“பனியில நனைஞ்ச ரோஜா மொட்டு மாதிரி உதடு, அது மேல வெச்ச திருஷ்டி பொட்டு, கழுத்துல பெரிய ஒத்தை மரகதக்கல் பதிச்ச பதக்கம் இருக்கற வைர அட்டிகை போட்டுண்டு, நீலப்பட்டுடுத்தி, பிடியிடைக்கு நவரத்தின ஒட்டியாணம் போட்டுண்டு, பிறந்த குழந்தையோட பாதம் மாதிரி இருக்கற மென்மையான கால்ல, நலங்கு வெச்சுண்டு, தங்கக் கொலுசு, தண்டை போட்டுண்டு, தாமரை பூ பூத்தா மாதிரி இருக்கற கைகள்ல கல்பதிச்ச வளையல், கங்கணம், வங்கி, திருஷ்டி தாயத்து எல்லாம் பூட்டிண்டு ஓய்யாரநடை நடந்து வருவாளாம் மோகினி.” பின்னலை முன்னால் போட்டுக்கொண்டு, கண்கள் விரிய முன்னும் பின்னும் நடந்தபடி, கைகளை ஆட்டி ஆட்டி அழகிய நாச்சியார் திருக்கோலத்தை விவரித்தவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.
கோவிலுக்குச் செல்வதற்காக மடிசார் கட்டியிருந்தாள். தலையில் ராக்குடி வைத்துப் பின்னி, செண்டாக மல்லிகைப் பூவை ஜடையைச் சுற்றி வைத்திருந்தாள். மூக்கில் வைரமூக்குத்தி மின்ன, காதுகளில் போட்டிருந்த குட்டி ஜிமிக்கி அவளுடைய தலையாட்டலுக்கேற்றபடி கன்னங்களில் சரசமாட, மடிசாரிலிருந்து எட்டிப்பார்த்த வாழைத்தண்டுக் கால்களில் வெள்ளிக்கொலுசு மின்ன, தேனில் தோய்த்தது போன்ற ஆரஞ்சுச் சுளை இதழ்களைச் சுழித்துப் பேசிக்கொண்டிருந்தவளை விழிகளால் அளந்தவனின் மனம், “இவள் கூட மோகினிதான்...மடிசார் கட்டின மோகினி...” என்று அவள்பால் மயங்கிச் சரியப் பார்த்தது...
அவனுடைய மயக்கம் தோய்ந்த விழிகளைப் பொருட்படுத்தாமல், பேசிக்கொண்டே இருந்தவளை, கைகாட்டித் தடுத்து நிறுத்தியவன், “ஒத்துக்கறேம்மா, ஒத்துக்கறேன், மோகினி பேரழகிதான், ருத்ரனையே மயக்கப் பார்த்தவளாச்சே, நிச்சயமா பேரழகிதான்...தொண்டைத்தண்ணி வத்திடுத்து பாரு, போய் ஒருவாய் காபி சாப்பிடு” என்றான்.
“ம்ம், சரி சரி போறேன், நீங்களும் வாங்கோ, அப்பா உங்களோட ஏதோ பேசணும்னார்,” என்றபடி திரும்பி நடக்க, இவளும் நடப்பதும் ஒய்யார நடைதானோ, என்ற சந்தேகம் வந்தது பரத்துக்கு.
நடந்து சென்றவளின் அழகில் கட்டுண்டு பார்வையை விலக்கமுடியாமல் தடுமாறியவன், அந்தக் காட்சியையே கண்முன்னிருந்து மறைத்துவிடும் நோக்கத்தோடு கண்களை மூடிக்கொண்டான், மூடிய கண்களுக்குள்ளும் மோகினியாய் அவளுருவமே வந்து நின்றதோ, மூடிய மாத்திரத்தில் கண்களைத் திறந்துவிட்டான் ராதிகாவின் ருத்ரன். அவள் சென்றபின்னும் சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன், மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு மாமனாரைச் சந்திப்பதற்காகச் சென்றான்.
ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, கையில் இரண்டு கவர்களோடு ஆடியபாதம் பரத்துக்காக காத்திருந்தார். கண்களில் கேள்வியோடு அவர் முன் பரத் அமர, “அது வந்து மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு முன்னால பிஎச்டி பண்ணனும்னு ராதிகா அப்ளை பண்ணிருந்தா, இப்போ அதுக்கு அப்ரூவல் வந்துருக்கு, கைடு கூட சென்னைலதான் இருக்கா, அதுதான் உங்ககிட்டக்க சொல்லலாம்னு,” என்று அவர் தயங்கியபடியே கூறினார்.
“நீங்க உங்க அப்பா அம்மாகிட்டக்க, கலந்து பேசிண்டு ராதிகா ரிசர்ச் பண்ணலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுங்கோ. உங்களோட முடிவுதான். எதுவானாலும் ஓகேதான்,” என்றார் ஆடியபாதம்.
“இதுல கலந்து பேசி முடிவெடுக்க என்னன்னா இருக்கு, ஏதோ கல்யாணத்துக்கு வரன் பாத்துண்டு இருக்கறச்சே அப்ளை பண்ணினா, இப்போ கல்யாணம் ஆனாவுட்டு இன்னும் என்ன ரிசர்ச்,படிப்புன்னுட்டு, போறும் போறும் பொறுப்பா குடும்பம் பண்ணினா போறும், படிக்கப்போனா குடும்பத்தை எப்படி நடத்தறது, படிப்பையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைக்கச் சொல்லுங்கோ மாப்பிள்ளை,” என்றார் மரகதம்.
“என்ன மாமி, இப்படி சொல்றேள், ஏதோ பிஏ, எம்ஏன்னா, ஏதோ கட்டாயத்துக்காக, வேலை கிடைக்கணும்கறதுக்காக படிக்கறான்னு சொல்லலாம், ஆனா உங்க பொண்ணு, பிஎச்டி பண்ணனும்னு அப்ளை பண்ணிருக்கான்னா, படிப்பு மேல எவ்வளவு ஆர்வம் இருக்கணும் அவளுக்கு, அதனால அவ படிக்கணும்னு விரும்பினா அவளை எங்காத்துல யாரும் தடுக்க மாட்டா, அவ எதுக்காக குடும்பமா படிப்பான்னு ஏதாவது ஒண்ணை சூஸ் பண்ணனும், குடும்பத்துல இருந்துண்டே அவளால தாராளமா படிக்கவும் முடியும். அதோட, பிஎச்டிக்கு அப்ளை பண்ணினது அவ...படிக்கலாமா வேண்டாமான்னு முடிவும் அவதான் எடுக்கணும். அவளோட முடிவு எதுவா இருந்தாலும் எங்க எல்லாரோட சப்போர்ட்டும் அவளுக்கு எப்போவும் இருக்கும்,” என்றபடி ஆஃபர் லெட்டர் வந்திருந்த கவரை ராதிகாவிடமே கொடுத்தான் பரத்.
அதற்கு பிறகு வாயைத் திறப்பாரா மரகதம், வாயை இறுக்கமாக மூடிக்கொண்டார். “ரொம்ப சந்தோசாம் மாப்பிள்ளை. அப்பறம், இது...” என்றபடி கையிலிருந்த இன்னொரு கவரை மாப்பிள்ளையிடம் கொடுத்தார். “என்ன. இன்னொரு பிஎச்டியா?” என்றபடி கவரைப் பிரித்துப் பார்த்தவன் அதிர்ந்து, “என்ன மாமா இது, எதுக்கு இதெல்லாம்,” என்று தர்மசங்கடமாக ராதிகாவைப் பார்த்தான். அவளும் என்ன என்பதுபோல் அவனைப் பார்க்க, கையிலருந்த கவரை அவளிடம் நீட்டினான். அதில் சில லட்சங்களுக்கான ஒரு செக் இருக்க, “என்னப்பா இது, எதுக்கு இவ்வளவு பணம்?” என்று கேட்டபடி பரத்தின் அருகில் வந்து நின்றுகொண்டாள். “அது ஒன்னும் இல்லை மாப்பிள்ளை, ராதிகா கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச பணம் இது. கல்யாணத்துல பெருசா ஒரு செலவும் இருக்கல்லியே, அதனாலதான் அதுல மிஞ்சினதை அப்படியே உங்க ரெண்டுபேர் பேரலையும் செக்கா எழுதிட்டேன்,” என்றார்.
“ராதிகா கல்யாணத்துல செலவாகலைன்னா என்ன, சேர்த்து வெச்சு பானு கல்யாணத்துல செலவு பண்ணுங்கோ, சீனு படிப்புக்கு செலவு பண்ணுங்கோ, அதை விட்டுட்டு, கல்யாணத்துல செலவாகலை, அதனால உங்களுக்குத்தான்னு சொல்றது...நேக்கு எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியலை மாமா,” என்றான் பரத்.
“இல்லை, மாப்பிள்ளை, மூணு பேருக்கும் சமமாதான் சேமிச்சு வெச்சுருக்கேன், இது ராதிகாவோட பங்கு, நியாயப்படி அவளுக்குத்தானே சேரனும்...” என்று ஆடியபாதம் விடாப்பிடியாகக் கூறினார்.
ராதிகாவை தந்தை கூறியதற்கு பதில் எதுவுமே பேசாமல் பரத்தின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருக்க, “என்ன நீ, சும்மாவே வேடிக்கை பார்த்துண்டு இருக்கே, எடுத்து சொல்லமாட்டியா, லட்சக்கணக்குல செக்கை கொண்டுவந்து நீட்டறார் உங்கப்பா, நீ என்னோட முகத்தையே பாத்துண்டு இருக்கே?” என்றான் கோபமாக.
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு, நீங்க என்ன சொல்றேளோ அதுதான், உங்க முடிவுதான் என் முடிவும்,” என்றாள் ராதிகா.
“அப்போ சரி”, என்றவன், செக்கை மரகதத்தின் கையில் வைத்தவன், “இது உங்களுக்கு உங்க பொண்ணோட பரிசு, பானு கல்யாணத்துக்கோ, சீனுவோட படிப்புக்கோ இல்லை. உங்களோட ரிடையர்மெண்டுக்கு. பிக்சட் டெபாசிட்ல போட்டு வெச்சுக்கோங்கோ,” என்று அவர்களுடைய பணத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டான். “இல்லை மாப்பிள்ளை, எதுக்கும் உங்க அம்மா அப்பாகிட்டக்க ஒரு வார்த்தை கேட்டுண்டு...” என்று ஆடியபாதம் தயக்கமாய் இழுக்க...
“அம்மா அப்பாவும் இதையேதான் சொல்வா மாமா, அதோட நான் கட்டிண்டவளை நல்லபடியா, கஷ்டமில்லாம பாத்துக்கற வசதியும் நேக்கிருக்கு, அப்படி இல்லைன்னாலும் அதுக்காக உழைக்கிற தெம்பும் எனக்கிருக்கு, அதனால ப்ளீஸ் இது வேண்டாமே...” என்றவனை விழி கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனுடைய மடிசார் கட்டிய மோகினி.
இன்று அவளுடைய பார்வையில், அவளுக்குப் பிரியமான அந்த ராஜகோபுரத்தைவிட அவன் உயர்ந்து நின்றான் என்பதை அவன் அறிவானோ...
சிறுபிராயம் முதல் ரங்கன் மீது மையல் கொண்டு பாவை நோன்பிருந்த பாவையின் மனதில் அரங்கனை விட உயர்ந்துநிற்கும் ருத்ரனின் மீது ஏற்பட்ட மயக்கத்தைதான் அவன் உணர்வானோ???
Aapadiye Srirangam poi“பனியில நனைஞ்ச ரோஜா மொட்டு மாதிரி உதடு, அது மேல வெச்ச திருஷ்டி பொட்டு, கழுத்துல பெரிய ஒத்தை மரகதக்கல் பதிச்ச பதக்கம் இருக்கற வைர அட்டிகை போட்டுண்டு, நீலப்பட்டுடுத்தி, பிடியிடைக்கு நவரத்தின ஒட்டியாணம் போட்டுண்டு, பிறந்த குழந்தையோட பாதம் மாதிரி இருக்கற மென்மையான கால்ல, நலங்கு வெச்சுண்டு, தங்கக் கொலுசு, தண்டை போட்டுண்டு, தாமரை பூ பூத்தா மாதிரி இருக்கற கைகள்ல கல்பதிச்ச வளையல், கங்கணம், வங்கி, திருஷ்டி தாயத்து எல்லாம் பூட்டிண்டு ஓய்யாரநடை நடந்து வருவாளாம் மோகினி.” பின்னலை முன்னால் போட்டுக்கொண்டு, கண்கள் விரிய முன்னும் பின்னும் நடந்தபடி, கைகளை ஆட்டி ஆட்டி அழகிய நாச்சியார் திருக்கோலத்தை விவரித்தவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.
கோவிலுக்குச் செல்வதற்காக மடிசார் கட்டியிருந்தாள். தலையில் ராக்குடி வைத்துப் பின்னி, செண்டாக மல்லிகைப் பூவை ஜடையைச் சுற்றி வைத்திருந்தாள். மூக்கில் வைரமூக்குத்தி மின்ன, காதுகளில் போட்டிருந்த குட்டி ஜிமிக்கி அவளுடைய தலையாட்டலுக்கேற்றபடி கன்னங்களில் சரசமாட, மடிசாரிலிருந்து எட்டிப்பார்த்த வாழைத்தண்டுக் கால்களில் வெள்ளிக்கொலுசு மின்ன, தேனில் தோய்த்தது போன்ற ஆரஞ்சுச் சுளை இதழ்களைச் சுழித்துப் பேசிக்கொண்டிருந்தவளை விழிகளால் அளந்தவனின் மனம், “இவள் கூட மோகினிதான்...மடிசார் கட்டின மோகினி...” என்று அவள்பால் மயங்கிச் சரியப் பார்த்தது...
அவனுடைய மயக்கம் தோய்ந்த விழிகளைப் பொருட்படுத்தாமல், பேசிக்கொண்டே இருந்தவளை, கைகாட்டித் தடுத்து நிறுத்தியவன், “ஒத்துக்கறேம்மா, ஒத்துக்கறேன், மோகினி பேரழகிதான், ருத்ரனையே மயக்கப் பார்த்தவளாச்சே, நிச்சயமா பேரழகிதான்...தொண்டைத்தண்ணி வத்திடுத்து பாரு, போய் ஒருவாய் காபி சாப்பிடு” என்றான்.
“ம்ம், சரி சரி போறேன், நீங்களும் வாங்கோ, அப்பா உங்களோட ஏதோ பேசணும்னார்,” என்றபடி திரும்பி நடக்க, இவளும் நடப்பதும் ஒய்யார நடைதானோ, என்ற சந்தேகம் வந்தது பரத்துக்கு.
நடந்து சென்றவளின் அழகில் கட்டுண்டு பார்வையை விலக்கமுடியாமல் தடுமாறியவன், அந்தக் காட்சியையே கண்முன்னிருந்து மறைத்துவிடும் நோக்கத்தோடு கண்களை மூடிக்கொண்டான், மூடிய கண்களுக்குள்ளும் மோகினியாய் அவளுருவமே வந்து நின்றதோ, மூடிய மாத்திரத்தில் கண்களைத் திறந்துவிட்டான் ராதிகாவின் ருத்ரன். அவள் சென்றபின்னும் சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன், மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு மாமனாரைச் சந்திப்பதற்காகச் சென்றான்.
ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, கையில் இரண்டு கவர்களோடு ஆடியபாதம் பரத்துக்காக காத்திருந்தார். கண்களில் கேள்வியோடு அவர் முன் பரத் அமர, “அது வந்து மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு முன்னால பிஎச்டி பண்ணனும்னு ராதிகா அப்ளை பண்ணிருந்தா, இப்போ அதுக்கு அப்ரூவல் வந்துருக்கு, கைடு கூட சென்னைலதான் இருக்கா, அதுதான் உங்ககிட்டக்க சொல்லலாம்னு,” என்று அவர் தயங்கியபடியே கூறினார்.
“நீங்க உங்க அப்பா அம்மாகிட்டக்க, கலந்து பேசிண்டு ராதிகா ரிசர்ச் பண்ணலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுங்கோ. உங்களோட முடிவுதான். எதுவானாலும் ஓகேதான்,” என்றார் ஆடியபாதம்.
“இதுல கலந்து பேசி முடிவெடுக்க என்னன்னா இருக்கு, ஏதோ கல்யாணத்துக்கு வரன் பாத்துண்டு இருக்கறச்சே அப்ளை பண்ணினா, இப்போ கல்யாணம் ஆனாவுட்டு இன்னும் என்ன ரிசர்ச்,படிப்புன்னுட்டு, போறும் போறும் பொறுப்பா குடும்பம் பண்ணினா போறும், படிக்கப்போனா குடும்பத்தை எப்படி நடத்தறது, படிப்பையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைக்கச் சொல்லுங்கோ மாப்பிள்ளை,” என்றார் மரகதம்.
“என்ன மாமி, இப்படி சொல்றேள், ஏதோ பிஏ, எம்ஏன்னா, ஏதோ கட்டாயத்துக்காக, வேலை கிடைக்கணும்கறதுக்காக படிக்கறான்னு சொல்லலாம், ஆனா உங்க பொண்ணு, பிஎச்டி பண்ணனும்னு அப்ளை பண்ணிருக்கான்னா, படிப்பு மேல எவ்வளவு ஆர்வம் இருக்கணும் அவளுக்கு, அதனால அவ படிக்கணும்னு விரும்பினா அவளை எங்காத்துல யாரும் தடுக்க மாட்டா, அவ எதுக்காக குடும்பமா படிப்பான்னு ஏதாவது ஒண்ணை சூஸ் பண்ணனும், குடும்பத்துல இருந்துண்டே அவளால தாராளமா படிக்கவும் முடியும். அதோட, பிஎச்டிக்கு அப்ளை பண்ணினது அவ...படிக்கலாமா வேண்டாமான்னு முடிவும் அவதான் எடுக்கணும். அவளோட முடிவு எதுவா இருந்தாலும் எங்க எல்லாரோட சப்போர்ட்டும் அவளுக்கு எப்போவும் இருக்கும்,” என்றபடி ஆஃபர் லெட்டர் வந்திருந்த கவரை ராதிகாவிடமே கொடுத்தான் பரத்.
அதற்கு பிறகு வாயைத் திறப்பாரா மரகதம், வாயை இறுக்கமாக மூடிக்கொண்டார். “ரொம்ப சந்தோசாம் மாப்பிள்ளை. அப்பறம், இது...” என்றபடி கையிலிருந்த இன்னொரு கவரை மாப்பிள்ளையிடம் கொடுத்தார். “என்ன. இன்னொரு பிஎச்டியா?” என்றபடி கவரைப் பிரித்துப் பார்த்தவன் அதிர்ந்து, “என்ன மாமா இது, எதுக்கு இதெல்லாம்,” என்று தர்மசங்கடமாக ராதிகாவைப் பார்த்தான். அவளும் என்ன என்பதுபோல் அவனைப் பார்க்க, கையிலருந்த கவரை அவளிடம் நீட்டினான். அதில் சில லட்சங்களுக்கான ஒரு செக் இருக்க, “என்னப்பா இது, எதுக்கு இவ்வளவு பணம்?” என்று கேட்டபடி பரத்தின் அருகில் வந்து நின்றுகொண்டாள். “அது ஒன்னும் இல்லை மாப்பிள்ளை, ராதிகா கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச பணம் இது. கல்யாணத்துல பெருசா ஒரு செலவும் இருக்கல்லியே, அதனாலதான் அதுல மிஞ்சினதை அப்படியே உங்க ரெண்டுபேர் பேரலையும் செக்கா எழுதிட்டேன்,” என்றார்.
“ராதிகா கல்யாணத்துல செலவாகலைன்னா என்ன, சேர்த்து வெச்சு பானு கல்யாணத்துல செலவு பண்ணுங்கோ, சீனு படிப்புக்கு செலவு பண்ணுங்கோ, அதை விட்டுட்டு, கல்யாணத்துல செலவாகலை, அதனால உங்களுக்குத்தான்னு சொல்றது...நேக்கு எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியலை மாமா,” என்றான் பரத்.
“இல்லை, மாப்பிள்ளை, மூணு பேருக்கும் சமமாதான் சேமிச்சு வெச்சுருக்கேன், இது ராதிகாவோட பங்கு, நியாயப்படி அவளுக்குத்தானே சேரனும்...” என்று ஆடியபாதம் விடாப்பிடியாகக் கூறினார்.
ராதிகாவை தந்தை கூறியதற்கு பதில் எதுவுமே பேசாமல் பரத்தின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருக்க, “என்ன நீ, சும்மாவே வேடிக்கை பார்த்துண்டு இருக்கே, எடுத்து சொல்லமாட்டியா, லட்சக்கணக்குல செக்கை கொண்டுவந்து நீட்டறார் உங்கப்பா, நீ என்னோட முகத்தையே பாத்துண்டு இருக்கே?” என்றான் கோபமாக.
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு, நீங்க என்ன சொல்றேளோ அதுதான், உங்க முடிவுதான் என் முடிவும்,” என்றாள் ராதிகா.
“அப்போ சரி”, என்றவன், செக்கை மரகதத்தின் கையில் வைத்தவன், “இது உங்களுக்கு உங்க பொண்ணோட பரிசு, பானு கல்யாணத்துக்கோ, சீனுவோட படிப்புக்கோ இல்லை. உங்களோட ரிடையர்மெண்டுக்கு. பிக்சட் டெபாசிட்ல போட்டு வெச்சுக்கோங்கோ,” என்று அவர்களுடைய பணத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டான். “இல்லை மாப்பிள்ளை, எதுக்கும் உங்க அம்மா அப்பாகிட்டக்க ஒரு வார்த்தை கேட்டுண்டு...” என்று ஆடியபாதம் தயக்கமாய் இழுக்க...
“அம்மா அப்பாவும் இதையேதான் சொல்வா மாமா, அதோட நான் கட்டிண்டவளை நல்லபடியா, கஷ்டமில்லாம பாத்துக்கற வசதியும் நேக்கிருக்கு, அப்படி இல்லைன்னாலும் அதுக்காக உழைக்கிற தெம்பும் எனக்கிருக்கு, அதனால ப்ளீஸ் இது வேண்டாமே...” என்றவனை விழி கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனுடைய மடிசார் கட்டிய மோகினி.
இன்று அவளுடைய பார்வையில், அவளுக்குப் பிரியமான அந்த ராஜகோபுரத்தைவிட அவன் உயர்ந்து நின்றான் என்பதை அவன் அறிவானோ...
சிறுபிராயம் முதல் ரங்கன் மீது மையல் கொண்டு பாவை நோன்பிருந்த பாவையின் மனதில் அரங்கனை விட உயர்ந்துநிற்கும் ருத்ரனின் மீது ஏற்பட்ட மயக்கத்தைதான் அவன் உணர்வானோ???