Aparna
அமைச்சர்
சிறு புன்னகையுடன் ஆரம்பித்தேன்,"ஹலோ, நீங்க தமிழா"? ஆமாங்க "ஸ்டேட் தாண்டினா நீங்க தமிழா? கண்டம் தாண்டினால் நீங்க இந்தியரா?" இது தாங்க நம்ம கேட்கற முதல் வார்த்தையா இருக்கும்.. அவ்வளவு காஞ்சு போயிருப்போம் உறவுகளுக்காக...
எனக்கு அருகில் இருந்த அவர் ஒரு மருத்துவர். ஆமாம் டாக்டர் ராம், ஆப்தமாலஜிஸ்ட்.. கண்மருத்துவர்.. அருகில் அவர் மனைவி டாக்டர் ராணி பொதுநல மருத்துவர்...
நல்ல நாளுலயே கேள்வியா கேட்டு துளைக்கற எனக்கு , டாக்டர்ஸ் அதுவும் நான் விரும்பும் துறையை சார்ந்தவர்கள் என்றால் கசக்குமா என்ன ??
நாம் அனைவரும் படித்திருப்போம், நாம சந்திகிறவங்க சும்மா நம்ம வாழ்க்கையில் நுழைய மாட்டாங்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு .. எனக்கு அப்போ சத்தியமா தெரியல அந்த பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமா இருக்க போகுதுன்னு...
பரஸ்பர வார்த்தை பரிமாற்றங்கள்.. ஒரு கான்பரன்ஸ் காக சிக்காகோ செல்கிறார்கள் அவர்கள்..
சில நொடி மவுனம் அதை கலைப்பது போல், அந்த விமான பெண், " உட் யூ லைக் டு ஹாவ் சம் டிரிங்க் மேம்" என்றாள்... ஹலோ பாஸ் இருங்க இருங்க, "ஒகே ஒகே" படத்துல வர மாதிரி ஃப்ளைட் னா டிரிங்க்ஸ் தருவாங்க நீங்க என்ன னா தண்ணி தரீங்கனு சந்தானம் கேட்பாரு பாருங்க அந்த ரெஞ்சில தான் இந்த டிரிங்க்ஸும்..என்ன கொஞ்சம் எக்ஸ்டிராவா ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி ஜுஸ் இருக்கும்... எப்படி நையிட் பஸ்ஸுல எல்லாம் ஊர் எல்லைய தாண்டின பின்னாடி புதுபடம் போடுவானோ அது மாதிரி தான் இங்கேயும் ஐய்ரோப்பா கண்டம் கண்ணுல பட்டத்துக்கு அப்புறம் தான் ரெட் வயன் எக்ஸ்டிரா எக்ஸட்ராலாம்..
சில ஆரஞ்சு ஜுஸ்களை உள்ளே தள்ளிய பிறகு, அவருடன் பேச ஆரம்பித்தேன்.. அவர் துறை சார்ந்த பல கேள்விகளுடன்...
கண்ணை பத்தி அவ்வளவு சொன்னார்.. குழந்தைகளுக்கு சாப்பிட்டா போதும்னும் நாம் டேப், ஸ்மார்ட் போன் தரோம் அது எவ்வளவு பெரிய தப்பு என்று அவர் ஆதாரத்தை அடுக்க.. என் முன்னே நிழலாடினர் "பெப்பா பிக்" உம் ,"கண்மணி பாப்பா வும்'.. அடடா சாதம் சாப்பிடணும், நம்ம வேல செய்யணும் னு நாம நம்ம குழந்தைகளுக்கு , நம் கண்மணிகளின் ,கண்மணிகளுக்கு வில்லியாக விட்டோமே என்று ஒரு குற்றவுணர்வு தாக்கியதில் வாயடைத்தேன்.
தொடர்ந்து பேசியவர், உங்க ஜெனரேஷன் பசங்க எல்லாம் இப்படி தான் சாப்பிட்டீங்களா என்ன? என்றார்...
அப்பறம் கேட்டாரே ஒரு கேள்வி... "ஏம்மா அந்த காலத்துல நிலாவ பார்த்து சோறு ஊட்டினாங்க?"னு
பெப்பர பே னு முளிச்சேன்.. என்னமோ சாப்பாட்டை பிசஞ்சோமா உள்ள தள்ளினோமானு தானே நாம இருக்கோம், இப்படி கேட்டுப்புட்டீங்களே ராசா னு. மண்டைய இடவலமாக ஆட்டினேன்..நமக்கு தெரியாத விஷயத்தை தெரியல னு சொல்லறது தப்பில்லை, ஆன் தெரியுமே னு சீன் போட்டு பல்பு வாங்கறத்துக்கு இது சால சிறந்தது..
சிரித்துக் கொண்டே அவர் விளக்க ஆரம்பித்தார்
"நிலவை காட்டி சோறு ஊட்டுவது…?
நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம்?
முதல்ல இப்ப இருக்குற வத்திப்பெட்டி போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவை பார்க்க முடியுதா? ஜன்னலையோ, பால்கனி கதவ திறந்தா எதிர்த்த வீட்டு அடுப்பங்கரை, பக்கத்து வீட்டு பள்ளியறை தான் தெரியுது.. இதுல எங்க நிலாவ பாக்க
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்
நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல், உணவுக்குழல் விரிகிறது. உணவு இலகுவாக உள்ளே இறங்கும் சின்ன உணவு குழலில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.
குழந்தை கருவில் உருவாகும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.
ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உணவை அவசர அவசரமாக திணிப்பது உடல் வளர்ச்சிக்கான கால அவகாசத்தை மறுப்பதும் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் ஒரு வித மறைமுக வன்முறையே ஆகும்
குழந்தை பிறப்பிலிருந்து பால்குடி மறக்கும் ஐந்து வயது வரை தாயானவள் குழந்தையின் பொருட்டும் குழந்தைக்கு சுரக்க வேண்டிய பாலின் பொருட்டும் கவனமாக உண்ண வேண்டியது ஒரு தாய்மைக்கு மிகவும் மரியாதையளிக்கும் .
நிலவை காட்டி சோறு ஊட்டுவது பண்பாடு மட்டுமல்ல அறம் சார்ந்த அறிவியல் ." அவர் சொல்லுவதை கேட்டு கேட்டு ஆ வேன திறந்த வாயை நான் மூடல..
தினமும் சாப்பிடறோம், நிலாவ பாக்கறோம் ஆனா இவ்வளவு பெரிய விஷயம் இருக்குனு தெரியாம போச்சே , நம்ம உடல் பத்தி படிக்க டாக்டர் ஆகணுமா என்ன, அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் என்ன எல்லாரும் டாக்டர் ஆ?
"கண் தானே னு இருக்கோம் மா ஆனா அந்த கண் இல்லனா எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. கொஞ்சறது கூட என் கண்ணே, கண்மணியே னு கொஞ்சறோம் . என் மூக்கே, நாக்கே,மூளையே, இதயமேனா கொஞ்சறோம்?" அவர் கூறிய விதம் சிரிப்பை வரவழைத்தாலும் ,சிந்திக்க தூண்டுவதாக இருந்தது.. அட ஆமாம் ல, அவர் சொல்லறது ரையிட் தான்..
கண்ண பத்தி இன்னும் சொல்லுகிறேன் கேளுங்கள் என்றார். கண்ணா லட்டு தின்ன ஆசையா அதுவும் கண்ண பத்தி அத கண்டவரிடமிருந்தே.. என் கண்கள் மின்ன சரி என்றேன்..
"
கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும் பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, கண்களை சரியாக திறக்காமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.
இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப்பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால், இரவில் வண்டியை ஓட்டும்போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால் இவ்வாறு இருக்கும். டிவியும், கம்ப்யூட்டரை போன்றுதான் கண்களுக்கு பிரச்சனையை தரும். எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் தலைவலியும் ஏற்படும்.
தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணினி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு.
அவை: கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு.
மற்றொரு வகை: எபிபோரா. இவை கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் ஏற்படும்.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். இதன் மூலம் கண்கள் சோர்வடையும்.தொற்று நோய்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். இவை ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
எனக்கு அருகில் இருந்த அவர் ஒரு மருத்துவர். ஆமாம் டாக்டர் ராம், ஆப்தமாலஜிஸ்ட்.. கண்மருத்துவர்.. அருகில் அவர் மனைவி டாக்டர் ராணி பொதுநல மருத்துவர்...
நல்ல நாளுலயே கேள்வியா கேட்டு துளைக்கற எனக்கு , டாக்டர்ஸ் அதுவும் நான் விரும்பும் துறையை சார்ந்தவர்கள் என்றால் கசக்குமா என்ன ??
நாம் அனைவரும் படித்திருப்போம், நாம சந்திகிறவங்க சும்மா நம்ம வாழ்க்கையில் நுழைய மாட்டாங்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு .. எனக்கு அப்போ சத்தியமா தெரியல அந்த பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமா இருக்க போகுதுன்னு...
பரஸ்பர வார்த்தை பரிமாற்றங்கள்.. ஒரு கான்பரன்ஸ் காக சிக்காகோ செல்கிறார்கள் அவர்கள்..
சில நொடி மவுனம் அதை கலைப்பது போல், அந்த விமான பெண், " உட் யூ லைக் டு ஹாவ் சம் டிரிங்க் மேம்" என்றாள்... ஹலோ பாஸ் இருங்க இருங்க, "ஒகே ஒகே" படத்துல வர மாதிரி ஃப்ளைட் னா டிரிங்க்ஸ் தருவாங்க நீங்க என்ன னா தண்ணி தரீங்கனு சந்தானம் கேட்பாரு பாருங்க அந்த ரெஞ்சில தான் இந்த டிரிங்க்ஸும்..என்ன கொஞ்சம் எக்ஸ்டிராவா ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி ஜுஸ் இருக்கும்... எப்படி நையிட் பஸ்ஸுல எல்லாம் ஊர் எல்லைய தாண்டின பின்னாடி புதுபடம் போடுவானோ அது மாதிரி தான் இங்கேயும் ஐய்ரோப்பா கண்டம் கண்ணுல பட்டத்துக்கு அப்புறம் தான் ரெட் வயன் எக்ஸ்டிரா எக்ஸட்ராலாம்..
சில ஆரஞ்சு ஜுஸ்களை உள்ளே தள்ளிய பிறகு, அவருடன் பேச ஆரம்பித்தேன்.. அவர் துறை சார்ந்த பல கேள்விகளுடன்...
கண்ணை பத்தி அவ்வளவு சொன்னார்.. குழந்தைகளுக்கு சாப்பிட்டா போதும்னும் நாம் டேப், ஸ்மார்ட் போன் தரோம் அது எவ்வளவு பெரிய தப்பு என்று அவர் ஆதாரத்தை அடுக்க.. என் முன்னே நிழலாடினர் "பெப்பா பிக்" உம் ,"கண்மணி பாப்பா வும்'.. அடடா சாதம் சாப்பிடணும், நம்ம வேல செய்யணும் னு நாம நம்ம குழந்தைகளுக்கு , நம் கண்மணிகளின் ,கண்மணிகளுக்கு வில்லியாக விட்டோமே என்று ஒரு குற்றவுணர்வு தாக்கியதில் வாயடைத்தேன்.
தொடர்ந்து பேசியவர், உங்க ஜெனரேஷன் பசங்க எல்லாம் இப்படி தான் சாப்பிட்டீங்களா என்ன? என்றார்...
அப்பறம் கேட்டாரே ஒரு கேள்வி... "ஏம்மா அந்த காலத்துல நிலாவ பார்த்து சோறு ஊட்டினாங்க?"னு
பெப்பர பே னு முளிச்சேன்.. என்னமோ சாப்பாட்டை பிசஞ்சோமா உள்ள தள்ளினோமானு தானே நாம இருக்கோம், இப்படி கேட்டுப்புட்டீங்களே ராசா னு. மண்டைய இடவலமாக ஆட்டினேன்..நமக்கு தெரியாத விஷயத்தை தெரியல னு சொல்லறது தப்பில்லை, ஆன் தெரியுமே னு சீன் போட்டு பல்பு வாங்கறத்துக்கு இது சால சிறந்தது..
சிரித்துக் கொண்டே அவர் விளக்க ஆரம்பித்தார்
"நிலவை காட்டி சோறு ஊட்டுவது…?
நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம்?
முதல்ல இப்ப இருக்குற வத்திப்பெட்டி போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவை பார்க்க முடியுதா? ஜன்னலையோ, பால்கனி கதவ திறந்தா எதிர்த்த வீட்டு அடுப்பங்கரை, பக்கத்து வீட்டு பள்ளியறை தான் தெரியுது.. இதுல எங்க நிலாவ பாக்க
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்
நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல், உணவுக்குழல் விரிகிறது. உணவு இலகுவாக உள்ளே இறங்கும் சின்ன உணவு குழலில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.
குழந்தை கருவில் உருவாகும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.
ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உணவை அவசர அவசரமாக திணிப்பது உடல் வளர்ச்சிக்கான கால அவகாசத்தை மறுப்பதும் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் ஒரு வித மறைமுக வன்முறையே ஆகும்
குழந்தை பிறப்பிலிருந்து பால்குடி மறக்கும் ஐந்து வயது வரை தாயானவள் குழந்தையின் பொருட்டும் குழந்தைக்கு சுரக்க வேண்டிய பாலின் பொருட்டும் கவனமாக உண்ண வேண்டியது ஒரு தாய்மைக்கு மிகவும் மரியாதையளிக்கும் .
நிலவை காட்டி சோறு ஊட்டுவது பண்பாடு மட்டுமல்ல அறம் சார்ந்த அறிவியல் ." அவர் சொல்லுவதை கேட்டு கேட்டு ஆ வேன திறந்த வாயை நான் மூடல..
தினமும் சாப்பிடறோம், நிலாவ பாக்கறோம் ஆனா இவ்வளவு பெரிய விஷயம் இருக்குனு தெரியாம போச்சே , நம்ம உடல் பத்தி படிக்க டாக்டர் ஆகணுமா என்ன, அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் என்ன எல்லாரும் டாக்டர் ஆ?
"கண் தானே னு இருக்கோம் மா ஆனா அந்த கண் இல்லனா எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. கொஞ்சறது கூட என் கண்ணே, கண்மணியே னு கொஞ்சறோம் . என் மூக்கே, நாக்கே,மூளையே, இதயமேனா கொஞ்சறோம்?" அவர் கூறிய விதம் சிரிப்பை வரவழைத்தாலும் ,சிந்திக்க தூண்டுவதாக இருந்தது.. அட ஆமாம் ல, அவர் சொல்லறது ரையிட் தான்..
கண்ண பத்தி இன்னும் சொல்லுகிறேன் கேளுங்கள் என்றார். கண்ணா லட்டு தின்ன ஆசையா அதுவும் கண்ண பத்தி அத கண்டவரிடமிருந்தே.. என் கண்கள் மின்ன சரி என்றேன்..
"
கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும் பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, கண்களை சரியாக திறக்காமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.
இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப்பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால், இரவில் வண்டியை ஓட்டும்போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால் இவ்வாறு இருக்கும். டிவியும், கம்ப்யூட்டரை போன்றுதான் கண்களுக்கு பிரச்சனையை தரும். எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் தலைவலியும் ஏற்படும்.
தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணினி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு.
அவை: கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு.
மற்றொரு வகை: எபிபோரா. இவை கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் ஏற்படும்.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். இதன் மூலம் கண்கள் சோர்வடையும்.தொற்று நோய்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். இவை ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
Last edited: