் அல்லவா, இரண்டு நாட்கள் முன் அஜய் செய்து இருந்த கலாட்டா அவன் காதுக்கு வந்தது.
அது மட்டுமின்றி, அவனின் சித்திகும் இடையில் உடம்பு முடியாமல் இருந்ததாலும், திருவிழா வேறு நெருங்குவதால், அவன் வீட்டினர் எல்லோரும் அவனை அழைத்து செல்ல திட்டமிட்டு கொண்டு இருந்தனர்.
இப்பொழுது இவள் இப்படி கூறவும், முதலில் வர முடியாது என்றவன் உடனே பாட்டிக்கு கால் செய்து பேசி இந்த வார கடைசியில் அங்கே செல்லலாம் என்று பச்சை கொடி காட்டி விட்டான்.
“மருமகளே! உன் மகனுக்கு யார் வேப்பிலை அடிச்சது தெரியல, ஊருக்கு போக சரின்னு ஒத்துகிட்டான். நீ போன் போட்டு சொல்லிடு அவங்களுக்கு, பத்திரிக்கை எடுத்து வச்சுக்கோ அப்படியே, அங்க இருக்கிற இன்னும் நம்ம சொந்த பந்தங்கள் எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிடுவோம்” என்று கூறிவிட்டு அதற்கான வேலையில் இறங்கினார்.
ஊரில் திருவிழாவிற்கு ஆதி அழைத்து இருந்தாள் பிரீத்தியை, அவளால் உடனே கிளம்ப முடியாத சூழல்.
காரணம் இன்னும் நான்கு நாட்களுக்குள், அந்த பிராஜக்ட் சப்மிட் செய்ய வேண்டும்.
அதற்கு தான் இரவும், பகலும் அயராது தங்களின் உழைப்பை இதில் கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்பதை அவள் நன்கு அறிவாள்.
அதுவும் ஆதிக், அவனின் வழிநடத்தல் இதில் அதிகம்.
நிறைய அவனிடம் இருந்து, கற்றுக் கொள்ளும்படி இருந்தது. அதிலும், அதில் ஏற்படும் சில நுணுக்கமான தவறுகள் எல்லாம் எப்படி சரி செய்வது என்பதை எளிய முறையில் கற்றுக் கொடுத்தான்.
“இவனை இன்னும் புரிஞ்சிக்க முடியல என்னால, நல்லா பார்துகிறான் என்னை. இவனோட எதிரி தட்டி பறிக்க வந்த பொழுது தைரியமா எதிர்த்து நின்றான்”.
“எனக்கும், என்னை சேர்ந்த எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுத்து இருக்கான். எல்லாத்துக்கும் மேல, அப்போ அப்போ என்னை நல்லா சைட் அடிக்கிறான். இவன் ஆனா நான் கிட்ட போனா மட்டும், முகத்தை ஏன் இறுக்கமாக வச்சு இருக்கான்?” என்று மனம் அவனை சுற்றி தான் வந்து கொண்டு இருந்தது.
அதோடு நிறுத்தாமல், இப்பொழுது இந்த நான்கு நாட்களாக அவளின் பார்வை முழுவதும் அவன் மேல் தான்.
“அடியே! சைட் அடிச்சது போதும், என்னை வேலை செய்ய விடேன்” என்று அவன் மனம் இப்பொழுது அரற்றி கொண்டு இருந்தது.
ஆதிக், அவளை இப்பொழுது அவனை நினைக்க வைத்து விட்டாலும், அவன் மனம் இன்னும் அவளாக திருமணம் குறித்து பேசவில்லை என்ற வருத்தம் இருக்க தான் செய்தது.
பெண் பார்க்கும் வைபவத்தில் அவளை சரியாக பார்க்க கூட இல்லை, ஆனால் அடுத்து பாட்டியுடன் கடைக்கு சென்ற இடத்தில் அவளை நன்றாக பார்வன், அவள் வசம் சிறிது விழுந்தான்.
அடுத்து இந்த பிராஜக்ட் குறித்து பேசும் பொழுது தான், அவளின் நிமிர்வும், கம்பீரமும் அவனை அவள் வசம் திரும்ப செய்தது. அதன் பிறகு, அவன் மனதில் ஒன்றே ஒன்று தான் ஓடிக் கொண்டு இருந்தது, அது இனி அவள் அவனை முழுவதுமாக நினைக்க வேண்டும், காதல் புரிய வேண்டும் என்பது.
“ஹ்ம்ம்.. இப்போ தான் சைட் அடிக்க ஆரம்பிச்சு இருக்கா, இனி எப்போ காதல் சொல்லி, எப்போ ஹனிமூன் பத்தி எல்லாம் பேசுறது” என்று சலித்து கொண்டான்.
“ஆதிக்! இன்னும் ஒரு நாலு நாள் ல பிராஜக்ட் முடிஞ்சு, நாம சப்மிட் பண்ணிடலாம் இல்லையா? ” என்று கேட்டாள் பிரீத்தி.
“ஆமா பிரீத்தி! முடிச்சிடலாம், என்ன திடீர்னு? நாம இதை பத்தி பேசி இருக்கோம் தானே” என்று எதற்கு கேட்கிறாள் என்று தெரியாமல் கேட்டான்.
“இல்லை என் சிஸ்டர் அபிஷேகப்பட்டி ஊர் ல இருக்கா, அவ அங்க திருவிழாவுக்கு கூப்பிட்டா. அதான் நாலு நாள் ல இது முடிஞ்சா, அடுத்த நாள் அங்க கிளம்பலாம் பார்க்கிறேன்” என்று கூறவும், அவன் விழித்தான்.
அந்த ஊர் அவனின் சொந்த ஊர் அல்லவா, இரண்டு நாட்கள் முன் அஜய் செய்து இருந்த கலாட்டா அவன் காதுக்கு வந்தது.
அது மட்டுமின்றி, அவனின் சித்திகும் இடையில் உடம்பு முடியாமல் இருந்ததாலும், திருவிழா வேறு நெருங்குவதால், அவன் வீட்டினர் எல்லோரும் அவனை அழைத்து செல்ல திட்டமிட்டு கொண்டு இருந்தனர்.
இப்பொழுது இவள் இப்படி கூறவும், முதலில் வர முடியாது என்றவன் உடனே பாட்டிக்கு கால் செய்து பேசி இந்த வார கடைசியில் அங்கே செல்லலாம் என்று பச்சை கொடி காட்டி விட்டான்.
“மருமகளே! உன் மகனுக்கு யார் வேப்பிலை அடிச்சது தெரியல, ஊருக்கு போக சரின்னு ஒத்துகிட்டான். நீ போன் போட்டு சொல்லிடு அவங்களுக்கு, பத்திரிக்கை எடுத்து வச்சுக்கோ அப்படியே, அங்க இருக்கிற இன்னும் நம்ம சொந்த பந்தங்கள் எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிடுவோம்” என்று கூறிவிட்டு அதற்கான வேலையில் இறங்கினார்.