Hi Friends,
ரொம்ப நாள் கழிச்சு அப்டேட் போட வந்திருக்கேன். எல்லாரும் நான் எப்போ எபி குடுப்பேன்னு காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போயிருப்பேள்னு நேக்கு நன்னா தெரியும். அந்த ஏமாற்றம் இனியும் தொடரக் கூடாதுன்னுதான் நான் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துண்டேன். அதென்னமோ தெரியலை, த்விதீய விக்னம் மாதிரி நேக்கு த்ரிதீய விக்னம் ஆயிடறது ஒவ்வொரு தடவையும். ரெண்டு எபிசொட் போட்டுட்டு மூணாவது போடறதுக்குள்ள ஏதாவது தடை வந்துடறது. இனிமேல் அது நடக்ககூடதுன்னுதான், சில எபிசோட்ஸ் எழுதி முடிச்சுட்டு அப்டேட் போட வந்திருக்கேன். இனி வாரம் ஒரு எபிசோட் திங்கட்கிழமை அன்னிக்கு வந்துடும். இப்போதைய நிலைமையில் வாரம் ஒரு எபி போடறதுதான் தோதுப்படும்னு நெனைக்கிறேன். கொஞ்சம் கோச்சுக்காம அப்டேட் படிச்சுட்டு வந்து, லேட்டானதுக்கு என்னை நன்னா திட்டறதா இருந்தாலும் திட்டிடுங்கோ... லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுக்க மறக்காதீங்கோ... Luv U All...
காதல் கடன்
வாசலிலேயே உட்கார்ந்திருந்தார் பர்வதம் மாமி. “என்னம்மா, வாசல்ல தனியா ஏன் ஒக்காந்துண்டு இருக்க, எல்லாரும் எங்க?” என்று கேட்டபடியே வண்டியை நிறுத்திவிட்டு வந்த பரத் எதிர் திண்ணையில் அமர்ந்துகொண்டான்.
“எங்கேடா போனே நீ? எவ்ளோ நாழியா காத்துண்டு இருக்கேன் தெரியுமா? அந்த வண்டிய தொடக்கூடாதுன்னு உன்னண்ட எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்கவே மாட்டியா நீ?” என்று படபடத்தவரின் முகத்தில் ஏகத்துக்கும் கலக்கம்.
தாயின் தவிப்பை ஆற்றும் விதமாக அவரது காலடியில் படியில் வந்து அமர்ந்தவன் “நான் எங்கேயும் போகலைம்மா, என்னவோ கொஞ்ச தூரம் ஒரு டிரைவ் போனா நன்னா இருக்கும்னு தோணித்து, அதான் போனேன், இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதட்டப்படறே?” என்றபடி அவர் மடியில் தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.
மகனின் தலையை மெதுவாகக் கோதியவரின் கைகளில் லேசாக நடுக்கம் தெரிய, தாயின் கையை தன் கைகளுக்குள் பிடித்து அடக்கிக் கொண்டவன், மென்மையாக, “அதான் திரும்பி வந்துட்டேனேம்மா,” என்றான்.
“மொதல்ல அந்த வண்டி சாவிய குடு இங்க” என்று அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டவர், “இனிமேல் என்னை மீறி நீ இந்த வண்டிய எப்படி தொடறேன்னு நானும் பாக்கறேன்,” என்றபடி சாவியை முந்தானை நுனியில் முடிந்து இடுப்பில் தொங்கிய மற்ற சாவிக்கொத்துடன் அதையும் சொருகிக்கொண்டார். அவருடைய செய்கையை புன்னகையுடன் பார்த்திருந்தவன், “இனிமே உன்னண்ட சொல்லாம நான் எங்கேயுமே போகமாட்டேன், ப்ராமிஸ்” என்று தாயைச் சமாதானம் செய்ய முயன்றான்.
உதடுகளில் விரிந்த புன்னகை மகனின் கண்களை எட்டாததை கவனித்த பர்வதம் மாமி, மகனின் முகம் வருடி, “போறுண்டா பரத், நீ ஓடினதெல்லாம் போறும் கண்ணா, எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருடா,” என்று அவர் இறைஞ்ச, “ஓடிண்டே இருக்கணும்னு நேக்கென்ன ஆசையா, தொரத்திண்டு இருக்கற நிழலெல்லாம் தொரத்தறதை நிறுத்திட்டா, நானும் ஓடறத நிறுத்திடுவேன்மா,” என்று எங்கோ வெறித்த பார்வையுடன் பதிலளித்தவனின் முகத்தைத் தன்புறம் திருப்பியவர், “நீ ஒருதரம் ஓடறதை நிப்பாட்டிட்டு திரும்பி நின்னு பாருடா கண்ணா, எல்லா நிழலும் திக்கே தெரியாம சிதறிப் போயிடும், அம்மா இருக்கேண்டா உன்னோட” என்றார் ஆதங்கமாக.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் எழுந்து நின்று, தன் இரு கைகளாலும் தாயின் முகத்தை ஏந்தியவன், “நீ எனக்காக காத்துண்டு இருப்பேங்கறதுக்காகத்தான் நான் இந்த ஆத்துக்கு இன்னும் வந்துண்டு இருக்கேன், அன்னிக்கும் உனக்காகத்தான் திரும்பி வந்தேன், இன்னிக்கும் உனக்காகத்தான் திரும்பி வந்திருக்கேன், இதோ இது மாதிரி எனக்காக காத்துண்டு இருக்கற ஒரே ஜீவன் நீதாம்மா,” என்றான்.
“ஏண்டா கண்ணா இப்படியெல்லாம் பேசற, எல்லாரும் உயிரையே வெச்சுண்டு இருக்கா உன் மேல, நீதாண்டா எல்லார்கிட்ட இருந்தும் விலகிப் போயிட்ட” என்றார் அவனைக் குற்றம்சாட்டும் விதமாக.
பதிலேதும் கூறாமல் மெளனமாக நின்றவனைப் பார்த்து, “சரி, சரி, ரொம்ப நாழியாயிடுத்து, கைகால் அலம்பிண்டு சாப்பிடவா,” என்றபடி எழுந்துகொண்டார் பர்வதம் மாமி.
“எனக்கு பசிக்கலைம்மா, நீ போய் படுத்துக்கோ,” என்று கூறியவனிடம், “ராதும்மாவும் சாப்பிடலை கண்ணா, நீ வந்தப்பறம் சாபிடறேன்னு சொல்லிட்டா, கௌசிக்கு வேற உடம்பு சரியில்ல, இன்னிக்கி அவதான் எல்லாருக்கும் தனியா நின்னு தோசை வார்த்தா,” என்று கூற
“ம்ப்ச், எனக்காக யாரும் சாப்பிடாம கத்துண்டு இருக்கக்கூடாதுன்னு நான் எத்தனை தடவ சொல்லிருக்கேன், ஏன்மா கேக்க மாட்டேங்கறேள்,” என்றான் பரத் சீற்றமாக.
“அதை என்கிட்டே சொன்னே, உன் ஆத்துக்காரிகிட்டக்க சொன்னியா? எவ்ளோ சொல்லியும் நீ வந்தப்பறம் தான் சாப்பிடுவேன்னு பிடிவாதமா சொல்லிட்டா, என்னை என்ன பண்ணச் சொல்றே? போ, போயி அவளையும் அழைச்சுண்டு வா, ரூம்லதான் இருப்பா, நான் போய் தோசைய வார்க்க கல்லைப் போடறேன்,” என்றபடி சமையலறைக்குள் சென்றுவிட்டார் பர்வதம் மாமி.
மாடியில் அவனது அறை இருளில் மூழ்கியிருந்தது, ராதிகாவை எங்கும் காணவில்லை.
படுக்கையின் மீது இருந்த அவளுடைய ஃபோன் ஒளிர்ந்துகொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தால் அம்மாவிடமிருந்து பதினைந்து மிஸ்டு கால் என்று காட்டியது.
ஃபோனைக் கையில் எடுத்துக்கொண்டு ராதிகாவைத் தேடியபடி பால்கனிக்கு சென்றவன் பார்வையில் பட்டது அங்கே ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ராதிகாவின் முயல்குட்டிப் பாதங்கள்தான்.
உள்ளங்கால்களிலும் குட்டி வட்டங்களாக மருதாணி வைத்திருந்தாள். செந்தாழம்பூ மலர்ந்தது போலிருந்த அந்தப் பாதங்களில் இருந்த அரக்குநிற மருதாணி வட்டங்களில் நகரமுடியாமல் அவனுடைய பார்வை நிலைத்தது.
திக்கின்றி அலைபாய்ந்து கொண்டிருந்த மனமும் அந்த வட்டங்களில் வந்து இளைப்பாறியது போலத் தோன்றியது. அவனுடைய அனுமதி இல்லாமலே ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்பட்டது.
எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ தெரியாது, ஆனால் அலைபாயும் கடலில் ஆதாரத்திற்குக் கிடைத்த நங்கூரம் போல் அவனுடைய மனதிற்கு அமைதியளித்த அந்தக் காட்சியிலிருந்து பார்வையை விலக்க மனமில்லாமல் அப்படியே நின்றிருந்தான் அவ்விளைஞன்.
அவனுடைய மோனத்தைக் கலைக்கும்படியாக கையிலிருந்த ராதிகாவின் கைபேசி அதிரத் தொடங்க, ‘அம்மா காலிங்’ என்று அறிவித்த அழைப்பை எடுத்தவன், “ஹலோ” என்றான்.
“ஹலோ, மாப்பிள்ளை, மாப்பிள்ளையா பேசறது, நான் ராதிகாவோட அம்மா பேசறேன்.” என்றார் மறுமுனையில் மரகதம். “ரொம்ப நாழியா ஃபோன் பண்ணிண்டு இருக்கேன், ராதும்மா ஃபோனையே எடுக்கல்லை” என்றவரிடம்,
“ஃபோனை சைலன்ட்ல போட்டிருக்கா போலருக்கு மாமி, அதான் கேட்டிருக்காது,” என்றபடி உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன் “உங்க பொண்ணு தூங்கிண்டு இருக்கா மாமி, எழுப்பட்டுமா?” என்று கேட்டான்.
“இல்லை, இல்லை மாப்பிள்ளை, தூங்கட்டும், நான் அப்பறமா பேசிக்கறேன், பரவால்லை”, என்று கூறியவர், “ரொம்ப நன்றி மாப்பிள்ளை, பிரயாணமெல்லாம் ரொம்ப சௌகரியமா இருந்துது, ஏற்பாடெல்லாம் ரொம்ப நன்னா பண்ணியிருந்தேள்,” என்றார், மரகதம்.
“அதனால என்ன மாமி, பரவாயில்லை, என்றவனிடம், “ராதுவை நாளைக்கு தோதுபடறச்ச கூப்பிடச் சொல்லுங்கோ,” என்று கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் மரகதம்.
அருகினில் கேட்ட பரத்தின் குரலுக்கு திடுக்கிட்டு விழித்த ராதிகா ஊஞ்சலில் படுத்திருப்பது நினைவில்லாமல் வேகமாக எழுந்துகொள்ள முயல, அவள் வேகத்தில் ஊஞ்சல் தாறுமாறாக அசைந்து ராதிகாவையும் நிலையிழக்கச் செய்தது.
“ஏய், கீழே விழப்போற,” என்று ஊஞ்சலை ஒரு கையாலும், தடுமாறிய ராதிகாவை ஒரு கையாலும் பரத் பிடித்துக்கொள்ள, ராதிகாவும் பிடிமானத்திற்காக தன் முன் சற்றே குனிந்திருந்தவனின் தோளைப் பிடித்தவள், ஒரு நொடி என்ன நினைத்தாளோ, தீயைத் தொட்டதுபோல் அவன் மேலிருந்த கையை விலக்கிக்கொண்டாள்.
ராதிகாவின் விலகலைச் சிறிதும் உணராதவனாய், உணர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளதவன் போல பரத், தனது கையிலிருந்த அவளுடைய ஃபோனை அவளிடம் நீட்டி, “உங்க அம்மாதான் அழைச்சிருந்தா, நீ தூங்கிண்டு இருக்கேன்னு சொன்னேன், நாளைக்கு கூப்பிடச் சொன்னா,” என்று கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு, “பேசறதா இருந்தா பேசிட்டு கீழ வா, அம்மா சாப்பிடறதுக்காக காத்துண்டு இருக்கா,” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
ராதிகா சமையலறையில் நுழைந்தபோது பரத் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, பர்வதம் மாமி தோசை வார்க்கத் தொடங்கியிருந்தார்.
“அம்மா, நீங்க உக்காந்துக்கொங்கோ, நான் வாக்கறேன்,” என்றபடி கரண்டியை வாங்க முற்பட்டவளிடம், “நீயும் அவனோட சாப்பிட ஒக்காரு, நான் வாக்கறேன், இப்போவே நாழியாயிடுத்து பாரு, பசிக்கலையா உனக்கு?” என்றார்.
“இல்லைமா, பரவாயில்லை, அப்போவே கால வலிக்கறதுன்னு சொன்னேள், நீங்க அவர் கிட்ட ஒக்காந்துண்டு பரிமாறுங்கோ, தோசை வாக்க எவ்வளவு நாழி ஆயிடும், நான் பாத்துக்கறேன்,” என்று வலுக்கட்டாயமாக அவரை பரத்தின் அருகில் உட்காரவைத்துவிட்டு தோசை வார்க்கத் தொடங்கினாள் ராதிகா.
எண்ணை ஊற்றாமல், நெய் விட்டு பட்டுப்போல பொன்னிறத்தில் ராதிகா வார்த்த தோசைகளை இரண்டு சாப்பிட்டு முடித்தவன், மூன்றாவது தோசையை அவள் பரிமாற வந்தபோது “போறும்” என்று தட்டின் மீது கையை மறித்து தடுக்க முயன்றான்.
ரொம்ப நாள் கழிச்சு அப்டேட் போட வந்திருக்கேன். எல்லாரும் நான் எப்போ எபி குடுப்பேன்னு காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போயிருப்பேள்னு நேக்கு நன்னா தெரியும். அந்த ஏமாற்றம் இனியும் தொடரக் கூடாதுன்னுதான் நான் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துண்டேன். அதென்னமோ தெரியலை, த்விதீய விக்னம் மாதிரி நேக்கு த்ரிதீய விக்னம் ஆயிடறது ஒவ்வொரு தடவையும். ரெண்டு எபிசொட் போட்டுட்டு மூணாவது போடறதுக்குள்ள ஏதாவது தடை வந்துடறது. இனிமேல் அது நடக்ககூடதுன்னுதான், சில எபிசோட்ஸ் எழுதி முடிச்சுட்டு அப்டேட் போட வந்திருக்கேன். இனி வாரம் ஒரு எபிசோட் திங்கட்கிழமை அன்னிக்கு வந்துடும். இப்போதைய நிலைமையில் வாரம் ஒரு எபி போடறதுதான் தோதுப்படும்னு நெனைக்கிறேன். கொஞ்சம் கோச்சுக்காம அப்டேட் படிச்சுட்டு வந்து, லேட்டானதுக்கு என்னை நன்னா திட்டறதா இருந்தாலும் திட்டிடுங்கோ... லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுக்க மறக்காதீங்கோ... Luv U All...
காதல் கடன்
(18)
வாசலிலேயே உட்கார்ந்திருந்தார் பர்வதம் மாமி. “என்னம்மா, வாசல்ல தனியா ஏன் ஒக்காந்துண்டு இருக்க, எல்லாரும் எங்க?” என்று கேட்டபடியே வண்டியை நிறுத்திவிட்டு வந்த பரத் எதிர் திண்ணையில் அமர்ந்துகொண்டான்.
“எங்கேடா போனே நீ? எவ்ளோ நாழியா காத்துண்டு இருக்கேன் தெரியுமா? அந்த வண்டிய தொடக்கூடாதுன்னு உன்னண்ட எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்கவே மாட்டியா நீ?” என்று படபடத்தவரின் முகத்தில் ஏகத்துக்கும் கலக்கம்.
தாயின் தவிப்பை ஆற்றும் விதமாக அவரது காலடியில் படியில் வந்து அமர்ந்தவன் “நான் எங்கேயும் போகலைம்மா, என்னவோ கொஞ்ச தூரம் ஒரு டிரைவ் போனா நன்னா இருக்கும்னு தோணித்து, அதான் போனேன், இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதட்டப்படறே?” என்றபடி அவர் மடியில் தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.
மகனின் தலையை மெதுவாகக் கோதியவரின் கைகளில் லேசாக நடுக்கம் தெரிய, தாயின் கையை தன் கைகளுக்குள் பிடித்து அடக்கிக் கொண்டவன், மென்மையாக, “அதான் திரும்பி வந்துட்டேனேம்மா,” என்றான்.
“மொதல்ல அந்த வண்டி சாவிய குடு இங்க” என்று அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டவர், “இனிமேல் என்னை மீறி நீ இந்த வண்டிய எப்படி தொடறேன்னு நானும் பாக்கறேன்,” என்றபடி சாவியை முந்தானை நுனியில் முடிந்து இடுப்பில் தொங்கிய மற்ற சாவிக்கொத்துடன் அதையும் சொருகிக்கொண்டார். அவருடைய செய்கையை புன்னகையுடன் பார்த்திருந்தவன், “இனிமே உன்னண்ட சொல்லாம நான் எங்கேயுமே போகமாட்டேன், ப்ராமிஸ்” என்று தாயைச் சமாதானம் செய்ய முயன்றான்.
உதடுகளில் விரிந்த புன்னகை மகனின் கண்களை எட்டாததை கவனித்த பர்வதம் மாமி, மகனின் முகம் வருடி, “போறுண்டா பரத், நீ ஓடினதெல்லாம் போறும் கண்ணா, எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருடா,” என்று அவர் இறைஞ்ச, “ஓடிண்டே இருக்கணும்னு நேக்கென்ன ஆசையா, தொரத்திண்டு இருக்கற நிழலெல்லாம் தொரத்தறதை நிறுத்திட்டா, நானும் ஓடறத நிறுத்திடுவேன்மா,” என்று எங்கோ வெறித்த பார்வையுடன் பதிலளித்தவனின் முகத்தைத் தன்புறம் திருப்பியவர், “நீ ஒருதரம் ஓடறதை நிப்பாட்டிட்டு திரும்பி நின்னு பாருடா கண்ணா, எல்லா நிழலும் திக்கே தெரியாம சிதறிப் போயிடும், அம்மா இருக்கேண்டா உன்னோட” என்றார் ஆதங்கமாக.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் எழுந்து நின்று, தன் இரு கைகளாலும் தாயின் முகத்தை ஏந்தியவன், “நீ எனக்காக காத்துண்டு இருப்பேங்கறதுக்காகத்தான் நான் இந்த ஆத்துக்கு இன்னும் வந்துண்டு இருக்கேன், அன்னிக்கும் உனக்காகத்தான் திரும்பி வந்தேன், இன்னிக்கும் உனக்காகத்தான் திரும்பி வந்திருக்கேன், இதோ இது மாதிரி எனக்காக காத்துண்டு இருக்கற ஒரே ஜீவன் நீதாம்மா,” என்றான்.
“ஏண்டா கண்ணா இப்படியெல்லாம் பேசற, எல்லாரும் உயிரையே வெச்சுண்டு இருக்கா உன் மேல, நீதாண்டா எல்லார்கிட்ட இருந்தும் விலகிப் போயிட்ட” என்றார் அவனைக் குற்றம்சாட்டும் விதமாக.
பதிலேதும் கூறாமல் மெளனமாக நின்றவனைப் பார்த்து, “சரி, சரி, ரொம்ப நாழியாயிடுத்து, கைகால் அலம்பிண்டு சாப்பிடவா,” என்றபடி எழுந்துகொண்டார் பர்வதம் மாமி.
“எனக்கு பசிக்கலைம்மா, நீ போய் படுத்துக்கோ,” என்று கூறியவனிடம், “ராதும்மாவும் சாப்பிடலை கண்ணா, நீ வந்தப்பறம் சாபிடறேன்னு சொல்லிட்டா, கௌசிக்கு வேற உடம்பு சரியில்ல, இன்னிக்கி அவதான் எல்லாருக்கும் தனியா நின்னு தோசை வார்த்தா,” என்று கூற
“ம்ப்ச், எனக்காக யாரும் சாப்பிடாம கத்துண்டு இருக்கக்கூடாதுன்னு நான் எத்தனை தடவ சொல்லிருக்கேன், ஏன்மா கேக்க மாட்டேங்கறேள்,” என்றான் பரத் சீற்றமாக.
“அதை என்கிட்டே சொன்னே, உன் ஆத்துக்காரிகிட்டக்க சொன்னியா? எவ்ளோ சொல்லியும் நீ வந்தப்பறம் தான் சாப்பிடுவேன்னு பிடிவாதமா சொல்லிட்டா, என்னை என்ன பண்ணச் சொல்றே? போ, போயி அவளையும் அழைச்சுண்டு வா, ரூம்லதான் இருப்பா, நான் போய் தோசைய வார்க்க கல்லைப் போடறேன்,” என்றபடி சமையலறைக்குள் சென்றுவிட்டார் பர்வதம் மாமி.
மாடியில் அவனது அறை இருளில் மூழ்கியிருந்தது, ராதிகாவை எங்கும் காணவில்லை.
படுக்கையின் மீது இருந்த அவளுடைய ஃபோன் ஒளிர்ந்துகொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தால் அம்மாவிடமிருந்து பதினைந்து மிஸ்டு கால் என்று காட்டியது.
ஃபோனைக் கையில் எடுத்துக்கொண்டு ராதிகாவைத் தேடியபடி பால்கனிக்கு சென்றவன் பார்வையில் பட்டது அங்கே ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ராதிகாவின் முயல்குட்டிப் பாதங்கள்தான்.
உள்ளங்கால்களிலும் குட்டி வட்டங்களாக மருதாணி வைத்திருந்தாள். செந்தாழம்பூ மலர்ந்தது போலிருந்த அந்தப் பாதங்களில் இருந்த அரக்குநிற மருதாணி வட்டங்களில் நகரமுடியாமல் அவனுடைய பார்வை நிலைத்தது.
திக்கின்றி அலைபாய்ந்து கொண்டிருந்த மனமும் அந்த வட்டங்களில் வந்து இளைப்பாறியது போலத் தோன்றியது. அவனுடைய அனுமதி இல்லாமலே ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்பட்டது.
எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ தெரியாது, ஆனால் அலைபாயும் கடலில் ஆதாரத்திற்குக் கிடைத்த நங்கூரம் போல் அவனுடைய மனதிற்கு அமைதியளித்த அந்தக் காட்சியிலிருந்து பார்வையை விலக்க மனமில்லாமல் அப்படியே நின்றிருந்தான் அவ்விளைஞன்.
அவனுடைய மோனத்தைக் கலைக்கும்படியாக கையிலிருந்த ராதிகாவின் கைபேசி அதிரத் தொடங்க, ‘அம்மா காலிங்’ என்று அறிவித்த அழைப்பை எடுத்தவன், “ஹலோ” என்றான்.
“ஹலோ, மாப்பிள்ளை, மாப்பிள்ளையா பேசறது, நான் ராதிகாவோட அம்மா பேசறேன்.” என்றார் மறுமுனையில் மரகதம். “ரொம்ப நாழியா ஃபோன் பண்ணிண்டு இருக்கேன், ராதும்மா ஃபோனையே எடுக்கல்லை” என்றவரிடம்,
“ஃபோனை சைலன்ட்ல போட்டிருக்கா போலருக்கு மாமி, அதான் கேட்டிருக்காது,” என்றபடி உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன் “உங்க பொண்ணு தூங்கிண்டு இருக்கா மாமி, எழுப்பட்டுமா?” என்று கேட்டான்.
“இல்லை, இல்லை மாப்பிள்ளை, தூங்கட்டும், நான் அப்பறமா பேசிக்கறேன், பரவால்லை”, என்று கூறியவர், “ரொம்ப நன்றி மாப்பிள்ளை, பிரயாணமெல்லாம் ரொம்ப சௌகரியமா இருந்துது, ஏற்பாடெல்லாம் ரொம்ப நன்னா பண்ணியிருந்தேள்,” என்றார், மரகதம்.
“அதனால என்ன மாமி, பரவாயில்லை, என்றவனிடம், “ராதுவை நாளைக்கு தோதுபடறச்ச கூப்பிடச் சொல்லுங்கோ,” என்று கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் மரகதம்.
அருகினில் கேட்ட பரத்தின் குரலுக்கு திடுக்கிட்டு விழித்த ராதிகா ஊஞ்சலில் படுத்திருப்பது நினைவில்லாமல் வேகமாக எழுந்துகொள்ள முயல, அவள் வேகத்தில் ஊஞ்சல் தாறுமாறாக அசைந்து ராதிகாவையும் நிலையிழக்கச் செய்தது.
“ஏய், கீழே விழப்போற,” என்று ஊஞ்சலை ஒரு கையாலும், தடுமாறிய ராதிகாவை ஒரு கையாலும் பரத் பிடித்துக்கொள்ள, ராதிகாவும் பிடிமானத்திற்காக தன் முன் சற்றே குனிந்திருந்தவனின் தோளைப் பிடித்தவள், ஒரு நொடி என்ன நினைத்தாளோ, தீயைத் தொட்டதுபோல் அவன் மேலிருந்த கையை விலக்கிக்கொண்டாள்.
ராதிகாவின் விலகலைச் சிறிதும் உணராதவனாய், உணர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளதவன் போல பரத், தனது கையிலிருந்த அவளுடைய ஃபோனை அவளிடம் நீட்டி, “உங்க அம்மாதான் அழைச்சிருந்தா, நீ தூங்கிண்டு இருக்கேன்னு சொன்னேன், நாளைக்கு கூப்பிடச் சொன்னா,” என்று கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு, “பேசறதா இருந்தா பேசிட்டு கீழ வா, அம்மா சாப்பிடறதுக்காக காத்துண்டு இருக்கா,” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
********************************************
ராதிகா சமையலறையில் நுழைந்தபோது பரத் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, பர்வதம் மாமி தோசை வார்க்கத் தொடங்கியிருந்தார்.
“அம்மா, நீங்க உக்காந்துக்கொங்கோ, நான் வாக்கறேன்,” என்றபடி கரண்டியை வாங்க முற்பட்டவளிடம், “நீயும் அவனோட சாப்பிட ஒக்காரு, நான் வாக்கறேன், இப்போவே நாழியாயிடுத்து பாரு, பசிக்கலையா உனக்கு?” என்றார்.
“இல்லைமா, பரவாயில்லை, அப்போவே கால வலிக்கறதுன்னு சொன்னேள், நீங்க அவர் கிட்ட ஒக்காந்துண்டு பரிமாறுங்கோ, தோசை வாக்க எவ்வளவு நாழி ஆயிடும், நான் பாத்துக்கறேன்,” என்று வலுக்கட்டாயமாக அவரை பரத்தின் அருகில் உட்காரவைத்துவிட்டு தோசை வார்க்கத் தொடங்கினாள் ராதிகா.
எண்ணை ஊற்றாமல், நெய் விட்டு பட்டுப்போல பொன்னிறத்தில் ராதிகா வார்த்த தோசைகளை இரண்டு சாப்பிட்டு முடித்தவன், மூன்றாவது தோசையை அவள் பரிமாற வந்தபோது “போறும்” என்று தட்டின் மீது கையை மறித்து தடுக்க முயன்றான்.
Last edited: