அத்தியாயம் – 3
முகிலன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்.. தேவகியிடம் கவிமலரை மகளாகவே பார்த்துக் கொண்டார்..
கவிமலர் திருப்பூர் வந்து இன்றுடன் இரண்டு மாதம் கடந்து விட்டது.. நாட்கள் வேகமாக நகர, கவிமலர் தனது ஆடிட்டர் ட்ரைனிங் சென்றுக் கொண்டிருந்தாள்.. அவளும் திருப்பூரின் பரபரப்பிற்கும், அந்த வேலையிலும் மனதைச் செலுத்தினாள்..
அன்று சனிக்கிழமை என்பதால் கோவிலுக்கு போக வேண்டுமென்று சீக்கிரம் கிளம்பினாள் கவிமலர்.. அவள் வாசலை தெருவில் இறங்கி நடக்க பக்கத்து வீட்டில் இருந்த ஜானகி பாட்டி,
“யாரது ஜோதி மகளா..?” என்று கேட்டார் அவர்.. அவரைப் பார்த்தவள், “ஆமா பாட்டி..” என்று குரல் கொடுத்தாள்..
“எப்பொழுது வந்தாய்..? அப்பா நல்ல இருக்கிறாரா..? அவன் வருவதே இல்லை.. ஆனால் நீ மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வந்து விடுகிறாய்..” என்று பாட்டி சலிப்புடன் கூற,
“நான் வருவது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா பாட்டி..?” என்று கேட்டாள் கவிமலர்
“நீ உன்னுடைய வீட்டிற்கு வருவது எனக்கு என்னடிம்மா கஷ்டம்..? இங்கே வேலைக்கு செல்வதாக தேவகி கூறினாள்.. பார்த்து பத்திரமாகப் போய்ட்டுவா..” என்று கரிசனத்துடன் கூறினார்..
அவரைப் பார்த்துப் புன்னகைத்தவள், “கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன் பாட்டி..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்..
அன்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது.. முதலில் ஆஞ்சிநேயரை தரிசித்துவிட்டு பிரகத்தில் நடந்தவள் கோவிலை வலம் வந்து கோபுர தரிசனம் பார்த்துவிட்டு, உள்ளே இருந்த ஸ்ரீதேவி, பூதேவி சன்னதியில் சாமியைக் கும்பிட்டுவிட்டு, பெருமாளை தரிசித்துவிட்டு வெளியே வந்து பிரகரத்தில் அமர்ந்தாள்..
சிறிது நேரத்தில் அவளின் அருகில் வந்து நின்ற ஒரு சிறுவன் முகத்தில் சந்தோசம் “அக்கா உங்க பெயர் என்ன..?” என்றது
அவனின் கேள்வியில் சிரித்த கவிமலர், “என் பெயர் கவிமலர்..” என்றாள்
“என்னுடைய பெயர் வருண்..” என்று தன்னை அறிமுகம் செய்தான் அந்த சிறுவன்..
“வருண் நைஸ் நேம்..” என்று அந்த குழந்தையின் தலையைக் கோதினாள் பெரியவள்..
“சொல்ல வந்ததையே மறந்து விட்டேன்..” என்று தலையில் அடித்துக் கொள்ள அவனைத் திகைப்புடன் ஏறிட்டாள் கவிமலர்..
“அக்கா உங்களுக்கு இந்த சுடிதார் சூப்பர் அக்கா.. அந்த ரெட் ரோஸ் இன்னும் அழகாக இருக்கிறது..” என்றான் வருண்..!
“தேங்க்ஸ் வருண்.. உன்னோட இந்த கமெண்டிற்கு என்னுடைய சின்ன கிப்ட்..” என்று அப்பொழுதான் வாங்கிய கீசெய்ன் ஒரு ஒயிட் கலர் ஹெர்ட் அதன் உள்ளே ரெட் கலர் ஹார்ட் அதில் கவிமலர் என்று எழுதி இருக்கும்.. அதை அவனிடம் கொடுத்தாள் கவிமலர்..
“தேங்க்ஸ் அக்கா..!” என்று சொல்லியவன் அவளைக் குனிய சொல்லி அவளின் இரண்டுக் கன்னத்திலும் இதழ் பதித்தான்.. அவளும் அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்..
அதை இரண்டு கண்கள் இரசனையுடன் நோக்கியது.. அதை கவிமலர் கவனிக்கவில்லை..
அதன்பிறகு ஆடிட்டர் ஆபீஸ் போய்விட்டு மாலை மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தாள்.. வீட்டைத் திறந்து தனது நனைந்த உடையை மாற்றிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்று, சூடாக டீ போட்டு எடுத்து வந்து ஹோலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்..
அந்தநேரம் வெளியே மழைக் கொட்டத் துவங்கியது.. அவளின் மனம் தான் காலையில் கண்ட கனவின் நினைவில் ஆழ்ந்தது..
கனவில் அவள் ஒரு புக் ஸ்டோரில் நிற்பது போல கனவுக் கண்டாள்..
கவிமலருக்கு நாவல் படிப்பது மிகவும் பிடிக்கும்.. ஆனால் புத்தகத்தில் படிப்பது அவளுக்கு இன்னும் பிடிக்கும்.. நாவல் வாங்க கடைக்கு சென்றாள் அவள்..
அவள் புத்தகத்தில் கவனம் செலுத்த தன்னை யாரோ பார்ப்பதுப் போல தோன்றவும், நிமிர்ந்துப் பார்த்தாள்.. அவளின் மனம் சொன்னது பொய் இல்லை.. அங்கே கதிர்நிலவன் நின்றிருந்தான்..
“கவிமலருக்கு கவிதை பிடிக்கும் என்று நினைத்தேன்.. நாவல்கள் கூட பிடிக்குமா..? இந்த நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. குறைந்தது 1௦௦ தடவைப் படித்திருப்பேன்.. இந்த என்னோட முதல் கிப்ட்..” என்று நாவலை அவளது கைகளில் கொடுத்தான்..
கவிமலர் திகைப்பிலிருந்து வெளியே வரவே இல்லை.. அவளின் கண்கள் அவனின் முகத்திலிருந்து அசைய மறுத்து சிலைப்போல நின்றிருந்தாள்..
அவனது பார்வை ‘சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா..?’ என நோட்டம் விட்டுவிட்டு, அவளின் அருகில் நெருங்கி நின்றவன்..
“ஏய்! இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ பார்வையை மாற்றிக் கொள்ளாமல் நின்றாய் என்றால், அப்புறம் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று அவன் அவளின் காதோரம் கிசுகிசுத்தான்..
அவன் சொல்ல நினைத்தை அவனது கைகள் தொட்டு மீண்டது.. அவளின் அழகிய இதழ்களை அவனது விரல்கள் வருடிச் சென்றது.. அவள் திகைப்பில் இருந்து மீண்டாள்.. அவளது பார்வை பயத்துடன் அந்த கடையைச் சுற்றி வந்தது..
அவளின் பயத்தைப் பார்த்தவன், “ இது சின்னக்கடை இங்கே கேமராவும் இல்லை.. அதும் இல்லாமல் இங்கே நான் நிற்பது யாருக்கும் தெரியாது..” என்று கூறினான் கதிர்நிலவன்..
“இந்த இதழை எனக்கே தந்துவிடு செல்லம்..” என்று கூறி உதட்டை இழுக்க, அவனது கையைத் தட்டிவிட்டவள்,
“கதிர் என்ன இது விளையாட்டு..” என்று அவனை விட்டு விலகிச்செல்லும் நேரத்தில் அவளின் கைகளைப்பிடித்து அவளின் விரல்களில் மோதிரத்தை மாட்டினான்..
அவளின் புறங்கையில் இதழ்பதித்து நிமிர்ந்த கதிர்நிலவன், அவளைப்பார்த்துக் கண்ணடித்து, “நிச்சயத்தார்த்தம் முடிந்தது.. இதற்கு சாட்சியாக இருக்கின்றன இங்கிருக்கும் பல காதல் நாவல்கள்..” என்றான்
“ஐ லவ் யூ கவிமலர்.. இந்த கவிமலர் படைக்கப்பட்டது இந்த கதிர்நிலவனுக்கே..! இந்த உரிமையுடன் கொடுக்கும் முதல் கிப்ட்..!” என்று அவளின் கைகளில் நாவல்களைக் கொடுத்தான்
“எனக்கு வேண்டாம்..” என்று அவனிடமிருந்து கைகளை உருவிக்கொண்டாள் கவிமலர்..
“கவிமலர் நீதான் இந்த ஜென்மத்தில் எனது மனைவி.. இந்த நாவல்களை வாங்கவில்லை என்றால், பக்கத்தில் கோவில் இருக்கிறது.. என்னிடம் தாலியும் இருக்கிறது.. உனக்கு வசதி எப்படி..?” என்று சிரித்தான் அவன்
“என்ன மிரட்டல் எல்லாம் பலமாக வருகிறது..” என்று எகிறினாள் கவிமலர்..
“நீ எனக்கு வேண்டும் கண்ணம்மா.. நீ மட்டும் தான் வேண்டும் புரிந்துக் கொள்ள முயற்சி செய்..” என்று கூறிவிட்டு நாவல்களை அவளின் அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு விலகிச் செல்ல அவளின் மனம் வலித்தது..
கண்களில் கண்ணீருடன் அந்த புத்தகங்களை எடுத்து பில் போட சென்றாள்..
“இந்தாங்க உங்களின் பில்..” என்று கொடுத்தார் கடைக்காரர்
“இந்தாங்க பணம்..” என்று கவிமலர் கடைக்காரரிடம் பணத்தைக் கொடுக்க, “அதை உன் கணவர் கொடுத்து விட்டார் கண்ணு..!” என்றார் அவர்..
அவர் சொன்னதை கவிமலரால் மறுத்துக் கூற முடியவில்லை.. அவளின் மனம் முழுவதும் அவனின் வசமே இருந்தது.. அவன் அணிவித்த மோதிரத்தை கைகளால் வருடினாள்..
அவளின் கண்ணீர் துளி ஒன்று அதன் மேல் பட்டுத் தெரித்தது.. அவனின் மனதில் நாம் மட்டுமே இருக்கிறோம் என்ற எண்ணம் உயிர்வரைத் தித்திக்க, கண்மூடி கண்ணீரை உதிர்த்தாள் அவள்..
அந்த கண்ணீரை இரண்டுக் கரங்கள் துடைத்தது.. அவனும் கண்களில் கண்ணீருடன், “எதுக்குடி என்ன இப்படி கொல்ற..?” என்று கேட்க கண்களைத் திறந்தாள் கவிமலர்..
அவளின் கண்களில் கண்ணீர் கோடாக வழிந்தது.. வெளியே மழை நின்று இருந்தது.. ஆனால் அவளின் மனம் அந்த கனவின் தாக்கத்திலேயே இருந்தது..
சரியாக அந்த நேரம் அவளின் அலைபேசி அழைத்தது.. அதில் ஒளிர்ந்த என்னைப் பார்த்து போனை எடுத்தாள் கவிமலர்..
“என்னடி பண்ணிட்டு இருக்கிறாய்..? ஒரு போன் எடுக்க இவ்வளவு நேரமா..?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் நிலா..
“ஐயோ கத்தாதே நிலா.. காது ஜவ்வு கிழிந்துவிட்டது.. லூசு இப்படியா கத்துவாய்..” என்று திட்டினாள் கவிமலர்
“சரி கத்தலை பதில் சொல்லுடி.. என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றாள் நிலா..
“மழையில் நன்றாக நனைந்த பிறகே வீட்டிற்கு வந்தேன்.. சுடச்சுட டீ போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன்..” என்றாள் கவிமலர்
“இன்னைக்கு ஒரே டென்ஷன்.. அதனின் தொடர்ச்சியாக தலைவலி சோ காபி குடிக்க வந்தேன்.. அதுதான் நீ என்ன பண்ற என்று கேட்கலாம் என்று போன் செய்தேன்..” என்றாள் நிலா
“என்ன டென்ஷன் நிலா.. நிலா குளிர்ச்சியாக இருப்பாள்.. ஆனால் இவ்வளவு ஹாட் என்று தெரியாதே.. ஆனால் இப்பொழுது தெரிந்து விட்டது..” என்று கவிமலர் யோசனையுடன் இழுக்க
“புதுசாக ஒரு டீம் லீடர் வந்திருக்கிறான்.. பெயர் என்ன தெரியுமா..?” என்று கேட்டாள் நிலா.. என்னமோ அவளுக்குத்தான் பதில் தெரிந்தது போல கோபமாகவே கேட்டாள்..
“தெரியாது தாயே நீயே சொல்லு..” என்றாள் அவள்
“முகிலன்..!” என்றாள் நிலா..
“முகிலன் – நிலா நல்ல பெயர் பொருத்தம்.. நூத்துக்கு தொண்ணூறு சதவிதம் சூப்பராக இருக்கிறது..” என்றாள் கலகலவென்று சிரித்தாள் கவிமலர்..
“கவி..?!” என்று பல்லைக் கடித்தாள் நிலா, “மகளே நீ மட்டும் என் கையில் கிடைத்தாய்.. உன்னிடம் பெயர் பொருத்தம் பார்க்க சொல்லி நான் கேட்டேனா..?” என்று கோபமாகக் கத்தினாள்..
அவளின் கத்துவதைப் பார்த்த சிலர் முகம் சுழித்தபடி அவளைக் கடந்து சென்றனர்.. ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை..
“நிலா ஜெஸ்ட் ரிலாக்ஸ்..” ஆனால் பேசிக்கொண்டிருந்த கவிமலர், நொடியில் கணித்து அவளை அமைதிப் படுத்தினாள்..
“இப்போது சொல்லுடி! தலைவலி எங்கே போனது..” என்றாள் கவிமலர்..
“கவி தலைவலி கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிகிறது..” என்றாள் நிலா முணுமுணுப்பாக கூறினாள்..
“முகிலன் மேல் இருந்த கோபம் அனைத்து மலரிடம் காட்டிவிட்டாய்.. மனதில் இருந்த குழப்பம் உன்னுடைய வாய் மூலம் வெளியே வந்துவிட்டது.. தலைவலிப் போய்விட்டது..” என்றாள் கவிமலர்
“இது ஒரு சின்ன ட்ரீட்மென்ட்.. மனதில் ஒன்றைப் போட்டுக் குழப்பும் போது தலைவலி வரும்.. அதை டைவேட் பண்ண.. இப்படியும் சில வழிமுறைகள்..” என்று வருத்தமாக கூறினாள்
“தேங்க்ஸ் கவி.. இப்பொழுது தலைவலி கொஞ்சம் பெட்டர்..” என்று சிறிதுநேரம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தாள் நிலா..
“ஹாய் செல்லம் என்னடா பண்ற..?” என்ற கேள்வியுடன் எதிரே வந்து அமர்ந்தான் முகிலன்..
முகிலனைப் பார்த்தவுடன் பல்லைக் கடித்த நிலா, “காபி சாப்பிட வந்தேன்.. அது உனக்கு பொறுக்கலையா..?” என்றாள் திரும்பவும் தலைவலி தலைக்கு ஏறக்கேட்டாள்
“அது என்னமோ தெரியல நிலா.. உன்னைப் பார்த்தால் மட்டும் என்னோட பொறுமை ரொம்ப தூரம் சென்றுவிடுகிறது..” என்று முகிலன் அவளின் முகத்தைப் பார்த்துப் புன்னகையுடன் கூறினான்..
“யாருடன் பேசிக்கோண்டு இருந்தாய்.. தப்பு தப்பு.. யாருடன் கத்திக் கொண்டிருந்தாய்..” என்று நிலாவை வம்பிற்கு இழுக்கவும் செய்தான் முகிலன்..
“என்னோட பிரிண்ட் கூட பேசிக்கொண்டு இருந்தேன்.. இந்த விளக்கம் உனக்கு ரொம்ப முக்கியமா..?” என்றாள் நிலா ஏளனமாகவே கேட்டாள்..
“இல்ல அந்த கத்துக் கத்திக்கொண்டு இருந்தாயே அதுதான் கேட்டேன்..” என்றான் முகிலன்..
‘எல்லாம் உன்னால் வந்த வினை.. தலைவலியால் அவள் விளையாட்டாக ஒன்று சொல்ல.. அவளைப் பிடித்துத் திட்டிவிட்டேன்..’ என்று மனதினுள் ரன்னிங் கமிட்ரி கொடுத்தாள்..
“என்ன நல்ல கரித்துக்கொட்டுகிற வாசனை வருகிறது..” என்றான் முகிலன்
“அதுதான் தெரியுதில்ல.. கரித்துக்கொட்டுகிறேன் என்று எழுந்து போக வேண்டியது தானே..” என்றாள் நிலா கோபமாகவே பேசினாள்
“இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதானே உன்னுடன் பழகுகிறேன்..” என்று சிரித்தான் முகிலன்..
அவனின் சிரிப்பைப் பார்த்து நிலவிற்கு பத்திக்கொண்டு வந்தது.. வந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினாள் அவள்.. இவளின் கோபத்தை ரசித்தபடியே அமர்ந்திருந்தான் முகிலன்..
‘நிலவிற்கு கோபம் வருகிறதே..?! கோபத்தில் கூட நீ அழகாகவே இருக்கிறாய்..’ என்று நினைத்தான் முகிலன்..
முகிலன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்.. தேவகியிடம் கவிமலரை மகளாகவே பார்த்துக் கொண்டார்..
கவிமலர் திருப்பூர் வந்து இன்றுடன் இரண்டு மாதம் கடந்து விட்டது.. நாட்கள் வேகமாக நகர, கவிமலர் தனது ஆடிட்டர் ட்ரைனிங் சென்றுக் கொண்டிருந்தாள்.. அவளும் திருப்பூரின் பரபரப்பிற்கும், அந்த வேலையிலும் மனதைச் செலுத்தினாள்..
அன்று சனிக்கிழமை என்பதால் கோவிலுக்கு போக வேண்டுமென்று சீக்கிரம் கிளம்பினாள் கவிமலர்.. அவள் வாசலை தெருவில் இறங்கி நடக்க பக்கத்து வீட்டில் இருந்த ஜானகி பாட்டி,
“யாரது ஜோதி மகளா..?” என்று கேட்டார் அவர்.. அவரைப் பார்த்தவள், “ஆமா பாட்டி..” என்று குரல் கொடுத்தாள்..
“எப்பொழுது வந்தாய்..? அப்பா நல்ல இருக்கிறாரா..? அவன் வருவதே இல்லை.. ஆனால் நீ மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வந்து விடுகிறாய்..” என்று பாட்டி சலிப்புடன் கூற,
“நான் வருவது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா பாட்டி..?” என்று கேட்டாள் கவிமலர்
“நீ உன்னுடைய வீட்டிற்கு வருவது எனக்கு என்னடிம்மா கஷ்டம்..? இங்கே வேலைக்கு செல்வதாக தேவகி கூறினாள்.. பார்த்து பத்திரமாகப் போய்ட்டுவா..” என்று கரிசனத்துடன் கூறினார்..
அவரைப் பார்த்துப் புன்னகைத்தவள், “கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன் பாட்டி..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்..
அன்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது.. முதலில் ஆஞ்சிநேயரை தரிசித்துவிட்டு பிரகத்தில் நடந்தவள் கோவிலை வலம் வந்து கோபுர தரிசனம் பார்த்துவிட்டு, உள்ளே இருந்த ஸ்ரீதேவி, பூதேவி சன்னதியில் சாமியைக் கும்பிட்டுவிட்டு, பெருமாளை தரிசித்துவிட்டு வெளியே வந்து பிரகரத்தில் அமர்ந்தாள்..
சிறிது நேரத்தில் அவளின் அருகில் வந்து நின்ற ஒரு சிறுவன் முகத்தில் சந்தோசம் “அக்கா உங்க பெயர் என்ன..?” என்றது
அவனின் கேள்வியில் சிரித்த கவிமலர், “என் பெயர் கவிமலர்..” என்றாள்
“என்னுடைய பெயர் வருண்..” என்று தன்னை அறிமுகம் செய்தான் அந்த சிறுவன்..
“வருண் நைஸ் நேம்..” என்று அந்த குழந்தையின் தலையைக் கோதினாள் பெரியவள்..
“சொல்ல வந்ததையே மறந்து விட்டேன்..” என்று தலையில் அடித்துக் கொள்ள அவனைத் திகைப்புடன் ஏறிட்டாள் கவிமலர்..
“அக்கா உங்களுக்கு இந்த சுடிதார் சூப்பர் அக்கா.. அந்த ரெட் ரோஸ் இன்னும் அழகாக இருக்கிறது..” என்றான் வருண்..!
“தேங்க்ஸ் வருண்.. உன்னோட இந்த கமெண்டிற்கு என்னுடைய சின்ன கிப்ட்..” என்று அப்பொழுதான் வாங்கிய கீசெய்ன் ஒரு ஒயிட் கலர் ஹெர்ட் அதன் உள்ளே ரெட் கலர் ஹார்ட் அதில் கவிமலர் என்று எழுதி இருக்கும்.. அதை அவனிடம் கொடுத்தாள் கவிமலர்..
“தேங்க்ஸ் அக்கா..!” என்று சொல்லியவன் அவளைக் குனிய சொல்லி அவளின் இரண்டுக் கன்னத்திலும் இதழ் பதித்தான்.. அவளும் அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்..
அதை இரண்டு கண்கள் இரசனையுடன் நோக்கியது.. அதை கவிமலர் கவனிக்கவில்லை..
அதன்பிறகு ஆடிட்டர் ஆபீஸ் போய்விட்டு மாலை மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தாள்.. வீட்டைத் திறந்து தனது நனைந்த உடையை மாற்றிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்று, சூடாக டீ போட்டு எடுத்து வந்து ஹோலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்..
அந்தநேரம் வெளியே மழைக் கொட்டத் துவங்கியது.. அவளின் மனம் தான் காலையில் கண்ட கனவின் நினைவில் ஆழ்ந்தது..
கனவில் அவள் ஒரு புக் ஸ்டோரில் நிற்பது போல கனவுக் கண்டாள்..
கவிமலருக்கு நாவல் படிப்பது மிகவும் பிடிக்கும்.. ஆனால் புத்தகத்தில் படிப்பது அவளுக்கு இன்னும் பிடிக்கும்.. நாவல் வாங்க கடைக்கு சென்றாள் அவள்..
அவள் புத்தகத்தில் கவனம் செலுத்த தன்னை யாரோ பார்ப்பதுப் போல தோன்றவும், நிமிர்ந்துப் பார்த்தாள்.. அவளின் மனம் சொன்னது பொய் இல்லை.. அங்கே கதிர்நிலவன் நின்றிருந்தான்..
“கவிமலருக்கு கவிதை பிடிக்கும் என்று நினைத்தேன்.. நாவல்கள் கூட பிடிக்குமா..? இந்த நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. குறைந்தது 1௦௦ தடவைப் படித்திருப்பேன்.. இந்த என்னோட முதல் கிப்ட்..” என்று நாவலை அவளது கைகளில் கொடுத்தான்..
கவிமலர் திகைப்பிலிருந்து வெளியே வரவே இல்லை.. அவளின் கண்கள் அவனின் முகத்திலிருந்து அசைய மறுத்து சிலைப்போல நின்றிருந்தாள்..
அவனது பார்வை ‘சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா..?’ என நோட்டம் விட்டுவிட்டு, அவளின் அருகில் நெருங்கி நின்றவன்..
“ஏய்! இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ பார்வையை மாற்றிக் கொள்ளாமல் நின்றாய் என்றால், அப்புறம் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று அவன் அவளின் காதோரம் கிசுகிசுத்தான்..
அவன் சொல்ல நினைத்தை அவனது கைகள் தொட்டு மீண்டது.. அவளின் அழகிய இதழ்களை அவனது விரல்கள் வருடிச் சென்றது.. அவள் திகைப்பில் இருந்து மீண்டாள்.. அவளது பார்வை பயத்துடன் அந்த கடையைச் சுற்றி வந்தது..
அவளின் பயத்தைப் பார்த்தவன், “ இது சின்னக்கடை இங்கே கேமராவும் இல்லை.. அதும் இல்லாமல் இங்கே நான் நிற்பது யாருக்கும் தெரியாது..” என்று கூறினான் கதிர்நிலவன்..
“இந்த இதழை எனக்கே தந்துவிடு செல்லம்..” என்று கூறி உதட்டை இழுக்க, அவனது கையைத் தட்டிவிட்டவள்,
“கதிர் என்ன இது விளையாட்டு..” என்று அவனை விட்டு விலகிச்செல்லும் நேரத்தில் அவளின் கைகளைப்பிடித்து அவளின் விரல்களில் மோதிரத்தை மாட்டினான்..
அவளின் புறங்கையில் இதழ்பதித்து நிமிர்ந்த கதிர்நிலவன், அவளைப்பார்த்துக் கண்ணடித்து, “நிச்சயத்தார்த்தம் முடிந்தது.. இதற்கு சாட்சியாக இருக்கின்றன இங்கிருக்கும் பல காதல் நாவல்கள்..” என்றான்
“ஐ லவ் யூ கவிமலர்.. இந்த கவிமலர் படைக்கப்பட்டது இந்த கதிர்நிலவனுக்கே..! இந்த உரிமையுடன் கொடுக்கும் முதல் கிப்ட்..!” என்று அவளின் கைகளில் நாவல்களைக் கொடுத்தான்
“எனக்கு வேண்டாம்..” என்று அவனிடமிருந்து கைகளை உருவிக்கொண்டாள் கவிமலர்..
“கவிமலர் நீதான் இந்த ஜென்மத்தில் எனது மனைவி.. இந்த நாவல்களை வாங்கவில்லை என்றால், பக்கத்தில் கோவில் இருக்கிறது.. என்னிடம் தாலியும் இருக்கிறது.. உனக்கு வசதி எப்படி..?” என்று சிரித்தான் அவன்
“என்ன மிரட்டல் எல்லாம் பலமாக வருகிறது..” என்று எகிறினாள் கவிமலர்..
“நீ எனக்கு வேண்டும் கண்ணம்மா.. நீ மட்டும் தான் வேண்டும் புரிந்துக் கொள்ள முயற்சி செய்..” என்று கூறிவிட்டு நாவல்களை அவளின் அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு விலகிச் செல்ல அவளின் மனம் வலித்தது..
கண்களில் கண்ணீருடன் அந்த புத்தகங்களை எடுத்து பில் போட சென்றாள்..
“இந்தாங்க உங்களின் பில்..” என்று கொடுத்தார் கடைக்காரர்
“இந்தாங்க பணம்..” என்று கவிமலர் கடைக்காரரிடம் பணத்தைக் கொடுக்க, “அதை உன் கணவர் கொடுத்து விட்டார் கண்ணு..!” என்றார் அவர்..
அவர் சொன்னதை கவிமலரால் மறுத்துக் கூற முடியவில்லை.. அவளின் மனம் முழுவதும் அவனின் வசமே இருந்தது.. அவன் அணிவித்த மோதிரத்தை கைகளால் வருடினாள்..
அவளின் கண்ணீர் துளி ஒன்று அதன் மேல் பட்டுத் தெரித்தது.. அவனின் மனதில் நாம் மட்டுமே இருக்கிறோம் என்ற எண்ணம் உயிர்வரைத் தித்திக்க, கண்மூடி கண்ணீரை உதிர்த்தாள் அவள்..
அந்த கண்ணீரை இரண்டுக் கரங்கள் துடைத்தது.. அவனும் கண்களில் கண்ணீருடன், “எதுக்குடி என்ன இப்படி கொல்ற..?” என்று கேட்க கண்களைத் திறந்தாள் கவிமலர்..
அவளின் கண்களில் கண்ணீர் கோடாக வழிந்தது.. வெளியே மழை நின்று இருந்தது.. ஆனால் அவளின் மனம் அந்த கனவின் தாக்கத்திலேயே இருந்தது..
சரியாக அந்த நேரம் அவளின் அலைபேசி அழைத்தது.. அதில் ஒளிர்ந்த என்னைப் பார்த்து போனை எடுத்தாள் கவிமலர்..
“என்னடி பண்ணிட்டு இருக்கிறாய்..? ஒரு போன் எடுக்க இவ்வளவு நேரமா..?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் நிலா..
“ஐயோ கத்தாதே நிலா.. காது ஜவ்வு கிழிந்துவிட்டது.. லூசு இப்படியா கத்துவாய்..” என்று திட்டினாள் கவிமலர்
“சரி கத்தலை பதில் சொல்லுடி.. என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றாள் நிலா..
“மழையில் நன்றாக நனைந்த பிறகே வீட்டிற்கு வந்தேன்.. சுடச்சுட டீ போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன்..” என்றாள் கவிமலர்
“இன்னைக்கு ஒரே டென்ஷன்.. அதனின் தொடர்ச்சியாக தலைவலி சோ காபி குடிக்க வந்தேன்.. அதுதான் நீ என்ன பண்ற என்று கேட்கலாம் என்று போன் செய்தேன்..” என்றாள் நிலா
“என்ன டென்ஷன் நிலா.. நிலா குளிர்ச்சியாக இருப்பாள்.. ஆனால் இவ்வளவு ஹாட் என்று தெரியாதே.. ஆனால் இப்பொழுது தெரிந்து விட்டது..” என்று கவிமலர் யோசனையுடன் இழுக்க
“புதுசாக ஒரு டீம் லீடர் வந்திருக்கிறான்.. பெயர் என்ன தெரியுமா..?” என்று கேட்டாள் நிலா.. என்னமோ அவளுக்குத்தான் பதில் தெரிந்தது போல கோபமாகவே கேட்டாள்..
“தெரியாது தாயே நீயே சொல்லு..” என்றாள் அவள்
“முகிலன்..!” என்றாள் நிலா..
“முகிலன் – நிலா நல்ல பெயர் பொருத்தம்.. நூத்துக்கு தொண்ணூறு சதவிதம் சூப்பராக இருக்கிறது..” என்றாள் கலகலவென்று சிரித்தாள் கவிமலர்..
“கவி..?!” என்று பல்லைக் கடித்தாள் நிலா, “மகளே நீ மட்டும் என் கையில் கிடைத்தாய்.. உன்னிடம் பெயர் பொருத்தம் பார்க்க சொல்லி நான் கேட்டேனா..?” என்று கோபமாகக் கத்தினாள்..
அவளின் கத்துவதைப் பார்த்த சிலர் முகம் சுழித்தபடி அவளைக் கடந்து சென்றனர்.. ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை..
“நிலா ஜெஸ்ட் ரிலாக்ஸ்..” ஆனால் பேசிக்கொண்டிருந்த கவிமலர், நொடியில் கணித்து அவளை அமைதிப் படுத்தினாள்..
“இப்போது சொல்லுடி! தலைவலி எங்கே போனது..” என்றாள் கவிமலர்..
“கவி தலைவலி கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிகிறது..” என்றாள் நிலா முணுமுணுப்பாக கூறினாள்..
“முகிலன் மேல் இருந்த கோபம் அனைத்து மலரிடம் காட்டிவிட்டாய்.. மனதில் இருந்த குழப்பம் உன்னுடைய வாய் மூலம் வெளியே வந்துவிட்டது.. தலைவலிப் போய்விட்டது..” என்றாள் கவிமலர்
“இது ஒரு சின்ன ட்ரீட்மென்ட்.. மனதில் ஒன்றைப் போட்டுக் குழப்பும் போது தலைவலி வரும்.. அதை டைவேட் பண்ண.. இப்படியும் சில வழிமுறைகள்..” என்று வருத்தமாக கூறினாள்
“தேங்க்ஸ் கவி.. இப்பொழுது தலைவலி கொஞ்சம் பெட்டர்..” என்று சிறிதுநேரம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தாள் நிலா..
“ஹாய் செல்லம் என்னடா பண்ற..?” என்ற கேள்வியுடன் எதிரே வந்து அமர்ந்தான் முகிலன்..
முகிலனைப் பார்த்தவுடன் பல்லைக் கடித்த நிலா, “காபி சாப்பிட வந்தேன்.. அது உனக்கு பொறுக்கலையா..?” என்றாள் திரும்பவும் தலைவலி தலைக்கு ஏறக்கேட்டாள்
“அது என்னமோ தெரியல நிலா.. உன்னைப் பார்த்தால் மட்டும் என்னோட பொறுமை ரொம்ப தூரம் சென்றுவிடுகிறது..” என்று முகிலன் அவளின் முகத்தைப் பார்த்துப் புன்னகையுடன் கூறினான்..
“யாருடன் பேசிக்கோண்டு இருந்தாய்.. தப்பு தப்பு.. யாருடன் கத்திக் கொண்டிருந்தாய்..” என்று நிலாவை வம்பிற்கு இழுக்கவும் செய்தான் முகிலன்..
“என்னோட பிரிண்ட் கூட பேசிக்கொண்டு இருந்தேன்.. இந்த விளக்கம் உனக்கு ரொம்ப முக்கியமா..?” என்றாள் நிலா ஏளனமாகவே கேட்டாள்..
“இல்ல அந்த கத்துக் கத்திக்கொண்டு இருந்தாயே அதுதான் கேட்டேன்..” என்றான் முகிலன்..
‘எல்லாம் உன்னால் வந்த வினை.. தலைவலியால் அவள் விளையாட்டாக ஒன்று சொல்ல.. அவளைப் பிடித்துத் திட்டிவிட்டேன்..’ என்று மனதினுள் ரன்னிங் கமிட்ரி கொடுத்தாள்..
“என்ன நல்ல கரித்துக்கொட்டுகிற வாசனை வருகிறது..” என்றான் முகிலன்
“அதுதான் தெரியுதில்ல.. கரித்துக்கொட்டுகிறேன் என்று எழுந்து போக வேண்டியது தானே..” என்றாள் நிலா கோபமாகவே பேசினாள்
“இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதானே உன்னுடன் பழகுகிறேன்..” என்று சிரித்தான் முகிலன்..
அவனின் சிரிப்பைப் பார்த்து நிலவிற்கு பத்திக்கொண்டு வந்தது.. வந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினாள் அவள்.. இவளின் கோபத்தை ரசித்தபடியே அமர்ந்திருந்தான் முகிலன்..
‘நிலவிற்கு கோபம் வருகிறதே..?! கோபத்தில் கூட நீ அழகாகவே இருக்கிறாய்..’ என்று நினைத்தான் முகிலன்..