அத்தியாயம் - 24
ஒருவாரம் காற்றுப்போல கடந்து செல்ல, ராமநாதன் வந்தார் தேவகியைத் தேடி.. ஆனால் இந்த ஒருவாரத்தில் அனைத்தும் சரியாக நடந்தது..
ரவிவர்மா தனது மகளின் திட்டத்தின் படியே சென்னை சென்று ராம்குமார் – வசந்தி இருவரிடமும் பேசினார்.. அதன் மூலம் கதிர்நிலவன் – நிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து திருமணநாளும் குறிக்கப்பட்டு பத்திரிக்கையும் அடிக்கப்பட்டது..
இங்கே முகிலன் – நிலா இருவரும் தேவகியிடம் எல்லாவற்றையும் சொல்ல அவர், “முதலில் கவிமலருக்கு திருமணம் செய்ய வேண்டும்.. அதன் பிறகு உங்களின் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்..” என்று கூற இருவரும் மனநிறைவுடன் ஒப்புக்கொள்ள,
கதிர்நிலவனைப் பற்றி விசாரிக்க, “அம்மா கதிருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து திருமணநாளும் குறிக்கப்பட்டு விட்டது..” என்று அமைதியாக குண்டைத் தூக்கி தேவகியின் தலையில் போட்டான்.
“என்னடா அந்த கதிர்தான் கவியைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான்.. கடைசியில் இந்த திருமணத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டான்..” என்று கோபமாகக் கேட்டார்..
“அதை என்னிடம் கேட்காமல் அங்கே இருக்கிறாளே கவிமலர் அவளைக் கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும்..” என்று முகிலன் கூற, தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை.
“அவள்தான் அவனை வேறொரு திருமணம் செய்ய சொல்லியிருக்கிறாள்.. இவன் விருப்பமே இல்லாமல் சம்மதித்து, இப்பொழுது திருமண ஏற்பாடு மும்பரமாக நடக்கிறது..” என்று கோபத்துடன் கூற தேவகிக்கும் கோபம் வந்தது..
“அம்மா திருப்பூரில் தான் அவனின் திருமணம் நான் நேற்று இரவே கிளம்பிவிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்.. என்னுடன் நிலாவையும் அழைத்து வருகிறேன்..” என்று கூறியவன் அழைப்பைத் துண்டிக்க,
இவர் கோபத்துடன் கவிமலரின் வீட்டை நோக்கி செல்ல, அவளின் வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து கதிர்நிலவனும், நிஷாவும் இறங்குவதைப் பார்த்தவர்.. அங்கிருந்து கோபத்தில் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று அவரின் வீட்டை நோக்கி சென்றார்..
தனது வீட்டின் வாசலின் முன்னே கார் நிற்பதைப் பார்த்து வாசலுக்கு விரைந்தாள் கவிமலர்.. அங்கே பத்திரிக்கையுடன் கவிமலரைக் காண வந்திருந்தான் கதிர்நிலவன்.. அவன் வருவான் என்று தெரியும் கவிமலரும் எதிர்பார்க்கவில்லை.. அதுவும் அவனுடன் நிஷாவும் வந்திருந்தாள்..
கவிமலரின் வீட்டிற்குள் கதிர்நிலவனும், நிஷாவும் நுழைந்தனர்.. வீட்டில் உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்தவள் முதலில் திகைத்து பிறகு தன்னை நிதானத்திற்கு கொண்டுவந்து,
“வாங்க கதிர்..” என்று அழைக்க, “வருகிறேன்..” என்று கூறியவன், பின்னால் திரும்பி, “வா நிஷா..” என்று அழைக்க, கவிமலருக்கு கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது அவள் மனம், ‘என்னோட கதிர், நிஷாவின் கணவன்..’ என்று மனதில் பதியவைக்கும் முயற்சியில் இருக்க, நெஞ்சம் வலித்தது..
இருவரும் உள்ளே நுழைய அவர்களை வரவேற்ற கவிமலர் இருவருக்கும் காபி எடுத்து வந்தாள்.. இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்து காபியைப் பருகினர்..
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், “என்ன விஷயமாக வந்திருக்கீங்க கதிர்.. இவங்கதான் உங்களின் வருங்கால மனைவியா..? எனக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டிங்களா..?” என்று கேட்டாள் புன்னகைக்க முயன்றபடி..
‘இவ்வளவு காதலிப்பவள், என்னைத் திருமணம் செய்ய சொன்னாய் அப்பொழுது எனக்கு எப்படி வலித்திருக்கும்..’ என்று மனதில் நினைத்தவன், நன்றாக புன்னகைத்து, “நிஷா என்னுடைய வருங்கால மனைவி..” என்று கூறியவன்,
“நிஷா இவள் கவிமலர்.. உன்னுடைய அப்பா அலுவலகத்தில் வேலை செய்கிறாள்.. இப்பொழுது ஆடிட்டர் இறுதி தேர்வை எழுதி இருக்கிறாள்..” என்று நிஷாவிடம் கூறியவன், மனதில்,
‘மருந்து கூட கசக்கும் என்று குழந்தைக்கு அதைக் கொடுக்காமல் இருந்தால் குழந்தைதான் கஷ்டப்படும்.. நீயும் குழந்தைதான் உனக்கு இந்த கசப்பு மருந்து தேவைதான்..’ என்று மனதில் நினைத்தான்..
“ஹாய் நிஷா..” என்று சொல்ல, அவள் அமைதியாக இருந்தாள்.. ஆனால் அவளின் பார்வையில், ‘நான் உன்னை வென்றுவிட்டேன்..!’ என்ற செய்தி மறைந்திருந்தது..
ஆனால் அவளின் மனம், ‘கவி என்னை மன்னித்துவிடு! உன்னைப் பற்றிய உண்மை இவருக்கும் தெரியாது.. இவருக்குத் தெரிந்த ஒரே உண்மை நீ இவரின் அத்தை மகள் என்பது மட்டும்.. ஆனால் மற்ற உண்மை அறிந்தால் தான் உன்னை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.. உன்னுடைய அமைதியை அனைவரின் வாழ்க்கைக்கும் கொடுத்தவள், அமைதி இல்லாமல் தான் நேசித்தவனைக் கூட விட்டுகொடுக்கும் உன்னுடைய பெருந்தன்மை யாருக்கும் வராது.. ஆனால் இப்படி உன்னை விட்டால், நீ தனிமரமாய் நிற்பாய்.. நானும் கூட உனது தோழிதான் உன்னை அந்த நிலையில் விடக்கூடாது என்று தான் இந்த முயற்சியை செய்கிறேன்..’ என்று நினைத்தவள்.. அமைதியாகவே இருக்க,
கவிமலரின் மனமோ, ‘என்னைவிட நீ அவரை நன்றாக பார்த்துக் கொள்வாய் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நிஷா என்னுடைய கனவுகள் பழிக்காது என்று தெரிந்துதான் காதலித்தேன்.. அப்படி ஒருவன் இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தேன்.. ஆனால் இவன் கண்முன்னால் காதலுடன் வந்தான்.. நான் என்னை மட்டும் யோசித்தால் அவனுக்கு அப்பா, அம்மா என்ற குடும்பம் இருக்காது.. ஆனால் அவனைப்பற்றியும் யோசித்தேன்.. அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும்.. அவர்களின் பாசம் வேண்டும்.. அதுதான் நானே விலகிக்கொண்டேன்..’ என்று நினைக்க,
‘உன்னை எப்படியும் என்னுடன் அழைத்துச் செல்வேன் கவி.. என்னுடைய காதல் தோற்க நான் விட மாட்டேன்..’ என்று மனதில் உறுதியாகக் கூறினான் கதிர்நிலவன்..
ஒருவாரம் காற்றுப்போல கடந்து செல்ல, ராமநாதன் வந்தார் தேவகியைத் தேடி.. ஆனால் இந்த ஒருவாரத்தில் அனைத்தும் சரியாக நடந்தது..
ரவிவர்மா தனது மகளின் திட்டத்தின் படியே சென்னை சென்று ராம்குமார் – வசந்தி இருவரிடமும் பேசினார்.. அதன் மூலம் கதிர்நிலவன் – நிஷா இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து திருமணநாளும் குறிக்கப்பட்டு பத்திரிக்கையும் அடிக்கப்பட்டது..
இங்கே முகிலன் – நிலா இருவரும் தேவகியிடம் எல்லாவற்றையும் சொல்ல அவர், “முதலில் கவிமலருக்கு திருமணம் செய்ய வேண்டும்.. அதன் பிறகு உங்களின் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்..” என்று கூற இருவரும் மனநிறைவுடன் ஒப்புக்கொள்ள,
கதிர்நிலவனைப் பற்றி விசாரிக்க, “அம்மா கதிருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து திருமணநாளும் குறிக்கப்பட்டு விட்டது..” என்று அமைதியாக குண்டைத் தூக்கி தேவகியின் தலையில் போட்டான்.
“என்னடா அந்த கதிர்தான் கவியைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான்.. கடைசியில் இந்த திருமணத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டான்..” என்று கோபமாகக் கேட்டார்..
“அதை என்னிடம் கேட்காமல் அங்கே இருக்கிறாளே கவிமலர் அவளைக் கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும்..” என்று முகிலன் கூற, தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை.
“அவள்தான் அவனை வேறொரு திருமணம் செய்ய சொல்லியிருக்கிறாள்.. இவன் விருப்பமே இல்லாமல் சம்மதித்து, இப்பொழுது திருமண ஏற்பாடு மும்பரமாக நடக்கிறது..” என்று கோபத்துடன் கூற தேவகிக்கும் கோபம் வந்தது..
“அம்மா திருப்பூரில் தான் அவனின் திருமணம் நான் நேற்று இரவே கிளம்பிவிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்.. என்னுடன் நிலாவையும் அழைத்து வருகிறேன்..” என்று கூறியவன் அழைப்பைத் துண்டிக்க,
இவர் கோபத்துடன் கவிமலரின் வீட்டை நோக்கி செல்ல, அவளின் வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து கதிர்நிலவனும், நிஷாவும் இறங்குவதைப் பார்த்தவர்.. அங்கிருந்து கோபத்தில் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று அவரின் வீட்டை நோக்கி சென்றார்..
தனது வீட்டின் வாசலின் முன்னே கார் நிற்பதைப் பார்த்து வாசலுக்கு விரைந்தாள் கவிமலர்.. அங்கே பத்திரிக்கையுடன் கவிமலரைக் காண வந்திருந்தான் கதிர்நிலவன்.. அவன் வருவான் என்று தெரியும் கவிமலரும் எதிர்பார்க்கவில்லை.. அதுவும் அவனுடன் நிஷாவும் வந்திருந்தாள்..
கவிமலரின் வீட்டிற்குள் கதிர்நிலவனும், நிஷாவும் நுழைந்தனர்.. வீட்டில் உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்தவள் முதலில் திகைத்து பிறகு தன்னை நிதானத்திற்கு கொண்டுவந்து,
“வாங்க கதிர்..” என்று அழைக்க, “வருகிறேன்..” என்று கூறியவன், பின்னால் திரும்பி, “வா நிஷா..” என்று அழைக்க, கவிமலருக்கு கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது அவள் மனம், ‘என்னோட கதிர், நிஷாவின் கணவன்..’ என்று மனதில் பதியவைக்கும் முயற்சியில் இருக்க, நெஞ்சம் வலித்தது..
இருவரும் உள்ளே நுழைய அவர்களை வரவேற்ற கவிமலர் இருவருக்கும் காபி எடுத்து வந்தாள்.. இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்து காபியைப் பருகினர்..
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், “என்ன விஷயமாக வந்திருக்கீங்க கதிர்.. இவங்கதான் உங்களின் வருங்கால மனைவியா..? எனக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டிங்களா..?” என்று கேட்டாள் புன்னகைக்க முயன்றபடி..
‘இவ்வளவு காதலிப்பவள், என்னைத் திருமணம் செய்ய சொன்னாய் அப்பொழுது எனக்கு எப்படி வலித்திருக்கும்..’ என்று மனதில் நினைத்தவன், நன்றாக புன்னகைத்து, “நிஷா என்னுடைய வருங்கால மனைவி..” என்று கூறியவன்,
“நிஷா இவள் கவிமலர்.. உன்னுடைய அப்பா அலுவலகத்தில் வேலை செய்கிறாள்.. இப்பொழுது ஆடிட்டர் இறுதி தேர்வை எழுதி இருக்கிறாள்..” என்று நிஷாவிடம் கூறியவன், மனதில்,
‘மருந்து கூட கசக்கும் என்று குழந்தைக்கு அதைக் கொடுக்காமல் இருந்தால் குழந்தைதான் கஷ்டப்படும்.. நீயும் குழந்தைதான் உனக்கு இந்த கசப்பு மருந்து தேவைதான்..’ என்று மனதில் நினைத்தான்..
“ஹாய் நிஷா..” என்று சொல்ல, அவள் அமைதியாக இருந்தாள்.. ஆனால் அவளின் பார்வையில், ‘நான் உன்னை வென்றுவிட்டேன்..!’ என்ற செய்தி மறைந்திருந்தது..
ஆனால் அவளின் மனம், ‘கவி என்னை மன்னித்துவிடு! உன்னைப் பற்றிய உண்மை இவருக்கும் தெரியாது.. இவருக்குத் தெரிந்த ஒரே உண்மை நீ இவரின் அத்தை மகள் என்பது மட்டும்.. ஆனால் மற்ற உண்மை அறிந்தால் தான் உன்னை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.. உன்னுடைய அமைதியை அனைவரின் வாழ்க்கைக்கும் கொடுத்தவள், அமைதி இல்லாமல் தான் நேசித்தவனைக் கூட விட்டுகொடுக்கும் உன்னுடைய பெருந்தன்மை யாருக்கும் வராது.. ஆனால் இப்படி உன்னை விட்டால், நீ தனிமரமாய் நிற்பாய்.. நானும் கூட உனது தோழிதான் உன்னை அந்த நிலையில் விடக்கூடாது என்று தான் இந்த முயற்சியை செய்கிறேன்..’ என்று நினைத்தவள்.. அமைதியாகவே இருக்க,
கவிமலரின் மனமோ, ‘என்னைவிட நீ அவரை நன்றாக பார்த்துக் கொள்வாய் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நிஷா என்னுடைய கனவுகள் பழிக்காது என்று தெரிந்துதான் காதலித்தேன்.. அப்படி ஒருவன் இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தேன்.. ஆனால் இவன் கண்முன்னால் காதலுடன் வந்தான்.. நான் என்னை மட்டும் யோசித்தால் அவனுக்கு அப்பா, அம்மா என்ற குடும்பம் இருக்காது.. ஆனால் அவனைப்பற்றியும் யோசித்தேன்.. அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும்.. அவர்களின் பாசம் வேண்டும்.. அதுதான் நானே விலகிக்கொண்டேன்..’ என்று நினைக்க,
‘உன்னை எப்படியும் என்னுடன் அழைத்துச் செல்வேன் கவி.. என்னுடைய காதல் தோற்க நான் விட மாட்டேன்..’ என்று மனதில் உறுதியாகக் கூறினான் கதிர்நிலவன்..