கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
- சாரா
அத்தியாயம் 10
“ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டுகிட்டு இருந்த இளாவும் கிருஷ்ஷும் சேர்ந்ததே ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு…. முக்கியமா எனக்கும் கோந்துக்கும் (கோதண்டம்)..”
“ஆராவ ரெண்டு வருஷம் வீட்டுலயே வச்சி இருந்துட்டு, அவ சரியான உடனே, ஏழு வயசுக்கு மேல தான் மறுபடியும் ஒண்ணாவது படிக்க சேர்த்தோம்… அவ கொஞ்சம் லேட் பிக் அப் அவ்வளோ தான்…மத்தபடி சாதாரண குழந்தை ஆயிட்டா… இவளுக்கு அம்மா அப்பா எல்லாமே இளான்னு நினைப்பா இருந்ததுல அவ கொஞ்சம் தேறிட்டா ஆனா , இளா தான் உள்ளுக்குள்ளேயே ரொம்ப முடங்கிட்டான்.. “
“ரொம்ப அழுத்தகாரன்..என்ன வேணும்னாலும் வாய் விட்டு சொல்ல மாட்டான். நாமளே தான் தெரிஞ்சுக்கணும்.”
“இவனுங்க சேர்ந்த கதையை விட்டுட்டனே…!. ஆரா ரெண்டாம் வகுப்புக்கு வந்ததும் வழக்கம் போல லஞ்ச் ப்ரேக்ல இளா ஊட்டி விட இவ சாப்பிட்டு இருக்கா.. இதை பார்த்ததும் மத்த பசங்க எல்லாம் , ஆராவ பார்த்து இதுதான் அஞ்சலி பாப்பா , கொஞ்சம் லூசு பாப்பான்னு ஏதோ கேலி பண்ணியிருக்குங்க.., இளா க்கு ஆராவ பத்தி எதாவது சொல்லிட்டா சலங்கை கட்டி விட்டது போல தான் ஆடி தீர்த்துடுவான்.. “
“அதுங்க அவளை லூசுண்ணு சொல்லவும் அவனுங்க கூட ஒரே சண்டை.. மூணு பசங்கள ஒத்தையா போட்டு உருட்டி விளையாண்டுட்டான் . இதுல ஃபைனல் டச் ஆக மூணு பேர் மண்டையிலயும் டிஃபன் பாக்ஸ்சால பூரான் உட்டுட்டான்.”
“அதுக்குள்ள இந்த அம்மா ஆரா ஹெல்ப்புக்கு ஆள் கூட்டிட்டு வரேன்னு நம்ம கிருஷ்ஷை கூட்டிட்டு வந்திருக்கு. அவன் ஆல்ரெடி பினிஷ் பண்ண ஃபைட் டுல நம்ம தலைவர் சப்பொர்ட் பண்ணவும், பிரின்சிபால் ரெண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடிச்சு , அவர் ரூமில் கஸ்டோடி எடுத்து விசாரிச்சிருக்கார். “
“ ஒருத்தன் , நான் மட்டும் தான் அடிச்சென்னு சொல்ல, இன்னொருத்தன் நானும்தான் அடிச்சென்னு மாத்தி ,மாத்தி சொல்லியிருக்காங்க. ஒருத்தனை ஒருத்தன் விட்டு கொடுக்கல…”
“ இதை பார்த்த பிரின்சிபால் , அடிப்பட்ட காயத்தை எல்லாம் ஆராய்ந்து பார்த்துட்டு ., விழுந்தது அடி இல்ல இடின்னு , முடிவு பண்ணி ரெண்டு பேருமே குற்றவாளிகள்ன்னு ஜட்ஜ்மெண்டு எழுதிப்புட்டாரு..இதுல சேர்ந்துபுட்டாங்க ரெண்டு பக்கிகளும்.”
“அப்புறம் எங்களையும் , இளாவுக்கு லீகல் கார்டியன் ஆக இருந்த என் அண்ணனையும் கூப்பிட்டுவிட்டாங்க..அங்க போன நானும் உன் மாமா கோந்தும், இவனுங்க சேர்ந்தத பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க, அந்த ஜட்ஜ், புள்ளைங்க தப்பு செஞ்சத நினைச்சு நாங்க கதறி அழரோம்னு , மறுபடியும் தப்பா ஜட்ஜ் பண்ணி விடுதலைன்னு தீர்ப்ப மாத்தி எழுதிட்டாரு.”
“அதுலயிருந்து இவனுங்க ப்ரெண்ட்ஸ்… அதுவும் முஸ்தபா, முஸ்தபான்னு பாடிக்கிட்டு முத்தி பொகுற அளவுக்கு நெருக்கமா ஆகிட்டானுங்க.. இளா வும் இவனும் ஒரே காலேஜ் ல ஒண்ணா படிச்சாங்க.. படிப்பை முடிச்ச கையோட இருபத்தி மூணு வயசுல இளா அவங்க ஃபேமிலி பிசினஸ் ஆன டெக்ஸ்டைல் பிசினஸை கையில எடுத்துகிட்டான். துணைக்கு கிருஷையும் சேர்த்துகிட்டான். மூணு வருஷம் எப்ப சாப்பிட்டாங்க , எப்ப தூங்கினாங்கன்னு தெரியாமல் வேலை பார்த்தாங்க.. சுமாரா போய்ட்டு இருந்த டெக்ஸ்டைல்ஸ் ஐ பல கோடி டர்ன் ஓவர்க்கு கொண்டு வந்தானுங்க.”
“சரியா உங்க கல்யாணத்துக்கு நாலு மாசம் முன்னாடி, ஒரு நாள் இளா எங்களை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டு இருந்தான்.. எதுக்குன்னு தெரியாமலே சாப்பிட்டு முடிச்சோம்… பார்த்தா கையில இன்விடேஷன் கொடுக்கிறான்.. “
“என்னடா உனக்கு கல்யாணமா… அப்படின்னு கேலி பண்ணிக்கிட்டே கார்டை பிரிச்சா…. அது
புரசை வாக்கத்தில் புது உதயம் “ வேதா டெக்ஸ்டைல்ஸ்”
நிறுவனர், கிருஷ்ணா கோதண்டம். “
“அப்படி படிச்சதும் எனக்கு மயக்கமே வந்துடுச்சி . அவன் புரசைவாக்கத்தில் அஞ்சு மாடியில புதுசா ஷோ ரூம் கட்டுறான்னு தெரியும்.. ஆனா அதை எங்களுக்காக பன்றான்னு சத்தியமா நினைக்கலை.”
“இந்த ஷோ ரூமை, தானமாவோ, அன்பளிப்பாகவோ,நன்றி கடனாகவோ, இல்லை பரிதாப பட்டோ தரல.. இது என் கூட தொள் கொடுத்து ஆசிர்வாத் டெக்ஸ்டைல்ஸ் ஐ வெற்றி பாதைக்கு அழைச்சிட்டு போன பார்ட்னரோட பங்குன்னு சொல்லி மறுக்க முடியாத அளவுல நம்ம குடும்பத்த ரொம்ப உயரத்துக்கு கொண்டு போய் விட்டான்.. “
“என் சொந்த அண்ணனே , புருஷன் செத்ததுக்கு அப்புறம் எங்க நாங்க அவர் வீட்டுக்கு சோத்துக்கு வந்துடுவோமுன்னு , வாடகை வீடு பார்த்து எங்களை தனியா வச்சிட்டார்.. நாளு, கிழமையில் கூட வீட்டுக்கும் கூப்பிட மாட்டார்.. திரும்பவும் சொந்த பந்தத்து கிட்ட எங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சது இந்த வேதா டெக்ஸ்டைல்ஸ் மூலம் தான்.”
“அப்புறம் புதுசா தொழில் ஆரம்பிச்சிருக்கானேன்னு அவன் ஜாதகத்தை பார்க்க போனேன். அங்க ஜோசியர் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கலன்னா, திருமண திசை முப்பத்தி அஞ்சு வயசுக்கு மேல தான்னு சொல்லிட்டார். அப்புறம் தான் அவசர அவசரமாக பொண்ணை தேடி ஒரு வழியா உன்னை கண்டுபிடிச்சி ட்டோம். “
“கிரிஷுக்கு கல்யாணம் பண்ணினதில் இருந்து,ஒரே குற்ற உணர்ச்சி.. ஒரு புள்ளைக்கு பண்ணிட்டு, இன்னொரு புள்ளைய தனியா விட்டுட் டமேன்னு …”
“எனக்கு முன்னாடியே ஆரா பத்தின யோசனை இருந்தது.. ஆனா இந்த சீமா கழுதை எல்லா இடத்துலயும் போயி , இளாவும் நானும் லவ் பண்ணு ரோம்ன்னு சொல்லிகிட்டு திரிஞ்சாளா..?? எனக்கு பக்க்குண்ணு ஆயிடுச்சி….”
“அதான் கிரிஷை விட்டு பேச சொன்னேன்.. அவன் நேரம் வர்றப்ப பேசரென்னு சொன்னான்.. நேரம் கூடி வந்துடுச்சி ரோ…..இப்ப சீனியை போடு… கொஞ்சம் நெய்யை விடு டா…. ஒட்டாமல் வரும்… கை விடாமல் கிண்டு…..”
பால்கோவா விற்கு ஃபினிஷிங் டச் கொடுத்து கொண்டிருந்தார்கள்…
- சாரா
அத்தியாயம் 10
“ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டுகிட்டு இருந்த இளாவும் கிருஷ்ஷும் சேர்ந்ததே ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு…. முக்கியமா எனக்கும் கோந்துக்கும் (கோதண்டம்)..”
“ஆராவ ரெண்டு வருஷம் வீட்டுலயே வச்சி இருந்துட்டு, அவ சரியான உடனே, ஏழு வயசுக்கு மேல தான் மறுபடியும் ஒண்ணாவது படிக்க சேர்த்தோம்… அவ கொஞ்சம் லேட் பிக் அப் அவ்வளோ தான்…மத்தபடி சாதாரண குழந்தை ஆயிட்டா… இவளுக்கு அம்மா அப்பா எல்லாமே இளான்னு நினைப்பா இருந்ததுல அவ கொஞ்சம் தேறிட்டா ஆனா , இளா தான் உள்ளுக்குள்ளேயே ரொம்ப முடங்கிட்டான்.. “
“ரொம்ப அழுத்தகாரன்..என்ன வேணும்னாலும் வாய் விட்டு சொல்ல மாட்டான். நாமளே தான் தெரிஞ்சுக்கணும்.”
“இவனுங்க சேர்ந்த கதையை விட்டுட்டனே…!. ஆரா ரெண்டாம் வகுப்புக்கு வந்ததும் வழக்கம் போல லஞ்ச் ப்ரேக்ல இளா ஊட்டி விட இவ சாப்பிட்டு இருக்கா.. இதை பார்த்ததும் மத்த பசங்க எல்லாம் , ஆராவ பார்த்து இதுதான் அஞ்சலி பாப்பா , கொஞ்சம் லூசு பாப்பான்னு ஏதோ கேலி பண்ணியிருக்குங்க.., இளா க்கு ஆராவ பத்தி எதாவது சொல்லிட்டா சலங்கை கட்டி விட்டது போல தான் ஆடி தீர்த்துடுவான்.. “
“அதுங்க அவளை லூசுண்ணு சொல்லவும் அவனுங்க கூட ஒரே சண்டை.. மூணு பசங்கள ஒத்தையா போட்டு உருட்டி விளையாண்டுட்டான் . இதுல ஃபைனல் டச் ஆக மூணு பேர் மண்டையிலயும் டிஃபன் பாக்ஸ்சால பூரான் உட்டுட்டான்.”
“அதுக்குள்ள இந்த அம்மா ஆரா ஹெல்ப்புக்கு ஆள் கூட்டிட்டு வரேன்னு நம்ம கிருஷ்ஷை கூட்டிட்டு வந்திருக்கு. அவன் ஆல்ரெடி பினிஷ் பண்ண ஃபைட் டுல நம்ம தலைவர் சப்பொர்ட் பண்ணவும், பிரின்சிபால் ரெண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடிச்சு , அவர் ரூமில் கஸ்டோடி எடுத்து விசாரிச்சிருக்கார். “
“ ஒருத்தன் , நான் மட்டும் தான் அடிச்சென்னு சொல்ல, இன்னொருத்தன் நானும்தான் அடிச்சென்னு மாத்தி ,மாத்தி சொல்லியிருக்காங்க. ஒருத்தனை ஒருத்தன் விட்டு கொடுக்கல…”
“ இதை பார்த்த பிரின்சிபால் , அடிப்பட்ட காயத்தை எல்லாம் ஆராய்ந்து பார்த்துட்டு ., விழுந்தது அடி இல்ல இடின்னு , முடிவு பண்ணி ரெண்டு பேருமே குற்றவாளிகள்ன்னு ஜட்ஜ்மெண்டு எழுதிப்புட்டாரு..இதுல சேர்ந்துபுட்டாங்க ரெண்டு பக்கிகளும்.”
“அப்புறம் எங்களையும் , இளாவுக்கு லீகல் கார்டியன் ஆக இருந்த என் அண்ணனையும் கூப்பிட்டுவிட்டாங்க..அங்க போன நானும் உன் மாமா கோந்தும், இவனுங்க சேர்ந்தத பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க, அந்த ஜட்ஜ், புள்ளைங்க தப்பு செஞ்சத நினைச்சு நாங்க கதறி அழரோம்னு , மறுபடியும் தப்பா ஜட்ஜ் பண்ணி விடுதலைன்னு தீர்ப்ப மாத்தி எழுதிட்டாரு.”
“அதுலயிருந்து இவனுங்க ப்ரெண்ட்ஸ்… அதுவும் முஸ்தபா, முஸ்தபான்னு பாடிக்கிட்டு முத்தி பொகுற அளவுக்கு நெருக்கமா ஆகிட்டானுங்க.. இளா வும் இவனும் ஒரே காலேஜ் ல ஒண்ணா படிச்சாங்க.. படிப்பை முடிச்ச கையோட இருபத்தி மூணு வயசுல இளா அவங்க ஃபேமிலி பிசினஸ் ஆன டெக்ஸ்டைல் பிசினஸை கையில எடுத்துகிட்டான். துணைக்கு கிருஷையும் சேர்த்துகிட்டான். மூணு வருஷம் எப்ப சாப்பிட்டாங்க , எப்ப தூங்கினாங்கன்னு தெரியாமல் வேலை பார்த்தாங்க.. சுமாரா போய்ட்டு இருந்த டெக்ஸ்டைல்ஸ் ஐ பல கோடி டர்ன் ஓவர்க்கு கொண்டு வந்தானுங்க.”
“சரியா உங்க கல்யாணத்துக்கு நாலு மாசம் முன்னாடி, ஒரு நாள் இளா எங்களை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டு இருந்தான்.. எதுக்குன்னு தெரியாமலே சாப்பிட்டு முடிச்சோம்… பார்த்தா கையில இன்விடேஷன் கொடுக்கிறான்.. “
“என்னடா உனக்கு கல்யாணமா… அப்படின்னு கேலி பண்ணிக்கிட்டே கார்டை பிரிச்சா…. அது
புரசை வாக்கத்தில் புது உதயம் “ வேதா டெக்ஸ்டைல்ஸ்”
நிறுவனர், கிருஷ்ணா கோதண்டம். “
“அப்படி படிச்சதும் எனக்கு மயக்கமே வந்துடுச்சி . அவன் புரசைவாக்கத்தில் அஞ்சு மாடியில புதுசா ஷோ ரூம் கட்டுறான்னு தெரியும்.. ஆனா அதை எங்களுக்காக பன்றான்னு சத்தியமா நினைக்கலை.”
“இந்த ஷோ ரூமை, தானமாவோ, அன்பளிப்பாகவோ,நன்றி கடனாகவோ, இல்லை பரிதாப பட்டோ தரல.. இது என் கூட தொள் கொடுத்து ஆசிர்வாத் டெக்ஸ்டைல்ஸ் ஐ வெற்றி பாதைக்கு அழைச்சிட்டு போன பார்ட்னரோட பங்குன்னு சொல்லி மறுக்க முடியாத அளவுல நம்ம குடும்பத்த ரொம்ப உயரத்துக்கு கொண்டு போய் விட்டான்.. “
“என் சொந்த அண்ணனே , புருஷன் செத்ததுக்கு அப்புறம் எங்க நாங்க அவர் வீட்டுக்கு சோத்துக்கு வந்துடுவோமுன்னு , வாடகை வீடு பார்த்து எங்களை தனியா வச்சிட்டார்.. நாளு, கிழமையில் கூட வீட்டுக்கும் கூப்பிட மாட்டார்.. திரும்பவும் சொந்த பந்தத்து கிட்ட எங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சது இந்த வேதா டெக்ஸ்டைல்ஸ் மூலம் தான்.”
“அப்புறம் புதுசா தொழில் ஆரம்பிச்சிருக்கானேன்னு அவன் ஜாதகத்தை பார்க்க போனேன். அங்க ஜோசியர் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கலன்னா, திருமண திசை முப்பத்தி அஞ்சு வயசுக்கு மேல தான்னு சொல்லிட்டார். அப்புறம் தான் அவசர அவசரமாக பொண்ணை தேடி ஒரு வழியா உன்னை கண்டுபிடிச்சி ட்டோம். “
“கிரிஷுக்கு கல்யாணம் பண்ணினதில் இருந்து,ஒரே குற்ற உணர்ச்சி.. ஒரு புள்ளைக்கு பண்ணிட்டு, இன்னொரு புள்ளைய தனியா விட்டுட் டமேன்னு …”
“எனக்கு முன்னாடியே ஆரா பத்தின யோசனை இருந்தது.. ஆனா இந்த சீமா கழுதை எல்லா இடத்துலயும் போயி , இளாவும் நானும் லவ் பண்ணு ரோம்ன்னு சொல்லிகிட்டு திரிஞ்சாளா..?? எனக்கு பக்க்குண்ணு ஆயிடுச்சி….”
“அதான் கிரிஷை விட்டு பேச சொன்னேன்.. அவன் நேரம் வர்றப்ப பேசரென்னு சொன்னான்.. நேரம் கூடி வந்துடுச்சி ரோ…..இப்ப சீனியை போடு… கொஞ்சம் நெய்யை விடு டா…. ஒட்டாமல் வரும்… கை விடாமல் கிண்டு…..”
பால்கோவா விற்கு ஃபினிஷிங் டச் கொடுத்து கொண்டிருந்தார்கள்…
Last edited: