அத்தியாயம் – 16
மறுநாள் காலையில் முகிலன் சென்னை செல்ல இரயில் டிக்கெட் பதிவு செய்தான். அதன்பிறகு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்தவன், “அம்மா நான் இன்று சென்னை கிளம்புகிறேன்.” என்று கூறினான்
“என்னடா முடிவு எடுத்திருக்கிறாய்..?” என்று தேவகி அவனிடம் கேட்டார்..
“சென்னை சென்ற ஒருமாதத்தில் பதில் சொல்கிறேன் அம்மா..” என்றவன், தன் அறைக்குள் வந்து அந்த கடிதத்தை மறக்காமல் எடுத்து வைத்தான்.
அவனுக்கும் அந்த கடிதத்தைப் பற்றிய பின்னணியை அறியவேண்டிய அவசியம் இருந்தது. அந்த நேரம் தேவகியைப் பார்க்க நிலா வந்தாள்.
“அத்தை..” என்ற அழைப்புடன் உள்ளே வந்தவள், சமையல் அறையில் தேவகி இருப்பதைப் பார்த்து அங்கே சென்றாள்..
“வாம்மா நிலா.. என்ன காலையில் இந்த பக்கம்..?” என்றார் புன்னகையுடன்
“நான் ஊருக்கு செல்கிறேன் அத்தை” என்றவள் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கி நிற்க, அவளின் தயக்கத்தைப் பார்த்தவர்,
“என்னம்மா ஏதாவது சொல்ல வேண்டுமா..?” என்று கனிவுடன் கேட்டார்..
“அத்தை ரொம்ப நன்றி..” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் நிலா கண்களில் கண்ணீருடன்
“என்ன நிலா என்ன பண்ணுகிறாய்..?” என்று அவளின் செய்கைப் பார்த்து பதறியவர் அவளின் கையை கீழே இறக்க, “இரண்டு வயதில் அம்மாவின் முகத்தைப் பார்த்தது.. அவர்களின் இறப்பிற்குப் பிறகு அம்மாவின் நேசத்தை உங்களிடம் பார்த்திருக்கிறேன்.. இந்த இரண்டு நாளை என்னால் மறக்க முடியாது..” என்றவள் நிறுத்தி பிறகு தொடர்ந்தாள்..
“அத்தை கவியைக் கொஞ்சம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.. அவளுக்கும் வாழ்க்கையில் ஏதோவொன்று நடந்திருக்கிறது.. அவளைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.. .. நான் செல்கிறேன் அத்தை..” என்று சொன்னாள் நிலா..
“என்னிடம் அடிவாங்க போகிறாய், போய்ட்டு வருகிறேன் என்று சொல்லு..” என்று அவளைக் கடிந்துக் கொண்டவர்..
“பத்திரமாக போகவேண்டும்.. போனவுடன் கவிமலருக்கு போன் பண்ணு.. நல்ல சாப்பிட வேண்டும்..” என்று அறிவுரை வழங்கியவர்..
“எதையும் நினைத்து மனத்தைக் குழப்பிக்கொள்ள கூடாது..” என்று அவளை அணைத்துக் கொண்டவர்..
“பத்திரமாக இரும்மா..” என்று பலமுறை சொன்னவர், அவளிடமிருந்து விலகி அறைக்குள் சென்று திரும்பி வந்தார்.. அவளுக்கு எடுத்த சேலையை அவளிடம் கொடுத்தவர், “இந்த உனக்கு நான் எடுத்த சேலை” என்று அவளிடம் கொடுத்தவர்..
“அத்தை இது எனக்கு வேண்டாம்..” என்று நிலா மறுக்க, “அத்தை சொன்ன கேட்க வேண்டும்” என்று அதட்டியவர் அதட்டலில் அதை வாங்கிக் கொண்டாள்..
அதன் பிறகு அவள் கிளம்பிச் செல்ல, அவளை இரயில் நிலையம் அழைத்துச் செல்ல தயாராகக் காத்திருந்தாள் கவிமலர். இவளும் ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள இருவரும் செல்வதைப் பார்த்தவர் உள்ளே சென்றார்..
நிலா செல்வதை மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.. மாலையில் முகிலனும் கிளம்பிச் சென்றான்.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு, தனது தேர்விற்கு படிக்க முழு மூச்சாக இறங்கினாள். அவளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற நன்றாக படித்தாள்
இடையே நிலா பலமுறை அழைத்துப் பேசினாள்.. முகிலன் கவிமலரைப் பற்றி விசாரித்துக் கொண்டான்.. வாரத்தில் ஒருமுறை கவிமலரை அவளே அறியாத வண்ணம், நேரில் வந்து பார்த்துச் சென்றான் கதிர்நிலவன்.
நாட்கள் செல்ல அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க, படிப்பு முடிந்தது என்ற பெருமூச்சுடன் வீட்டிற்கு வந்தாள் கவிமலர். இன்னும் பன்னிரண்டு நாளில் அவளின் பிறந்தநாள்!
அந்த நேரம் அவளது அலைபேசி அழகாக சிணுங்கியது.. ‘யார்..?’ என்ற கேள்வியுடன் அலைபேசியின் திரையைப் பார்க்க, அதில் இருந்த என்னைப் பார்த்தவள்,
“ஹலோ சார் நன்றாக இருக்கிறீங்களா..?” என்று உற்சாகத்துடன் கேட்டாள்..
“ம்ம் நன்றாக இருக்கிறேன் கவிமலர்.. தேர்வுகள் அனைத்தும் முடிந்ததா..?” என்று கேட்டார் ராமன்
“ம்ம் இப்பொழுதுதான் தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்குள்ளே வருகிறேன்..” என்று பதில் சொல்ல,
“கவிமலர் நாளைக்கு என்ன நாள் நினைவில் இருக்கிறதா..?” என்றார் ராமன் ஒரு புன்னகையுடன்
“வந்துவிடுகிறேன் சார்.. என்னுடைய திங்க்ஸ் அங்கே எனது அறையில் தானே இருக்கிறது..?” என்று கேட்டாள் கவிமலர்..
“ம்ம் அப்படியே இருக்கிறது. உனக்கு டிக்கேட் புக் பண்ணிவிட்டேன்.. டிக்கெட் வீட்டிற்கு வந்துவிடும் நாளை நீ இங்கே இருக்க வேண்டும்..” என்று சொன்னவர் போனை வைத்தார்..
அவர் போனை வைத்தவுடன் தேவையானவற்றை எடுத்து வைத்தவள், இரவு ரயிலுக்கு கிளம்புவதற்கு தயாரானாள் கவிமலர்..
தனது திங்க்ஸ் எடுத்துக்கொண்டு, “அம்மா நான் சென்னை செல்கிறேன் எப்படியும் இன்னும் பத்து நாளில் வந்துவிடுவேன்..” என்று சாவியை தேவகியிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
இரவு ஒன்பது மணிக்கு இரயில் நிலையம் வந்தவள் ரயிலில் ஏறி அமர்ந்து, தான் வரும் நேரத்தை தெரிவித்துவிட்டு போனை வைக்க, இரயில் கிளம்பியது.
இரவுநேரம், இரயில் பயணம், குளிர்ந்த தென்றல் காற்று அனைத்தும் அவளை இனிமையாக இருக்கவே அவற்றை ரசித்தவண்ணம் உறங்கிபோனாள் கவிமலர்..
கடற்கரை மணலில் அமர்ந்திருந்தாள் கவிமலர். மாலை நேரம் சூரியன் தனது பணியை முடித்துவிட்டு வானத்தைக் காதலுடன் சிவக்க வைத்துவிட்டு மேற்கே மறைய தொடங்கியிருக்க.. அவளின் முன்னே பரந்துவிரிந்திருந்த கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும் சத்தம், எவ்வளவு உயரம் எழுந்தாலும் கடலின் கரையை நேசத்துடன் தொட்டுச் செல்ல,
“காதலரின் காலடி சுவடுகளையும்
திருடிச் செல்லும் கடல் அலைகள்!
திருடிய சுவடுகள் கடலில் தொலைக்கிறது
எத்தனை முறை திருடினாலும்
கவலைக் கொள்கிறது அலைகள்!
கரையை கடக்க முடியவில்லை என்று!
எவ்வளவு உயரம் எழும்பினாலும் என்றுமே
கரையை கடக்காத கடலலைகள்!” என்ற கவிதை வரிகளே அவளின் மனதில் தோன்றி இதழ்கள் தானாக மலர்ந்து புன்னகை உதிர்ந்தது..
“என்னடா யோசனையில் இருக்கிறாய்..?! தனியாக அமர்ந்து தானாகவே சிரிக்கிறாய்..?” என்ற கேள்வியுடன் அருகில் அமர்ந்தான் கதிர்நிலவன்..
அவள் தனது மனதில் தோன்றிய கவிதையே சொல்ல, “காதலர்களின் காலடி சுவடுகளைத் திருடுவதும், அதை கடலில் தொலைப்பதுமே அலைகளின் முக்கிய வேலைப் போல..” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கேட்க,
“நாமும் நமது காலடி சுவடுகளைத் திருட கொடுப்போமா..?!” என்று ஆவலுடன் கேட்டாள் கவிமலர்.
அவள் கேட்டது அவனுக்குப் புரியாமல், “வேண்டாம்..!” என்று சொன்னவன், ‘அவள் உன்னுடன் கடற்கரையில் நடக்க நினைக்கிறாள்..’ என்று மனம் எடுத்துரைக்க,
“காலடி சுவடுகளை களவாடிச் செல்ல, அலைகள் ஆர்வமாக இருக்கிறது கரையில் கால்பதிக்க என்னுடன் நீ வருகிறாயா..?!” என்று அவளின் முன்னே தந்து வலது கரத்தை நீட்டியவன் ஒரு புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அவனின் கரத்தோடு தந்து கரத்தை இணைத்து எழுந்து, கால்களை அலைகள் தங்களின் கால்களை நனைத்து செல்ல, சிறிய புன்னகையுடன் அவனின் கரத்தோடு கரம் கோர்த்து அவனுடன் நடந்தாள் கவிமலர்.
“என்னோடு கைக்கோர்த்து நடக்க உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டான் கதிர்நிலவன் அவளின் முகம் நோக்கிக் கேட்டான்
“உன்னோடு கைக்கோர்த்து செல்வது போல, இப்படியே காலம் முழுவதும் என்னுடன் வருவாயா கதிர்..? இப்பொழுது என்னுடைய காதலனாக.. வருங்காலத்தில் எனது கணவனாக..” என்று கேட்டாள்
அதற்குள் அவர்கள் ஆள்நடமாட்டம் இல்ல இடத்திற்கு வந்திருக்க, அவனைக் கண்ணோடு கண்நோக்கிய கவிமலர், கண்களில் காதல் வழிய அவனைப் பார்த்தவள்,
“ஐ லவ் யூ கதிர்...!” என்று தனது நேசத்தை வெளிப்படுத்த அவளை அருகில் இழுத்து இறுக்கமாக அணைத்தவன், “உன்னிடம் இந்த ஐ லவ் யூவைக் கேட்க தவம் செய்தேன் கண்ணம்மா.. என்னுடைய தவத்தின் பலனாக உன்னிடம் அந்த நேசத்தைப் பெற்றுவிட்டேன்..” என்று அவன் காதலுடன் சொன்னான்
“மலர் செல்லம் உன்னுடன் இந்த ஐ லவ் யூவை வாங்க எவ்வளவு நல்லவனாக நடக்க வேண்டி இருக்கிறது..” என்று அவளின் அருகில் வந்தவனை கீழே தள்ளிவிட்டு கலகலவென்று சிரித்தவள்,
“அப்பொழுது நீ ரொம்ப கெட்டவனா கதிர்..?” என்று அவனைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கவிமலர்..
“எல்லோருக்கும் நான் ரொம்ப நல்லவன் மலர்” என்றவன் எழுந்து நின்று அவளை உச்சியில் இருந்து பாதம் வரை பார்த்தவன், “உன்னிடம் மட்டும் நான் ரொம்ப கெட்டவன் செல்லம்!” என்று அவளைப் பிடிக்க அருகில் செல்ல அவள் ஓடினாள்..
மறுநாள் காலையில் முகிலன் சென்னை செல்ல இரயில் டிக்கெட் பதிவு செய்தான். அதன்பிறகு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்தவன், “அம்மா நான் இன்று சென்னை கிளம்புகிறேன்.” என்று கூறினான்
“என்னடா முடிவு எடுத்திருக்கிறாய்..?” என்று தேவகி அவனிடம் கேட்டார்..
“சென்னை சென்ற ஒருமாதத்தில் பதில் சொல்கிறேன் அம்மா..” என்றவன், தன் அறைக்குள் வந்து அந்த கடிதத்தை மறக்காமல் எடுத்து வைத்தான்.
அவனுக்கும் அந்த கடிதத்தைப் பற்றிய பின்னணியை அறியவேண்டிய அவசியம் இருந்தது. அந்த நேரம் தேவகியைப் பார்க்க நிலா வந்தாள்.
“அத்தை..” என்ற அழைப்புடன் உள்ளே வந்தவள், சமையல் அறையில் தேவகி இருப்பதைப் பார்த்து அங்கே சென்றாள்..
“வாம்மா நிலா.. என்ன காலையில் இந்த பக்கம்..?” என்றார் புன்னகையுடன்
“நான் ஊருக்கு செல்கிறேன் அத்தை” என்றவள் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கி நிற்க, அவளின் தயக்கத்தைப் பார்த்தவர்,
“என்னம்மா ஏதாவது சொல்ல வேண்டுமா..?” என்று கனிவுடன் கேட்டார்..
“அத்தை ரொம்ப நன்றி..” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் நிலா கண்களில் கண்ணீருடன்
“என்ன நிலா என்ன பண்ணுகிறாய்..?” என்று அவளின் செய்கைப் பார்த்து பதறியவர் அவளின் கையை கீழே இறக்க, “இரண்டு வயதில் அம்மாவின் முகத்தைப் பார்த்தது.. அவர்களின் இறப்பிற்குப் பிறகு அம்மாவின் நேசத்தை உங்களிடம் பார்த்திருக்கிறேன்.. இந்த இரண்டு நாளை என்னால் மறக்க முடியாது..” என்றவள் நிறுத்தி பிறகு தொடர்ந்தாள்..
“அத்தை கவியைக் கொஞ்சம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.. அவளுக்கும் வாழ்க்கையில் ஏதோவொன்று நடந்திருக்கிறது.. அவளைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.. .. நான் செல்கிறேன் அத்தை..” என்று சொன்னாள் நிலா..
“என்னிடம் அடிவாங்க போகிறாய், போய்ட்டு வருகிறேன் என்று சொல்லு..” என்று அவளைக் கடிந்துக் கொண்டவர்..
“பத்திரமாக போகவேண்டும்.. போனவுடன் கவிமலருக்கு போன் பண்ணு.. நல்ல சாப்பிட வேண்டும்..” என்று அறிவுரை வழங்கியவர்..
“எதையும் நினைத்து மனத்தைக் குழப்பிக்கொள்ள கூடாது..” என்று அவளை அணைத்துக் கொண்டவர்..
“பத்திரமாக இரும்மா..” என்று பலமுறை சொன்னவர், அவளிடமிருந்து விலகி அறைக்குள் சென்று திரும்பி வந்தார்.. அவளுக்கு எடுத்த சேலையை அவளிடம் கொடுத்தவர், “இந்த உனக்கு நான் எடுத்த சேலை” என்று அவளிடம் கொடுத்தவர்..
“அத்தை இது எனக்கு வேண்டாம்..” என்று நிலா மறுக்க, “அத்தை சொன்ன கேட்க வேண்டும்” என்று அதட்டியவர் அதட்டலில் அதை வாங்கிக் கொண்டாள்..
அதன் பிறகு அவள் கிளம்பிச் செல்ல, அவளை இரயில் நிலையம் அழைத்துச் செல்ல தயாராகக் காத்திருந்தாள் கவிமலர். இவளும் ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள இருவரும் செல்வதைப் பார்த்தவர் உள்ளே சென்றார்..
நிலா செல்வதை மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.. மாலையில் முகிலனும் கிளம்பிச் சென்றான்.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு, தனது தேர்விற்கு படிக்க முழு மூச்சாக இறங்கினாள். அவளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற நன்றாக படித்தாள்
இடையே நிலா பலமுறை அழைத்துப் பேசினாள்.. முகிலன் கவிமலரைப் பற்றி விசாரித்துக் கொண்டான்.. வாரத்தில் ஒருமுறை கவிமலரை அவளே அறியாத வண்ணம், நேரில் வந்து பார்த்துச் சென்றான் கதிர்நிலவன்.
நாட்கள் செல்ல அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க, படிப்பு முடிந்தது என்ற பெருமூச்சுடன் வீட்டிற்கு வந்தாள் கவிமலர். இன்னும் பன்னிரண்டு நாளில் அவளின் பிறந்தநாள்!
அந்த நேரம் அவளது அலைபேசி அழகாக சிணுங்கியது.. ‘யார்..?’ என்ற கேள்வியுடன் அலைபேசியின் திரையைப் பார்க்க, அதில் இருந்த என்னைப் பார்த்தவள்,
“ஹலோ சார் நன்றாக இருக்கிறீங்களா..?” என்று உற்சாகத்துடன் கேட்டாள்..
“ம்ம் நன்றாக இருக்கிறேன் கவிமலர்.. தேர்வுகள் அனைத்தும் முடிந்ததா..?” என்று கேட்டார் ராமன்
“ம்ம் இப்பொழுதுதான் தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்குள்ளே வருகிறேன்..” என்று பதில் சொல்ல,
“கவிமலர் நாளைக்கு என்ன நாள் நினைவில் இருக்கிறதா..?” என்றார் ராமன் ஒரு புன்னகையுடன்
“வந்துவிடுகிறேன் சார்.. என்னுடைய திங்க்ஸ் அங்கே எனது அறையில் தானே இருக்கிறது..?” என்று கேட்டாள் கவிமலர்..
“ம்ம் அப்படியே இருக்கிறது. உனக்கு டிக்கேட் புக் பண்ணிவிட்டேன்.. டிக்கெட் வீட்டிற்கு வந்துவிடும் நாளை நீ இங்கே இருக்க வேண்டும்..” என்று சொன்னவர் போனை வைத்தார்..
அவர் போனை வைத்தவுடன் தேவையானவற்றை எடுத்து வைத்தவள், இரவு ரயிலுக்கு கிளம்புவதற்கு தயாரானாள் கவிமலர்..
தனது திங்க்ஸ் எடுத்துக்கொண்டு, “அம்மா நான் சென்னை செல்கிறேன் எப்படியும் இன்னும் பத்து நாளில் வந்துவிடுவேன்..” என்று சாவியை தேவகியிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
இரவு ஒன்பது மணிக்கு இரயில் நிலையம் வந்தவள் ரயிலில் ஏறி அமர்ந்து, தான் வரும் நேரத்தை தெரிவித்துவிட்டு போனை வைக்க, இரயில் கிளம்பியது.
இரவுநேரம், இரயில் பயணம், குளிர்ந்த தென்றல் காற்று அனைத்தும் அவளை இனிமையாக இருக்கவே அவற்றை ரசித்தவண்ணம் உறங்கிபோனாள் கவிமலர்..
கடற்கரை மணலில் அமர்ந்திருந்தாள் கவிமலர். மாலை நேரம் சூரியன் தனது பணியை முடித்துவிட்டு வானத்தைக் காதலுடன் சிவக்க வைத்துவிட்டு மேற்கே மறைய தொடங்கியிருக்க.. அவளின் முன்னே பரந்துவிரிந்திருந்த கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும் சத்தம், எவ்வளவு உயரம் எழுந்தாலும் கடலின் கரையை நேசத்துடன் தொட்டுச் செல்ல,
“காதலரின் காலடி சுவடுகளையும்
திருடிச் செல்லும் கடல் அலைகள்!
திருடிய சுவடுகள் கடலில் தொலைக்கிறது
எத்தனை முறை திருடினாலும்
கவலைக் கொள்கிறது அலைகள்!
கரையை கடக்க முடியவில்லை என்று!
எவ்வளவு உயரம் எழும்பினாலும் என்றுமே
கரையை கடக்காத கடலலைகள்!” என்ற கவிதை வரிகளே அவளின் மனதில் தோன்றி இதழ்கள் தானாக மலர்ந்து புன்னகை உதிர்ந்தது..
“என்னடா யோசனையில் இருக்கிறாய்..?! தனியாக அமர்ந்து தானாகவே சிரிக்கிறாய்..?” என்ற கேள்வியுடன் அருகில் அமர்ந்தான் கதிர்நிலவன்..
அவள் தனது மனதில் தோன்றிய கவிதையே சொல்ல, “காதலர்களின் காலடி சுவடுகளைத் திருடுவதும், அதை கடலில் தொலைப்பதுமே அலைகளின் முக்கிய வேலைப் போல..” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கேட்க,
“நாமும் நமது காலடி சுவடுகளைத் திருட கொடுப்போமா..?!” என்று ஆவலுடன் கேட்டாள் கவிமலர்.
அவள் கேட்டது அவனுக்குப் புரியாமல், “வேண்டாம்..!” என்று சொன்னவன், ‘அவள் உன்னுடன் கடற்கரையில் நடக்க நினைக்கிறாள்..’ என்று மனம் எடுத்துரைக்க,
“காலடி சுவடுகளை களவாடிச் செல்ல, அலைகள் ஆர்வமாக இருக்கிறது கரையில் கால்பதிக்க என்னுடன் நீ வருகிறாயா..?!” என்று அவளின் முன்னே தந்து வலது கரத்தை நீட்டியவன் ஒரு புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அவனின் கரத்தோடு தந்து கரத்தை இணைத்து எழுந்து, கால்களை அலைகள் தங்களின் கால்களை நனைத்து செல்ல, சிறிய புன்னகையுடன் அவனின் கரத்தோடு கரம் கோர்த்து அவனுடன் நடந்தாள் கவிமலர்.
“என்னோடு கைக்கோர்த்து நடக்க உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டான் கதிர்நிலவன் அவளின் முகம் நோக்கிக் கேட்டான்
“உன்னோடு கைக்கோர்த்து செல்வது போல, இப்படியே காலம் முழுவதும் என்னுடன் வருவாயா கதிர்..? இப்பொழுது என்னுடைய காதலனாக.. வருங்காலத்தில் எனது கணவனாக..” என்று கேட்டாள்
அதற்குள் அவர்கள் ஆள்நடமாட்டம் இல்ல இடத்திற்கு வந்திருக்க, அவனைக் கண்ணோடு கண்நோக்கிய கவிமலர், கண்களில் காதல் வழிய அவனைப் பார்த்தவள்,
“ஐ லவ் யூ கதிர்...!” என்று தனது நேசத்தை வெளிப்படுத்த அவளை அருகில் இழுத்து இறுக்கமாக அணைத்தவன், “உன்னிடம் இந்த ஐ லவ் யூவைக் கேட்க தவம் செய்தேன் கண்ணம்மா.. என்னுடைய தவத்தின் பலனாக உன்னிடம் அந்த நேசத்தைப் பெற்றுவிட்டேன்..” என்று அவன் காதலுடன் சொன்னான்
“மலர் செல்லம் உன்னுடன் இந்த ஐ லவ் யூவை வாங்க எவ்வளவு நல்லவனாக நடக்க வேண்டி இருக்கிறது..” என்று அவளின் அருகில் வந்தவனை கீழே தள்ளிவிட்டு கலகலவென்று சிரித்தவள்,
“அப்பொழுது நீ ரொம்ப கெட்டவனா கதிர்..?” என்று அவனைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கவிமலர்..
“எல்லோருக்கும் நான் ரொம்ப நல்லவன் மலர்” என்றவன் எழுந்து நின்று அவளை உச்சியில் இருந்து பாதம் வரை பார்த்தவன், “உன்னிடம் மட்டும் நான் ரொம்ப கெட்டவன் செல்லம்!” என்று அவளைப் பிடிக்க அருகில் செல்ல அவள் ஓடினாள்..