sakthipriya
SM Exclusive
காலையில் உறக்கம் கலைந்து கண் விழித்து எழுந்த ஹாசினிக்கு அருகில் படுத்து இருந்த அருணாச்சலத்தை காணாது அதிர்ச்சி அடைந்தாள்.
தன்னை எழுப்ப சொல்லி விட்டு அருணாச்சலம் தூங்கியது நினைவுக்கு வந்தது.
(என்னம்மா இப்படி பன்னிட்டியே அம்மா ஹாசினி)
ஹாசினி சுற்றிலும் பார்த்தாள்.
அவன் தென்படாத காரணத்தால் சற்று பயந்தாலும் இங்கேதான் இருப்பார் எங்கே போயிட போறார் என்று மனதை தேற்றிக் கொண்ட அவள் "பாஸ்" என்றழைத்தாள்.
எந்த பதிலும் வராததால் சற்று பயந்து "பாஸ்" என்றாள்.
அருணிடம் பதில் வராதது கவலை அளிக்க அவள் எழுந்து அவனை தேடிக் கொண்டு வெளியில் வந்து தேட ஆரம்பிக்க அவன் தென்படாது போக கலவரமாகி விட்டாள்
(மாப்பு... மாப்பு... வைச்சுட்டியே ஆப்பு)
ஹாசினி நீரோடையை அடைந்த போது அருணாச்சலம் அங்கே குளித்து கொண்டிருந்தான்.
அவள் நிம்மதியாகி அவனை கூப்பிட தயங்கி பார்த்துக் கொண்டிருந்தாள். (ஒ! இதுதான் அழகுல மயங்கறதா)
அவள் நின்ற பக்கம் பார்த்த திரும்பிய அருண் அவளிடம்
"குட் மார்னிங் ஹாசினி" என்றான்.
"குட் மார்னிங் அருண்" என்று அவள் பதில் சொல்ல,
"தண்ணி சூப்பரா இருந்துச்சு. அதான் லைட்டா ஒரு குளியல் போடறேன்" என்றான் அருண்.
(அப்பாடா! பயபுள்ளை ஏன் தூங்கினேன்னு கேட்கலை)
"நல்ல தூக்கம் போல" என்று அருண் கேட்டான் (கேட்டுட்டானே)
"நான் கண்ணு முழிச்சிட்டுதான் இருந்தேன். நேற்று மலை ஏறுன அசதியா ஒரு காற்று அடிச்சதும் தூங்கிட்டேன் சாரி பாஸ்" என்று
ஹாசினி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
(திட்டுவானோ)
"ஏதோ நம்ம அதிர்ஷ்டம் நெருப்பும் எரிஞ்சது. நம்மளை எந்த விலங்கோ பறவையோ பூச்சியோ பாம்போ எதுவும் செய்யலை. ஏதாவது அப்படி நடந்திருந்தா என்ன ஆயிருக்கும் நீயே சொல்லு" என்றான் அருண்.(கேட்டுட்டானே)
ஹாசினி அவன் சொன்னதில் இருந்த நியாயம் உணர்ந்து அவள் அமைதியாக வருத்தபட்டு சாரிப்பா என்றாள்
அவளின் சோகமான முகத்தை பார்த்து "ஏய்! ஹாசினி ஏன் சோமாயிட்டே?" என்றான் அருண்.
"நான் வேண்டும்" என்று அவள் பேச ஆரம்பிக்க அருண் உடனே "ஹாசினி சும்மாதான் உன்னை கலாய்க்க கேட்டேன். அதுக்காக நீ பீல் பன்னாதே." என்றான்.
"இருந்தாலும் அருண்" என்று அவள் சொல்ல "இதை பற்றி நாம் அப்புறம் பேசிக்கலாம். தண்ணி நல்லா இதமாக இருக்கு நீயும் வாயா வந்து குளி. நல்லா இருக்கும்" என்றான் அருண்.
(ஒசியில ஒரு குளியல் சீன் பார்க்க ஆசையா அருணு ஹாசினி உஷாருடா)
"இல்லப்பா என் டிரஸ் பேக் அங்கே இருக்கு அதான் எடுத்து வந்து குளிக்கிறேன்."
"சரி நீ போயி எடுத்துட்டு வா" என்று அருண் சொல்ல சரி என்று சென்று தன் பேக்கை எடுத்து வந்தாள்.
அருணாச்சலம் நீரோடை விட்டு வெளியேறி வந்திருந்தான்.
"சரி ஹாசினி. நீ குளிச்சிட்டு வா நான் கொஞ்ச தூரத்தில் வெயிட் பன்றேன். ஏதாச்சுனா ஒரு குரல் கொடு. நான் வர்றேன் "என்றான் அருண்.
"இந்தாப்பா இந்த பேகை பத்திரமாக வைச்சிரு" என்று தன் துணிகளையும் வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு பேக்கை தர அருண் வாங்கி கொண்டு அங்கிருந்து அகன்றான்.
பாஸ் ரொம்ப நல்லவருதான் நீதான் ஹாசினி தூங்கி சொதப்பி வைச்சிட்டேடி. உன்னை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்ட ஹாசினி சில நிமிடங்களில் ஆடைகளை களைந்து விட்டு நீரோடையில் இறங்கினாள்.
இயற்கையான சூழலில் அந்த மெல்லிய ஒடையில் அவள் ஆனந்தமாக குளித்து விட்டு கரையேறி வந்து ஆடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
(குளியல் சீன் வர்ணணை எதிர்பார்த்தவங்களுக்கு "பிம்பிலிக்கா பிலாப்பி")
ஹாசினி குளித்து விட்டு ஈர முடியுடன் மஞ்சள் சுடிதாரில் வந்தாள்
Message…
தன்னை எழுப்ப சொல்லி விட்டு அருணாச்சலம் தூங்கியது நினைவுக்கு வந்தது.
(என்னம்மா இப்படி பன்னிட்டியே அம்மா ஹாசினி)
ஹாசினி சுற்றிலும் பார்த்தாள்.
அவன் தென்படாத காரணத்தால் சற்று பயந்தாலும் இங்கேதான் இருப்பார் எங்கே போயிட போறார் என்று மனதை தேற்றிக் கொண்ட அவள் "பாஸ்" என்றழைத்தாள்.
எந்த பதிலும் வராததால் சற்று பயந்து "பாஸ்" என்றாள்.
அருணிடம் பதில் வராதது கவலை அளிக்க அவள் எழுந்து அவனை தேடிக் கொண்டு வெளியில் வந்து தேட ஆரம்பிக்க அவன் தென்படாது போக கலவரமாகி விட்டாள்
(மாப்பு... மாப்பு... வைச்சுட்டியே ஆப்பு)
ஹாசினி நீரோடையை அடைந்த போது அருணாச்சலம் அங்கே குளித்து கொண்டிருந்தான்.
அவள் நிம்மதியாகி அவனை கூப்பிட தயங்கி பார்த்துக் கொண்டிருந்தாள். (ஒ! இதுதான் அழகுல மயங்கறதா)
அவள் நின்ற பக்கம் பார்த்த திரும்பிய அருண் அவளிடம்
"குட் மார்னிங் ஹாசினி" என்றான்.
"குட் மார்னிங் அருண்" என்று அவள் பதில் சொல்ல,
"தண்ணி சூப்பரா இருந்துச்சு. அதான் லைட்டா ஒரு குளியல் போடறேன்" என்றான் அருண்.
(அப்பாடா! பயபுள்ளை ஏன் தூங்கினேன்னு கேட்கலை)
"நல்ல தூக்கம் போல" என்று அருண் கேட்டான் (கேட்டுட்டானே)
"நான் கண்ணு முழிச்சிட்டுதான் இருந்தேன். நேற்று மலை ஏறுன அசதியா ஒரு காற்று அடிச்சதும் தூங்கிட்டேன் சாரி பாஸ்" என்று
ஹாசினி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
(திட்டுவானோ)
"ஏதோ நம்ம அதிர்ஷ்டம் நெருப்பும் எரிஞ்சது. நம்மளை எந்த விலங்கோ பறவையோ பூச்சியோ பாம்போ எதுவும் செய்யலை. ஏதாவது அப்படி நடந்திருந்தா என்ன ஆயிருக்கும் நீயே சொல்லு" என்றான் அருண்.(கேட்டுட்டானே)
ஹாசினி அவன் சொன்னதில் இருந்த நியாயம் உணர்ந்து அவள் அமைதியாக வருத்தபட்டு சாரிப்பா என்றாள்
அவளின் சோகமான முகத்தை பார்த்து "ஏய்! ஹாசினி ஏன் சோமாயிட்டே?" என்றான் அருண்.
"நான் வேண்டும்" என்று அவள் பேச ஆரம்பிக்க அருண் உடனே "ஹாசினி சும்மாதான் உன்னை கலாய்க்க கேட்டேன். அதுக்காக நீ பீல் பன்னாதே." என்றான்.
"இருந்தாலும் அருண்" என்று அவள் சொல்ல "இதை பற்றி நாம் அப்புறம் பேசிக்கலாம். தண்ணி நல்லா இதமாக இருக்கு நீயும் வாயா வந்து குளி. நல்லா இருக்கும்" என்றான் அருண்.
(ஒசியில ஒரு குளியல் சீன் பார்க்க ஆசையா அருணு ஹாசினி உஷாருடா)
"இல்லப்பா என் டிரஸ் பேக் அங்கே இருக்கு அதான் எடுத்து வந்து குளிக்கிறேன்."
"சரி நீ போயி எடுத்துட்டு வா" என்று அருண் சொல்ல சரி என்று சென்று தன் பேக்கை எடுத்து வந்தாள்.
அருணாச்சலம் நீரோடை விட்டு வெளியேறி வந்திருந்தான்.
"சரி ஹாசினி. நீ குளிச்சிட்டு வா நான் கொஞ்ச தூரத்தில் வெயிட் பன்றேன். ஏதாச்சுனா ஒரு குரல் கொடு. நான் வர்றேன் "என்றான் அருண்.
"இந்தாப்பா இந்த பேகை பத்திரமாக வைச்சிரு" என்று தன் துணிகளையும் வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு பேக்கை தர அருண் வாங்கி கொண்டு அங்கிருந்து அகன்றான்.
பாஸ் ரொம்ப நல்லவருதான் நீதான் ஹாசினி தூங்கி சொதப்பி வைச்சிட்டேடி. உன்னை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்ட ஹாசினி சில நிமிடங்களில் ஆடைகளை களைந்து விட்டு நீரோடையில் இறங்கினாள்.
இயற்கையான சூழலில் அந்த மெல்லிய ஒடையில் அவள் ஆனந்தமாக குளித்து விட்டு கரையேறி வந்து ஆடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
(குளியல் சீன் வர்ணணை எதிர்பார்த்தவங்களுக்கு "பிம்பிலிக்கா பிலாப்பி")
ஹாசினி குளித்து விட்டு ஈர முடியுடன் மஞ்சள் சுடிதாரில் வந்தாள்
Message…