அத்தியாயம் – 6
காலையில் வழக்கத்திற்கும் மாறாக வேலைக்கு சீக்கிரம் வந்த நிலா சீட்டில் அமர்ந்த பின்னும் அவளின் கண்கள் வாசலிலேயே நிலைத்து நின்றது...
அவளின் கண்களில் தேடல் இருந்தது.. ‘அவன் வருகிறானா..?!’ என்று கண்கள் இங்கும் அங்கும் அலைபாய.. அவளின் மனம் அவனுக்காக தவித்தது..
‘ஒரு வேலை அவனுக்கு உடம்புக்கு சரியில்லையே..? நேற்று நன்றாகத்தானே இருந்தான்.. ஏன் இன்னும் வரவில்லை..?’ என்று தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டு வாயிலைப் பார்த்தவண்ணம் வேலையைப் பார்த்தாள் நிலா..
ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள்.. வழக்கத்திற்கும் மாறாக தான் சீக்கிரம் வந்ததை மறந்துவிட்டால் போல..?!
‘அவன் வரமாட்டான்’ என்று உறுதியாக நினைத்தவள் தனது வேலையில் கவனத்தை செலுத்தினாள் நிலா..
அவள் வருவாள் என்று இதுவரை பார்த்துவிட்டு வரமாட்டாள் என்று நினைத்தவன் ஆபீஸிற்குள் நுழைய, அங்கு அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து ஒரு நிமிடம் நிம்மதியாக உணர்ந்தவன்..
மறுநிமிடமே, ‘ராச்சசி இங்கு வந்து உட்காந்திருக்கிறாள் பாரு.. என்னை அலைய விடுவதில் அலாதியான நிம்மதி.. அவ்வளவு சந்தோசம் இவளுக்கு..’ என்று மனதில் அவளைத் தாளித்தான் முகிலன்..
தனது முழு கவனத்தையும் செலுத்திய நிலா, முகிலனின் வரவைக் கவனிக்கவே இல்லை.. ‘ஒருத்தன் இன்னும் ஆபிசிற்கு வழியில்லையே என்ன ஆச்சோ..? என்ற தவிப்பு சிறிதும் இருக்கிறதா பாரு..? நல்ல செதுக்கி வைத்த சிலைபோல அமர்ந்திருக்கிறாள்..’ அதற்கும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தான் முகிலன்..
ஆனால் அவனது பார்வையைக் கூட உணராமல் இருந்தாள் நிலா.. சிறிது நேரத்தில் வேலையை முடித்தவள்.. அன்று வேலைக்கு லீவ் சொல்லிவிட்டு நிமிர்ந்துப் பார்க்காமல் சென்றுவிட்டாள்..
‘என்ன வந்து ஒருமணிநேரம் கூட இல்லை.. அதற்குள் லீவ் சொல்லிவிட்டு எங்கே செல்கிறாள்..?’ என்ற யோசனையுடன் டூ ஹௌர்ஸ் பர்மிஷன் போட்டுவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான் முகிலன்..
அவள் நேராக ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்றாள்.. ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றவள் ஆடார் கொடுத்துவிட்டு, செல்லை எடுத்து இரயில் டிக்கெட் புக் செய்தாள்..
இரயில் டிக்கெட் பதிவு செய்துவிட்டு நிமிர்ந்தவள், தனது எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்து உடனே முகம் மலர்ந்தது.. ஆனால் அதை நொடிப்பொழுதில் மறைத்துக்கொண்டு கண்டுக்காதது போல அமர்ந்திருந்தாள் நிலா..
ரெஸ்டாரண்ட் உள்ளே வந்ததிலிருந்து அவளின் அசைவுகளைக் கவனித்த முகிலன், “நிலா..?!” என்று அழைக்க.. அதற்கெனவே காத்திருந்த நிலா, “இங்கும் வந்து விட்டீர்களா..? உனக்கு என்னதான் வேண்டும் முகிலன்..?” என்றாள் அவள்
“உன்னைப் பார்க்க ஒன்றும் வரவில்லை.. இங்கே தேவியின் தரிசனம் பார்க்க வந்தேன்..” என்றான் முகிலன்..
“என்னது..?! ரெஸ்டாரண்டில் தேவியின் தரிசனமா..?!” என்றாள் நிலா திகைப்புடன்..
“இதோ பாலாவே வந்துவிட்டாள்..” என்று கூறியவன், “ஹாய் பாலா..” என்றான் முகிலன்..
அவனின் அழைப்பைப் பார்த்து அவன் பார்வை சென்ற திசையை நோக்கிய நிலா, அங்கே தேவிபாலா வருவதைப் பார்த்தவள் கோபம் வந்தது.. நிலவிற்கு வந்த கோபத்திற்கு அவனை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல இருந்தது..
அவளின் கோபத்தைப் பார்த்த முகிலன், ‘நான் எப்படி தவித்து இருப்பேன்.. நீ கொஞ்சமாவது என்னை நிமிர்ந்துப் பார்த்திருப்பா..?’ என்று நினைத்தவன்..
அவன் பார்வையின் பொருளை புரித்துக் கொண்ட நிலா, ‘உன்னை நினைக்காமல் இருந்ததால் தான் அதிசயம்..’ என்று அவனின் பார்வைக்கு பதில் கொடுத்தாள் மனதில்..!
அதற்குள் அவனின் அருகில் வந்த தேவிபாலா, “ஹாய் முகிலன்.. மெயிலில் உங்களின் போட்டோ பார்த்தேன்..” என்று அவனின் அருகில் அமர்ந்தாள்..
அதை கவனித்த நிலவின் முகம் வாடியது.. அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து முகிலனுக்குதான் மனம் வலித்தது.. மேலும் அவளின் முகம் வாடுவதைப் பார்த்து எழுந்து சென்று விடலாமா என்று கூட தோன்றியது..
அந்தநேரம் நிலாவின் செல் அடிக்க, அதை எடுத்தவள், “ஹலோ கவி! வாட் எ சப்ரைஸ்.. நீயே கால் பண்ணிருக்க..?” என்று தன்னை சமாளித்துக்கொண்டு பேசினாள் நிலா.. என்னதான் அவள் சமாளித்தாலும் அவளின் குரலில் சிறிது தடுமாற்றம் இருக்கவே செய்தது.. ஆனால் எதிரே இருந்த இருவரையும் மறந்தாள் நிலா..
அவளின் குரலில் இருந்த மாறுதலைக் கண்டுக் கொண்ட கவிமலர், “நிலா என்னடி குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது..?” என்று கேட்க,
“நான் உன்னிடம் திருக்குறள் சொல்லவில்லையே கவி.. அப்புறம் எப்படி குறள் மாதிரியாக இருப்பதாக கூறுகிறாய்..?” என்று சிரித்தாள் நிலா..
“பெரிய கவிஞர் என்று நினைப்பு..? கவியிடமே உனது கவியைக் காட்டுகிறாய்..? நான் திருக்குறளை சொல்லவில்லை..” என்றாள் கவிமலர்..
“அப்புறம்..?” என்றாள் நிலா குழப்பமாகவே கேட்டாள்..
“உன்னோட சொந்த குரலில் என்ன மாற்றம் என்று கேட்டேன்..” என்றாள் கவிமலர்..
“எல்லாம் மாறிப்போனது..” என்றாள் நிலா இருப்பொருள் பட கூறினாள்.. முகிலன் புருவம் உயர்த்திப் பார்த்ததை, நிலா கண்டுக்கொள்ளவே இல்லை..
“குரல் மாறிவிட்டதா..? இல்லை திருக்குறளே மறந்து விட்டதா..?” என்று கேலி செய்தாள் கவிமலர்..
“ஒரு ‘ர’ மாற்றினால் இத்தனை பிரச்சனை வருகிறது.. எனது குரல் நன்றாக இருக்கிறது.. திருக்குறளும் மறக்கவில்லை.. நீ எதற்கு போன் செய்தாய்..? அதை சொல்லு முதலில்..?” என்றாள் நிலா புன்னகையுடன்...!
“நீ ஏன் எனக்கு போன் செய்யவில்லை..?” என்று குறைப்பட்டாள் கவிமலர்..
“என்னடா தினமும் நாம் மட்டும் போன் செய்கிறோம்.. இவள் நமக்கு அழைப்பதே இல்லை.. ஒருவேளை நாம் ரொம்ப தொந்தரவு செய்கிறோமோ..? என்று நினைத்தேன்..” என்றாள் நிலா கேலியாகவே..!
“நிலா நீ என்னை தொந்தரவு செய்வதாக நான் சொன்னேனா..?” என்று வருத்ததுடன் கூறினாள் கவிமலர்..
“நீ அப்படி சொல்லவில்லை.. நான் அப்படி நினைத்துக் கொண்டேன் போதுமா..! இனிமேல் அப்படி நினைக்க மாட்டேன்..” என்று சிரித்தவள்..
“நீ ஆடிட்டர் ஆபீஸ் போகவில்லையா..?” என்றாள் நிலா..
“குறுக்கு விசாரணை செய்கிறாய்..?” என்று சிரித்தவள்.. “இந்த விசாரணையை நான் செய்ய வேண்டும் நிலா செல்லம்.. நீ ஆபீஸ் போகவில்லையா..?” என்று கேட்டாள் கவிமலர்..
“இல்லடா.. போகவே இல்லை.. அப்பா போன் செய்தார்.. உடனே மும்பை கிளம்பி வரச்சொல்லி ஆடார்..” என்று சிரித்தவள், “டிக்கெட் புக் பண்ணிவிட்டேன்.. எனக்கு ப்ரஜெக்ட் வொர்க் முடிந்தது.. நாளைக்கு அங்கே இருப்பேன்..” என்றாள் நிலா.. ஆனால் அவள் அங்கே என்றதை இருவரும் தவறாகப் புரிந்துக் கொண்டனர்..
காலையில் வழக்கத்திற்கும் மாறாக வேலைக்கு சீக்கிரம் வந்த நிலா சீட்டில் அமர்ந்த பின்னும் அவளின் கண்கள் வாசலிலேயே நிலைத்து நின்றது...
அவளின் கண்களில் தேடல் இருந்தது.. ‘அவன் வருகிறானா..?!’ என்று கண்கள் இங்கும் அங்கும் அலைபாய.. அவளின் மனம் அவனுக்காக தவித்தது..
‘ஒரு வேலை அவனுக்கு உடம்புக்கு சரியில்லையே..? நேற்று நன்றாகத்தானே இருந்தான்.. ஏன் இன்னும் வரவில்லை..?’ என்று தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டு வாயிலைப் பார்த்தவண்ணம் வேலையைப் பார்த்தாள் நிலா..
ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள்.. வழக்கத்திற்கும் மாறாக தான் சீக்கிரம் வந்ததை மறந்துவிட்டால் போல..?!
‘அவன் வரமாட்டான்’ என்று உறுதியாக நினைத்தவள் தனது வேலையில் கவனத்தை செலுத்தினாள் நிலா..
அவள் வருவாள் என்று இதுவரை பார்த்துவிட்டு வரமாட்டாள் என்று நினைத்தவன் ஆபீஸிற்குள் நுழைய, அங்கு அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து ஒரு நிமிடம் நிம்மதியாக உணர்ந்தவன்..
மறுநிமிடமே, ‘ராச்சசி இங்கு வந்து உட்காந்திருக்கிறாள் பாரு.. என்னை அலைய விடுவதில் அலாதியான நிம்மதி.. அவ்வளவு சந்தோசம் இவளுக்கு..’ என்று மனதில் அவளைத் தாளித்தான் முகிலன்..
தனது முழு கவனத்தையும் செலுத்திய நிலா, முகிலனின் வரவைக் கவனிக்கவே இல்லை.. ‘ஒருத்தன் இன்னும் ஆபிசிற்கு வழியில்லையே என்ன ஆச்சோ..? என்ற தவிப்பு சிறிதும் இருக்கிறதா பாரு..? நல்ல செதுக்கி வைத்த சிலைபோல அமர்ந்திருக்கிறாள்..’ அதற்கும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தான் முகிலன்..
ஆனால் அவனது பார்வையைக் கூட உணராமல் இருந்தாள் நிலா.. சிறிது நேரத்தில் வேலையை முடித்தவள்.. அன்று வேலைக்கு லீவ் சொல்லிவிட்டு நிமிர்ந்துப் பார்க்காமல் சென்றுவிட்டாள்..
‘என்ன வந்து ஒருமணிநேரம் கூட இல்லை.. அதற்குள் லீவ் சொல்லிவிட்டு எங்கே செல்கிறாள்..?’ என்ற யோசனையுடன் டூ ஹௌர்ஸ் பர்மிஷன் போட்டுவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான் முகிலன்..
அவள் நேராக ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்றாள்.. ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றவள் ஆடார் கொடுத்துவிட்டு, செல்லை எடுத்து இரயில் டிக்கெட் புக் செய்தாள்..
இரயில் டிக்கெட் பதிவு செய்துவிட்டு நிமிர்ந்தவள், தனது எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்து உடனே முகம் மலர்ந்தது.. ஆனால் அதை நொடிப்பொழுதில் மறைத்துக்கொண்டு கண்டுக்காதது போல அமர்ந்திருந்தாள் நிலா..
ரெஸ்டாரண்ட் உள்ளே வந்ததிலிருந்து அவளின் அசைவுகளைக் கவனித்த முகிலன், “நிலா..?!” என்று அழைக்க.. அதற்கெனவே காத்திருந்த நிலா, “இங்கும் வந்து விட்டீர்களா..? உனக்கு என்னதான் வேண்டும் முகிலன்..?” என்றாள் அவள்
“உன்னைப் பார்க்க ஒன்றும் வரவில்லை.. இங்கே தேவியின் தரிசனம் பார்க்க வந்தேன்..” என்றான் முகிலன்..
“என்னது..?! ரெஸ்டாரண்டில் தேவியின் தரிசனமா..?!” என்றாள் நிலா திகைப்புடன்..
“இதோ பாலாவே வந்துவிட்டாள்..” என்று கூறியவன், “ஹாய் பாலா..” என்றான் முகிலன்..
அவனின் அழைப்பைப் பார்த்து அவன் பார்வை சென்ற திசையை நோக்கிய நிலா, அங்கே தேவிபாலா வருவதைப் பார்த்தவள் கோபம் வந்தது.. நிலவிற்கு வந்த கோபத்திற்கு அவனை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல இருந்தது..
அவளின் கோபத்தைப் பார்த்த முகிலன், ‘நான் எப்படி தவித்து இருப்பேன்.. நீ கொஞ்சமாவது என்னை நிமிர்ந்துப் பார்த்திருப்பா..?’ என்று நினைத்தவன்..
அவன் பார்வையின் பொருளை புரித்துக் கொண்ட நிலா, ‘உன்னை நினைக்காமல் இருந்ததால் தான் அதிசயம்..’ என்று அவனின் பார்வைக்கு பதில் கொடுத்தாள் மனதில்..!
அதற்குள் அவனின் அருகில் வந்த தேவிபாலா, “ஹாய் முகிலன்.. மெயிலில் உங்களின் போட்டோ பார்த்தேன்..” என்று அவனின் அருகில் அமர்ந்தாள்..
அதை கவனித்த நிலவின் முகம் வாடியது.. அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து முகிலனுக்குதான் மனம் வலித்தது.. மேலும் அவளின் முகம் வாடுவதைப் பார்த்து எழுந்து சென்று விடலாமா என்று கூட தோன்றியது..
அந்தநேரம் நிலாவின் செல் அடிக்க, அதை எடுத்தவள், “ஹலோ கவி! வாட் எ சப்ரைஸ்.. நீயே கால் பண்ணிருக்க..?” என்று தன்னை சமாளித்துக்கொண்டு பேசினாள் நிலா.. என்னதான் அவள் சமாளித்தாலும் அவளின் குரலில் சிறிது தடுமாற்றம் இருக்கவே செய்தது.. ஆனால் எதிரே இருந்த இருவரையும் மறந்தாள் நிலா..
அவளின் குரலில் இருந்த மாறுதலைக் கண்டுக் கொண்ட கவிமலர், “நிலா என்னடி குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது..?” என்று கேட்க,
“நான் உன்னிடம் திருக்குறள் சொல்லவில்லையே கவி.. அப்புறம் எப்படி குறள் மாதிரியாக இருப்பதாக கூறுகிறாய்..?” என்று சிரித்தாள் நிலா..
“பெரிய கவிஞர் என்று நினைப்பு..? கவியிடமே உனது கவியைக் காட்டுகிறாய்..? நான் திருக்குறளை சொல்லவில்லை..” என்றாள் கவிமலர்..
“அப்புறம்..?” என்றாள் நிலா குழப்பமாகவே கேட்டாள்..
“உன்னோட சொந்த குரலில் என்ன மாற்றம் என்று கேட்டேன்..” என்றாள் கவிமலர்..
“எல்லாம் மாறிப்போனது..” என்றாள் நிலா இருப்பொருள் பட கூறினாள்.. முகிலன் புருவம் உயர்த்திப் பார்த்ததை, நிலா கண்டுக்கொள்ளவே இல்லை..
“குரல் மாறிவிட்டதா..? இல்லை திருக்குறளே மறந்து விட்டதா..?” என்று கேலி செய்தாள் கவிமலர்..
“ஒரு ‘ர’ மாற்றினால் இத்தனை பிரச்சனை வருகிறது.. எனது குரல் நன்றாக இருக்கிறது.. திருக்குறளும் மறக்கவில்லை.. நீ எதற்கு போன் செய்தாய்..? அதை சொல்லு முதலில்..?” என்றாள் நிலா புன்னகையுடன்...!
“நீ ஏன் எனக்கு போன் செய்யவில்லை..?” என்று குறைப்பட்டாள் கவிமலர்..
“என்னடா தினமும் நாம் மட்டும் போன் செய்கிறோம்.. இவள் நமக்கு அழைப்பதே இல்லை.. ஒருவேளை நாம் ரொம்ப தொந்தரவு செய்கிறோமோ..? என்று நினைத்தேன்..” என்றாள் நிலா கேலியாகவே..!
“நிலா நீ என்னை தொந்தரவு செய்வதாக நான் சொன்னேனா..?” என்று வருத்ததுடன் கூறினாள் கவிமலர்..
“நீ அப்படி சொல்லவில்லை.. நான் அப்படி நினைத்துக் கொண்டேன் போதுமா..! இனிமேல் அப்படி நினைக்க மாட்டேன்..” என்று சிரித்தவள்..
“நீ ஆடிட்டர் ஆபீஸ் போகவில்லையா..?” என்றாள் நிலா..
“குறுக்கு விசாரணை செய்கிறாய்..?” என்று சிரித்தவள்.. “இந்த விசாரணையை நான் செய்ய வேண்டும் நிலா செல்லம்.. நீ ஆபீஸ் போகவில்லையா..?” என்று கேட்டாள் கவிமலர்..
“இல்லடா.. போகவே இல்லை.. அப்பா போன் செய்தார்.. உடனே மும்பை கிளம்பி வரச்சொல்லி ஆடார்..” என்று சிரித்தவள், “டிக்கெட் புக் பண்ணிவிட்டேன்.. எனக்கு ப்ரஜெக்ட் வொர்க் முடிந்தது.. நாளைக்கு அங்கே இருப்பேன்..” என்றாள் நிலா.. ஆனால் அவள் அங்கே என்றதை இருவரும் தவறாகப் புரிந்துக் கொண்டனர்..