• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 33

நாட்கள் விரைந்து செல்ல, அவளின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கிக் கொண்டிருக்க, அவளின் முகத்தில் திருமணத்திற்கு உண்டான எந்த களையும் இல்லை.. யாருக்கோ திருமணம் என்ற நிலையில் இருந்தாள்..

முதல் நாள் நிச்சயதார்த்தம், இரண்டாம் நாள் திருமணம் என்று பெரியவர்கள் முடிவெடுக்க, நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாளுக்கு முன்னர் கவிமலர், முகிலன், தேவகி, நிலா நால்வரும் அன்று இரவு சென்னை வர, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார் ராம்குமார்..

இரயில் நிலையத்தில் இறங்கியதும், “முகிலன் சரியான நேரத்திருக்கு வந்தீட்டின்களா..?” என்று கேட்டவண்ணம் வந்து சென்றார்

அவரை நிமிர்ந்து பார்த்த தேவகி, “ம்ம் இப்பொழுதுதான் அண்ணா வருகிறோம்..” என்று சொன்னவர், மகனைப் பார்க்க,

“மாமா இங்கே நாங்கள் தனியாக வீடேடுத்திருக்கிறோம் அங்கேயே தங்கிக் கொள்கிறோம்..” என்று கூறினான் முகிலன்..

“நம்முடைய வீடு இருக்க நீ எங்கே வெளியே தங்குகிறாய்.. நால்வரும் நம்முடைய வீட்டிலேயே தங்கலாம்..” அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ராம்குமார்..

அவர்கள் வீட்டின் முன்னே இருந்த மலர் கொடிகளைப் பார்த்த நிலா, “நல்ல ரசனையாக வீடு கட்டியிருக்கிறார்கள்..” என்று கவியிடம் சொல்ல, அவள் பார்வையில் எந்த வேறுபடும் இல்லை..

அவர்கள் கார் வீட்டின் முன்னே வந்து நிற்க, அதை விட்டு கவிமலர் இறங்கவும், வசந்தி ஆரத்தி தட்டுடன் வந்தார்..

“வாம்மா மருமகளே..” என்று அழைத்தவர், “வாங்க தேவகி, வா முகிலா..” என்று அழைக்க, “என்னங்கம்மா வரவேற்பெல்லாம் பலமாக இருக்கிறது..” என்று கிண்டலுடன் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்..

“வாசு உன்னோட மருமகளை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.. என்னை இனி எதுவும் கேட்காதேம்மா..” என்று அவர் கேலியுடன் சொல்ல,

“என்னோட மருமகளைப் பத்திரமாக அழைத்து வந்ததால் எதுவும் பேசாமல் இருக்கிறேன்..” என்று சொன்னவர், கவிக்கு ஆரத்தி எடுத்தார்..

அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்தனர்.. அவளின் பார்வை அந்த வீட்டை சுற்றி வந்தது.. அதில் எந்தவிதமான சொந்தமும் இன்றி, மனம் ஒட்டாமல் பார்த்தாள். அங்கிருந்த சோபாவில் அனைவரும் அமர்ந்தனர்..

“டேய் முகிலா நீ எப்பொழுது திருமணம் செய்ய போகிறாய்..?” என்று கேட்டார் ராம்குமார்..

“கவியின் திருமணம் முடியட்டும் மாமா..” என்று இயல்பாகக் கூறியவன் நிலாவின் முகம் பார்க்க, அதை கவனித்தவர்,

“உனக்கும் இதில் விருப்பமாம்மா..?” என்று கேட்டதும் வெக்கத்துடன் தலைக் குனிந்தாள் நிலா.. அதைக் கண்ட கவிமலர் மட்டும் வேறொரு நேரமாக இருந்தால் அவளைக் கேலி செய்தே ஒரு வழி செய்திருப்பாள்..

ஆனால் இப்பொழுது அவளின் மனநிலையே வேறாக இருந்தது.. அவளிற்கு எப்பொழுது அந்த இடத்தை விட்டு நகர்வோம் என்று இருக்க,

“என்னப்பா இப்படி சொல்கிறாய்.. நீ மட்டும் சரியென்று சொல்லு இந்த முகூர்த்ததில் இருவரின் திருமணத்தையும் ஒரே மேடையில் முடித்துவிடலாம்..” என்று அவர் சொல்லவும்,

“நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா.. நானும் இதுதான் யோசித்தேன்.. நிலாவை இந்த திருமணத்தில் பார்ப்பவர்கள் அவளைத் தவறாக நினைக்க கூடாது இல்லையா..?” என்று கேட்டதும்,

“ம்ம் நீ சொல்வதும் சரிதான் தேவகி.. யாராவது அவளைத் தவறாக பேசினால் நம்மால் தாங்க முடியாது.. சோ இந்த மேடையிலேயே அண்ணன் – தங்கை இருவருக்கும் திருமணம்..” என்று சொல்லவும்,

நிலாவிற்கு அவளின் அப்பா – அம்மா இல்லையே என்ற கவலை அழையா விருந்தாளியாக வர, “யாராவது கேட்டால் எங்களின் மகளை நாங்க திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொல்லிவிடலாம்..” என்று சொல்லவும், இறுதியாக முகிலன்- நிலா இருவரின் திருமணமும் அதே மேடையில் என்று முடிவானது..!

அனைவருக்கும் இரவு உணவைத் தயார் செய்தனர் வசந்தியும், தேவகியும்! அனைவரும் அமர்ந்து சாப்பிட, அவள் மட்டும் ஏதோ சாப்பிடேன் என்ற நிலையில் எழுந்து சென்றாள்..

அவர்கள் ஆளுக்கு ஒருவர் ஏதேதோ பேசி சிரிக்க, அவளிற்கு என்று ஒதுக்கப்பட்ட தனியறைக்கு வந்தாள் கவிமலர்..

அவளிற்கு என்று ஒதுக்கப்பட்ட தனியறை சென்று அமர்ந்தவள் மனம் மட்டும் இங்கே இல்லை.. இவள் இப்படி இருப்பதை அனைவரும் கவனித்தாலும் கண்டும் காணாமல் தங்களின் வேலையைச் செய்துக் கொண்டிருந்தனர்..

அவள் அறையில் தனித்திருக்க அவளின் பார்வை அந்த அறையை வெறுப்புடன் சுற்றி வந்தது.. ‘சுதந்தர பறவையான என்னையும் இந்த தங்க கூண்டிற்குள் அடைத்துவிட்டனர்.. திருமணம் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி..’ என்று மனதில் நினைத்தாள்..

‘இதே கதிருடன் என்றால் நீ இப்படி சொல்வாயா..?’ என்று கேட்டது அவளின் மனது!

‘கண்டிப்பாக சொல்லவே மாட்டேன்.. என்னோட கதிருடன் திருமணம் என்றால் அது எனக்கு தங்க கூண்டாக தெரியாது.. அவனுடைய வீடு எனக்கு அழகிய கூடாகத் தெரியும்..’ என்றவள்,

‘திருமணம் என்பது மனங்கள் இணைய வேண்டும்.. என்னோட மனம் அவனிடம் சிறைபட்டுக் கிடக்கிறது..’ என்று சொல்லியவள், அந்த அறையைச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள்..

அந்த அறையில் அனைத்து வசதியும் இருந்தது அவளுக்கு அது தங்க கூண்டு போலவே தெரிந்தது.. அப்படி சுற்றி வந்தவளின் பார்வை ஜன்னலை அடைய அங்கே எழுந்து சென்றாள்..

ஏனோ தெரியவில்லை.. அவளின் மனநிலைக்கு மழை பொழிவு கூட அழுவது போலவே தோன்றியது.. அப்படியே நின்றிருந்தவள் மனம் மட்டும் அவனிடம் பேசியது..

‘இன்னும் இரண்டு நாளில் உனக்கும் திருமணம் எனக்கும் திருமணம் ஆனால் ஜோடிதான் வேறு..!’ என்று நினைத்தவள் அப்படியே படுக்கையில் படுத்து உறங்கிவிட்டாள்..

மணமகள் கோலத்தில் மேடைக்கு அழைத்து வரப்பட்டாள் கவிமலர்.. அவளின் முகம் மணப்பெண்ணிற்கு உண்டான அனைத்து அலங்காரமும் சரியாக இருந்தது..

ஆனால் அதற்கு ஏற்றது போல புன்னகையை மட்டும் தொலைத்து வாடிய மலர் போல இருந்தது.. அவளை அழைத்துச் சென்ற தோழிகள் அவளிடம் ஏதோ கேலி பேச, அவளின் முகம் நாணத்தில் சிவப்பதற்கு பதிலாக கோபத்தில் சிவந்தது..

அவளின் முகச்சிவப்பிற்கு அர்த்தம் கண்டு தவறான அர்த்தம் கண்டுபிடித்து அவளை இன்னும் கேலி செய்ய, அவளிற்கு இந்த மனக் கோலத்தைக் கலைத்துவிட்டு எங்கேனும் ஓடிவிடலாமா என்று தோன்றியது..

அதற்குள் மண மேடை வந்திருக்க அதில் மணமகன் கோலத்தில் இருந்தவனை நிமிர்ந்து பார்க்காது அவனின் அருகில் சென்று அமர்ந்தாள்..

ஐயர் மந்திரங்கள் சொல்ல பெயர்க்கு சொன்னவள், மனம் ரத்தகண்ணீர் வடித்தது.. ‘இந்த முகூர்த்ததில் அங்கே கதிருக்கு திருமணம் நடக்கும்..’ என்று நினைத்தாள்

“நான் இங்கே இருக்க அங்கே எப்படி தங்கம் திருமணம் நடக்கும்..?” என்று அவனின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் கவிமலர்..

அவளின் கண்களை அவளாலேயே நம்பமுடியவில்லை.. அவளின் அருகில் மணக்கோலத்தில் அமைந்திருந்தது சாட்சாத் நம்ம கதிர்நிலவன் தான்..

அவளின் கண்களில் கண்ணீர் வழிய, “கதிர்..?!” என்று அவனின் பெயரை மட்டும் கூறினாள்.. அவளின் அழைப்பில் தான் அவளின் மனது நிறைய, அவளைப் பார்த்து புன்னகையுடன் கண்ணடித்தவன்,

“உன்னை விட்டுவிட்டு வேறு யார் கழுத்திலும் நான் தாலி கட்ட மாட்டேன் மலர்..” என்று சொல்லவும், அவள் விழிவிரிய அவளைப் பார்த்தாள்..

அதற்கு அங்கே வந்த நிலா, “ஏய் கவிமலர் எழுந்திரி..” என்று அழைக்கவும், அதிர்வுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவள்,

“நீயா..?!” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு கேட்டவளை, இடையில் கையூன்றி அவளை முறைத்தாள்.. அவள் முறைத்ததைப் பார்த்தவள், அப்பொழுதுதான் தான் கண்டது கனவு என்று புரிய மனம் அவளின் மனம் வலித்தது..

அவளின் பார்வை நேராக சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, அதில் மணி விடியற்காலை நான்கைக் காட்டியது.. அவளின் முகம் சோர்ந்து போனது..

அவளின் முகம் பார்த்தே மனத்தைக் கணித்த நிலா, ‘மனதில் இவ்வளவு காதல் வைத்திருப்பவள், அப்படியே அமைதியின் வடிவமாக இருக்கிறாள்..’ என்று மனதில் அவளைப் பாராட்டியவள்,

“எதுக்கு இப்பொழுது முகம் வாடுகிறாய்..?” என்று நேரடியாக கேட்டாள்.. பிறகு அவளே, “நீ ஏதாவது கனவு கண்டாயா கவி..?” என்று கேட்டாள்..

“ம்ம் கனவுதான்..” என்றவள் எழுந்து அப்படி ஜன்னல் வழியாகப் பார்த்தாள் காலை இளங்காற்று அவளை வருடிச்செல்ல, அப்படியே சிலையென நின்றாள்.. அவளின் அமைதியைக் கண்டு அவளின் அருகில் சென்ற நிலா அவளின் முகத்தைப் பார்க்க, அவளின் கண்கள் கலங்கியிருந்தது..

“எதுக்குடா இப்பொழுது அழுகிறாய்..?” என்று அவளின் கண்களைத் துடைத்து விட்டாள் நிலா..

“இல்ல நிலா இந்த கனவின் வலி உங்கள் யாருக்கும் தெரியாது.. நூற்றில் தொண்ணுத்தாறு சதவீதம் கனவுகள் யாருக்கும் பலிப்பது கிடையாது..” என்று சொல்லவும், அவள் சொல்வது புரியாமல் விழித்தாள் நிலா..

“நீ என்ன கனவு கண்டாய்..?” என்று கேட்டாள்..

“எனக்கு திருமணம் நடப்பது போல கனவு கண்டேன்..” என்று சொன்னவளின் விழிகளில் சந்தோசம் எட்டிப்பார்த்தது..

“அதுதான் இரண்டு நாளில் நடக்க போகிறதே..” என்று சாதாரணமாகக் கூறினாள் நிலா..

இவர்கள் யாருக்குமே, கதிரை இவள் எங்கே சந்தித்தால் என்ற உண்மைத் தெரியாது.. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கதிரும், கவியும் விரும்புகின்றனர் என்பது மட்டுமே..!

இவர்கள் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்ன என்றால் அவளுடைய கனவின் மூலமாக கதிரைப் பார்த்தாள் என்பது இங்கே யாருக்குமே தெரியாது.. ஏன் அவள் காதலித்த கதிர்நிலவனுக்கு கூட இந்த உண்மை தெரியாது..

அதன்பிறகு அவளின் அருகில் படுத்துக் கொண்டாள் நிலா.. அவள் படுத்ததும் உறங்கிவிட இவளுக்கு தூக்கம் வரவில்லை.. எனவே தூங்காமல் விழித்துக் கிடந்தாள்..

மறுநாள் காலை எட்டு மணிபோல அவளின் அறைக்கு வந்த நிலா, “கவி எழுந்திரி!” என்று சொல்ல, அவள் அமைதியாக இருக்க,

அவளின் சேலைகளில் ஒன்றை எடுத்து அவளுக்கு கொடுத்தவள், “இந்த புடவையைக் கட்டிக் கொண்டு ரெடியாகு கவி..” என்று சொல்ல, அவளை நிமிர்ந்து பார்த்தாள் கவி. அவளின் கண்களில் ஒரு உயிர்ப்பே இல்லாமல் முகம் களையிழந்து இருக்க, அறையைவிட்டு வெளியே வந்தவள்,

“அத்தை அவள் பாவம்.. என்ன நடக்குது என்று புரியாமல் யாருக்கோ திருமணம் நடக்க போவது போல இருக்கிறாள்..” என்று அவள் தேவகியிடம் சொல்ல,

“இருக்கட்டும்மா இப்பொழுது இந்த வருத்தம் அவளிற்கு சோகத்தை கொடுத்தாலும் அடுத்தது நடக்க இருக்கும் திருமணத்தில் அவளிற்கு சந்தோசம் இருக்கும்.. எந்த பொருளும் கேட்டதும் கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பு இருக்காது.. தொலைத்த பொருளின் மதிப்பை அவள் உணர்ந்தால் தான் அவளின் காதலுக்கு மரியாதை! நடப்பது நடக்கட்டும் நீ கவலைப் பாடாமல் இரு..” என்று அவளைத் தேற்றினார் தேவகி..

இவர்கள் பேசுவதைக் கேட்டு அருகில் வந்த வசந்தி, “நீ கவலைப்பாடாதே நிலா எல்லாம் நல்லபடியாக நடக்கும்..” என்று அவளை ஆறுதல் படுத்து அனுப்பிவைத்துவிட்டு, தேவகியைப் பார்த்து புன்னகை செய்தவர் இருவரும் அங்கிருந்து சென்றதும் மகனுக்கு போன் செய்தார்..

ஒரே ரிங்கில் அழைப்பை எடுத்தவன், “அம்மா என்ன விஷயம்..?” என்று சிரிப்புடன் கேட்டது, வசந்திக்கு கோபம் வந்தது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“என்னடா எல்லோரும் உனக்கு சப்போர்ட் பண்றோம் என்று கவியை ரொம்ப தவிக்க விடுகிறாயா..? மகனே நீ மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. சீக்கிரம் கிளம்பி வாடா..” என்று சொல்ல அம்மாவின் தவிப்பு கண்டு மகனிற்கு சிரிப்பு வந்தது..

“ஓஹ் உங்கள் மருமகள் கண்கலங்கினால் தாங்க முடியலையோ..? என்னை என்ன பாடுபடுத்தி இருக்கிறாள்..? அதற்கு அவள் கொஞ்சம் வருத்தபடட்டும் அம்மா..” என்று சொல்ல, அவருக்கு வருத்தமாக இருந்தது..

“கண்ணா அவள் வந்ததும் ரூமிற்கு சென்றவள், நைட் ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்து சென்றுவிட்டாள்.. இப்பொழுது எழுந்து பைத்தியம் பிடித்தவள் போல அமர்ந்திருக்கிறாள் டா என்னடா விளையாட்டு இது.. பாவடா என்னோட மருமகள்..” என்று சொல்ல,

“சரிம்மா நாளைக்கு மட்டும் சமாளிங்க.. நான் என்னோட வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.. நான் வருவது அவளுக்கு தெரிய வேண்டாம்..” என்று சொன்னவன் மற்றவர்களை விசாரித்துவிட்டு போனை வைத்தவன்,

“மலர் செல்லத்திற்கு வருத்தம் அதிகமாக இருக்கிறதா..? நான் வந்துவிடுவேன் கண்ணம்மா..” என்று புன்னகை செய்தவன் அடுத்து நடக்க வேண்டிய வேலையைக் கவனித்தான்..

நிலா அறையை விட்டு வெளியே வந்ததும், ‘என்னோட ஒருத்தியின் சந்தோசத்திற்காக எல்லோரையும் கஷ்டப்படுத்த கூடாது..’ என்று நினைத்தவள்,

எப்பொழுது இருப்பது போல சந்தோசமாக இருக்க முயற்சி செய்ததில் அனைவரும் அவளைப் பார்த்து கொஞ்சம் ஆறுதல் அடைய, முகிலன் தனது தங்கைக்கு என்று வாங்கிக் குவிக்க, அதைப் பார்த்து அசந்து போய்விட்டனர் அனைவருமே..

அவர்கள் அனைவரின் கண்ணிலும் சந்தோசத்தைப் பார்த்தவள், ‘இவர்கள் சந்தோசத்தை நான் எப்படி கெடுப்பேன்..’ என்று கேட்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள இரண்டு நாளும் ஓடி மறந்தது..

நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது.. அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் இருந்தது. அனைவரும் வந்து அவளை சாப்பிட அழைக்க, “எனக்கு சாப்பாடு வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு அறையிலேயே இருந்தாள்..

நிலாவிற்குதான் கவியைக் கண்டு பாவமாக இருந்தது.. இருந்தாலும் எல்லோரும் அவரவர் வேலைகளைத் தொடர, அன்று காலை நேரம் செல்ல செல்ல கவிக்கு மனதின் பதட்டம் அதிகரித்தது..

காலை பத்துமணி போல அவளின் அறைக்கு வந்த வசந்தி, “கவிம்மா..” என்று அழைக்க அவரை நிமிர்ந்து பார்த்தவர், “என்னடா ஒரு மாதிரியாக இருக்கிறாய்..?” என்று கேட்டுவிட்டு, அவளின் அருகில் அமர்ந்தவர்,

“இந்தம்மா இது எல்லாம் நான் அம்முக்கு வாங்கியது.. இதெல்லாம் உனக்குத்தான் சேரனும்..” என்று அவளின் கையில் இரு பெட்டியைக் கொடுத்து,

“இதெல்லாம் இனிமேல் நீதான் பத்திரமாக வைத்திருக்கனும்..” என்று அவளின் கையில் கொடுக்க அதை திறந்து கூட பார்க்காமல், அவர்களை நிமிர்ந்து பார்த்தவள்,

“இப்பொழுது இது எனக்கு வேண்டாம் அத்தை.. இதையெல்லாம் நீங்களே வைத்திருங்கள்.. எனக்கு வேண்டும் என்றால் நானே உங்களிடம் வாங்கிக்கொள்கிறேன்..” என்று சொல்ல அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த பெட்டியை அவரிடமே கொடுக்க,

“சரிம்மா இதுதான் வேண்டாம்.. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கும் என்னோட மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகிறது.. அதற்கு இந்த சேலைக் கட்டிக்கொண்டு அலங்காரம் செய்துவிட்டு ரெடியாகிவிடு” என்று சொல்லிவிட்டு செல்ல, கவிக்கு உலகமே இருட்டியது!

‘ஐயோ இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு இன்னொருத்தருக்கும் நிச்சயதார்த்தமா..?’ என்று தோன்றவே அவளுக்கு என்ன செய்வது என்று புரியவே இல்லை..

‘ஆம்’ என்பதற்கு சாட்சியாக அவளின் கண் முன்னே நிச்சயதார்த்த புடவையும், அதற்கு உண்டான நகைகளும் இருக்க அவர்களின் தீவிரத்தையும், தன்னோட காதலையும் உணர்ந்தாள் கவிமலர்.

‘ஐயோ நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கிறேன்..? என்னோட கதிரை தவிர என்னால் வேறு யாரையும் ஏற்க முடியாது என்று தெரிந்தும், யாரோ எழுதிய கடிதத்தை உண்மை என்று சொல்லி அவனையும் தவிக்கவிட்டு நானும் தவித்தது எல்லாம் போது என்னோட கதிர் எனக்கு வேண்டும்..’ என்று நினைத்தவள் கண்கள் கலங்கியது..

‘உனக்கு இந்த திருமணத்தில் சம்மதமா..?’ என்று மனதிடம் கேட்டதும், ‘எனக்கு கதிர்நிலவனைத்தான் பிடித்திருக்கிறது.. இன்னொருவனை என்னோட மனதில் நான் ஏற்க மாட்டேன்..’ என்று அவளிடம் கூற, இனிமேல் தன்னால் கதிரை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற நிலையில் செல்லைத் தேடி எடுத்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைச் சாத்தியவள் கதிருக்கு அழைத்தாள்.. இனிமேல் என்ன நடந்தாலும் அது கதிருடன் தான் நடக்கவேண்டும் என்ற முடிவுடன்!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top