Aparna
அமைச்சர்
"உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்ன பார்த்தாலே..."
காதோடு காதலுடன் பாடிய சங்கர் மஹாதேவனோடு, ட்ராலியை தள்ளிக்கொண்டு, லக்கேஜ் செக்கின் செய்ய வரிசையில் நின்றிருந்தேன்....
சென்னை பன்னாட்டு விமானம், பள்ளி காலங்களில் வானத்தில் பறந்த விமானத்தை பார்த்து டாடா சொன்ன நான் இன்று அதற்குள்ளே!!!! சிரித்து கொண்டே முன்னேறினேன்..
மக்கள் கூடும் இடம் தான் எவ்வளவு உணர்ச்சி குவியல்களை சுமந்திருக்கும் பூக்கூடை!!!!
கனவுகளோடும், கடமைகளோடும் வான் பறக்க சிறகுகளை விரித்திருந்த இளவட்டங்கள்.. தன் வாழ்வில் வெற்றி பிள்ளைகளைகளின் வெற்றி என்று பெருமையுடனும், கர்வத்தோடும் பிள்ளைகளை காண செல்லும் பெற்றோர்கள்.. குடும்பத்தை விட்டு, இதயத்தை அவர்களிடம் தந்து, நினைவுகளையும் கண்ணீரையும் சுமந்து பயணிப்பவர்கள் என் பலரை கடந்த செல்லும் போது..
பல நாள் கழித்து கண்ட உயிரை கட்டி அகமகிழும் உறவுகள்," எப்படி இருக்க, மெலிஞ்சிட்டயே" என்றும் , "டேய் மச்சான் பாட்டில் வாங்கிட்டு வந்தியா?" என உறக்க கூறி பின்பு சுற்றம் புரிந்து" சென்ட் பாட்டில் டா " என்று நகைச்சுவையாய் பேசி வரவேற்க்கும் நட்புகளின் கூவல்களை நினைத்த போது, மூன்று வாரம் முன்பு என்னையும் என் குடும்பம் இப்படி தானே வரவேற்றது என்ற அசை போட்ட மனம் என்னையும் மீறி அவர்களிடம் அழைத்து சென்றது, விழி நீர் சூழ..
உள்ளிளுத்தேன் கண்ணீரோடு, 3 வார பொக்கிஷமான நொடிகளை..." விஷ் யூ எ ஹாப்பி ஃப்ளைட் மேடம்" என்று பயணச்சீட்டு தந்த பெண்ணிடத்தில் நன்றி கலந்த புன்னகையை வீசியபடி.. இமிகிரேஷன் ஆபிஸர் " போய்ட்டு வா மா செல்லம், இந்தியா விட்டு இன்னிக்கு போற" என்ற ரீதியில் கடவுச்சீட்டில் முத்திரை குத்தி , முறையாக விடை குடுத்தார்..
ஓ.கே.. இதோ உனைத் தேடி வருகிறேன்.. என் வேடந்தாங்கல் வாசம் முடிந்து பணி கூட்டுக்குள் வந்து சேர பறக்கிறேன்.. சுதந்திர தேவியை சுமக்கும் நாடு.. குடியேறியவர்களின் நிலம் அமெரிக்கா.. இதோ வருகிறேன்..
விவேக் சீனிவாசனை போன்ற பல மேக காதலர்களான பைலட்கள், விமான பணிபெண்கள் புடை சூழ வருகிறேன்...
வாழ்க்கையில நிறைய தருணங்கள் நமக்கு நிறைய பாடங்கள் கற்று தரும் தானே, ஒவ்வொரு பக்கத்திலும்..அந்த புத்தகத்தோடு கடக்கும் இரயில் பயணிகள் தாம் நாம்.. வாங்க நாம் அவங்க அவங்க புத்தகத்தோட அடுத்த பக்கத்த புரட்டுவோம்..
"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே ..!!" அட ஃப்ளைட் கிளம்பிடுச்சுபா வேற ஒண்ணுமில்ல ??
கடவுசீட்டு கையிலேந்தி , கனவுகள் பல சுமந்தபடி
கடல் கடந்து வந்தோமடி கிளியே!!!
பெற்றோர் கூடயில்லை, சூழும் சொந்தம் அருகிலில்லை
தனிமையினை அணைத்தோமடி கிளியே!!
உடுக்கை இழந்தவன் கை போல என்
இடுக்கண் களைய வந்ததடி நட்பு கிளியே!!!
ஜாதி,மத,மொழி, இனம் மறந்து ஒரு
கூட்டு பறவையாய் வாழ்கிறோமடி கிளியே!!!
நிலச்சோறு தின்ற ஏக்கம் போக்க
கூட்டாஞ்சோறு உண்கிறோமடி கிளியே!!!
காக்கை கூட்டுக்குள் குயில்கள் ஆயினும் இன்பமாய்
கூவிக்கொண்டு இனிமை காண்கிறோமடி கிளியே!!!
வேடந்தாங்கல் பறவையென மூன்று வார விடுப்பில்
தாய் மண்ணை தொட பறக்கிறோமடி கிளியே!!!
பெட்டி நிறைய பரிசு கொண்டு கனமான
இதயம் வாங்கி வருகிறோமடி கிளியே!!!
பஞ்சு மெத்தை பார்ப்பவர்களுக்கு வெளிநாடுவாசம்
நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!
வெளிநாடு வந்த பின்பும் தணியாத தமிழ் தாகம்
இதை பகிறவைத்ததடி கிளியே!!
நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!
Continued....
உலகமே சுழலுதே உன்ன பார்த்தாலே..."
காதோடு காதலுடன் பாடிய சங்கர் மஹாதேவனோடு, ட்ராலியை தள்ளிக்கொண்டு, லக்கேஜ் செக்கின் செய்ய வரிசையில் நின்றிருந்தேன்....
சென்னை பன்னாட்டு விமானம், பள்ளி காலங்களில் வானத்தில் பறந்த விமானத்தை பார்த்து டாடா சொன்ன நான் இன்று அதற்குள்ளே!!!! சிரித்து கொண்டே முன்னேறினேன்..
மக்கள் கூடும் இடம் தான் எவ்வளவு உணர்ச்சி குவியல்களை சுமந்திருக்கும் பூக்கூடை!!!!
கனவுகளோடும், கடமைகளோடும் வான் பறக்க சிறகுகளை விரித்திருந்த இளவட்டங்கள்.. தன் வாழ்வில் வெற்றி பிள்ளைகளைகளின் வெற்றி என்று பெருமையுடனும், கர்வத்தோடும் பிள்ளைகளை காண செல்லும் பெற்றோர்கள்.. குடும்பத்தை விட்டு, இதயத்தை அவர்களிடம் தந்து, நினைவுகளையும் கண்ணீரையும் சுமந்து பயணிப்பவர்கள் என் பலரை கடந்த செல்லும் போது..
பல நாள் கழித்து கண்ட உயிரை கட்டி அகமகிழும் உறவுகள்," எப்படி இருக்க, மெலிஞ்சிட்டயே" என்றும் , "டேய் மச்சான் பாட்டில் வாங்கிட்டு வந்தியா?" என உறக்க கூறி பின்பு சுற்றம் புரிந்து" சென்ட் பாட்டில் டா " என்று நகைச்சுவையாய் பேசி வரவேற்க்கும் நட்புகளின் கூவல்களை நினைத்த போது, மூன்று வாரம் முன்பு என்னையும் என் குடும்பம் இப்படி தானே வரவேற்றது என்ற அசை போட்ட மனம் என்னையும் மீறி அவர்களிடம் அழைத்து சென்றது, விழி நீர் சூழ..
உள்ளிளுத்தேன் கண்ணீரோடு, 3 வார பொக்கிஷமான நொடிகளை..." விஷ் யூ எ ஹாப்பி ஃப்ளைட் மேடம்" என்று பயணச்சீட்டு தந்த பெண்ணிடத்தில் நன்றி கலந்த புன்னகையை வீசியபடி.. இமிகிரேஷன் ஆபிஸர் " போய்ட்டு வா மா செல்லம், இந்தியா விட்டு இன்னிக்கு போற" என்ற ரீதியில் கடவுச்சீட்டில் முத்திரை குத்தி , முறையாக விடை குடுத்தார்..
ஓ.கே.. இதோ உனைத் தேடி வருகிறேன்.. என் வேடந்தாங்கல் வாசம் முடிந்து பணி கூட்டுக்குள் வந்து சேர பறக்கிறேன்.. சுதந்திர தேவியை சுமக்கும் நாடு.. குடியேறியவர்களின் நிலம் அமெரிக்கா.. இதோ வருகிறேன்..
விவேக் சீனிவாசனை போன்ற பல மேக காதலர்களான பைலட்கள், விமான பணிபெண்கள் புடை சூழ வருகிறேன்...
வாழ்க்கையில நிறைய தருணங்கள் நமக்கு நிறைய பாடங்கள் கற்று தரும் தானே, ஒவ்வொரு பக்கத்திலும்..அந்த புத்தகத்தோடு கடக்கும் இரயில் பயணிகள் தாம் நாம்.. வாங்க நாம் அவங்க அவங்க புத்தகத்தோட அடுத்த பக்கத்த புரட்டுவோம்..
"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே ..!!" அட ஃப்ளைட் கிளம்பிடுச்சுபா வேற ஒண்ணுமில்ல ??
கடவுசீட்டு கையிலேந்தி , கனவுகள் பல சுமந்தபடி
கடல் கடந்து வந்தோமடி கிளியே!!!
பெற்றோர் கூடயில்லை, சூழும் சொந்தம் அருகிலில்லை
தனிமையினை அணைத்தோமடி கிளியே!!
உடுக்கை இழந்தவன் கை போல என்
இடுக்கண் களைய வந்ததடி நட்பு கிளியே!!!
ஜாதி,மத,மொழி, இனம் மறந்து ஒரு
கூட்டு பறவையாய் வாழ்கிறோமடி கிளியே!!!
நிலச்சோறு தின்ற ஏக்கம் போக்க
கூட்டாஞ்சோறு உண்கிறோமடி கிளியே!!!
காக்கை கூட்டுக்குள் குயில்கள் ஆயினும் இன்பமாய்
கூவிக்கொண்டு இனிமை காண்கிறோமடி கிளியே!!!
வேடந்தாங்கல் பறவையென மூன்று வார விடுப்பில்
தாய் மண்ணை தொட பறக்கிறோமடி கிளியே!!!
பெட்டி நிறைய பரிசு கொண்டு கனமான
இதயம் வாங்கி வருகிறோமடி கிளியே!!!
பஞ்சு மெத்தை பார்ப்பவர்களுக்கு வெளிநாடுவாசம்
நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!
வெளிநாடு வந்த பின்பும் தணியாத தமிழ் தாகம்
இதை பகிறவைத்ததடி கிளியே!!
நாங்கள் முள்ளின் மேல் ரோஜாவடி கிளியே!!!
Continued....
Last edited: