Saranya
அமைச்சர்
Happy ending.. very nice story Sandhiya.. vazhalthukkal Sandhiya..
Veryyyy niceee sis superr ?????????அவளைப் பார்த்த அவனின் மனம், ‘நான் அனுபவித்ததை விடவும் பலமடங்கு அவள் அனுபவித்திருக்கிறாள்..’ என்று உணர்ந்தவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, அவனின் அணைப்பில் அமைதியாக அடங்கினாள் கவி.. ஆனாலும் அன்று அவள் நிஷாவைத் திருமணம் செய்ய சொன்னது அவனின் நினைவிற்கு வர,
“அதுக்கு என்னை நிஷாவைத் திருமணம் செய்ய சொல்வாயா..? அந்த கடிதத்தை நீ எழுதாமல் பழியை மட்டும் உன்மேல் போட்டுக் கொண்டாயே..?” என்று ஆதங்கத்துடன் அவன் கேட்டதும்,
அவனை நிமிர்ந்து பார்த்த கவி, “எனக்கு மட்டும் ஆசை பாரு! அவளைக் காட்டிக்கொடுக்க மனம் வரவில்லை.. நான் என்ன பண்ணட்டும் எனக்கும் வேற வழி தெரியலடா..” என்று வருத்ததோடு சொன்னாள்.. அவனோ அவளைக் கேள்வியாகப் பார்த்தான்..
“அதுக்கு என்னையே அவளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பாயா..?” என்று கோபமாகக் கேட்டவன் அவளின் இதழ்களில் அவனின் கோபத்தைக் காட்ட அவள் சந்தோசமாக அவன் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொண்டாள்..
பிறகு அவனின் அணைப்பில் அடங்கியவள், “நான் அவளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது உன்னோட குணம் எனக்கு தெரியும் கதிர்.. நீ என்னைத் தவிர வேறு யார் கழுத்திலும் தாலி கட்ட மாட்டாய் என்று எனக்கு நன்றாக தெரியும்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல,
“என்ன இதையும் கனவில் தான் கண்டாயா..?” என்று அவன் துள்ளலுடன் கேட்டதும், அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “உனக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டாள்
அவளின் விழிகளில் மயங்கியவன், “ம்ம் நானும் கனவு கண்டேன்..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, அவனின் மார்பில் குத்தியவள், “பொய் சொல்லாதடா..” என்று சிணுங்கவும்,
அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் விழிகளைப் பார்த்தவன், “இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு எதுக்கு என்னை பயமுறுத்தினாய்..” என்று கேட்டதும், அவனின் விழிகளைப் பார்த்தவள்,
அவனின் பார்வை புரிந்து, “நான் எப்படி பேசினால் நீ இங்கே வருவாய் என்று எனக்கு தெரியும்.. அதுதான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..” என்று சொன்னவளின் முகம் மலர்ந்திருந்தது.
இத்தனை வருட காதலில் இன்று தான் அவளின் முகத்தை அருகினில் பார்க்கிறான்.. அவளின் முகத்தைப் பார்த்தும், “இப்பொழுது இவ்வளவு பேசுகின்ற நீ அன்னைக்கு எதுக்கு அப்படி சொன்ன..?” என்று கேட்டான்..
“அப்பொழுது ஒரு கோபம் அதுதான் அப்படி சொன்னேன்.. அதுக்கு நீயும் நிஷாவோடு வந்து எனக்கு பத்திரிகை வைக்கிறா..?!” என்று அவனை அடித்தவள், “கடைசியில் எல்லாம் கூட்டு களவாணிங்க..” என்று திட்டியவள், “நான் காதலித்தது இந்த மக்குகளுக்கு எல்லாம் எப்படி தெரிந்து என்று தெரியவே இல்ல..” என்று கவி புலம்பவும் கதிரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. அவன் சிரிப்பதைப் புரியாமல் பார்த்தாள் கவிமலர்..
அவளின் பார்வை கண்ட கதிர், “இந்த விஷயம் தெரியாமல் இன்னுமா இந்த மண்டையைப் போட்டு உடைக்கிறாய்..?!” என்று அவன் சிரிப்புடன் கேட்டதும், அவளின் முகத்தில் குழப்பம் அதிகரிக்க, “நீதான் செல்லம் எல்லோரின் முன்னாலும் எனக்கு ஐ லவ் யூ சொன்னாய் மறந்துவிட்டதா..?” என்று கேட்டதும், அவளின் முகம் தெளியாமல் இருக்க அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்..
“நீ மழையில் நனைந்த அன்று சுயநினைவை இழக்கும் பொழுது என்னிடம் சொன்னாய்..” என்று கூறியவன், “என்னால் அந்த நாளின் தாக்கத்தை இன்னும் மறக்க முடியலடி.. கனவில் வந்த ஒருவன் நிஜத்திலும் வருவான் என்று எனக்காகவே காத்திருக்கிறாய் என்பது எனக்கு இப்பொழுது தான் தெரிகிறது..” என்றவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் கன்னத்தில் பட்டுத்தெறிக்க அவனை நிமிர்ந்து பார்த்த கவியின் கண்களும் கலங்கியே இருந்தது..
அவளின் கலங்கிய கண்களில் முத்தமிட்டு நிமிர்ந்த கதிர், “நான் உன்னை பார்த்தது முதல் எல்லாவற்றையும் உனக்கு கடிதம் மூலம் எழுதினேன்.. ஆனால் நீ கனவில் வந்த எனக்காக எதிர்பார்ப்பு இல்லாமல் காதலித்து இருக்கிறாய்..?!” என்றவன் அவளின் மௌனம் கண்டு,
“என்னைவிட உனக்கு தாண்டி வலி அதிகம் இருந்திருக்கும்.. கனவில் நடக்கும் எல்லா விஷயமும் பலருக்கு நிஜத்தில் நடப்பது இல்லை.. அப்படி அந்த கனவுகள் பலிக்காமல் இருந்தால் என்ன செய்திருப்பாய்..?” என்று அவன் கேட்டதும், அவளின் மௌனம் விட்டு வெளி வந்தவள்,
“காலம் முழுவதும் இந்த கனவில் வந்த கள்வனை தேடியே என்னோட காலத்தைக் கடந்திருப்பேன்..” என்று அவள் காதலோடு சொல்ல அவளின் முகத்தை இரு கைகளிலும் தாங்கியவன் அவளின் முகம் முழுவதிலும் முத்தம் பதிக்க அவளின் முகம் அழகாக சிவந்து அவளின் இதழ்கள் அழகாக மலர்ந்தது.. அவனின் காதலை அவன் முத்தத்தில் வெளிபடுத்த அவன் கொடுத்த அச்சாரத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்..
அவளின் முகத்தில் முத்தமிட்டு நிமிர்ந்த கதிர், அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்து, “எனக்கு நீ வேண்டும் என்று கண்ணம்மா..” என்று அவன் காதலோடு சொல்ல அவனின் கைகளில் தன்னை ஒப்படைத்தாள் கவிமலர்..
அவளின் விழியசைவில் அவளின் அனுமதியைப் பெற்ற கதிர் அந்த மலரிடம் தனது காதலைக் காட்ட அவனின் காதலில் பாவை அவள் மெழுகாய் உருகினாள்..
தனது காதல் கைகூடிய சந்தோஷத்தில் கனவில் வந்த அந்த கள்வனின் மார்பில் நிம்மதியாகத் துயில் கொண்டாள் கவிமலர்.. அவளை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அவளின் காதலில் அவளின் கரம்பிடித்த அந்த கள்வனும் நிம்மதியான துயில் கொண்டனர்.. இரு உள்ளங்களும் இணைந்து காதல் என்ற ஒரு கனவை கண்டனர்..
கனவுகள் என்றும் பொய்யாகப் போவது கிடையாது.. அந்த கனவுகள் பலிக்கும் பொறுமையோடு நாம் காத்திருந்தால்...!