அத்தியாயம் – 5
அவளின் நினைவுகள் அனைத்து அவளின் அனுமதி இன்றி காலையில் கண்ட கனவின் நினைவுகளைத் தேடிச் சென்றது..
அதே கோவிலில் இறைவனை தரிசித்துவிட்டு வந்து அமர்ந்தாள் கவிமலர்..
“என்ன சுவாமி தரிசனம் முடிந்ததா..? என்ன வேண்டிக் கொண்டாய்..?” என்று கேட்டபடியே அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.. அவள் அவனின் குரலின் மூலமே தெரிந்தது வந்தது கதிர்நிலவனே என்று கண்டுக் கண்டாள்..
“என்ன பெருமாளைப் பார்க்க வந்தால், அனுமார் இடையே வருகிறார்..? என்ன ஏதாவது புதிய வேண்டுதாலா..?” என்று அவனை குரங்கு என்று கேலி செய்தாள் கவிமலர்..
“நான் உன் கண்களுக்கு அனுமாராகவா தெரிகிறேன்.. ராமன் போல தெரியவில்லையா..?” என்றான் அவன் சோகமாக
அவனின் முகத்தைப் பார்த்த கவிமலர், “எனக்கு ராமனும் வேண்டாம்.. கண்ணனும் வேண்டாம்..” என்று அவள் முடிக்கும் முன்னே..
“கதிர்நிலவன் தான் வேண்டும் என்கிறாய்..!”என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை நிறைவு செய்தான் கதிர்நிலவன்...!
“இல்லையே..” என்று அவன் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுத்தாள் கவிமலர்..
“என்ன இல்லையே..?” என்று அவளுடன் வம்புக்கு இழுத்தான் அவன்
“எனக்கு நான் மட்டும் போதும்..” என்றாள் கவிமலர் புன்னகையுடன்..!
“நான் இருப்பது உன்னில் தானே..! அதனால்தான் உனக்கு நீயே போதும் என்று சொல்கிறாய்..” என்று அவளின் முகம் பார்த்தான் கதிர்நிலவன்..
அவன் சொன்னது உண்மையே என்று அவனுக்கு கூறியது அவளின் சிவந்த கன்னங்கள்..!
ஆனால் அதையும் மீறிய ஒரு சோகம் அவள் கண்களில் இருந்ததை அவன் குறித்துக் கொண்டான்..!
அவளின் அருகில் அமர்ந்தவன், “நீ குங்குமம் வைக்க வில்லையா..?” என்ற கேள்வியுடன் கோவிலில் கொடுத்த குங்குமத்தை அவளின் பிறை நெற்றியில் வைக்க அவளின் மேனி சிலிர்த்தது..
“இந்த நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் பாக்கியத்தை எனக்கு மட்டும் கொடு கடவுளே..!” என்று அவன் சத்தமாக வேண்டிக்கொள்ள,
“ஹா..ஹா..”என்று அவனைப் பார்த்து சிரித்தாள்..
“மலர் சிரிக்காதே..” என்றான் அவன்
“மலர்கள் என்று சிரிக்காமல் இருந்திருக்கிறது..?” என்று கேட்டு மீண்டும் சிரித்தாள்..
“அந்த மலர்கள் சிரிக்கலாம்.. இந்த மலர் என்னை கேலிச்செய்து சிரிக்க கூடாது..” என்று கூறினான்..
“ம்ஹும்..” என்றவள் அவனை நோக்க, “ஏய்! இது கோவில்..!” என்றான் கதிர்நிலவன் மையல்கொண்டு கூறினான்..
அவனின் பார்வையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து உதட்டைக் கடிக்க, “அதை எதற்கு கடிக்கிற.. பாவம் விட்டுவிடு..” என்று கூறினான்.
அவள் அமைதியாக அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து, “இந்த கோவிலில் நமது திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்..?” என்று கண்களில் கனவு மின்ன கூறினான் கதிர்நிலவன்..
“நடக்காத ஒன்றை எதற்கு கனவாக காண்கிறீர்கள்..?” என்று வெடுக்கென்று கேட்டாள் கவிமலர்..
அவளின் கேள்வியில் புருவம் உயர்த்தி பார்த்தவன், “உண்மையைச் சொல்லு மலர்..? நானா கனவு காண்கிறேன்.. நீதான் கனவு காண்கிறாய்..” என்று கூறினான் அவன்
அவன் சொன்னதைக்கேட்டு திகைத்தவள் கனவு கலந்து எழுந்து அமர்ந்தாள்.. அவன் சொன்னதே அவளின் மனதில் நின்றது..
“நடக்காத ஒரு விஷயத்தை நமது ஆழ்மனம் எவ்வாறு விரும்பியது.. அது ஒரு கனவு என்று மூளைக்கு தெரிந்தாலும், மனது அதை ஒப்புக்கொள்ள மறுத்தது..”
“அது ஒரு கற்பனை உருவம்..” என்று மனதிடம் கூறினாள் அவள்..
“இல்லை நீ சொல்வது பொய்.. அவன் இருக்கிறான்.. எனக்காக வருவான்..” என்றது அவளின் மனம்..
“இல்ல..!” என்று கத்திய வாய்திறக்கும் பொழுதுதான் தான் இருக்கும் இடத்தின் என்பது நினைவு வந்தது.. கோவிலில் அமர்ந்தும் மனம் அமைதி இன்றி தவித்தது..
“அப்பொழுது கடிதத்தில் வந்த கனவுகாதலன் யார்..?” என்று கேட்டது அவளின் மனம்..
“இதற்கு என்ன பதில் சொல்வது..?” என்று பதில் தெரியாமல் தவித்தாள் அவள்
மனம் சொன்ன இரண்டையும் ஏற்க மறுத்து தலையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்..
‘அவனின் மீது தான் கொண்ட நேசம் உண்மை.. அதில் மாற்றம் இல்லை.. அதேபோல கனவுகாதலன் மீதும் கோபம் வரவில்லை.. குழப்பம்தான் வருகிறது.. நான் என்ன செய்ய..?’ என்று அமர்ந்திருந்தாள் அவள்
அவளுக்கு கடிதத்தைப் போட்டு, அவளைக் குழப்பத்தில் தவிக்க விட்டவன் சிறிதும் தயக்கம் இன்றி தனது தொழிலில் ஈடுபட்டான் கதிர்நிலவன்..
அன்றாட வேலையில் ஈடுபட்ட கதிர்நிலவன் கணக்குகளை சரிபார்க்க அதில் இருந்த குளறுபடியில் அவனுக்கு தலைவலிதான் வந்தது..
தனது கைபேசியை எடுத்தவன், அகிலனுக்கு அழைத்தான்.. அகிலன் அறைக்கதவைத் தட்டி, அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே வந்தான்..
“என்னடா நடந்தது..? கணக்கில் இத்தனை குளறுபடிகள்..? தலையும் புரியல.. வாலும் புரியல.. கணக்குகளை சரியாக ஒரு ஆடார் இல்லாமல் இருக்கிறது..” என்றான் கோபமாக கத்தினான்..
“யார் இந்த கணக்கை எழுதியது..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..
“கதிர்..” என்று இழுத்தான் அகிலன்..
“என்ன இழுக்கிறாய்..? சொல்லவந்ததை நிறுத்தாமல் சொல்லு..” என்று அகிலனை அதட்டினான் கதிர்நிலவன்..
“நிஷாதான் கணக்கை எழுதியது.. இத்தனை குளறுபடிக்கும் அவளே காரணம்..” என்றான் அகில் நிலவனைப் பார்த்து கூறினான்
அவனை நிமிர்ந்துப் பார்த்தவன், “அவளை இங்கே வரசொல்லு.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவன் “இன்னும் ஒருவாரத்தில் கணக்கில் இருக்கும் குளறுபடியைச் சரிசெய்து தரவேண்டும் அகில்..” என்று அழுத்தமாக கூற அதன் உட்பொருள் புரிந்துக் கொண்டு சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்த அகிலன்..
நிஷா இருக்கும் இடத்திற்குச் சென்றவன், “நிஷா உன்னை கதிர்நிலவன் கூப்பிட்டான்..” என்று கூறிவிட்டுச் சென்றான்..
உடனே எழுந்து கதிர்நிலவன் அறைக்குள் சென்றாள் நிஷா.. உள்ளே சென்றவளைக் கேள்வியாகப் பார்த்தான் கதிர்நிலவன்.. அவனின் பார்வைக்கு சலிக்காமல் எதிர்ப் பார்வைப் பார்த்தாள் அவள்..
“நிஷா என்ன பண்ணி வைத்திருக்கிறாய்..? கணக்கை எதற்கு இப்படி குளறுபடி செய்து வைத்திருக்கிறாய்..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “ஏன் நிச்சயதார்த்தத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்தாய்...?” என்று எதிர்கேள்விக் கேட்டாள் நிஷா..
அவளது கேள்வியில் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியவன், “அப்போ அம்மா சொன்னது உண்மைதானா..?” என்றவன், “உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை.. அதுதான் காரணம்..!” என்றான் கதிர்நிலவன் அழுத்தமாக கூறினான்..
“அப்போ என்னோட பதில் இதுதான்.. நீயாக நிச்சயத்தார்த்தத்திற்கு ஓகே சொல்லும் வரையில் எனது வேலையை நான் இப்படித்தான் செய்வேன்..” என்று அதிகாரமாக கூறினாள் நிஷா..
“நிஷா நீ லிமிட் தாண்டிப் பேசுகிறாய்.. உனக்கு நிச்சயத்தார்த்தம் நடக்கணும் அவ்வளவு தானே..?” என்றான் கதிர்நிலவன் நிஷாவைப் பார்த்தபடியே..! அவளும் ‘ஆமாம்’ என்று தலையாட்டா..
“நான் நிச்சயத்தார்த்தத்திற்கு சம்மதிக்கிறேன்..” என்று கதிர்நிலவன் முடிக்கும் முன்னே, அவளின் முகம் புன்னகையில் மலர “தேங்க்ஸ் கதிர்..!” என்று நிஷா..
அவளின் “இரும்மா நான் இன்னும் முடிக்கவில்லை.. நிச்சயம் உன்னோடுதான் அதில் மாற்றம் இல்லை.. ஆனால் திருமணம் நான் விரும்புகின்ற பெண்ணோடுதான்.. ஓகே! இதில் உனக்கு சம்மதம் என்றால் நானும் இந்த நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிக்கிறேன்..!” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன்..! அவன் சொன்னதைக்கேட்டு அவளின் முகம் மாறியது..
“என்ன கதிர் விளையாடுகிறாயா...?” என்றாள் நிஷா அவளின் முகத்தில் கோபத்தில் முகம் சிவக்க, பெண்புலியாக மாறியவள் கதிரின் முன்னே நின்றிருந்தாள்..
“இல்லையே..! திருமணம் என்று முடிவாகும் முன்னர் என்னை இந்த அதிகாரம் செய்பவள். என்னை திருமணம் செய்தபிறகு என்னுடைய அம்மா-அப்பாவை நீ எவ்வாறு அதிகாரம் செய்வாய்.. அவர்களுக்கு என்று இருந்த ஒரே ஆசை.. நான் அவர்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதே.. ஆனால் அந்த ஆசையும் எனக்காக விட்டுக் கொடுத்துவிட்டனர்.. ஸோ, அவர்களுக்கு ஏற்ற மருமகளை நான் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது நான் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.. அந்த பொண்ணு நீ கிடையாது..” என்று கூறினான் கதிர்நிலவன்..
“கதிர் நீ எந்த பெண்ணை திருமணம் செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்..” என்று கோபமாகக் கத்தினாள் நிஷா
“ஜெஸ்ட் ஸ்டாப் இட்.. நீ இங்கிருந்து போகலாம்.. உனக்கு இனிமேல் இங்கு எந்த வேலையும் கிடையாது.. நீ வெளியே போகலாம்..” என்று அமைதியாக கூறினான் கதிர்நிலவன்..
அவனை ஒருமுறை பார்த்தவள், ‘நீ எப்படி திருமணம் செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்..’ என்று மனதில் கருவியவள், வெளியே சென்றாள்.. நிஷாவின் மனதில் வளர்ந்த வன்மத்தை அறியாமல் வேலையில் ஈடுபட்டான் கதிர்நிலவன்...
அவளின் நினைவுகள் அனைத்து அவளின் அனுமதி இன்றி காலையில் கண்ட கனவின் நினைவுகளைத் தேடிச் சென்றது..
அதே கோவிலில் இறைவனை தரிசித்துவிட்டு வந்து அமர்ந்தாள் கவிமலர்..
“என்ன சுவாமி தரிசனம் முடிந்ததா..? என்ன வேண்டிக் கொண்டாய்..?” என்று கேட்டபடியே அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.. அவள் அவனின் குரலின் மூலமே தெரிந்தது வந்தது கதிர்நிலவனே என்று கண்டுக் கண்டாள்..
“என்ன பெருமாளைப் பார்க்க வந்தால், அனுமார் இடையே வருகிறார்..? என்ன ஏதாவது புதிய வேண்டுதாலா..?” என்று அவனை குரங்கு என்று கேலி செய்தாள் கவிமலர்..
“நான் உன் கண்களுக்கு அனுமாராகவா தெரிகிறேன்.. ராமன் போல தெரியவில்லையா..?” என்றான் அவன் சோகமாக
அவனின் முகத்தைப் பார்த்த கவிமலர், “எனக்கு ராமனும் வேண்டாம்.. கண்ணனும் வேண்டாம்..” என்று அவள் முடிக்கும் முன்னே..
“கதிர்நிலவன் தான் வேண்டும் என்கிறாய்..!”என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை நிறைவு செய்தான் கதிர்நிலவன்...!
“இல்லையே..” என்று அவன் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுத்தாள் கவிமலர்..
“என்ன இல்லையே..?” என்று அவளுடன் வம்புக்கு இழுத்தான் அவன்
“எனக்கு நான் மட்டும் போதும்..” என்றாள் கவிமலர் புன்னகையுடன்..!
“நான் இருப்பது உன்னில் தானே..! அதனால்தான் உனக்கு நீயே போதும் என்று சொல்கிறாய்..” என்று அவளின் முகம் பார்த்தான் கதிர்நிலவன்..
அவன் சொன்னது உண்மையே என்று அவனுக்கு கூறியது அவளின் சிவந்த கன்னங்கள்..!
ஆனால் அதையும் மீறிய ஒரு சோகம் அவள் கண்களில் இருந்ததை அவன் குறித்துக் கொண்டான்..!
அவளின் அருகில் அமர்ந்தவன், “நீ குங்குமம் வைக்க வில்லையா..?” என்ற கேள்வியுடன் கோவிலில் கொடுத்த குங்குமத்தை அவளின் பிறை நெற்றியில் வைக்க அவளின் மேனி சிலிர்த்தது..
“இந்த நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் பாக்கியத்தை எனக்கு மட்டும் கொடு கடவுளே..!” என்று அவன் சத்தமாக வேண்டிக்கொள்ள,
“ஹா..ஹா..”என்று அவனைப் பார்த்து சிரித்தாள்..
“மலர் சிரிக்காதே..” என்றான் அவன்
“மலர்கள் என்று சிரிக்காமல் இருந்திருக்கிறது..?” என்று கேட்டு மீண்டும் சிரித்தாள்..
“அந்த மலர்கள் சிரிக்கலாம்.. இந்த மலர் என்னை கேலிச்செய்து சிரிக்க கூடாது..” என்று கூறினான்..
“ம்ஹும்..” என்றவள் அவனை நோக்க, “ஏய்! இது கோவில்..!” என்றான் கதிர்நிலவன் மையல்கொண்டு கூறினான்..
அவனின் பார்வையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து உதட்டைக் கடிக்க, “அதை எதற்கு கடிக்கிற.. பாவம் விட்டுவிடு..” என்று கூறினான்.
அவள் அமைதியாக அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து, “இந்த கோவிலில் நமது திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்..?” என்று கண்களில் கனவு மின்ன கூறினான் கதிர்நிலவன்..
“நடக்காத ஒன்றை எதற்கு கனவாக காண்கிறீர்கள்..?” என்று வெடுக்கென்று கேட்டாள் கவிமலர்..
அவளின் கேள்வியில் புருவம் உயர்த்தி பார்த்தவன், “உண்மையைச் சொல்லு மலர்..? நானா கனவு காண்கிறேன்.. நீதான் கனவு காண்கிறாய்..” என்று கூறினான் அவன்
அவன் சொன்னதைக்கேட்டு திகைத்தவள் கனவு கலந்து எழுந்து அமர்ந்தாள்.. அவன் சொன்னதே அவளின் மனதில் நின்றது..
“நடக்காத ஒரு விஷயத்தை நமது ஆழ்மனம் எவ்வாறு விரும்பியது.. அது ஒரு கனவு என்று மூளைக்கு தெரிந்தாலும், மனது அதை ஒப்புக்கொள்ள மறுத்தது..”
“அது ஒரு கற்பனை உருவம்..” என்று மனதிடம் கூறினாள் அவள்..
“இல்லை நீ சொல்வது பொய்.. அவன் இருக்கிறான்.. எனக்காக வருவான்..” என்றது அவளின் மனம்..
“இல்ல..!” என்று கத்திய வாய்திறக்கும் பொழுதுதான் தான் இருக்கும் இடத்தின் என்பது நினைவு வந்தது.. கோவிலில் அமர்ந்தும் மனம் அமைதி இன்றி தவித்தது..
“அப்பொழுது கடிதத்தில் வந்த கனவுகாதலன் யார்..?” என்று கேட்டது அவளின் மனம்..
“இதற்கு என்ன பதில் சொல்வது..?” என்று பதில் தெரியாமல் தவித்தாள் அவள்
மனம் சொன்ன இரண்டையும் ஏற்க மறுத்து தலையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்..
‘அவனின் மீது தான் கொண்ட நேசம் உண்மை.. அதில் மாற்றம் இல்லை.. அதேபோல கனவுகாதலன் மீதும் கோபம் வரவில்லை.. குழப்பம்தான் வருகிறது.. நான் என்ன செய்ய..?’ என்று அமர்ந்திருந்தாள் அவள்
அவளுக்கு கடிதத்தைப் போட்டு, அவளைக் குழப்பத்தில் தவிக்க விட்டவன் சிறிதும் தயக்கம் இன்றி தனது தொழிலில் ஈடுபட்டான் கதிர்நிலவன்..
அன்றாட வேலையில் ஈடுபட்ட கதிர்நிலவன் கணக்குகளை சரிபார்க்க அதில் இருந்த குளறுபடியில் அவனுக்கு தலைவலிதான் வந்தது..
தனது கைபேசியை எடுத்தவன், அகிலனுக்கு அழைத்தான்.. அகிலன் அறைக்கதவைத் தட்டி, அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே வந்தான்..
“என்னடா நடந்தது..? கணக்கில் இத்தனை குளறுபடிகள்..? தலையும் புரியல.. வாலும் புரியல.. கணக்குகளை சரியாக ஒரு ஆடார் இல்லாமல் இருக்கிறது..” என்றான் கோபமாக கத்தினான்..
“யார் இந்த கணக்கை எழுதியது..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..
“கதிர்..” என்று இழுத்தான் அகிலன்..
“என்ன இழுக்கிறாய்..? சொல்லவந்ததை நிறுத்தாமல் சொல்லு..” என்று அகிலனை அதட்டினான் கதிர்நிலவன்..
“நிஷாதான் கணக்கை எழுதியது.. இத்தனை குளறுபடிக்கும் அவளே காரணம்..” என்றான் அகில் நிலவனைப் பார்த்து கூறினான்
அவனை நிமிர்ந்துப் பார்த்தவன், “அவளை இங்கே வரசொல்லு.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவன் “இன்னும் ஒருவாரத்தில் கணக்கில் இருக்கும் குளறுபடியைச் சரிசெய்து தரவேண்டும் அகில்..” என்று அழுத்தமாக கூற அதன் உட்பொருள் புரிந்துக் கொண்டு சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்த அகிலன்..
நிஷா இருக்கும் இடத்திற்குச் சென்றவன், “நிஷா உன்னை கதிர்நிலவன் கூப்பிட்டான்..” என்று கூறிவிட்டுச் சென்றான்..
உடனே எழுந்து கதிர்நிலவன் அறைக்குள் சென்றாள் நிஷா.. உள்ளே சென்றவளைக் கேள்வியாகப் பார்த்தான் கதிர்நிலவன்.. அவனின் பார்வைக்கு சலிக்காமல் எதிர்ப் பார்வைப் பார்த்தாள் அவள்..
“நிஷா என்ன பண்ணி வைத்திருக்கிறாய்..? கணக்கை எதற்கு இப்படி குளறுபடி செய்து வைத்திருக்கிறாய்..?” என்று கேட்டான் கதிர்நிலவன்..
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “ஏன் நிச்சயதார்த்தத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்தாய்...?” என்று எதிர்கேள்விக் கேட்டாள் நிஷா..
அவளது கேள்வியில் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியவன், “அப்போ அம்மா சொன்னது உண்மைதானா..?” என்றவன், “உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை.. அதுதான் காரணம்..!” என்றான் கதிர்நிலவன் அழுத்தமாக கூறினான்..
“அப்போ என்னோட பதில் இதுதான்.. நீயாக நிச்சயத்தார்த்தத்திற்கு ஓகே சொல்லும் வரையில் எனது வேலையை நான் இப்படித்தான் செய்வேன்..” என்று அதிகாரமாக கூறினாள் நிஷா..
“நிஷா நீ லிமிட் தாண்டிப் பேசுகிறாய்.. உனக்கு நிச்சயத்தார்த்தம் நடக்கணும் அவ்வளவு தானே..?” என்றான் கதிர்நிலவன் நிஷாவைப் பார்த்தபடியே..! அவளும் ‘ஆமாம்’ என்று தலையாட்டா..
“நான் நிச்சயத்தார்த்தத்திற்கு சம்மதிக்கிறேன்..” என்று கதிர்நிலவன் முடிக்கும் முன்னே, அவளின் முகம் புன்னகையில் மலர “தேங்க்ஸ் கதிர்..!” என்று நிஷா..
அவளின் “இரும்மா நான் இன்னும் முடிக்கவில்லை.. நிச்சயம் உன்னோடுதான் அதில் மாற்றம் இல்லை.. ஆனால் திருமணம் நான் விரும்புகின்ற பெண்ணோடுதான்.. ஓகே! இதில் உனக்கு சம்மதம் என்றால் நானும் இந்த நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிக்கிறேன்..!” என்றான் கதிர்நிலவன் புன்னகையுடன்..! அவன் சொன்னதைக்கேட்டு அவளின் முகம் மாறியது..
“என்ன கதிர் விளையாடுகிறாயா...?” என்றாள் நிஷா அவளின் முகத்தில் கோபத்தில் முகம் சிவக்க, பெண்புலியாக மாறியவள் கதிரின் முன்னே நின்றிருந்தாள்..
“இல்லையே..! திருமணம் என்று முடிவாகும் முன்னர் என்னை இந்த அதிகாரம் செய்பவள். என்னை திருமணம் செய்தபிறகு என்னுடைய அம்மா-அப்பாவை நீ எவ்வாறு அதிகாரம் செய்வாய்.. அவர்களுக்கு என்று இருந்த ஒரே ஆசை.. நான் அவர்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதே.. ஆனால் அந்த ஆசையும் எனக்காக விட்டுக் கொடுத்துவிட்டனர்.. ஸோ, அவர்களுக்கு ஏற்ற மருமகளை நான் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது நான் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.. அந்த பொண்ணு நீ கிடையாது..” என்று கூறினான் கதிர்நிலவன்..
“கதிர் நீ எந்த பெண்ணை திருமணம் செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்..” என்று கோபமாகக் கத்தினாள் நிஷா
“ஜெஸ்ட் ஸ்டாப் இட்.. நீ இங்கிருந்து போகலாம்.. உனக்கு இனிமேல் இங்கு எந்த வேலையும் கிடையாது.. நீ வெளியே போகலாம்..” என்று அமைதியாக கூறினான் கதிர்நிலவன்..
அவனை ஒருமுறை பார்த்தவள், ‘நீ எப்படி திருமணம் செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்..’ என்று மனதில் கருவியவள், வெளியே சென்றாள்.. நிஷாவின் மனதில் வளர்ந்த வன்மத்தை அறியாமல் வேலையில் ஈடுபட்டான் கதிர்நிலவன்...